Pages

Thursday, February 27, 2025

இளையராஜா அறிமுகப்படுத்திய இன்னொரு பாடகர் தினேஷ்


கடந்த Zee TV சரிகமப வில் ஒரு ஆச்சரியமான நிகழ்வு அரங்கேறியது.

Track Singer எனப்படும் ஆதாரப் பாடகர் தினேஷ் அந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


1984 ஆம் வருஷம்

தான் ஒரு ஒலிக் கலைஞராக (Sound Engineer) வர வேண்டி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் ஐ சந்தித்ததாகவும், அவரின் தரங்கிணி ஒலிக்கூடத்துக்கு வந்த போது போட்டி நிறைந்த உலகில் என்ன செய்யப் போகிறோம் என்ற நிலையில் இசைஞானி இளையராஜாவிடமே Sound Engineer ஆக வாய்ப்பு கிடைக்கிறது.


ஒரு நாள் திடீரென்று இளையராஜாவின் அழைப்பு. எஸ்பிபிக்காக track பாட வேண்டுமென்று.

“பாட்டுத்தலைவன் பாடினால் பாட்டுத்தான்” 


என்ற இதயக்கோயில் பாடலைப் பாடியவருக்கு, நான் பாடும் மெளன ராகம், பனி விழும் இரவு என்று அடுக்கடுக்காக track பாடல்கள் கிடைக்கின்றன.

“நீ நல்லாத்தானே பாடுறே ஏன் அவர் மாதிரி (கே.ஜே.ஜேசுதாஸ்) மாதிரிப் பாடுறே” 

என்று இளையராஜா சொன்னாராம்.


ஶ்ரீராகவேந்திரர் படத்தில் “அழைக்கிறான் மாதவன்” 


https://youtu.be/nvvlDVjigio?si=kSB5mnlN4F24OS5J


பாடலுக்கும் அவ்விதமே பாடிச் சென்றார். அதைப் பாட வந்த ஜேசுதாஸ் 


குருவே சரணம்! குருவே சரணம்!

ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா…


என்ற அடிகளைத் தானே பாடுவது பாடலின் மூலக் குரலுக்கு முரணாக இருக்குமே முதலில் பாடியது ராகவேந்திரர் ஸ்வாமிக்கு அல்லவா? சிஷ்யன் பாடும் அடுத்த அடிகளை அப்படியே அவர் குரலில் வச்சிடுங்க, எனவும்

தினேஷ் பாடிய அந்தப் பகுதி அப்படியே பயன்பட்டு அதுவே தினேஷின் முதல் பாடலாகவும் அமைந்து விடுகிறது. பதிவை எழுதியவர் கானாபிரபா


பாடகர் தினேஷ் நேரப் பாடல்களாக இளையராஜாவிடம் இன்னும் பாடியிருக்கலாம். கானாபிரபா

தனிப் பாடல்கள் மற்றும் மலையாளத் திரையுலகம் அவரைப் பயன்படுத்திக் கொண்டது.


இளையராஜா இசையில் தெலுங்கில் வெளியான தர்ம ஷேத்திரம் படம் தமிழில் போர்க்களம் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்ட போது

பாலகிருஷ்ணாவே விரும்பி வாங்கிக் கொண்ட ஜேசுதாஸ், ஸ்வர்ணலதா பாடிய “மாசி மாசம் ஆளான பொண்ணு” எஸ்பிபி , சித்ரா  குரலில் 

என்னோ ராத்லு” 


https://youtu.be/tLZmK8pJHHY?si=YH5PexQMyUBgvyF_


என்று ஹிட் அடிக்க அதை தினேஷ்

“ஆடை மூடும்” என்ற பாடலாக


https://youtu.be/l55W9NTUeyo?si=FaUf-ajAtLGR0iHB


 ஸ்வர்ணலதா குழுவினருடனும்,


https://youtu.be/l55W9NTUeyo?si=FaUf-ajAtLGR0iHB


“மொத்தமாய் சிங்கார மேனி தொட்டு” ஆகிய பாடல்களையும் பாடியிருக்கிறார்.


எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில்

சின்னப்பூவே மெல்லப்பேசு படத்தில்

கண்ணே வா


https://www.youtube.com/watch?v=d1x6oGbhu0w


பறவைகள் பலவிதம் படத்தில்

மனம் பாடிட நினைக்கிறதே 


https://www.youtube.com/watch?v=Hrh-8MSXN8o


Welcome 1990 என்ற இசைத்தொகுப்பு அவுசப்பச்சன் மெட்டமைக்க, ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசை கொடுக்க வெளியானது. பின்னர் அதை Fantacy (அந்திமாலை) என்று தன் அனுமதியில்லாமல் ரஹ்மான் தமிழில் மீள வெளியிட்டதாகவும் அவுசப்பச்சன் சர்ச்சையை எழுப்பியிருந்தார். அதில் 

இனிய கல்லூரி 

https://www.youtube.com/watch?v=rw6Nosr_qO8


என்ற பாடலையும் தினேஷ் பாடியுள்ளார்.

பதிவை எழுதியவர் கானாபிரபா


வித்யாசாகர் இசையில் “பூமனம்” படத்தில் இவர் பாடிய 

“என் அன்பே”

https://www.youtube.com/watch?v=4QEAtji8N-4


பாடல் பின்னாளில் பார்த்திபன் கனவு படத்தில் “பக் பக் பக் மாடப்புறா” வாக உரு மாறியது.


லஷ்மிகாந்த் பியாரியால் இசையில் நீராடி வா தென்றலே
https://www.youtube.com/watch?v=2RM_IR-0HLk
அவரின் குரலில் தான் ஒலித்தது.


பாடகர் தினேஷ் இளையராஜா இசையில் நிறையப் பாடியிருக்கலாம் என்று எண்ண வைக்கிறது அவரின் இந்த மேடைப் பாடல்


https://youtube.com/shorts/39JxR2Ybhxs?si=QKjEYWIAE9P6TETA


கானா பிரபா

26.02.2025

Thursday, February 20, 2025

மனதோடு மலேசியா வாசுதேவன் ❤️



“காத்து பட்டாலே 

 கரையாதோ கற்பூரம்

கரையுது எம்மனசு உன்னால,


பட்டுவண்ண ரோசாவாம்

பார்த்த கண்ணு மூடாதாம்…


https://youtu.be/3BIXEACx3eY?si=GbjwucB26G4Rs9u4


“கன்னிப் பருவத்திலே” படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடல் இலங்கை வானொலி வழியாக கடைக்கோடி வரை வழிந்தோடிய கதையெல்லாம் வரலாறு.


ஒரு பக்கம் எஸ்பிபி 

“உச்சி வகுந்தெடுத்து” 

இன்னொரு பக்கம் மலேசியா அண்ணன்

“பட்டுவண்ண ரோசாவாம்”

என்று உணர்வின் பரிமாணத்தைச் சரி சமனாகக் கொடுத்த காலமது.


“பொன்மான தேடி

நானும் பூவோடு வந்தேன்

நான் வந்த நேரம்

அந்த மான் அங்கு இல்லை”


AA ராஜ் இசையில் தணியாத தாகம் படத்தில் இடம்பிடித்த எஸ்.ஜானகியோடு மலேசியா அண்ணன் பாடும் அந்தப் பாடலும் இலங்கை வானொலிப் பிரபலங்களில் ஒன்று

அதுதான்


பூவே நீ யார் சொல்லி

யாருக்காக மலர்கின்றாய்..


https://youtu.be/dbnFVkXHc9s?si=XSRC491zzon2OCEm


மலேசியா வாசுதேவனின் ஆத்மார்த்த தோழர் கங்கை அமரன் இசையமைப்பாளராக அண்ணனுக்கு அள்ளிக் கொடுத்தவை பல. அப்படியொன்று தான் அதுவும்.

“பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேளாயோ” பாடலின் நகலாகப் பிறந்தது “பொன்மானைத் தேடி” என்று கங்கை அமரனே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

“எங்க ஊரு ராசாத்தி” படத்தில் அமைந்த அந்தப் பாடல் மலேசியா வின் குரலால் மேன்மை பெற்றது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை”


“காதல் வைபோகமே 

  காணும் நன் நாளிதே…”


இயக்குநராக கே.பாக்யராஜ் “சுவரில்லாத சித்திரங்கள்” வழி அறிமுகமான போதும் மலேசியா வாசுதேவன் அந்த வெற்றியில் பங்கெடுத்துக் கொண்டார்.


ஒரு பார்த்திபனுக்கு ஒரு அருண்மொழி குரல் போல, அந்தக் காலத்தில் ஒரு  பாக்யராஜுக்கு ஒரு மலேசியா வாசுதேவன் என்ற நியதியை உருவாக்கியது இசைஞானியின் “வான் மேகங்களே….”

அதன் நீட்சியாக தம்பி கங்கை அமரனாரும் தான் இசையமைக்கும் கே.பாக்யராஜ் படங்களில் மலேசியா வாசுதேவன் என்ற தொடர்ச்சியை நிறுவினார். கானா பிரபா 

அந்த வகையில் 

“மெளன கீதங்கள்” படத்திலும் மலேசியா வாசுதேவனை முதன்மைப்படுத்தினார்.


“அப்பாக்கள் சில பேரு

செய்கின்ற தப்பைத்தான்

அடியேனும் முன்னாளில்

செய்தேனப்பா…”


படக் கதையை ஈரடியில் நிறுவியது “டாடி டாடி ஓ மை டாடி” கூடவே “மாசமோ மார்கழி மாசம்” என்ற விரகதாபப் பாடலையும் அள்ளிக் கொடுத்தார் தன் நண்பனுக்காக கங்கை அமரன்.


மெல்லிசை மன்னரும் தன் பங்குக்கு கே.பாக்யராஜுக்காக மலேசியா வாசுதேவன் என்ற கணக்கில் “எண்ணி இருந்தது ஈடேற” (அந்த ஏழு நாட்கள்), “கதவைத் தொறடி பாமா” (பாமா ருக்மணி) என்று பகிர்ந்தளித்தார்.


“பூங்காத்தே….

 அந்தப் பொண்ணுகிட்ட

ஒண்ணு சொல்லி வா” 


https://youtu.be/5mlQTSy0r74?si=VjIpHWQosV5tSujC


ராமராஜன் இயக்குநராக அவதாரமெடுத்த “மண்ணுக்கேத்த பொண்ணு” இசை கங்கை அமரன், இங்கேயும் அற்புதமானதொரு சோகராகத்தை சுசீலாம்மாவுடன் பாட் வைத்தார்.


எஸ்பிபி & மலேசியா ஜோடிப் பாடல்கள் என்றால் சட்டென்று ஞாபகம் வருபவற்றில் 

கங்கை அமரன் “சட்டம்” படத்துக்காக 

இசை கொடுத்த 

“நண்பனே எனது உயிர் நண்பனே”


இன்னொன்று சங்கர் - கணேஷ் இரட்டையர்கள் தந்த

“நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம்”

என்ற நெல்லிக் கனி பாடல்.


அப்படியே அதிகம் கேட்காத கங்கை அமரன் கொடுத்த  “மாமன் பொண்ணுக்கு” சின்னதம்பி பெரிய தம்பி பாடலையும் சேர்க்கலாம். கானா பிரபா


இயக்குநர் ஆர்.சுந்தரராஜன் இளையராஜா தவிர்ந்து இன்னும் பல இசையாளுமைகளோடு இயங்கிய சமயம், மெல்லிசை மன்னரோடு கை கோர்த்த “சரணாலயம்” படத்தில்

“எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை”


https://youtu.be/WuyFYbuK3mI?si=bbsj8McFxQVa4qFr


இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்


https://youtu.be/fm7cC8CW3k4?si=XwLRtYYwU7C_


ஆகிய அற்புதங்களை மறந்து விடாதீர்கள்.


“ஆடி வெள்ளம் நின்னாலும்

  ஆசை வெள்ளம் நிக்காது”


கே.வி.மகாதேவன் இசையில் ஆர்.சுந்தரராஜன் இயக்கிய “தூங்காத கண்ணின்று ஒன்று” படத்திலும் மலேசியா வாசுதேவனுக்கு இடம் கிடைத்தது”


காக்கிச் சட்டை போட்ட மச்சான் 

களவு செய்ய கன்னம் வச்சான்


https://youtu.be/eQ8ORVVV3G4?si=PG4நுன்ர்0ச0ஊ2ல்


சந்திரபோஸ் இசையில் சங்கர் குருவுக்காகப் பட்டையைக் கிளப்பிய பாட்டு. இப்போது கேட்டாலும் அற்புதமான ஒலித்தரத்தில் ஸ்பீக்கர் பீறிடும்.


அப்படியே ஒரு எட்டுப் போய்

“தென்பாண்டிச் சீமையிலே”

தொகையறாவோடு 

ராசா மனசுலதான் லேசா


https://youtu.be/V81ZhIChgws?si=BeJEaiSvuHhPngSS


கேட்டுப் பாருங்கள். அறிமுக இசையமைப்பாளர் ராஜேஷ் கண்ணா “நான் வளர்த்த பூவே” படத்தில் மலேசியா அண்ணனுக்குக் கொடுத்தது அன்றைய ரெக்கார்டிங் சென்டர் ஹிட்.


கிளியே இளக் கிளியே

இந்த சபையில் வந்தாலென்ன


https://youtu.be/dVezmRDtH2s?si=xX5NSZiEXQkgcOLv


மனோஜ் கியான் கூட்டணி மலேசியா வாசுதேவன் அண்ணனையும் தம் கூட்டணியில் நிறுவிய பாட்டு. கானாபிரபா

அப்படியே உழவன் மகனில் கேப்டனுக்காக

“பொன் நெல் ஏரிக் கரையோரம்”


https://youtu.be/IEba-CrpeNU?si=qP3D4VNcrAM7UpSm


என்று மகுடப் பாடலிலும் ஏற்றிக் கெளரவித்தார்கள்.


இசைஞானியார் தவிர்ந்து இன்னும் பல இசை ஆளுமைகளோடும் மலேசியா வாசுதேவன் மிளிர்ந்தார் என்பதற்காக எழுந்த ஒரு சிறு துளி இந்தப் பதிவு.


வெண்மேகமாக 

விடிவெள்ளியாக

வானத்தில் பொறந்திருப்பேன்


என்னை அடையாளம் கண்டு

நீ தேடி வந்தா 

அப்போது 

நான் சிரிப்பேன்


https://youtu.be/h3mAnv1aA5w?si=sImqAsroUddf68mP


மலேசியா வாசுதேவன் அண்ணன் நினைவில்


கானா பிரபா

20.02.2025

Tuesday, February 4, 2025

வாணி ஜெயராம் நினைவில் ஈராண்டு



யாரது
சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது

யாரது…..
சொல்லாமல் 
நெஞ்சள்ளிப் 
போவது….

அந்த இரு முறை வாசிப்பிலே 
தான் காண்பிக்கும்  சங்கதியால் பாடலினுள்ளே இழுத்து வைக்கும் ஒரு உணர்வோட்டம் நிரம்பிய குரல்
வாணியம்மாவினுடையது.

“மேகமே….மேகமே…
பால் நிலா தேயுதே…”
பாடலிலே

“தூரிகை எரிகின்ற போது
இந்த தாள்களில் 
ஏதும் எழுதாது…”

சோக ராகத்தை அவர் சுரம் பிடிக்கும் போது வயலின் வாத்தியத்துக்கும் அவரின் வாய்ப் பாட்டுக்கும் வித்தியாசம் ஏதும் இருக்காது.

இங்கேயும் பாருங்கள் இருமுறை வாசிப்பார் இப்படி,

“எனக்கொரு மலர்மாலை 
நீ வாங்க வேண்டும்

“எனக்கொரு மலர்மாலை
நீ
வாங்க 
வேண்டும்”

அந்த இரண்டாவதில் கொடுக்கும் ஆலாபனையே அடுத்து வரும் இனம்புரியா அவலத்தைக் கோடிட்டு விடும்.

இந்திய சினிமாவின் பெருமை மிகு இயக்குநர்களில் ஒருவரான 
ரிஷிகேஷ் முகர்ஜியின் குட்டி (Guddi) என்ற ஹிந்திப் படத்தில் வசந்த் தேசாய் இசையில் மூன்று பாடல்களைப் பாடும் வாய்ப்பு வாணி ஜெயராமுக்குக் கிடைக்கிறது.

வாணி ஜெயராம் அவர்களை நான் பேட்டி கண்ட போது,
தான் ஹிந்திப் பாடல்களைப் பாடவேண்டும் என்ற இலட்சியத்துக்குக் காரணமாக அமைந்த தன் இளம் பிராயத்தில் றேடியோ சிலோன் இல் புதன் கிழமைகள் தோறும் ஒலிபரப்பான ஹிந்திப் பாடல்கள் பினாகா கீத் மாலா நிகழ்ச்சி, பதிவு கானா பிரபா
அந்த நிகழ்ச்சியில் பின்னர் தன் ஹிந்திப் பாடலான “போலே ரே பப்பிஹரா” பாடல் 16 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து ஒலிபரப்பானதும் கனவு பலித்ததும், தமிழ்ப் பாடல்களை றேடியோ சிலோன் கவி நயத்தோடு தொகுத்து அளித்ததை நெகிழ்வோடு பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Guddi படம் பின்னர் சினிமாப் பைத்தியம் என்ற பெயரில் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளியாகிறது.
ஹிந்திப் பதிப்பில் தர்மேந்திரா என்ற சினிமா நட்சத்திரம் மீது தீரா மோகம் கொண்ட பெண்ணாக ஜெயா பச்ச்ண் நடித்த போது, 
தமிழில் அதையே ஜெய்சங்கர் என்ற நட்சத்திரம் மீது மோகம் கொண்டவராக ஜெயச்சித்திரா நடித்திருப்பார்.
கமல்ஹாசன் துணைப் பாத்திரங்களில் நடித்த காலமது, இங்கேயும் அப்படியே.

ஹிந்தியில் வசந்த் தேசாய் கொடுத்த
“போலே ரே பப்பிஹரா”

https://youtu.be/56AUdC9mn4E?si=zlJn_Bm0hm-oRmKV

தமிழில் வாணி ஜெயராம் அவர்களே பாடியளிக்க, சங்கர் - கணேஷ் இசையில்
“என் உள்ளம் அழகான வெள்ளித்திரை”

https://youtu.be/72bmcsBGrwM?si=3aICu_xfxtACvcAW

ஆனது.
இசையமைப்பாளர்கள் சங்கர் - கணேஷ்  இசையில் பின்னாளில் “மேகமே மேகமே” பாடுவதற்கும் அடித்தளம் ஆனது. “மேகமே” பாடல் ஜகித் சிங் பாடிய கஸல் இசையின் தாக்கத்தில் விளைந்தது.

தேகமே.. தேயினும்
தேன் ஒளி வீசுதே..,

மேகமே.. மேகமே….
பால்நிலா தேயுதே….

வாணியம்மா நினைவில் ஈராண்டு

கானா பிரபா
04.02.2025