Pages

Thursday, September 27, 2007

நீங்கள் கேட்டவை 21

வழக்கம் போல் வகை வகையான பாடல்களை வலைப்பதிவர்கள் கேட்டிருக்கும் நீங்கள் கேட்டவை 21 இல் சந்திக்கின்றோம்.

இன்றைய நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியின் முதல் பாடல் அண்மையில் மறைந்த நடிகர் விஜயனுக்கு அர்ப்பணமாக ஒலிக்கின்றது. ஏற்கனவே வீடியோஸ்பதியில் விஜயன் நினைவாக "நிறம் மாறாத பூக்கள்" திரைப்படத்தில் இருந்து "ஆயிரம் மலர்களே மலருங்கள்" பாடலைத் தந்திருக்கின்றேன். றேடியோஸ்பதியில் ஒலி வடிவில் நடிகர் விஜயன் நடித்த "ஒரு விடுகதை ஒரு தொடர்கதை" திரைப்படத்தில் இருந்து " விடுகதை ஒன்று....தொடர்கதை ஒன்று" என்ற பாடலை கங்கை அமரன் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி ஆகியோர் பாடக் கேட்கலாம். காலம் மறக்கடிக்காத பாடல் உங்கள் காதுகளையும் வருடட்டும்.

சரி இனி நீங்கள் கேட்ட பாடல்களுக்குச் செல்வோம்.
முதலில் பாடலை விரும்பிக் கேட்டிருக்கும் சுதர்சன் கோபால், ராஜ ராஜ சோழன் திரைப்படத்தில் இருந்து "ஏடு தந்தானடி தில்லையிலே" என்ற இனிய பாடலை வரலஷ்மி பாடக் கேட்கின்றார். இசை: குன்னக்குடி வைத்திய நாதன்

அடுத்ததாக ஜீ 3 இன் விருப்பமாக மனதில் உறுதி வேண்டும் படத்தில் இருந்து அதே வரிகளோடு கே.ஜே. ஜேசுதாஸ் பாடும் பாடல் இளையராஜா இசையில் மலர்கின்றது.

அவள் அப்படித்தான் திரைப்படத்தில் இருந்து நக்கீரன் விரும்பிக் கேட்கும் பாடல் ஒலிக்கின்றது. "வாழ்க்கை ஓடம் செல்ல" என்ற அந்தப் பாடல் எஸ்.ஜானகி குரலில் இளையராஜா இசையில் ஒலிக்கின்றது.

நிறைவாக சந்தன முல்லை, "வான் போலே வண்ணம் கொண்டு: என்ற பாடலை சலங்கை ஒலி திரையில் இருந்து இளையராஜா இசையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா பாடக் கேட்கின்றார்.

பாடல்களைக் கேளுங்கள், கேட்ட வண்ணம் உங்கள் விருப்பப் பாடல்களையும் அறியத் தாருங்கள்.

முகப்புப் பட உதவி : சீர்காழி இணையத் தளம்

Powered by eSnips.com

Saturday, September 22, 2007

புதுப் பாட்டுக்கள் கேட்போமா....?

என்னடா இந்தாளு 80 களுக்கு முந்திய காலத்தின் பாட்டுக்களைப் போட்டுச் சாவடிக்கிறாரே என்று இளசுகள் ஏங்கும் குரல் கேட்கின்றது. எனவே இந்தப் பதிவில் சமீபத்தில் திரைக்கு வந்த, வரப் போகின்ற திரையிசைப் பாடல்களின் அணிவகுப்பு " புத்தம் புது வாசம்" என்ற பெயரில் இடம்பெறுகின்றது. இதில் விசேசமாக, தமிழ் திரையுலகில் சமீபகாலமாகக் கூட்டணி ஆட்சி செய்து வரும் ஏழு இசையமைப்பாளர்களின் பாடல்கள் இடம்பெறுகின்றன.
இந்தத் தொகுப்பில் பாடல்கள் குறித்த சிறு அறிமுகத் துணுக்குகளைக் கொடுத்து நிகழ்ச்சியைப் படைத்திருக்கின்றேன்.

பாகம் 1 இல் இடம் பெறும் பாடல்கள்

1. பள்ளிக்கூடம் திரைப்படத்தில் இருந்து பரத்வாஜ் இசையில் " இந்த நிமிடம்" என்ற பாடல் சிறீனிவாஸ், ஜனனி குரல்களில் ஒலிக்கின்றது.

2. அம்முவாகிய நான் திரைப்படத்தில் இருந்து சபேஷ்-முரளி இசையில் "உன்னைச் சரணடைந்தேன்" என்ற பாடல் ஹரிஸ் ராகவேந்தர், கல்யாணி குரல்களில் ஒலிக்கின்றது.

3. கருப்பசாமி குத்தகைதாரர் திரைப்படத்தில் இருந்து தீனா இசையில் " உப்புக்கல்லு" என்ற பாடல் பாம்பே ஜெயஸ்ரீ குரலில் ஒலிக்கின்றது.

பாகம் ஒன்றைக் கேட்க


பாகம் 2 இல் இடம்பெறும் பாடல்கள்

1. கிரீடம் திரைப்படத்தில் இருந்து ஜி.வி.பிரகாஷ் இசையில் "விழியில்" என்ற பாடல் சோனு நிகாம், சுவேதா குரல்களில் ஒலிக்கின்றது.

2. பீமா திரைப்படத்தில் இருந்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் "ரகசியக் கனவுகள்" என்ற பாடல் ஹரிஹரன், மதுஸ்ரீ மதுஸ்ரீ

3. வீராப்பு திரைப்படத்தில் இருந்து டி.இமானின் இசையில் " புலியை கிளி ஜெயிச்சாக் காதல்" என்ற பாடல் ஹரிஸ் ராகவேந்திரா மற்றும் மதுஸ்ரீ மதுஸ்ரீ

4. தொட்டால் பூ மலரும் திரைப்படத்தில் இருந்து யுவன் சங்கர் ராஜாவின் இசையில் " முகத்தை எப்போதும்" என்ற பாடல் ஹரிசரண் மற்றும் யுவன் சங்கர் ராஜா குரல்களில் ஒலிக்கின்றது.

பாகம் இரண்டைக் கேட்க

Wednesday, September 19, 2007

நீங்கள் கேட்டவை 20


நீங்கள் கேட்டவை 20 பதிவில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்த வாரமும் நிறையப் பதிவர்கள் தங்களுடைய விருப்பப் பாடலுக்காகக் காத்திருக்கின்றார்கள். அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் இதோ உங்களுக்காக

முதலாவதாக நம்ம வலைப்பதிவின் கொ.ப.செ கோபி விரும்பிக் கேட்ட பாடல் "தளபதி" திரைக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" இசை: நம்ம இளையராஜா

தொடர்ந்து பதிவர் முத்துலெட்சுமி விரும்பிக் கேட்டிருக்கும் "என் ஜீவன் பாடுது" திரைப்படப் பாடலான "ஒரே முறை உன் தரிசனம் பாடலை இளையராஜா இசையில் எஸ்.ஜானகி பாடுகின்றார்.

வடுவூர் குமார், ஜெயச்சந்திரன், எஸ்.பி.சைலஜா பாடும் "தவிக்குது தயங்குது ஒரு மனது" பாடலை "நதியைத் தேடி வந்த கடல்" படத்திலிருந்து கேட்டிருக்கின்றார். இசையமைப்பாளர் யாரென்று சொல்ல மாட்டேன் ;))

நீண்ட நாட்களாக இந்தப் பாடல் வருமா? என்று ஓட்டுப் போட்ட பொதுஜனம் போலக் காத்திருக்கும் ஜி.ராகவனுக்காக "சந்திப்பு" திரையில் இருந்து எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வாணி ஜெயராம் பாடும் "ராத்திரி நிலாவில்" என்ற பாடல் தமிழ் வலை உலகில் முதலாவதாக (;-))) இடம்பெறுகின்றது.

நிறைவாக ஒரு நிறைவான ஈழத்துப்பாடலை ஈழத்துச் சகோதரன் ஒருவர் கேட்டிருக்கின்றார். "நெய்தல்" என்ற ஒலிப்பேழையில் இருந்து ஜி.சாந்தன் பாடும் "வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்" என்ற பாடல் காற்றில் மிதக்கின்றது.

பிற்குறிப்பு:
இந்த நீங்கள் கேட்டவை பதிவை வலையேற்றிய பின் நம்ம கொ.ப.செ.கோபியிடமிருந்து ஒரு கண்டன மடல் தனிப்பட வந்தது. அதில் அவர் கேட்ட பாடல் தளபதியில் வரும் "அடி ராக்கம்மா கையத் தட்டு" பாடலே என்றும், "சுந்தரி கண்ணால்" ஒரு சேதி பாடலைக் கேட்கும் மனநிலையில் தான் இல்லையெனவும், காரணம் தனக்கு இன்னும் ஜோடி கிடைக்கவில்லையென்றும் வருத்தத்தோடு தெரிவித்தார் ;)
கொ.ப.செயின் கோபத்துக்கு ஆளாகாமல் இதோ அவர் கேட்ட "ராக்கம்மா கையத் தட்டு" பாடல். அத்துடன் அவரின் வேண்டுதல் நிறைவேறவும் பிரார்த்திப்போம் ;-)))


பாடல்களைக் கேட்டவண்ணம் நீங்களும் உங்கள் விருப்பப் பாடல்களை அறியத் தாருங்கள்.
Powered by eSnips.com

Monday, September 17, 2007

பாடிப் பறந்த குயில்கள் - பாகம் 2


ஒரு காலகட்டத்தில் மிகவும் உச்சத்தில், அல்லது புகழேணியில் இருந்து பின் ஒரு இடைவெளிக்குப் பின் மீண்டும் பாட வந்த பாடகர்களின் பாடல்களின் அணிவகுப்பாக மலரும் "பாடிப் பறந்த குயில்கள்" பாகம் இரண்டு இப்பதிவில் இடம்பெறுகின்றது.

முதலில் திரைப்பாடலில் மட்டுமல்ல, நம் நிஜவாழ்விலும் ஜோடி போட்ட பாடகர் சக இசையமைப்பாளர், ஜிக்கி ஆகியோர் பாடிய "புகுந்த வீடு" பாடலான "செந்தாமரையே" என்ற பாடல் சங்கர் கணேஷ் இரட்டையர்கள் இசையில் மலர்கின்றது. ஏ.எம்.ராஜாவைப் பொறுத்தவரை ஒரு உச்சத்தில் இருந்து பின் வாய்ப்புக்கள் வற்றி எழுபதுகளில் மீண்டும் வந்த வாய்ப்பு இது.

அடுத்ததாகத் தன் கணவர் ஏ.எம்.ராஜா மறைவுக்குப் பின் ஒதுங்கிக் கொண்ட பாட்டுக்குயில் ஜிக்கி நீண்ட இடைவெளிக்குப் பின் பாடிய பாடல்களில் ஒன்றான " வண்ண வண்ணச் சொல்லெடுத்து" என்ற பாடல், விஸ்வநாதன் இளையராஜா கூட்டுச் சேர்ந்த "செந்தமிழ்ப் பாட்டு" திரையில் இருந்து ஒலிக்கின்றது.

ஒரு காலகட்டத்தில் ஓய்வெழிச்சல் இல்லாது இசையமைத்துக் கொண்டே தானும் சிறப்பான பாடல்களை அளித்த எம்.எஸ்.விஸ்வநாதன் "காதல் மன்னன்" திரையில் தானும் நடித்துக் கொண்டே நீண்ட இடைவெளிக்குப் பின் பாடிய பாடலான "மெட்டுத் தேடித் தவிக்குது" என்ற பாடலை பரத்வாஜ் இசையில் மலர்கின்றது.

நிறைவாகப் பழம்பெரும் பாடகிகள் இருவர் நீண்ட இடைவெளிக்குப் பின் பாடிய, அதுவும் ஜோடி போட்டுக் கொண்ட பாடல் "நாயகன்" திரையில் இருந்து வருகின்றது. அந்தப் பாடகிகள் ஜமுனா ராணி மற்றும் எம். எஸ். ராஜேஸ்வரி, "நான் சிரித்தால் தீபாவளி" என்று இளையராஜா இசையில் பாடுகின்றார்கள்.

ஒலித் தொகுப்பைக் கேட்க

Thursday, September 13, 2007

நீங்கள் கேட்டவை 19



வணக்கம் வந்தனம் சுஸ்வாகதம் வெல்கம் to நீங்கள் கேட்டவை 19.

ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஏற்கனவே பாடல்களைக் கேட்ட பதிவர்கள் வலை மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்காங்க. இதோ நீங்கள் கேட்ட பாடல்கள்.


பதிவர் முத்துலெட்சுமி, தன் சக பதிவர் மங்கைக்காகக் கேட்ட பாடல் "முத்துக் குளிக்க வாரீகளா", அனுபவி ராஜா அனுபவி திரைக்காக, டி.எம்.செளந்தரராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் மலர்கின்றது.


அடுத்ததாக வெயிலானின் விருப்பமாக, இது நம்ம பூமி திரையில் இருந்து இளையராஜா இசையில் "வான மழை போல " என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடக் கேட்கலாம்.


சுந்தரி விரும்பிக் கேட்டிருக்கும் " அஞ்சு விரல் கெஞ்சுதடி" பாடலை ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி பாட, மனோஜ்-கியான் இரட்டையர்கள் உரிமை கீதம் திரைக்காக இசையமைத்திருக்கின்றார்கள்.

நிறைவாக நம்ம ஓமப்பொடியார் சுதர்சன் கோபால், ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி திரைப்படத்தில் இருந்து மனோ பாடியிருக்கும் "வந்தாள் வந்தாள் ராஜகுமாரி" பாடலை இளையராஜா இசையில் கேட்டிருக்கின்றார்.

பாடல்களைக் கேளுங்கள், கேட்ட வண்ணம் உங்கள் தெரிவுப் பாடல்களையும் அறியத் தாருங்கள். வட்டா...;)

Powered by eSnips.com

Sunday, September 9, 2007

சூர்யா அசின் மலையாளப்பாட்டுக்கு ஆட்டம்

நகல் பாட்டைப் பார்க்க



அசல் பாட்டைப் பார்க்க