Pages

Saturday, October 30, 2021

அதோ மேக ஊர்வலம்....❤️


எங்கோ தொலைவில் மரக்கிளையில் இருக்கும் கூக்காட்டும் குயிலின் குரலுக்குப் போட்டியாக
நானும் குரல் கொடுத்துப் பார்ப்பேன்.
அது இன்னும் வேக மெடுத்துக் கூவும்
நானும் கூ கூஊஊஊ
இப்படியொரு வேடிக்கை விளையாட்டு தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் வீட்டுமுற்றத்தில் நின்று காட்டுவதுண்டு. அந்த வேடிக்கை விளையாட்டு கொடுக்கும்மகிழ்ச்சிக்கு அளவு கணக்கில்லை.
ஆஆஆ….ஆஆ…ஆஆஆ
சுனந்தாவின் குயில் குரலை ஆமோதித்துக் கூவும் புல்லாங்குழல் அதே நினைப்பைஉண்டு பண்ணும். அப்படியே அந்த இரு ஓசையும், ஆரோகணத்தில் சங்கமித்துவிடும் வேளை
படிக்கட்டுப் போல ஒரு இன்னிசை நாதம் அப்படியே பூமிக்கும் முகில்கூட்டத்துக்கும் தொங்கு பாலம் போலே,
அப்போது மனோ பாடத் தொடும்,
“குழலைப் பார்த்து
முகிலென
மயில்கள் ஆடும்
முகத்தைப் பார்த்து
அடிக்கடி நிலவு தேயும்….”
அந்தச் சரணத்தில் முகிலில் மிதந்து அந்தக் காதலரின் சங்கமமோ என மனம்எண்ணிக் களிப்புறும்.
மேலிருந்து பொத்தென்று விழும்
இளங்குருத்துத் தென்னம் பாளைக்குள் மூடியும் மூடாததும் போலே அந்த மணிகள்பாதி எட்டிப் பார்ப்பது
“தென்னம்பாண்டி முத்தைப்
போல் தேவி புன்னகை….”
“அதோ மேக ஊர்வலம்”
பாட்டெழுதிய புலவர் புலமைப்பித்தன் ஐயா மகா குறும்புக்காரர். வெளிப்படையாகக் கேட்கும் போது காதல் வர்ணனையின் ஆழத்தை உணராதுமெட்டோடு அணி சேரும் வரிகள் வருடும் இதத்தில் மறந்து போவோம். ஆனால்ஆழமாகப் பார்த்தால் காமசூத்திரத்துக்கு உரை எழுதியிருப்பார்.
“மந்திரம் இது மந்திரம்”
பாடலின் அலைவரிசையில் வந்து போகும் இந்தப் பாட்டும். ஆனால் வரிகளில்கொஞ்சம் எளிமையைக் கையாண்டிருப்பார். இங்கே
இலவம் பஞ்சு, வாழைத் தண்டு என்று இயற்கையைப் “பதம்” பார்த்திருக்கிறார் தன்காதலி குறித்த ஒப்புவமைக்கு.
பாட்டைச் சந்தத்துக்குத் தான் எழுதியது என்று வைத்துக் கொள்வோம்அப்படியாயின் எப்படி காற்றில் வரும் கீதமே பாடலில் வாலி சொல்வாரே
“அளவுக்கு அளவு” அப்படி வராமல் ஒரு குறுகிய அடிகளாகக் கொடுத்திருக்கிறார்?
ஒரே நாள் நிலவினில் முகம்
பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உனைச்
சேர்த்தேன்
இவற்றைக் கேட்கும் போது தொங்கி நிற்குமாற் போல மீதிக்கு இசையை நிரப்பிஅந்த
இதோ நான் உயிரினில் உனைச்
சேர்த்தேன்
வரியில் மட்டும்
வா
இழுத்து நிரப்புவாரே?
“காதல் பிச்சை வாங்குவான்
இன்னும் என்ன சொல்ல”
புலவர் புலமைப்பித்தனுக்கே பஞ்சமா? இல்லையே ஆனால் தன் காதலியைவர்ணிக்க திருமுடி தேடிய பிரமனே பிச்சை எடுப்பானாம் பாருங்கள்.
ஒரு பாடலில் ஒரு துளி ஆலாபனையைக் கொடுக்கும் பெண்ணின் குரல், பாடல்முழுக்கப் பயணிப்பது போலொரு பிரமை.
“தேன்மொழி எந்தன்
தேன்மொழி…..”
என்று மனோவுக்கான முதல் காதல் வரவுப் பாடலைக் கொடுத்த அதேசொல்லத்துடிக்குது மனசு படத்தில்
“பூவே செம்பூவே”
பாடலில் தலை காட்டிய சுனந்தா இங்கே அந்த ஒரு சொட்டு ஆலாபனைஎன்றாலும் “கெளரவமாக” மிளிர்கிறார்.
பாடகர் மனோவின் தலை பத்துப் பாடல்களில் தயங்காமல் தலையாக உயர்த்திவைக்கக் கூடிய பெருஞ் சிறப்பு
அதோ மேக ஊர்வலத்துக்கு.
காதலின் தெய்வீகத்தை உணத்தவோ அந்தக் கலைவாணியின் வாத்தியத்தைக்கடன் வாங்கி வந்தார் ராஜா?
இந்தப் பாடல் தனிப்பட்ட ரீதியில் மறக்க முடியாத பாட்டு என்பதற்கு இன்னோர்காரணமுண்டு. அந்தத் தொண்ணூறுகளின் போர்க்கால பூமியில் மின்சாரம்இல்லாது சைக்கிள் டைனமோ வழி மின்சாரம் ஏற்றி சென்னை வானொலி ஞாயிறுநேயர் விருப்பம் கேட்கும் போது குறிப்பாக இந்தப் பாட்டு வரும் போதுசமையலறையில் இருந்து வந்து என் அம்மா
“சோக்கான பாட்டு”
என்றது பால்மரத்தில் கீறிய செதுக்கல் போல இன்னும் என் நினைவில்.
அதோ மேக ஊர்வலம்
அதோ
மின்னல் தோரணம் அங்கே
இதோ காதல் ஊர்வலம் இதோ காமன்
உற்சவம் இங்கே
அந்த இசை பாடி ஓராட்டும் முகில் தொட்டிலில் இருந்து இறங்கி வர மனமிருக்காது நம் மனசுக்கு
கானா பிரபா

Wednesday, October 27, 2021

சிவகுமார் 80


“இது ராஜபாட்டை அல்ல...” சிவகுமாரின் சினிமா வாழ்வியல் அனுபவங்களோடு வெளிவந்த அந்தப் புத்தகமும் ஈழத்தில் இருந்து புலம்பெயரும் போது என் மெல்பர்ன் வாழ்வியலின் தனித்த நாட்களில் துணையாக இருந்தது. 

சொல்லப் போனால் ஒரு திரையுலகப் பிரபலத்தின் வாழ்வியல் அனுபவத்தைப் படித்த கணக்கில் அதுதான் முதலாவது. அதன் பின் ஏராளம் பேரினதும் வாங்கிக் குவித்து விட்டேன். ஆனால் சிவகுமாரின் எழுத்தாற்றலும், நினைவாற்றலுமாகக் கொட்டிய அற்புதமான படைப்பு அது.

ஒரு ஓவியர், எழுத்தாளர் தாண்டித் தமிழ் திரையுலகின் குணச்சித்திரமாகவும், நாயகனாகவும் தோன்றி ஒரு கட்டத்தில் தன் சம வயதுக்காரர் ஶ்ரீகாந்த் போலவே நடிப்பில் இருந்து ஒதுங்கிக் கொண்டு விட்டார். ஆனாலும் அவரின் உடல் உறுதிக்கு இன்னும் தொடர்ந்து பயணிக்க வேண்டியவர். 

தன் திரையுலக, சின்னத்திரை வாழ்வியலுக்குப் பின் அவர் வரித்துக் கொண்டது தன் தமிழாற்றலை மேடை தோறும் சிறப்பித்தது. அவை பின்னர் டிவிடிகளாக வருமளவுக்கு அங்கும் தன் ஆளுமையை நிலை நிறுத்திக் கொண்டவர். சிவகுமாரின் ஓவியக் கண்காட்சியும் சிறப்பாய் நடந்தது. இப்படியாகத் தன் பன்முகத் தன்மையை நிறுவியவர்.

ஏவிஎம் பாசறை வழியே அறிமுகமான அதிஷ்டம் கொண்டவர்.

சிவகுமார் இயக்குநர்களின் நடிகர், அதனால் தான் தேவராஜ் – மோகன், கே.ரங்கராஜ் உள்ளிட்டவர்களோடும் இன்னொரு புறம் கே.பாலசந்தர் போன்றோராலும் சிறப்பான வேடங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டவர்.

கந்தன் கருணையில் அழகன் முருகனாக அச்சொட்டாகத் தோன்றினார்.

இசைஞானி இளையராஜாவின் அன்னக்கிளியில் தொடங்கிய ராசியான நாயகன், தொடர்ச்சியாக அந்தக் காலத்து இளையராஜா பாடல்களுக்கும் அணி செய்தவர்.

ரோசாப்பூ ரவிக்கைக்காரி, சிந்து பைரவி, மறுபக்கம் என்று அவரின் நடிப்புக்காகக் கொண்டடப்பட்டவை.

நடிகர் சிவகுமார் இன்னொரு வகையில் அதிஷ்டசாலி, அவருக்கு எந்த இசையமைப்பாளர் கொடுத்தாலும் தேன் தோய்த்த  பலாச்சுளைப் பாடல்கள், அவ்விதம் என் தொகுப்பு ஒன்று. இவற்றில் ஜோடிப் பாடல்கள் தவிர, பெண் குரல் பாடல் ஒரு சிலவற்றையும் இணைத்தது அவற்றின் இனிமை கருதி.

இசைஞானி இளையராஜாவுக்கு முன்பே மெல்லிசை மன்னர், கே.வி.மகாதேவன், சங்கர் கணேஷ் அதன் பின் சந்திரபோஸ், டி.ராஜேந்தர், தேவா ஈறாக, ஏன் இசையமைப்பாளர் மலேசியா வாசுதேவன் உள்ளடங்கலாக இந்தப் பாடல்கள் எல்லாமே சிவகுமாருக்குக் கிடைத்த பொக்கிஷங்கள்.

1. என் கேள்விக்கென்ன பதில் – உயர்ந்த மனிதன்

https://www.youtube.com/watch?v=71Mmq0XErhE

2. ஐயனாரு நிறைஞ்ச வாழ்வு கொடுக்கணும் – காவல் தெய்வம்

https://www.youtube.com/watch?v=DYEeXSr3TLI

3. பெளர்ணமி நிலவில் – கன்னிப் பெண்

https://www.youtube.com/watch?v=22OWQ4j5EC8&t=82s

4. உள்ளங்கள் பலவிதம் – திருமகள்

https://www.youtube.com/watch?v=MLqoXUXGyvg

5. அனகன் அங்கஜன் – கண்காட்சி

https://www.youtube.com/watch?v=71oX-WFq1uo

6. முள்ளில்லா ரோஜா – மூன்று தெய்வங்கள்

https://www.youtube.com/watch?v=ANBtaWBvNPc

7. என்ன சொல்ல என்ன சொல்ல – பாபு

https://www.youtube.com/watch?v=lDQGZ5BbtZ0 

8. தேன் சிந்துதே வானம் – பொண்ணுக்குத் தங்க மனசு

https://www.youtube.com/watch?v=GpqykUJQb9g

9. ஒரு வித மயக்கம் – கட்டிலா தொட்டிலா

https://www.youtube.com/watch?v=qZwKhf9SebM

10. நீ நினைத்த நேரமெல்லாம் – பெண்ணை நம்புங்கள்

https://www.youtube.com/watch?v=nh_vAevEaj4

11. சொல்லத்தான் நினைக்கிறேன் – சொல்லத்தான் நினைக்கிறேன்

https://www.youtube.com/watch?v=6JfoFOnFTGU

12. காதல் விளையாட – கண்மணி ராஜா

https://www.youtube.com/watch?v=_kx8igoGl5c

13. ஓடம் கடலோடும் – கண்மணி ராஜா

https://www.youtube.com/watch?v=GngQfJA4Oss

14. கண்ணெல்லாம் உன் வண்ணம் – ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு

https://www.youtube.com/watch?v=jGyJW9sNxok

15. வா இளமை அழைக்கின்றது – எங்கம்மா சபதம்

https://www.youtube.com/watch?v=Wkt7LsRjfkg

16. முத்துமகன் வந்துனக்கு– தாய்ப்பாசம்

https://www.youtube.com/watch?v=TF9V5hkDWNA

17. யாருமில்லை இங்கே – பணத்துக்காக

https://www.youtube.com/watch?v=GAnztW_ecTY

18. துளித் துளித் துளி – புதுவெள்ளம்

https://www.youtube.com/watch?v=amRSv2bahWw

19. உன்னிடம் மயங்குகிறேன் – தேன் சிந்துதே வானம்

https://www.youtube.com/watch?v=F-2rN5T0M30

20. கலைமகள் கைவீணை – மேல் நாட்டு மருமகள்

https://www.youtube.com/watch?v=3DOEmAa4qLI

21. என் காதலி – தங்கத்திலே வைரம்

https://www.youtube.com/watch?v=n56L6-CHZVQ

22. பொங்குதே புன்னகை – இப்படியும் ஒரு பெண்

https://www.youtube.com/watch?v=23NnyOiLyxQ

23. என்னோடு வந்தான் – பட்டிக்காட்டு ராஜா

https://www.youtube.com/watch?v=6GsLyTtmCIc

24. அன்னக்கிளி உன்னை – அன்னக்கிளி

https://www.youtube.com/watch?v=NnCge4x-df0

25. ஏரியில் ஒரு – மதன மாளிகை

https://www.youtube.com/watch?v=s0vdpipmNKU

26. ஒரு நாள் உன்னோடு – உறவாடும் நெஞ்சம் 

https://www.youtube.com/watch?v=FPb5AmQ8Lgs

27. கண்ணன் ஒரு கைக்குழந்தை – பத்ரகாளி

https://www.youtube.com/watch?v=_GNXi6UgZEo&t=1s

28. சுகம் பெற ஒரே வழி – எதற்கும் துணிந்தவன்

https://www.youtube.com/watch?v=voKQrovOec8

29. எங்கெங்கோ சில மணிகள் – சொன்னதைச் செய்வேன்

https://www.youtube.com/watch?v=_lQtDUUH_T4

30. வேலும் மயிலும் துணையாக – பெண்ணைச் சொல்லிக் குற்றமில்லை

https://www.youtube.com/watch?v=8szp2YsjGu4

31. என் மனது ஒன்று தான் – பெருமைக்குரியவள்

https://www.youtube.com/watch?v=Gyw_dgGBfcs

32. சின்னக்கண்ணன் அழைக்கிறான் – கவிக்குயில்

https://www.youtube.com/watch?v=tOdhWd5ZF2g&t=3s

33. சுகமோ ஆயிரம் – துணையிருப்பாள் மீனாட்சி

https://www.youtube.com/watch?v=IwicEdF583Y

34. பூந்தென்றலே – புவனா ஒரு கேள்விக்குறி

https://www.youtube.com/watch?v=hsKDC_CwbJ8&t=148s

35. பருத்தி எடுக்கையிலே – ஆட்டுக்கார அலமேலு

https://www.youtube.com/watch?v=Y_IP5-WqgTY

36. தேவி செந்தூரக் கோலம் – துர்காதேவி

https://www.youtube.com/watch?v=UttYmGEG7XM

37. ஒரு காதல் தேவதை – சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

https://www.youtube.com/watch?v=R_2YfVyKqSA

38. இது இளமைக்கால இரவு – கைப்பிடித்தவள்

https://www.youtube.com/watch?v=r3XudiWD7e4

39. என் கண்மணி – சிட்டுக்குருவி

https://www.youtube.com/watch?v=1q27kfl2hwg

40. இரவில் பார்த்தேன் – கண்ணாமூச்சி

https://www.youtube.com/watch?v=MyspaVncWWQ

41. மேகமே தூதாக வா – கண்ணன் ஒரு கைக்குழந்தை

https://www.youtube.com/watch?v=0RSLGjgBdMk

42. மாம்பூவே – மச்சானைப் பார்த்தீங்களா

https://www.youtube.com/watch?v=C8g3NkOSQl0

43. செங்கரும்பு தங்கக் கட்டி – அதை விட ரகசியம்

https://www.youtube.com/watch?v=wnmhz1YVAow

44. மயிலே மயிலே – கடவுள் அமைத்த மேடை

https://www.youtube.com/watch?v=Gf6Xixp8lA8

45. மாமன் ஒரு நாள் – ரோசாப்பூ ரவிக்கைக்காரி

https://www.youtube.com/watch?v=XE5kKXdgRuw&t=121s

46. வா பொன்மயிலே – பூந்தளிர்

https://www.youtube.com/watch?v=L52ebSa7I2c

47. மஞ்சள் நிலாவுக்கு – முதல் இரவு

https://www.youtube.com/watch?v=iXntSfhbZZo

48. பூந்தேனில் கலந்து – ஏணிப்படிகள்

https://www.youtube.com/watch?v=78uSUEOo324

49. செவ்வானமே சீர் கொண்டு வா – காதல் கிளிகள்

https://www.youtube.com/watch?v=mbPvqfqdXuo

50. இல்லம் சங்கீதம் – அவன் அவள் அது

https://www.youtube.com/watch?v=nxjhOVsF9bc

51. மாலை வேளை ரதி மாறன் – சாமந்திப்பூ

https://www.youtube.com/watch?v=T8pEeYFaDrE

52. தேவி வந்த நேரம் – வண்டிச்சக்கரம்

https://www.youtube.com/watch?v=gaxcycwkjJ8&t=30s

53. கல்யாண மாலை – ராமன் பரசுராமன்

https://www.youtube.com/watch?v=n4bOM2NOATM

54. உள்ளத்தில் ஒரு ஊஞ்சல் – கோடீஸ்வரன் மகள்

https://www.youtube.com/watch?v=7ntnNpQCMf8

55. முத்து முத்து தேரோட்டம் – ஆணி வேர்

https://www.youtube.com/watch?v=ukmITZucNp4

56. 56.  ‪கல்யாண மேளங்களே - நெல்லிக்கனி‬

https://youtu.be/3lqiclYVNWk‬


57. எங்கெங்கும் அவள் முகம் – நெருப்பிலே பூத்த மலர்

https://www.youtube.com/watch?v=9wD93On05IM

58. ஒரு ராகம் பாடலோடு – ஆனந்த ராகம்

https://www.youtube.com/watch?v=q-ioEgmMMF0

59. சேலை குடை பிடிக்க – ஆயிரம் முத்தங்கள்

https://www.youtube.com/watch?v=aMYOwCg9J8I

60. முத்து மாணிக்க கங்கை – துணைவி

https://www.youtube.com/watch?v=zMpwwnRIU8s

61. ராகம் தாளம் பல்லவி – தீர்ப்புகள் திருத்தப்படலாம்

https://www.youtube.com/watch?v=EyGDdCRZOZk

62. சீனத்துப் பட்டு மேனி – தாய் மூகாம்பிகை

https://www.youtube.com/watch?v=Ccj6IDandcc

63. கனாக் காணும் – அக்னி சாட்சி

https://www.youtube.com/watch?v=Z4hahi_HvxI

64. டிஸ்கோ சங்கீதம் தான் – நம்பினால் நம்புங்கள் (சிவகுமார் நாயகன்)

https://www.youtube.com/watch?v=sUeAbs1K8mM

65. மெளனமே நெஞ்சில் நாளும் – உறங்காத நினைவுகள்

https://www.youtube.com/watch?v=5ivd40z0Ozw

66. வாடா கண்ணா – தம்பதிகள்

https://www.youtube.com/watch?v=ZMX2unYUvpw

67. பொன் வானம் – இன்று நீ நாளை நான்

https://www.youtube.com/watch?v=VBHqrR5VeO4

69. நானும் நீயும் சேர்ந்து – தண்டிக்கப்பட்ட நியாங்கள்

https://www.youtube.com/watch?v=pSDPAzawv7Y

71. பகலென்றும் இரவென்றும் – தங்கைக்கோர் கீதம்

https://www.youtube.com/watch?v=t4L5BswaPYA

72. பாடும் வானம்பாடி – நான் பாடும் பாடல்

https://www.youtube.com/watch?v=lRhbwAqw1As

73. சீர் கொண்டு வா – நான் பாடும் பாடல்

https://www.youtube.com/watch?v=-AG0xwV8g9M

74. பாரிஜாதம் – நிலவு சுடுவதில்லை

https://www.youtube.com/watch?v=pwhfon66Xm4&t=105s

75. தேவன் தந்த வீணை – உன்னை நான் சந்தித்தேன்

https://www.youtube.com/watch?v=MrAX0UorGnM

76. தெய்வம் வந்தது – புதுயுகம்

https://www.youtube.com/watch?v=AB3JLWsKiu0

77. நிழல் தேடி வந்தேன் – பெளர்ணமி அலைகள்

https://www.youtube.com/watch?v=ZeSkfMOZGTs

78. ஆத்தைக் கடக்க வேணும் – சுகமான ராகங்கள்

https://www.youtube.com/watch?v=zeYRO0f-epE

79. விளக்கேற்றி வைத்தால் – கற்பூர தீபம்

https://www.youtube.com/watch?v=xlANTrpW5XA

80. வண்ணம் இந்த வஞ்சியின் – பிரேம பாசம்

https://www.youtube.com/watch?v=CQ77tSY7yxU

81. கலைவாணியே – சிந்து பைரவி

https://www.youtube.com/watch?v=iCCE4tFurCQ

82. பருவம் கனிந்து வந்த – யாரோ எழுதிய கவிதை

https://www.youtube.com/watch?v=veYUwsqN1NY

83. எந்தன் கைக்குட்டையை – இசை பாடும் தென்றல்

https://www.youtube.com/watch?v=8zfLuYqQlqs

84. கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன – மனிதனின் மறுபக்கம்

https://www.youtube.com/watch?v=a59YdPHhEJo

85. கண்ணா உனைத் தேடுகிறேன் – உனக்காகவே வாழ்கிறேன்

https://www.youtube.com/watch?v=eDHoo4Qknjk

86. பனி விழும் பருவ நிலா – பன்னீர் நதிகள்

https://www.youtube.com/watch?v=VNC7Kj9ANsM

87. என்று தணியும் – இனி ஒரு சுதந்திரம்

https://www.youtube.com/watch?v=cdx77BDpvUE&t=64s

88. உனை நானே அழைத்தேனே – சின்னக்குயில் பாடுது

https://www.youtube.com/watch?v=MzVwRcq6p_U

89. பல்லவியே சரணம் – ஒருவர் வாழும் ஆலயம்

https://www.youtube.com/watch?v=YsmMH4mmilc

90. தென்பாண்டித் தமிழே – பாசப் பறவைகள்

https://www.youtube.com/watch?v=99a2XDU2Oys

91. நந்தவனம் பூத்திருக்கு (இல்லம்) சிவகுமார் நாயகன்

https://www.youtube.com/watch?v=RAVxifJMFSg

92. வண்ண நிலவே – பாடாத தேனீக்கள்

https://www.youtube.com/watch?v=YglpOFkdA64

93. இங்கே இறைவன் – சார் ஐ லவ் யூ

https://www.youtube.com/watch?v=42-J-cHeXZc

94. சந்த்ரிகையும் சந்திரனும் – பொறந்த வீடா புகுந்த வீடா

https://www.youtube.com/watch?v=kX9-VL6QoOA&t=13s

95. தேவியின் திருமுகம் - வெள்ளிக்கிழமை விரதம்

https://www.youtube.com/watch?v=x8bK1RX2Msw

96. அந்தரங்கம் நானறிவேன் - கங்கா கெளரி

https://www.youtube.com/watch?v=tyjtdXa-sQY

97. காமி சத்யபாமா - ஶ்ரீ கிருஷ்ண லீலா

https://www.youtube.com/watch?v=jE33kRmFsao

98. ஒரு சின்னப் பறவை - மதன மாளிகை

https://www.youtube.com/watch?v=qCNJ26_u9qU

99.  ஆராரோ ஆரிராரோ - தசரதன்

https://www.youtube.com/watch?v=tz_Y1V4V-10


சிவகுமாரின் 175 வது படம் வாட்ச்மேன் வடிவேலு

100. சந்திரனும் சூரியனும்  

https://www.youtube.com/watch?v=AsdOD0mj0ZU

கானா பிரபா

27.10.2021

இந்தப் பாடல்களைத் தொகுத்தளிக்க மூன்று மணி நேரங்கள் பிடித்தது. ஆகவே பிரதியெடுப்பவர்கள் தொகுத்தவரின் உழைப்பைக் கருத்தில் கொள்ளவும்.

Tuesday, October 26, 2021

இசைஞானி இளையராஜா இசை வழங்க பாடகர் மனோ பிறந்த நாள் இசைக் கொண்டாட்டம் ❤️🎙

இன்று பாடகர் மனோவின் பிறந்த நாள். 

இந்திரன் சந்திரன் (இந்திருடு சந்துருடு), இதயத்தைத் திருடாதே (கீதாஞ்சலி) போன்ற படங்களின் பாடல்களைத் தெலுங்கில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய அளவுக்கு நியாயம் செய்யவில்லை என்றெல்லாம் மனக் குறை உண்டு. அத்தோடு பாடகர் மனோவுக்கு இசைஞானி இளையராஜா வாரி வழங்கியதில் இன்னதெல்லாம் இவர் பாடியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்றெல்லாம் மனம் ஒப்பிட்டுப் பார்க்கும். ஆனால் அதையும் தாண்டி மனோ பாடிய பாடல்களில் ஏராளம் என் நெஞ்சுக்கு நெருக்கமானவை. அதற்குக் காரணமும் உண்டு.

மனோவுக்கானதாக ஆக்கப்பட்டது என்ற வகையில் அப்படியொன்று,

ஒரு பெரும் மழை அடிப்பதற்குக் கட்டியம் கூறுமாற்போல ஒரு நீர்க்குட்டை ஒன்றில் மெல்ல மெல்ல வந்து விழுமாற்போல அந்தப் பியானோ இசை ஆரம்பிக்கிறது. அதைப் பெருப்பித்து ஊதி ஊருக்கே பறைசாற்றுமாற்போலக் கூட வரும் வயலின் கூட்டணி மேலே இழுத்துச் செல்கிறது அந்த ஆர்ப்பரிப்பைக் கொஞ்சம் அடக்கி மெல்ல அரவணைக்கும் புல்லாங்குழல் மனோவிடம் கொடுக்க

"மெளனம் ஏன் மெளனமே வசந்த காலமா..... நினைவிலே வளர்ந்தது பருவராகமா...

தனிமையில் நீ இனிமையை அழைத்து வா...... மனதில் ஆட வா"

என்று நிதானிக்க ஒரு ட்ரம்ஸ் இசைக்கீற்று இதயத்தின் படபடப்பாய் ஒலிக்க

மீண்டும்

"மெளனம் ஏன் மெளனமே 

வசந்த காலமே....மெளனம் ஏன் மெளனமே" 

https://www.youtube.com/watch?v=2gfahVbt09I

என்று தொடருகிறார்.

யோசித்துப் பார்த்தால் இன்னொரு உண்மை தெரியும், எத்தனையோ ஆயிரம் பாடல்கள் பிறக்கின்றன. எல்லாமே எல்லோரையும் ஆட்கொள்ளும் அளவுக்கு ஆவதில்லை. எங்கோ, எப்போதோ இசையமைத்த பாட்டு ஒன்று அவ்வளவு பிரபலமாகாத பாட்டை நம் மனசுக்கு மட்டும் நெருக்கமாக வைத்திருக்கும் போது இன்னொருவரும் அதே அலைவரிசையில் இருக்கும் போது நம் இசைஞானம் அங்கீகரிக்கப்பட்டது போன்ற ஒரு பெருமிதம்.

"மெளனம் ஏன் மெளனமே" பாட்டை எனக்கு தொண்ணூறுகளின் ஒரு ஞாயிறு சென்னை வானொலியின் திரைகானம் தான் அறிமுகப்படுத்தியது. அந்த நேரத்து திண்டாட்டமான வயதும் மனதும் இந்தப் பாட்டுக்கு நெருக்கமாக இருப்பதாக உணர்ந்து கொண்டதாலோ என்னவோ மிகவும் பிடித்துப் போனது.

பள்ளிக்காலத்தில் தீவிரமாகப் பாட்டுக் கேட்டு வாழத் தலைப்பட்ட சூழலில் எங்களுக்கு முதல் தேர்வாக அமைந்தது அப்போது சுடச் சுட வந்து கிட்டியவை இசைஞானி இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல்கள். அதுவும் மனோ & சித்ரா கூட்டணி என்றால் கேட்கவே வேண்டாம்.

அதுவும் பூந்தோட்டக் காவல்காரன் படத்தில் வரும் "பாராமல் பார்த்த நெஞ்சம்" பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் மனசுக்குள்ளால் வெளிக் கிளம்பும்.

"ஒரு நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக" பாடலைக் கேட்ட காலமெல்லாம் "சிறகுகள் வாங்கி உறவெனும் தேரில் வெகு வெகு தூரம் போகலாம்" என்று காதலாகிக் கனிந்த காலங்கள்.

மனோவின் பாடல்களை வைத்துக் கொண்டே என் இளமைக் காலத்தின் ஒவ்வொரு கூறுகளையும் அசை போட முடியும். அவ்வளவு நெருக்கமான ஞாபகக் கிளப்பிகள் அவை. 

என்னைப் போலவே இசைஞானியின் இசை அடிமை நண்பர் கலைச்செல்வனோடு காரில் ஊர் சுற்றும் போது அவர் பாட்டுக்கு எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன் என்று ஆரம்பிக்க, நான் பதிலுக்கு மனோவை எடுத்து விட 

"ஐயா உங்களுக்கு மனோ எண்டால் லவ்ஸ்" 

என்று கிண்டலடித்துச் சிரிப்பார்.

அவ்வளவுக்கு மனோ பாடிய பாடல்களில் நேசம் வரக் காரணம் ஒவ்வொரு பாடலுக்குக்குப் பின்னால் பள்ளிக்கால ஆட்டோகிராப் நினைவு ஏதாவது புதைக்கப்பட்டிருக்கும்.

பாடகர் மனோ இளையராஜாவிடம் நிறையப் பாடியதற்கு ஒரு காரணம், ராஜாவின் இசை வேகத்துக்குத் தீனி போட்ட ஏராளம் படங்களோடு அந்த வேகத்தோடு நச்சென்று சொல்வதைப் புரிந்து பாட்டுக் கட்டும் திறன் தான்.

மனோவின் ஆரம்ப காலத்துப் பாடல்களில் சங்கதிகளில் வெகு சிரத்தையாகக் கையாண்டு நுணுக்கமாகப் பேர் வாங்கியவை ஏராளம் அப்படியொன்று 

“தேன்மொழி.....

எந்தன் தேன் மொழி

https://www.youtube.com/watch?v=DGBEFNPPtI8

தன் ஆரம்பப் பயணத்திலேயே ராஜாவிடம் நன் மாணக்கான் பெயர் பெற்ற பாட்டு.

இந்தப் பதிவுக்காகத் தயாரித்த புகைப்படக் கோவைக்காகத் தேர்ந்தெடுத்த படங்கள் பாடகர் மனோ குழுமத்தில் எடுக்கப்பட்டவை.

இன்று மனோவின் பிறந்த நாளில் இசைஞானி இளையராஜாவோடு இணைந்து கொண்ட வகையில் எனக்குப் பிடித்த பாடல்களின் திரட்டைப் பகிர்கிறேன்.

1. மீனம்மா மீனம்மா - ராஜாதி ராஜா

2. வா வா வா கண்ணா வா - வேலைக்காரன்

3. பாராமல் பார்த்த நெஞ்சம் - பூந்தோட்டக் காவல்காரன்

4. மதுரை மரிக்கொழுந்து வாசம் - எங்க ஊரு பாட்டுக்காரன்

5. வானத்துல வெள்ளி ரதம் - எங்க ஊரு மாப்பிள்ளை

6. ‪மல்லியே சின்ன முல்லையே‬ - பாண்டித்துரை

7. ஒரு போக்கிரி ராத்திரி பார்க்கிற பார்வை தான் - இது நம்ம பூமி

8. அருகமணி கருகமணி - மாப்பிள்ளை வந்தாச்சு

9. காதோரம் லோலாக்கு - சின்ன மாப்ளே

10. நிலாக்காயும் நேரம் சரணம் - செம்பருத்தி

11. ஆடிப்பட்டம் தேடிச் செந்நெல் வெத போட்டு - தென்மதுரை வைகை நதி (மைக்கேல் மதன காமராஜன் ரெக்கார்ட்டில் வந்தது)

12. அடிச்சேன் காதல் பரிசு - பொன்மனச் செல்வன்

13. வானில் விடிவெள்ளி - ஹானஸ்ட் ராஜ்

14. மாலை நிலவே - அன்புக் கட்டளை

15. ஓ ப்ரியா ப்ரியா - இதயத்தைத் திருடாதே

16. ஆத்தாடி ஏதோ ஆசைகள் - அன்புச் சின்னம்

17. நினைத்தது யாரோ - பாட்டுக்கு ஒரு தலைவன்

18. சித்திரை மாதத்து நிலவு வருது - பாடு நிலாவே

19. ஒரு நாள் நினைவிது - திருப்புமுனை

20. அன்பே நீ என்ன - பாண்டியன்

21.சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு - பாண்டி நாட்டுத்தங்கம்

22. அழகான மஞ்சப்புறா - எல்லாமே என் ராசாதான்

23. ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு - குரு சிஷ்யன்

24.நிக்கட்டுமா போகட்டுமா - பெரிய வீட்டுப் பண்ணக்காரன்

25. அடி பூங்குயிலே பூங்குயிலே - அரண்மனை கிளி

26. சித்திரத்துத் தேரே வா - நாடோடிப் பாட்டுக்காரன்

27. மலைக்கோவில் வாசலில் - வீரா

28. ஒரு மந்தாரப்பூ - சின்ன ஜமீன்

29. ஒரு மைனா மைனாக்குருவி - உழைப்பாளி

30. சின்ன ராசாவே - வால்டர் வெற்றிவேல்

31. சோலை இளங்குயில் - காவலுக்குக் கெட்டிக்காரன்

32. நிலவ நிலவ - காத்திருக்க நேரமில்லை

33. மணியே மணிக்குயிலே - நாடோடித் தென்றல்

34. வந்தாள் வந்தாள் ராஜகுமாரி - ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

35. மருதாணி அரைச்சேனே - ராஜா கைய வச்சா

36. சிங்கார மானே தேனே - தாய் மொழி

37. சொல்லிவிடு வெள்ளி நிலவே - அமைதிப்படை

38. மானே மரகதமே - எங்க தம்பி

39. சத்தம் வராமல் - மை டியர் மார்த்தாண்டன்

40. தென்றல் காத்தே தென்றல் காத்தே - கும்பக்கரை தங்கய்யா

41. தண்ணீரிலே முகம் பார்க்கும் - மணிக்குயில்

42. வெட்டுக்கிளி வெட்டி வந்த வாசம் - பிரியங்கா

43. நினைக்காத நேரமில்லை - தங்கக்கிளி

44. கண்ணே இன்று கல்யாணக்கதை - ஆணழகன்

45. கேக்குதடி கூக்கூ கூ - கட்டுமரக்காரன்

46. நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன்

47. அடி அரைச்சு அரைச்சு - மகராசன்

48. பூங்காற்றே இது போதும் - படிச்ச புள்ள

49. பூத்தது பூந்தோப்பு - தங்க மனசுக்காரன்

50. விழியில் புதுக்கவிதை படித்தேன் - தீர்த்தக்கரையினிலே

51. அதோ மேக ஊர்வலம் - ஈரமான ரோஜாவே

52. சிங்காரப் பெண் ஒருத்தி - ஒருவர் வாழும் ஆலயம்

53. தேன்மொழி எந்தன் தேன்மொழி - சொல்லத் துடிக்குது மனசு

54. காவியம் பாடவா தென்றலே - இதயத்தைத் திருடாதே

55. மெளனமேன் மெளனமே - என் ஜீவன் பாடுது

56. ஓ ஜனனி என் ஸ்வரம் நீ - புதிய ராகம்

57. மலையாளக் கரையோரம் - ராஜாதி ராஜா

58. கல கலக்கும் மணியோசை - ஈரமான ரோஜாவே

59. ராசாத்தி மனசுல - ராசாவே உன்னை நம்பி

60. காதல் ராகமும் கன்னித் தமிழும் - இந்திரன் சந்திரன்

61. வண்ணச் சிந்து வந்து விளையாடும் - கோயில் காளை

62. இங்கே இறைவன் இன்னும் கலைஞன் - சார் ஐ லவ் யூ

63. பொன்மானே பொன்மானே - அன்புக் கட்டளை

64. பாடுமோ ஓவியம் - புதிய ராகம்

65. பூவான ஏட்டத் தொட்டு - பொன்மனச் செல்வன்

66. பாசமுள்ள பாண்டியரு - கேப்டன் பிரபாகரன்

67. ஆச்சி ஆச்சி - மனதில் உறுதி வேண்டும்

68. குடகு மலைக் காட்டில் வரும் - கரகாட்டக்காரன்

69. காதல் கிளியே - ஜல்லிக்கட்டு

70. ஓர் பூமாலை - இனிய உறவு பூத்தது

71. பாடுங்கள் பாட்டுப் பாடுங்கள் - பாடு நிலாவே

72. ஒரு உறவு அழைக்குது - கிருஷ்ணன் வந்தான்

73. அந்தியிலே வானம் - சின்னவர்

74. ஒரு நிலவு வந்தது - என்றும் அன்புடன்

75. மணிக்குயில் இசைக்குதடி - தங்கமனசுக்காரன்

76. கண்ணே என் கண்மணியே - கவிதை பாடும் அலைகள்

77. உந்தனின் பாடல் என்னை - ராக்காயி கோயில்

78. செண்பகமே செண்பகமே - எங்க ஊரு பாட்டுக்காரன்

79. வான் நிலா தேன் நிலா - கவிதை பாடும் அலைகள்

80. சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி - என்னப் பெத்த ராசா

கானா பிரபா

26.10.2021

Monday, October 25, 2021

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோன்றுதடி

இசையின்பம், காட்சியின்பம் கலந்த களிப்புறு பாட்டு. தொடக்கத்தில் இருந்து அடி வரை ஒரு சொட்டு வீணாக்கியிருப்பார்களா காட்சிப்படுத்தலில்?
நாணப் புன்னகையோடு வீணை மீட்டும் பெண் ஶ்ரீதேவி, அந்த வீணை நாதம் பிறக்கும் இடத்தையும், போய்ச் சேர வேண்டிய பெண் பார்க்க வந்தவர் கமல்ஹாசனிடமும் போய்க் காட்டி விட்டு அந்தப் புல்லாங்குழல் இசையில் வீட்டை அளந்தளந்து எல்லோரையும் காட்டி நிற்கும் ஒளிப் படையல்.
அதுவே அடுத்த சரணத்தில் அந்தப் பெண் பார்க்கும் வீட்டில் அசைவின் ஓசையின் காட்சிப்படுத்தல்.
"சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோன்றுதடி பாடல்". கண்ணதாசனின் வரிகளுக்கு கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.சைலஜா பாடியிருக்கிறார்கள். மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் ஆளுமை கண்ணதாசனையும் விட்டு வைக்கவில்லை, அதனாலேயே ஆரம்பம் தொட்டு செல்லம்மா, வெள்ளிப்பனி என்று வரிகளிலே பாரதியாரின் சொல்லாட்டல் தாக்கம்.
இந்தப்பாடலில் சாஸ்திரீய சங்கீதத்தில் குழையும் ஜேசுதாஸ் குரல் இதே படத்தில் வரும் இன்னொரு அழகான பாடல் "பொன்னான மேனி" பாடலில் எஸ்.ஜானகியோடு ஜீன்ஸ் போட்டு ஆடும். இரண்டுமே வித்தியாச அனுபவங்கள்.
ஒரு பாடலை அந்தப் பாடலின் உள்ளார்த்தம், இசையமைக்கப்பட்ட பாங்கு எல்லாவற்றையும் உள்வாங்கிக் காட்சிப் படுத்திய பாடல்கள் மிக அரிது. அந்த அரிதில் இதுவுமொன்று. பெண் பார்க்க வந்த கமலுக்காக பாடலை ஹம் செய்து கொண்டே குனிந்த தலை நிமிரா வெட்கம் அப்பிய ஶ்ரீதேவி வீணையேந்திப் பாட, கதிரையில் இருந்து கண்சிமிட்டி ரசிக்கும் கமல், கூடவே இருந்து காட்சியின் போக்குக்கேற்ப தன் முகபாவங்களைக் காட்டும் புரோகிதரின் பங்கு, பாக்கு உரலை இடித்து வெற்றிலை குதப்பும் பாட்டி, தாத்தா, பாடல் ஒருபுறம் நடக்க, இன்னொரு புறம் வந்த விருந்தினருக்கு தேநீர் விருந்தளிக்கும் தாய், இடையில் பாடலை ஶ்ரீதேவி மறந்து விட அந்த விட்ட இடத்தில் இருந்து கமல் பாட ஒரு வெட்கப் புன்னகை உதிர்க்கும் ஶ்ரீதேவி,பாடலின் இடையே சமயம் உணராது மிருதங்கத்தைச் சரிபார்க்கும் மச்சினன் தன் தவறை உணர அது தவறே இல்லை என்னுமாற் போல
"சபாஷ்"
"மேல"
என கமலுக்குள் ஜேசுதாசின் இயக்கம்.
தாளத்துக்கேற்ப தலையில் தப்பும் சிறுவர்,
"வெள்ளிப்பனி உருகி மடியில்
வீழ்ந்தது போல் இருந்தேன்"
என கமல் பாடும் கணம் மடியில் இருந்த சிறுவன் உச்சா போக அதையும் இலாவகமாகப் பிரதிபலித்து மாறும் குரல். இவையெல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது இந்தப் பாடலில் இன்ன இன்ன அம்சங்கள் வரவேண்டுமென முதலிலேயே அணு அணுவாக இயக்குநர் செதுக்கியிருந்திருக்க வேண்டும்.
"கள்ளத்தனம் என்னடி
எனக்கோர் காவியம் சொல்லு என்றார்"
என்று கமல் ஆரம்பிக்கும் போது புரோகிதரைப் பார்த்து எப்பிடி என்று தலையாட்டுவதாகட்டும், கமல் தடுமாறும் இடத்தில் மெலிதான சிரிப்போடு ஶ்ரீதேவி பாடுவதாகட்டும் இவையெல்லாம் குட்டிக் குட்டிக் கவிதைகள், பொட்டின் கீழே திரு நீறுக் கீற்றுப் போலே.
கமல்ஹாசனுக்கு மிகப்பெரும் வர்த்தக ரீதியான களத்தைக் காட்டியதில் கல்யாணராமன் படத்தின் பங்கு முக்கியமானது. அந்தப் படத்தின் இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன், எஸ்.பி.முத்துராமனின் உதவி இயக்குநராக இருந்தவர். கமலுடைய ஆரம்பகாலத்தில் ஒரு பெரும் வெற்றிப்படத்தை அளித்த ஜி.என்.ரங்கராஜனுக்காக மகராசன் படத்திலும் கெளரவ வேடத்தில் நடித்துக் கொடுத்தவர்.
ஜி.என்.ரங்கராஜன் நிறையப் படங்களை இயக்கியிருந்தாலும், கல்யாணராமனுக்குப் பின் பேர் சொல்ல ஒரு படம் என்றால் அது மீண்டும் கோகிலா தான். மகேந்திரன் இயக்கவிருந்த படம், ஜெமினி மகள் ரேகா தமிழிலும் நடிக்க வேண்டியது என்ற முன்னேற்பாடுகள் கலைந்தாலும் பின்னர் எல்லாமே சரிவர அமைந்து விட்டது.
கமல், ஶ்ரீதேவி, சுதாகர், தீபா போன்ற அன்றைய முன்னணி நட்சத்திரங்கள் நடித்தது. கண்ணைச் சிமிட்டியபடியே நடிகை மேல் சபலம் கொள்ளும் சாதா குடும்பஸ்தராக கமலுக்கு வேடம். இந்தப் படம் நடிகை ஶ்ரீதேவிக்கு பிலிம்பேர் விருதையும் சம்பாதித்துக் கொடுத்தது.
இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே அருமை என்பதை மீண்டும் மீண்டும் ரசிக்கும் போதெல்லாம் நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.
அதெல்லாம் சரி, பெண் பார்க்கப் போலும் போது பாட்டுப் பாடுவதை சினிமாவில் பார்த்திருக்கிறேன். நிஜ வாழ்வில் கண்டதில்லை. சம்சாரம் அது மின்சாரம் படத்திலும் "ஜானகி தேவி ராமனைத் தேடி" என்று பெண் பார்க்கும் படலத்தில் வரும் பாட்டு வரும். இன்னும் எத்தனையோ உண்டு.
ஆனாலும் பாடலில் ஒரு அழகியலை ஏற்படுத்திய விதத்தில் இந்தப் பாடல் தனித்துவமும் மகத்துவமும் மிக்கது.
கே.ஜே.ஜேசுதாஸுக்கு இது போல் ஏராளம் கிட்டியிருக்கிறது. ஆனால் எஸ்.பி.சைலஜாவுக்கு கண்டிப்பாக இந்தப் பாட்டு ஒரு உச்ச பட்சக் கொடை எனலாம். அவர் தொடக்கத்தில் தரும் வார்த்தையற்ற நீள வாசிப்பை திரும்ப அதே உணர்வோடு, அதே பாங்கில் கொண்டு வந்து தான் பார்க்கட்டுமே?
தமிழ்த் திரையுலகின் மூன்று சகாப்தங்கள் மெல்லிசை மன்னர், இசைஞானி, இசைப்புயல் ஆபேரி ராகத்தைக் கையாண்டதில் சூழ் நிலை பொருத்திப் பார்த்தால்,
“குழந்தையும் தெய்வமும்” படத்தில்
“பழமுதிர்ச் சோலையிலே - தோழி
பார்த்தவன் வந்தானடி

என்று மெல்லிசை மன்னர் கொடுக்க,

33 வருடங்கள் கழித்து இசைப் புயல் யுகத்தில்
“கண்ணோடு காண்பதெல்லாம் – தலைவா
கண்களுக்குச் சொந்தமில்லை


என்று அழகு பார்த்த ஆபேரி

இடைக்காலத்தின் ராஜா கூட்டுக் குடித்தனம் சூழ அப்படியே
தன் இசை வழியே ஒரு கற்பனை சுயம்வரத்தை நிகழ்த்திக் காட்டும் முன்னேற்பாட்டில்,
“சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே” பாடலையே பின்னணி இசையாகக்
கொடுத்து விட்டுத்தான் தன் பாடலுக்குள் புகுவார்.

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோன்றுதடி

காட்சியின்பம்

ஒலியின்பம்

கானா பிரபா
25.10.2021

Sunday, October 24, 2021

விடை பெற்ற இசையமைப்பாளர் இனியவன்

இன்று காலை இசையமைப்பாளர் இனியவன் இவ்வுலகை விட்டு மறைந்து போனார் என்ற சோகச் செய்தியை விதைத்தது நண்பர் கல்லாறு சதீஷ் Arulrasa Nageswaran அவர்களது ஃபேஸ்புக் இடுகை.

இசையமைப்பாளர் இனியவன் குறித்து முன்பும் சிலாகித்து எழுதியிருக்கின்றேன். அவரைத் திரையுலகம் வீரியமாகப்  பயன்படுத்தியிருந்தால் தொண்ணூறுகளில் முக்கிய இசை ஆளுமையாக விளங்கியிருப்பார்.

இசையமைப்பாளர் இனியவன் அற்புதமான இசையாற்றல் கொண்டவர் என்பதை அவரின் “கெளரி மனோகரி” படம் பறையும். 

அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது

குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது

அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா

இசை ஒன்றே .......

லயம் ஒன்றே .........

https://www.youtube.com/watch?v=v7msses-Bo4

சங்கீத சாகரம் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் உடன் பாடும். நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் இணைந்து பாடிய அழகான பாட்டு இது.

இதே படத்தில் “பார்த்த பார்வையில் என்னுள்ளம் என்ன பள்ளம் ஆனது” https://www.youtube.com/watch?v=9QjGwWZJak4 

என்ற இன்னொரு அற்புதமான காதல் பாடலை எஸ்.ஜானகி & எஸ்.பி.பி பாடியிருக்கிறார்கள். இந்த இரண்டும் தொண்ணூறுகளின் பண்பலைகளைக் கலக்கியது. என் பங்குக்கு நானும் கொடுத்திருக்கிறேன் வானொலியில்.

“தங்கமே உந்தன் காதல் தன்னை

கண்கள் ஏன் மறைத்தது..

தாவணி போட்டு மூடி வைக்கும்

ஆசைதான் முளைத்தது....”

“இதயத்தில் உன்னை ஏற்றி வைத்து

என்றுமே வாழுவேன்

இமைகளால் உன்னை மூடிக் கொண்டு

இரவில் நான் தூங்குவேன்”

சரணத்தில் நோகாமல் பயணிக்கும் வித்தையிலேயே அப்போது வியக்க வைத்து இந்தப் பாடல் மேல் காதல் கொள்ள வைத்தார்.


சாஸ்திரிய சங்கீதத்தை அடி நாதமாகக் கொண்டு கெளரி மனோகரி படத்தில் இவ்விதம் அமைந்த பாடல்களோடு தியாகராஜர் கீர்த்தனையான “சங்கீத ஞானமு” https://www.youtube.com/watch?v=N3kDIQrYrLk பாடலை எஸ்.ஜானகிக்காகக் கொடுத்திருந்தார்.


இத்தகு ஆற்றல் மிகு இசையமைப்பாளர் தமிழ் சினிமாவில் அதிகம் ஆளுமைப்படவில்லையே என்ற ஏக்கம் என் போன்ற ரசிகர்களுக்கு எப்போதும் உண்டு. 

கவிஞர் வைரமுத்துவோடு தொடர்ந்து பயணித்த இசையமைப்பாளராக இனியவன் விளங்கினார்.

அதில் மிகவும் பிரபலம் பூத்தது “கவிதையே பாடலாக” என்ற வைரமுத்துவின் கவிதைகள் பாடல்களாக இனியவன் இசையில் பூத்த போது.

அதிலும் புகழ் பூத்த பாடகர்கள் பலரை இணைத்திருக்கின்றார்.

https://www.youtube.com/watch?v=Rp1FK65KSNM

சுனாமிப் பேரவலம் நிகழ்ந்த போது அதைத் தொடர்ந்து வெளியான “வீழ மாட்டோம்” இசைத் தொகுப்பிலும் வைரமுத்துவின் பாடல்களுக்கு இனியவன் இசை வழங்கியிருந்தார்.

https://eelapparavaikal.com/ms_song/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/

அதில் வீழ மாட்டோம் என்ற பாடல் புலம் பெயர் வானொலிகளில் வழி தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

“ஜென்மம் நிறைந்தது”

https://www.youtube.com/watch?v=MG79HQDIDzM

சமீப ஆண்டுகளில் புலம் பெயர் தேசங்களில் மரணச் சடங்குகளில் அறிவிக்கப்படாத நிரந்தர இடம் பிடித்த கீதம் கூட வைரமுத்து வரிகளில் இனியவன் கொடுத்ததே.

இன்று இனியவனுக்கான விடை கொடுப்புப் பாடலாகவும் அமைந்தது பெரிய சோகம்.

https://www.youtube.com/watch?v=D7Cpl-z8o58

திரையிசையில் எத்தனையோ ஆளுமைகள், ஆனால் அதிஷ்டமும் நிறைந்தவராக இருக்க வேண்டும் என்ற துரதிஷ்டக் கணக்கில் அமிழ்ந்து போன நம் இசையமைப்பாளர் இனியவன் என்றென்றும் இசை ரசிகர் மனதில் வீற்றிருக்கட்டும்.


கானா பிரபா

24.10.2021


Saturday, October 23, 2021

ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்....



“அல்லிப்பூவின் மகளே

கன்னித்தேனை தா ஹோய்....”

சில பாடல்களை நினைக்குந் தோறும் குறித்த பாடலின் இடை வரிக் கீற்றாக வெட்டி மறையும், அப்படித்தான் முன் சொன்ன சங்கதியும் இந்தப் பாட்டை நினைக்கையில் முன் வந்து நிற்கும். 

அந்த வரிகளை ஒப்புவிக்கும் போது எஸ்பிபியிடம் என்னவொரு குழைவு ஆகா 

“ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்” பாடலைக் கேட்கும் போது

கண்மணியே பேசு

மெளனம் என்ன கூறு

https://www.youtube.com/watch?v=B1aC-9MmMEY

பாடலையும் கூடவே கேட்டு விட்டுப் போ என்று மனம் உந்தும்.

நியாயமாகப் பார்த்தால் இந்த “ரோஜா ஒன்று” பாடல் கூட கமல்ஹாசனுக்கான பட்டியலில் போய்ச் சேர வேண்டியது.

அந்த அளவுக்கு உணர்ச்சிப் பிரவாகமாக எஸ்பிபி இங்கேயும் கொடுத்திருப்பார்.


“மயக்கத்தில் தோய்ந்து

மடியின் மீது சாய்ந்து”


வரிகள் இன்னொரு முறை வரும் போது

மடியின்

       மீது

           சாய்ந்து


என்று அப்படியே வரிகளை மடித்து நிமிர்த்துவார்.

அது போலவே ரோஜா ஒன்று என்பதை ஆரம்பத்தில் இணைத்தும் பின் சங்கதியில் 

ரோஜா

ஒன்று

என்று பிரித்தாண்டும் ஜாலம் காட்டுவார்.

எஸ்பிபி & எஸ்,ஜானகி கூட்டுப் பாடல்களில் தவிர்க்க முடியாத ரத்தினம் இந்தப் பாட்டு.

எண்பதுகளின் பாடல்கள் என்ற டெம்ப்ளேட்டில் கச்சிதமாக ஒட்டிப் பார்க்கும்.

“ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்” பாடலை எவ்வளவு தூரம் கொண்டாடுகிறார்கள் என்பதற்கு ஸ்மூலில் இருந்து யூடியூப் ஈறாக இறைந்து கிடக்கும் திடீர்ப் பாடகர்களே சாட்சி. அது தவிர இந்தப் பாடலை மீண்டும் காணொளியாக்கிச் செறிவானதொரு படைப்பாகக் கொடுத்திருக்கிறார்கள் இங்கே.

https://www.youtube.com/watch?v=yluZlQ0qUs8

இந்தப் பாடல் இடம்பெற்ற கொம்பேறி மூக்கன் படத்தை இயக்கிய ஏ.ஜகன்னாதனின் இன்னொரு படமான ஓ மானே மானே படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் இதே எஸ்பிபி & எஸ்.ஜானகி “ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது” https://www.youtube.com/watch?v=8BIpecchHk0 இன்னொரு பரிமாணத்தில் பாடியிருப்பார்கள். இந்த இரண்டு பாடல்களயும் எழுதியது கூட வைரமுத்து தான்.

இரண்டு பாடல்களிலும் இன்னொரு பொது ஒற்றுமை கிட்டார் வாத்தியத்தின் அபரிதமான பயன்பாடு.  

“ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்” பாடலில் சம்பந்தா சம்பந்தமில்லாதது போலத் திடீரென்று தபேலாவும், புல்லாங்குழலும் பேசிக் கொள்ள அதற்கு விடை கொடுக்குமாற் போல ஒரு துள்ளல் இசையில் வரும் கிட்டார்,  அப்படியே ஒரு வயலின் குழுவினரிடம் சங்கமிக்கும் அழகியல் பிறக்கும் இரண்டாவது சரணத்தில். இந்தப் பாடல் ஒரு போதை மருந்து. கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

மயக்கத்தில் தோய்ந்து

மடியின் மீது சாய்ந்து

ரோஜா ஒன்று

முத்தம் கேட்கும் நேரம்

வானும் மண்ணும்

ஒன்றாய் இன்று சேரும்


https://www.youtube.com/watch?v=lhxjW2SzBSU


Friday, October 22, 2021

பாடுதம்மா காற்றின் அலைகள் அந்த நாட்களைத் தேடுதம்மா காற்றில் இலைகள்



“அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா " பாடலுக்கு முன் நான் எழுதி இளையராஜா எடிட்டர் லெனின் உடன் இருக்க பதிவு செய்யப்பட்ட பாடல்
“பாடுதம்மா காற்றில் இலைகள்..
அந்த நாட்களை தேடுதம்மா ஆற்றின் அலைகள்”
சரணத்தில் நான் எழுதிய
"-செங்கதிர் கள் தீட்டும் ஓவியம் வானம்!
சேதி சொல்லும் காற்றில் சேர்ந்தது ஞானம்!
பள்ளி சென்ற சாலை- அந்நாளை இன்று எண்ணும்போது பொன்வேளை! "
என்னும் பல வரிகளை உள்ளடக்கிய பாடலை டைட்டிலில் இடம்பெறச்செய்தார்கள்.. இந்தப்பாடலின் மறுவடிவம் "அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா"”

இப்படி ஒரு கருத்தைப் பகிர்ந்திருந்தார் நம் இயக்குநர் பாடலாசிரியர் மதுக்கூர் கண்ணன் Yaarkannan Actordirector Mathukkur அவர்கள். அவரின் பிறந்த நாளில் பகிர்ந்து கொண்ட பகிர்வில் நண்பர் Ravisankaranand Ramakrishnan இந்தப் பாடலை யார் எழுதியது என்று விசாரிக்க, உடன் பதிலாக மேற்கண்ட கருத்தைப் பகிர்ந்து கொண்டார் கண்ணன் அவர்கள். இதுவொரு அரிய தகவல், இசைத்தட்டில் வெளிவராத இந்தப் பாடலை யார் பிரசவித்தது என்றே தெரியாமல் போயிருந்திருக்கும். இணையம் ஒரு வரப்பிரசாதம் என்பது இம்மாதிரியான கொடுப்பினைகளால் தான்.

பாடுதம்மா காற்றின் அலைகள் பாடல் வீணாகவில்லை, நண்டு படத்தின் முகப்புப் பாடலாக அரங்கேறியது. அந்தப் பாடலை அந்தப் பாடலை புதுப் பாடகர் சுரேஷ் பாடியதாக கண்ணன் சார் குறிப்பிட்டுள்ளார், ஒரு ஏக்கத் தொனியில் எழும் அழகான சங்கீதம்.
அதற்கு மாற்றீடாக மலேசியா வாசுதேவன் அவர்களுக்கான பொக்கிஷப் பாட்டு “அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா” பாடல் ஆரம்பிக்கும் தொனியிலேயே அந்த ஏக்கத்தை “அள்ளித்தந்த பூமி” க்குள் அடக்கி வைத்து விட்டு மேற்கொண்டு அந்த இயற்கை எழிலுக்குள் கடந்த காலப் பயணத்தை நாடோடி போல அழகாகக் கொடுத்திருப்பார். இரண்டுமே நமக்குக் கிடைத்த பொக்கிஷப் பாடல்கள்.
“பாடுதம்மா காற்றின் அலைகள்” பாடலின் பல்லவியில் வரிகள் மாற்றப்பட்டிருக்கலாம்.

பாடுதம்மா ஆற்றின் அலைகள்..
அந்த நாட்களை த்தேடுதம்மா காற்றில் இலைகள்...
வாழும் குயில் நாதம்.. வண்டின் ரீங்காரம்.. ஹோ..
இங்கும் அங்கும் பார்த்தால் இன்பமோ கோடி!
கங்கை வந்து சேர்ந்தாள் காவிரியை தேடி
கோமதியின் ஓரம் என் தாரம் கொஞ்சுகின்ற நேரம்
சங்கீதம்! சாமரப்பூ வீசும் சந்தக்கவிபேசும் கோவில் மணிபாடும் கீதங்களே!
செங்கதிர்கள் தீட்டும் ஓவியம் வானம்!
சேதி சொல்லும் காற்றில் சேர்ந்தது ஞானம்!
பள்ளி சென்ற சாலை- அந்நாளை...
இன்று எண்ணும்போது பொன் வேளை!
சோக நிலை மாறும்... சொந்தம் இனிச் சேரும்...
ஞான விதை தூவும் நேரங்களே...

அந்தப் பாடலை படத்தின் ஒளியோட்டத்தில் இருந்து பிரித்து, பின்னணி இரைச்சலை நீக்கிப் பகிர்கிறேன் இதோ.




கானா பிரபா

22.10.2021