Pages

Tuesday, July 9, 2024

அனுராதா ஶ்ரீராம்

 



90’ஸ் மழலைகளில் தொட்டில் குரலாக ஒலித்தவர்களில் அனுராதா ஶ்ரீராமுக்குத் தனியிடம் உண்டு.

 

பல்வேறு விதமான பாடல்களைப் பாடும் திறனும், வாய்ப்பும் முன்னணிப் பாடகர்களுக்குத் தானாகத் தேடி வந்தாலும்,

குறித்த பாடலை மிக இலாகவமாகக் கையாளும் திறன் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. 

நடிப்புக் கலைஞன் எப்படி ஒப்பனை கடந்து அந்தப் பாத்திரப் படைப்பாகவே மாறும் திறன் போலே, பாடகர்களும் அடிப்படை இசையறிவு தாண்டிய குரல் வித்தை தெரிந்திருக்க வேண்டும்.

இந்த மாதிரியான நுட்பமும், அதைக் கையாளும் திறனும் வாய்த்தவர்களில் அனுராதா ஶ்ரீராமைத் தவிர்க்கவே முடியாது.

 

இன்று 

     முதல்

          இரவு…..

நிலவை கொண்டு வா
கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா
மெத்தை போட்டு வை

 

https://www.youtube.com/watch?v=9yIFgiXbV7I

 

 உன்னிகிருஷ்ணனோ சாதுவாக உருகி உருகிச் சாதகம் பண்ணிக் கொண்டிருக்க இவரோ,  கட்டைக்குரலில் பாட்டு முழுக்க அதகளம் பண்ணியிருப்பார்.


பாடகிகள் பலர் இம்மாதிரியான வித்தையைக் காட்டியிருந்தாலும் ஒரு காதல் பாடலைக் கையாளும்போது அப்படியே தொடக்கத்தில் இருந்து முடியும் வரை தம் கட்டிக் கொண்டு அடிக் கிணறுக்குள் நின்று பாடும் வித்தையெல்லாம் ஆஹா.

 

அந்த மாதிரியான குரல் வங்கியிலிருந்தா

 

வேண்டும் ஒரு 

சூரியனே

நீ அனுப்பு 

குளிர் கேட்கிறதே

 

நலம் நலமறிய ஆவல்

 

https://www.youtube.com/watch?v=lc2eM5AbmhI

 

இப்படியொரு குளிர்ப் பிரவாகம் பிறக்கிறது என்பதொரு அதிசயம் காட்டுவார்.

அப்படியே இன்னொரு பக்கம் போய்

 

“ஏண்டி சூடாமணி

காதல் வலியைப் 

பார்த்ததுண்டோடி....

 

https://www.youtube.com/watch?v=TpaNs1E-GUQ

 

 

என்று மிரட்டுவார்.

 

இதுதான் ஒரு திரையிசைப் பாடகரின் பல்பரிமாணம். கானாபிரபா

அதில் தேர்ச்சியையும் முதிர்ச்சியையும் தன்னுடைய பாட்டுப் பயணத்தின் குறுகிய காலத்திலேயே காட்டக் கூடிய வல்லமையையும், வாய்ப்புகளையும் பெற்றவர் அனுராதா ஶ்ரீராம்.

 

 

முறையான சாஸ்திரிய சங்கீதத்தில் தேர்ச்சியோடு திரையிசையின் கதவு திறந்த அனுராதா ஶ்ரீராமுக்கு வாய்ப்பு என்ற வகையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானால் “பம்பாய்” படத்தில் கூட்டுப்பாடகியாக,

(அதில் மேலதிகமாகச் சேர்க்கப்பட்ட பாடல் மலரோடு மலரிங்கு https://www.youtube.com/watch?v=i32sVy9yEn0) அறிமுகமானவர்.

 

ஆனால் அதற்கு முன்பே  Track பாடகியாக இருந்தார் என்ற தகவலைச் சமீபத்தில் தான் விஜய் சூப்பர் சிங்கரில் பகிர்ந்தவர் அவ்விதம் பி.சுசீலாவுக்காகப் பாடிய பாடல்  இசைஞானி இளையராஜாவின் “ அரும்பாகி மொட்டாகி” என்று குறிப்பிட்டிருந்தார்.


அனுராதா ஶ்ரீராம் தன் ஆய்வுப் பட்டத்துக்காக இசைஞானி இளையராஜாவின் பாடல்களை எடுத்திருந்தார். இந்தப் படைப்பு நூலுருவில் வந்திருந்தால் நமகெல்லாம் வரப்பிரசாதமாக இருக்கும்.

 

“சின்ன வெண்ணிலா சாய்ந்ததே

தோளில்....”

https://www.youtube.com/watch?v=No-snJqXc9c

 

என்று காதல் ரோஜாவே படத்துக்காக இசைஞானி தன் பாடகர் குழுவோடு உள்வாங்கிக் கொண்டார்.


 

“அன்பென்ற மழையிலே” பாடலை இப்போதெல்லாம் கிறிஸ்துமஸ் காலத்தில் ஒலிபரப்பாத வானொலிகளே இல்லை எனலாம்.

இவரின் தனித்த குரலுக்கு அங்கீகாரமாக அமைந்து விட்டது அந்தப் பாடல்.

 

தொண்ணூறுகளில் தேனிசைத் தென்றல் தேவா ஒரு பக்கம் சொல்லி மாளாத பாடல்களை அள்ளி வழங்கிய போது, அனுராதா ஶ்ரீராமுக்குக் கொடுத்தவை மாமூல் தாண்டி, ரகம் ரகமாக அமைந்த ராகங்கள். அதையும் சமீபத்தில் தேவா முன்னிலையில் நன்றி பகிர்ந்தார்.

 

பாடல் வரிகளில் விரசம் இருந்தாலும், அதைத்தாண்டி அந்தப் பாடலை மோகிக்க, குறித்த குரல்களின் நளினம் ஒன்றே போதும் என்று அடிக்கடி நான் ரசிக்கும் பாடல்களில் ஒன்று 

“ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி”

https://www.youtube.com/watch?v=UU-PJSs4X84

 

கேகேயோடு இணைந்த அந்தத் துள்ளிசைப் பாடலில் கூட ஒரு கனிவான குரலோடு பயணித்திருப்பார்.

 

 

“ஹே மச்சானே மச்சானே....

 ஐயாரெட்டு நாட்டுக்கட்டை” (மஜா)

 

https://www.youtube.com/watch?v=g4ah9ExU53Q

 

என்று சங்கர் மகாதேவன் வகையறா

 

இன்னொரு பக்கம்

 

“ஏன் மம்முதா அம்புக்கு ஏன்

இன்னும் தாமசம் ஆஆ....

 

https://www.youtube.com/watch?v=6xvTQL7ri-k

 

என்று பக்கா தெம்மாங்கும்,

 

நிதம் நிதம் தான் 

காதல் ராகம்

நிகழ்த்திட தான் 

கேட்கும் தேகம்

என் மனதைக் கொள்ளையடித்தவனே

https://www.youtube.com/watch?v=yNdcpuwfJLw

 

 

என்று மேற்கத்தேயப் பிரவாகத்திலும் ஹரிஹரன் போன்ற பாடகர்கள் தான் அனுராதா ஶ்ரீராம் என்ற பாட்டுக் குதிரைக்கு சமமான ஜோடிக் குதிரையாகத் துள்ளிக் கொண்டிருக்க, மிகவும் அமைதியாக உன்னிகிருஷ்ணனோடு இவர் கொடுத்த பட்டியல் எல்லாமே தேன் தேன் தேன் தான்.கானாபிரபா

இந்த இருவருக்கும் 90ஸ் குழவிகள் நன்றிக்கடன்பட்டவர்கள்.

 

இப்போது கூட இன்ஸ்டா ரீல் எல்லாம் கலக்கிக் கொண்டிருக்கும்

 

அன்று காதல் பண்ணியது, 

உந்தன் கன்னம் கிள்ளியது

அடி இப்போதும் நிறம் மாறாமல் 

இந்த நெஞ்சில் நிற்கிறது

 

மீனம்மா…..

 

https://www.youtube.com/watch?v=4k_YgQIDE3Q

 

தொடங்கி,

 

சேதுமாதவா உன்னை சேர்த்து அணைக்கவா (சந்தோஷம்)

https://www.youtube.com/watch?v=6j9DJY5owAY

ஒரு நாளும் உனை மறவேனே (வான்மதி)


https://youtu.be/vwWF5OiOQ58?si=Zk4gHw3_eUAGFeFB


 

ரோஜாபூந்தோட்டம் (கண்ணுக்குள் நிலவு)

https://www.youtube.com/watch?v=N2gjtl8TXPY

 

நந்தவனப்பூவே தூது செல்ல வா (குருபார்வை)

https://www.youtube.com/watch?v=EiBeddEf0c4

 

முன்னர் குறிப்பிட்ட “நிலவைக் கொண்டு வா” (வாலி)

என்ன இது என்ன இது (ரோஜாக்கூட்டம்)

https://www.youtube.com/watch?v=UVOysCFeES8

 

“பூ விரிஞ்சாச்சு” (முகவரி)

 

https://www.youtube.com/watch?v=8xtiVxKjCMg

 

 

ஓ வெண்ணிலா (குஷி)

 

https://www.youtube.com/watch?v=cjBQ3QGmRS4

 

முதன்முதலா உன்னைப் பார்த்தேன் (குங்குமப் பொட்டுக் கவுண்டர்)

https://www.youtube.com/watch?v=rLKkzUu3qZI

 

என்று பட்டியல் நீளும்.

 

“என்ன நெனச்சே” (சொக்கத் தங்கம்)

https://www.youtube.com/watch?v=aZj_zDTbyac

 

 

 

அந்த ராசியிலோ என்னமோ “ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே” படத்தில் ஐந்து இசையமைப்பாளர்களில் ஒருவராக அறிமுகமான, அனுராதா ஶ்ரீராமின் சகோதரர் முருகன் அதே படத்தில் இந்த ஜோடியை வைத்து

“பொய் சொல்லலாம்” https://www.youtube.com/watch?v=m-ycM0kxKtU

 

கொடுத்தார்.

 

அப்படியே பரசுராம் ராதாவாக அனுராதா ஶ்ரீராம் தம்பதியினர் ஃபைவ் ஸ்டாருக்கு இசையமைத்த போது “ரயிலே ரயிலே” என்று ராசியான உன்னிகிருஷ்ணனும் பாடகராகப் பங்கு போட்டார்.

 

 

கிருஷ்ணராஜ், புஷ்பவனம் குப்புசாமி, அருண்மொழி என்று கூட்டுச் சேர்ந்த பாடகர்களோடு ஹிட்டுச் சேர்த்தார்.

 

செளந்தர்யன் இசையில் “கோபுர தீபம்” பாடல்கள் ஹிட் அடித்த போது மறக்கமுடியாத வானொலிச் சொத்தானது எஸ்பிபியோடு இவர் பாடிய 

“உள்ளமே உனக்குத்தான்”

 

https://www.youtube.com/watch?v=88YaaTdxONI

 

“ஓ போடு” போட்டு மிடுக்கியாக வலம் வந்தவர்,

 இன்று ஈராயிர யுகத்தின் காற்பகுதி விளிம்பிலும் “அப்படிப் போடு போடு” (கில்லி) பாடலில் வித விதமாகக் குரல் மாற்றி வித்தை செய்தவரையும், “காட்டுச் சிறுக்கி” (ராவணன்) யாகச் சிறைப் பிடித்தவரையும் மறவாது கொண்டாடுகிறார்கள்.

அந்த வகையில் எல்லா இசையமைப்பாளர்களிடமும் மிளிர்ந்த மிகச் சில பாடகிகளில் இவரும் ஒருவர்.

 

தமிழ்த் திரையிசையில் ஒரு காலகட்டத்துப் பாடகர்கள் பல நூறு பாடல்கள் பாடிய வரலாற்றின் கடைசி விழுதுகளில் ஒன்றானவர் அனுராதா ஶ்ரீராம்.

 

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

பன்முகப்பாடகி அனுராதா ஶ்ரீராம் 💐


 கானா பிரபா

 09.07.2024

 

 என் பெயரை நீக்கி பேஸ்புக் மற்றும் வாட்சாப்பில் பகிராதீர்கள் 🙏