Pages

Monday, August 27, 2007

ஓணம் ஷ்பெஷல் மலையாளப் பாட்டுக்கள்



இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேட்டன்களுக்கும், குறிப்பா சேச்சிகளுக்கும் இனிய பண்டிகை வாழ்த்துக்கள்.

இதோ உங்களுக்காக ஷ்பெஷல் பாட்டுப் படையல்

முதலில் வருவது சலீல் செளத்ரி இசையில் பி.லீலா குழுவினர் பாடிய "செம்மீன்" திரைப்பாடலான "பெண்ணாளே பெண்ணாலே" என்ற பாடல்.

அடுத்து ரவீந்திரன் இசையில் "ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா" திரைக்காக மலையாளப் பாட்டுக்கடவுள் கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய "ப்ரமதவனம் வீண்டும்" என்னும் பாடல் வருகின்றது.

தொடர்ந்து "மரக்குடையால் முகம் மறைக்கும் மானல்லா" என்ற பாடலை "மனசினக்கரே" திரையில் இருந்து நம்ம குலதெய்வம் இளையராஜா போட்ட டியூனைப் பாடுகிறார்கள் எம்.ஜி.சிறீகுமார் குழுவினர்.

மலையாளத் திரையுலகில் ஒரு சகாப்தம் படைத்துக் காலமான ரவீந்திரன் இசையில் வந்த இறுதித் திரைப்படமான "வடக்கும் நாதன்"படத்தில் இருந்து "பாகி பரம்பொருளே" என்ற இறைமணம் கமிழும் பாடலைப் பாடுகின்றார்கள் மஞ்சரி மற்றும், சிந்து பிரேம்குமார் குழுவினர்.

நம்ம தல கோபி ஓணம் பண்டிகைக்கு ஒரு பாட்டு வேணும்னு அடம்பிடிச்சார். அவருக்காக நோட்டம் திரையில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "பச்ச பானம்" என்ற பாடல் ஜெயச்சந்திரன் இசையில் வருகின்றது.


எந்தா இது? ஓணம் டோயில் ஒரே மெலடி பாட்டு?
என்று அலுக்கும் சேட்டன்களுக்காக ஒரு துள்ளிசைப் பாடல் நிறைவாக "காழ்ச்சா" திரையில் இருந்து கலாபவன் மணி குழு மோகன் சித்தார்த்தா இசையில் பாடும் "குத்தநாடன் காயலிலே" வருகின்றது.

வரட்டே.....;-)

Powered by eSnips.com

Thursday, August 16, 2007

நீங்கள் கேட்டவை 18



இன்றைய நீங்கள் கேட்டவை 18 பதிவில் நான்கு முத்தான பாடல்கள் இடம்பெறுகின்றன.

முதலில் சர்வேசனின் விருப்பமாக மலரும் "காதோடு தான் நான் பாடுவேன்" பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாட, வி.குமாரின் இசையில் "வெள்ளி விழா" திரைக்காக ஒலிக்கின்றது.

தொடர்ந்து ஒலிக்கும் பாடல் கீர்த்திகாவின் விருப்பமாக டி.எம்.செளந்தரராஜன் பாடும் "நதியினில் வெள்ளம்" என்ற பாடல் "தேனும் பாலும்" திரைக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இடம்பெறுகின்றது.

அடுத்து வரும் இரண்டு பாடல்களுக்கும் இசை வழங்கியிருப்பவர் இசைஞானி இளையராஜா
அவற்றில் முதலில் வரும் "ஆனந்த ராகம்" என்ற பாடலை உமாரமணன் பாட சுதர்சன் கோபால் விரும்பிக் கேட்டிருக்கின்றார். பாடல் இடம் பெற்ற திரைப்படம் "பன்னீர் புஷ்பங்கள்".

நிறைவாக நெல்லைக் கிறுக்கன் தேர்வில் "இளமைக் காலங்கள்" திரைக்காக "பாட வந்ததோர் கானம்" என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா ஆகியோர் பாடக் கேட்கலாம்.

Powered by eSnips.com

வி.எஸ்.நரசிம்மனின் தேன் மழையிலே...!



இசைஞானி இளையராஜாவைத் தொடர்ந்து அடுத்த வரிசையில் நான் நேசிக்கும் இசையமைப்பாளர்களில் முதன்மையானவர் வி.எஸ்.நரசிம்மன். கே.பாலசந்தர் தனது "அச்சமில்லை....அச்சமில்லை...!" திரைக்காக இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட இவர் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராகப் பணியாற்றியது மிகச் சொற்பப் படங்களே. ஆனால் பல பாடல்களுக்குப் பின்னால் இவரின் ஆவர்த்தனம் சேர்ந்திசையாக மிளிர்ந்திருக்கின்றது.

இன்றைய ஒலிப்பகிர்வில் வி.எஸ்.நரசிம்மன் திரையுலகிற்கு இசையமைப்பாளராக வந்த அறிமுகம் குறித்த பார்வையும் தொடர்ந்து "அச்சமில்லை அச்சமில்லை" திரைக்காக இவர் முதன் முதலில் இசையமைத்த "ஆவாரம் பூவு" பாடலும் இடம்பெறுகின்றது.


தொடர்ந்து பாலசந்தரின் உதவியாளராக இருந்த இயக்குனர் அமீர்ஜான் இயக்கத்தில் வெளிவந்த "புதியவன்" திரைக்காக "நானோ கண் பார்த்தேன்" என்ற பாடல் என் பாடல் பொக்கிஷத்திலிருந்து உங்களுக்காக வெளிவருகின்றது.

வி.எஸ்.நரசிம்மன் இசையமைத்த மற்றைய அனைத்துத் திரைப்படப் பாடல்களும் அவை பற்றிய குறிப்புக்களும் அடுத்தடுத்த பகுதிகளில் வெளிவரும். இந்த நிகழ்ச்சிக்கான தகவல் குறிப்புக்களைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் தொடராக வெளிவந்த "திரையிசைச் சாதனையாளர்கள்" பகுதியில் இருந்து பத்திரப்படுத்தித் தேவையான பகுதிகளை மட்டும் வானொலி வடிவமாக்கியிருக்கின்றேன். இதோ தொடர்ந்து கேளுங்கள்.

Monday, August 13, 2007

பாடிப் பறந்த குயில்கள் - பாகம் 1

பாடிப் பறந்த குயில்கள் என்ற புதிய தொடர் இன்று முதல் றேடியோஸ்பதியில் ஆரம்பிக்கின்றது. இந்தத் தொடர் மூலம், ஒரு காலகட்டத்தில் தமிழ்த் திரையிசை உலகில் கொடிகட்டிப் பறந்த பாடகர்கள், ஒரு சிறு இடைவெளிக்குப் பின் மீண்டும் பாட வந்த போது வந்த பாடல்கள் இடம்பெறுகின்றன.

அந்த வகையில், இன்றைய பதிவில் வரும் மூன்று பாடல்களில் முதலாவதாக வருவது,
டி.எம்.செளந்தரராஜன், பி.சுசீலா ஜோடி சேர்ந்த "தாய்க்கு ஒரு தாலாட்டு" திரைப்படத்தில் இருந்து "இளமைக் காலம் எங்கே" என்ற இனிய பாடல் இசைஞானி இளையராஜாவின் இசையில் மலர்கின்றது. இந்தப் படத்தை இயக்கியிருந்தார், மலையாளத் திரையுலகப் பிரபலம் பாலச்சந்திர மேனன்.

தொடர்ந்து மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த "கண்ணுக்கு மை எழுது" திரைப்படத்தில் நடிகை மற்றும் பாடகி பி.பானுமதி, பி.எஸ்.சசிரேகாவின் ஆரம்பக் குரலோடு பாடும் "வாடாமல்லியே நான் சூடா முல்லையே" பாடல் அரங்கேறுகின்றது.
இசை இளையராஜா.



இந்தப் பாகத்தின் நிறைவுப் பாடலாக P.B.சிறீநிவாஸ் சங்கீதாவோடு பாடும் "உயிரே உன்னை இதயம் மறந்து செல்லுமோ" என்ற பாடல் ஆதித்யனின் இசையில், "நாளைய செய்தி" திரைக்காக வருகின்றது.

Thursday, August 9, 2007

நீங்கள் கேட்டவை 17

இன்றைய நீங்கள் கேட்டவை பதிவும் பல்வேறு காலகட்டத்துப் பாடல்களோடு மலர்கின்றது. சரி, உடனேயே இன்றைய பாடல் பகுதிக்குப் போகலாம்.

முதலில் வெயிலான் விரும்பிக் கேட்ட "பெண்ணல்ல நீ ஒரு பொம்மை" என்ற பாடல் வி.குமாரின் இசையில் "சொந்தமடி நீ எனக்கு" திரைப்படத்திற்காக ஜெயச்சந்திரன், சுசீலா பாடும் பாடலாக மலர்கின்றது.

அடுத்ததாக மாயாவின் விருப்பமாக "நெஞ்சில் ஓர் ஆலயம்" திரையில் இருந்து P.B.ஸ்ரீநிவாஸ் குரலில் "நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்" என்ற பாடல் வருகின்றது.
பாடல் இசை எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையர்கள்

கோபிநாத் விருப்பமாக "புதிய பறவை" திரையில் இருந்து "பார்த்த ஞாபகம் இல்லையோ" பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா பாடுகின்றார்.

நட்பு திரையில் இருந்து நக்கீரன், கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி பாடும் இளையராஜா இசையில் வரும் "அதிகாலை சுபவேளை" பாடலைக் கேட்கலாம்.

நிறைவாக சர்வேசனின் விருப்பமாக "ராஜா சின்ன ராஜா" என்ற இனிய பாடலை பூந்தளிர் படத்திற்காக பி.சுசீலா, இளையராஜா இசையில் பாடுகின்றார்.

Powered by eSnips.com

Thursday, August 2, 2007

நீங்கள் கேட்டவை 16



நீங்கள் கேட்டவை 16 பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து உங்கள் விருப்பப் பாடல்களோடு இந்த நிகழ்ச்சி வாரா வாரம் இடம்பெறுகின்றது. எனவே தொடர்ந்து உங்கள் விருப்பப் பாடல்களை அறியத் தாருங்கள், அவை பிந்திய பதிவுகளில் வரக் காத்திருக்கின்றன.

சரி,இனி இந்த வாரப் பாடல் தெரிவுகளுக்குச் செல்வோம்.

முதலாவதாக அய்யனாரின் விருப்பமாக "நண்டு" திரைப்படத்தில் இருந்து "மஞ்சள் வெய்யில்" என்ற பாடலை உமா ரமணன் பாடுகின்றார். இசைய வைத்தவர் இசைஞானியே தான்.

அடுத்த தெரிவாக "ரசிகன் ஒரு ரசிகை" திரையில் இருந்து நெல்லைக் கிறுக்கன் தேர்வு செய்திருக்கும் "பாடியழைத்தேன்" என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் தன் அருமை நண்பர் ரவீந்திரன் இசையில் பாடுகின்றார்.

வடுவூர் குமாரின் விருப்பமான " மஞ்சள் நிலாவுக்கு" என்ற பாடலை, இளையராஜா இசையில் ஜெயச்சந்திரன், பி.சுசீலா, ஆகியோர் முதல் இரவு திரைக்காகப் பாடுகின்றார்கள்.

லட்சுமி திரைப்படத்தில் இருந்து "மேளம் கொட்ட நேரம் வரும்" என்ற பாடல் பி.எஸ்.சசிரேகாவின் குரலில் ஜி.ராகவனின் விருப்பமாக மலர்கின்றது.

மதி கந்தசாமி விரும்பியிருக்கும் "ஆஹா" படப் பாடலான முதன் முதலில் பார்த்தேன்" என்ற பாடலை ஹரிஹரன், தேவா இசையில் பாடக் கேட்கலாம்.

வெயிலான் உட்பட பல நேயர்களின் பாடல்கள் இன்னும் வர இருக்கின்றன. அடுத்த வாரம் வரை பொறுத்துக் கொள்ளுங்கள். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

Powered by eSnips.com