Pages

Wednesday, March 15, 2023

தன் தம்பி நாயகனாகிய படத்தில் பாடிய லதா ரஜினிகாந்த் 🎸



“பிரபோ! சிவபெருமான் ரவுண்ட்ஸ் வந்து கொண்டிருக்கிறார்"

“இவருக்கு வேறு வேலையே கிடையாதா இப்படி நேரம் கெட்ட நேரத்தில் வந்து ட்ரபுள்ஸ் கொடுக்கிறாரே”

இப்படியெல்லாம் எமலோகத்தில் இங்கிலீஷ் பேசி நடித்தால் எப்படி இருக்கும் 🙂

அந்தக் காலத்தில் வீடியோ காசெட் ஐ வாடகைக்கு வாங்கிப் பார்த்த காலத்தில் “காதுல பூ” என்றொரு படம் வந்திருக்கிறது என்பது மட்டும் தெரியும். ஆனால் யார் நடித்தது என்று “அடி முடி" தெரியாமல் எடுத்துப் பார்த்தோம். வழக்கமாக ஒரு நாள் வாடகைக்குக் கிடைக்கும் அந்தப் படம் நண்பர் வீட்டில் ஒரு வாரம் ஓடியது. உற்றார், உறவினர், நண்பர்கள் ஏதோ விசேஷ வீட்டுக்குப் போவது போல அந்த வாடகை வீடியோப் படத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்து விட்டுப் போனார்கள்.

“காதுல பூ” என்றால் இன்று ஆயிரம் மேடைகள் கண்ட Sve Shekher Venkataraman எஸ்.வி.சேகரின் மேடை நாடகம் தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் அந்தக் கதை படமாகவும் அதே பெயரில் வந்தது.

நடிகரும், கதை வசனகர்த்தாவுமான G.K அவர்கள் இயக்கிய அந்தப் படத்தின் நாயகனாக ராகவேந்தர் (இப்போது ரவி ராகவேந்திரா) நடித்தார். வேடிக்கை என்னவென்றால் இந்தப் படத்திலும் அறிமுகம் ராகவேந்தர் என்று எழுத்தோட்டத்தில் இருக்கும். இதற்கு முன் தோன்றிய உருவங்கள் மாறலாம் படத்திலும் அறிமுகம் ராகவேந்தர் என்று போடப்பட்டிருக்கும். உருவங்கள் மாறலாம் “வானில் வாழும் தேவதை” https://www.youtube.com/watch?v=51vrIDMEZeA பாடலை வைத்து முன்பே ஒரு புராணம் எழுதியதால் இத்தோடு நிறுத்.

இந்த ராகவேந்தர் தான் இல்லையில்லை அனுருத்தின் அப்பா தான் ராகவேந்தர் என்பது 2கே கிட்ஸுக்கு ஒரு தகவல்.

காதுல பூ படத்துக்கு இசை வழங்கியவர் கங்கை அமரன். அந்தப் படத்தில் ராகவேந்தரின் சகோதரி லதா ரஜினிகாந்த் இரண்டு பாடல்களைப் பாடியிருக்கிறார்.

ஒன்று, 

இன்றும் சிங்கப்பூர் வானொலி மறக்காமல் நினைவில் வைத்திருக்கும் ஜெயச்சந்திரனோடு லதா ரஜினிகாந்த் பாடிய 

“பூவே புதுபூபாளம் தினம் நீ பாடு”

https://www.youtube.com/watch?v=-as5mph_lOA

கவிஞர் வாலி எழுதிய அற்புதமான பாடலிது.

இன்னொன்று 

லதா ரஜினிகாந்த் & எஸ்.பி.சைலஜா இணைந்து பாடிய

“கண்ணா உனக்கு காதல் எதுக்கு”

https://www.youtube.com/watch?v=ZXYvFbN2U-Y

ஆகிய பாடல்கள். இந்தப் பாடல்கள் பற்றிய விபரங்கள் கடல்லயே (விக்கிப்பீடியா & கூகுள்) இல்லையாம். அதுதான் இந்தப் பதிவுக்காகப் பாடல்களைத் தனித்தனியாகத் தரவேற்றியுள்ளேன்.

“கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே” 

https://www.youtube.com/watch?v=GB1fMHeW-O0

லதா ரஜினிகாந்துக்கு ஆகச் சிறந்த அடையாளமாக அமைந்த அன்புள்ள ரஜினிகாந்த் (1984) படப் பாடல் மட்டும் தான் அவர் பாடிய பாடல் என்று இன்றும் பரவலாக நம்பும் அளவுக்கு இந்தப் பாடல் அவருக்குக் கச்சிதமான தேர்வாக அமைந்து விட்டது.

வாலியார் வரிகளில் லதா பாடிய இன்னொரு பாடலிது.

ஆனால் இதற்கு மூன்று வருடங்கள் முன்னே போனால்

லாலல்ல லாலா

லாலல்ல லாலா

நேற்று இந்த நேரம்

ஆற்றங்கரை ஓரம் 

உன்னைத் தொட்டு 

என்னைத் தொட்டு 

தென்றல் செய்த கோலங்கள்

https://www.youtube.com/watch?v=NxiRziNrtU8

என்று முற்றிலும் மாறுபட்டதொரு மேற்கத்தேயப் படையலைக் கொடுத்திருப்பார் இசைஞானி இளையராஜா. இரண்டு தளங்களிலும் லதாவின் குரல் பளிச்சென்றிருக்கும்.

கண்ணதாசன் வரிகளிலும் லதா ரஜினிகாந்த் பாடிய பெருமையையும் சம்பாதித்துக் கொடுத்தது அந்தப் பாட்டு.

கண்ணதாசன், வாலி என்று பாட்டெடுத்துப் பாடிய லதா ரஜினிகாந்த், முன்னர் குறிப்பிட்ட “காதுல பூ” படப்பாடலான “கண்ணா உனக்கு பாடலை கங்கை அமரன் இசையில் புலவர் புலமைப்பித்தன் எழுதியது போல, 

இசைஞானி இளையராஜா இசையில் புலமைப்பித்தன் அவர்களின் வரிகளில் ஒரு குயில் பாட்டு எழுந்தது.

அதுதான்

குக்கூ கூ கூ 

கூவும் குயிலக்கா

https://www.youtube.com/watch?v=PShrhpFggpo

என்று வள்ளியில் பாடிய போது, அதே படத்தில் இன்னொரு பாடலான “டிங்கு டாக்குரப்பப்போ”

https://www.youtube.com/watch?v=e2y34I2SVa8

பாடலை மனோ குழுவினரோடு பாடினார் லதா ரஜினிகாந்த். பாடல் வரிகள் கவிஞர் வாலி.

Rajini'25 Millenium Celebration என்றொரு நிகழ்வை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கலையுலகத்தில் 25 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதத்தில் நிகழ்த்திய போது “மாயாஜாலம்” என்ற இசைத் தொகுப்பை வெளியிட்டார் லதா ரஜினிகாந்த்.

அந்தப் பாட்டுத் தொகுப்பில் இடம்பெற்ற 

“தித்திமி தா

https://www.youtube.com/watch?v=HEEe_cPkG4Q

ஏக பிரபலம். கானா பிரபா

அக்னி சாட்சி படத்தில் கணவன், மனைவியாகத் தோன்றுவார்கள் திரு & திருமதி ரஜினிகாந்த் ( 6 வது நிமிடத்தில் இருந்து)

https://www.youtube.com/watch?v=14f34EKiDKs

இப்படியாகப் பாடகியாக 40 ஆண்டுகளைக் கடந்து அவ்வப்போது பாடி வருகின்ற லதா ரஜினிகாந்த், முன்னர் தன் கணவர் கதை எழுதிய “வள்ளி”க்குப் பாடியது போலவே தன் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய “கோச்சடையான்” படத்துக்கும் வைரமுத்து வரிகளில், இசைப்புயல் ரஹ்மான் இசையில் பாடிய வகையில் ஒரு நிறைவான பாடலைப் பாடியளித்தார்.

காதல் கணவா

உந்தன் கரம் விட மாட்டேன்

சத்தியம் சத்தியம்

இது சத்தியமே

தாய் வழி வந்த

எங்கள் தர்மத்தின் மேலே

சத்தியம் சத்தியம்

இது சத்தியமே

ஒரு குழந்தை போலே

ஒரு வைரம் போலே

தூய்மையான என் சத்தியம்

புனிதமானது

வாழை மரம் போல

என்னை வாரி வழங்குவேன்

ஏழை கண்ட புதையல் போல

ரகசியம் காப்பேன்

https://www.youtube.com/watch?v=jlp0a4FiOnE

கானா பிரபா

15.03.2023


0 comments: