Pages

Saturday, December 22, 2012

"சாகித்ய அகாடமி' விருது பெற்ற‌ எழுத்தாளர் டி.செல்வராஜ் பேசுகிறார்

முற்போக்கு எழுத்தாளர் டி.செல்வராஜ் அவர்களின் "தோல்" என்ற நாவலுக்கு இந்திய "சாகித்ய அகாடமி' விருது இந்த ஆண்டு கிட்டியிருக்கிறது. இந்த நிலையில் அவரை நான் பணிபுரியும் தமிழ் முழக்கம் வானொலி சார்பில் எடுத்திருந்த ஒலிவடிவத்தை இங்கு பகிர்கின்றேன்.

Tuesday, December 18, 2012

பூமாலையே தோள் சேரவா..தீம்தன தீம்தன...

"பூமாலையே தோள் சேரவா
பூமாலையே ஏங்குமிரு தோள் சேரவா"
அஞ்சனா, சத்யப்ரகாஷ் விஜய் டிவி சூப்பர் சிங்கரில் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்க, கண்கள் குளமாகின்றன எனக்கு.

படிக்கும் போது சிரிப்பாக இருக்கும் உங்களுக்கு, ஆனால் சற்று முன்னர் அடைந்த பரவசத்தின் வெளிப்பாடு தான் அது. எப்பேர்ப்பட்ட சக்தி இந்தப் பாடலுக்கு.  இருபத்தேழு வருஷங்களுக்கு முன்னர் வந்த பாடல் ஒன்று இன்று கேட்கும் போதும் ஆட்டிப்படைக்கின்றதென்றால் அதை அவ்வளவு சாதாரணமாக ஒதுக்கிவைக்கமுடியாது. எத்தனை ஆயிரம் பாடல்களைக் கேட்டுவிட்டோம், ஆனால் இப்பேர்ப்பட்ட பாடலை என்றாவது ஒருநாள் கேட்கும் போதும் ஆயிரம் சுகானுபங்களை அள்ளித் திரட்டிக் கொடுத்துத் தின்ன வைக்கின்றது.

இசைஞானி இளையராஜாவோடு ஜோடி கட்டிய பாடகிகளில், ஜானகியை மட்டுமே முதல் இடத்தில் வைத்து இந்தக் கூட்டணியை ஆராதிக்கத் தோன்றும். சித்ராவோடு ராஜா பாடிய பாடல்கள் தனியே நோக்கப்படவேண்டியது என்றாலும், எஸ்.ஜானகியை இன்னும் விசேஷமாக ராஜாவோடு ஜோடி போட்டு ரசிக்க இன்னொரு காரணம் அவரின் தனித்துவம் தான். எண்பதுகளில் எஸ்.ஜானகி என்றால் ஆம்பளை S.P.B என்றும் S.P.B ஐ பொம்பளை எஸ்.ஜானகி என்னுமளவுக்கு இருவருமே திரையிசைப்பாடல்களில் ஒரு வரையறைக்குள் நில்லாது எல்லாவிதமான சங்கதிகளிலும் பாடித் தீர்த்துவிட்டார்கள். எஸ்.பி.பி நையாண்டியாகச் சிரித்துப் பாடினால் அதற்கு ஈடுகொடுத்து நையாண்டியாகச் சிரித்துப் பாடும் ஜானகியை மட்டுமே ரசிக்கலாம், இன்னொருவர் பாடினால் அது அப்பட்டமான செயற்கையாக இருக்கும். அப்பேர்ப்பட்ட ஜானகி, ராஜாவோடு சேர்ந்து பாடிய பாடல்களைக் கேட்கும் போது, ராஜாவின் குரல்வளத்துக்கும் அவருடைய அலைவரிசைக்கும் ஏற்றாற்போல இயைந்து பாடுமாற்போல இருக்கும், அங்கேயும் ஒரு செயற்கைத் தனம் இராது. அதனால் தான் இந்தப் பூமாலையையும் நேசிக்கத்தூண்டுகிறது.

ஆர்ப்பரிக்கும் வயலின் ஆலாபனையோடு எஸ்.ஜானகியும், ராஜாவும் பாடும் இந்தப் பாடலில் இருவருமே முன்னணிப்பாடகர்களாகவும், அதே சமயம் பின்னால் இயங்கும் ஒத்திசைப் பாடகராகவும் இரட்டைப் பணியைச் செய்கின்றார்கள்.
ஜானகி பாடும் போது
"இளைய மனது  
                        தீம்தன தீம்தன
இணையும் பொழுது 
தீம்தன தீம்தன ஆஆஆ"
என்று ராஜா பின்பாட்டு பாடுவதும்
நான் உனை நினைக்காத நாளில்லையே..
தேனினை தீண்டாத பூ இல்லையே 
    நனனாஆஆஆ
நான் உனை நினைக்காத நாளில்லையே 
 என்னை உனக்கென்று கொடுத்தேன்
தேனினை தீண்டாத பூ இல்லையே 
ஏங்கும் இளம்காதல் மயில் நான்
  தேன்துளி பூவாயில் பூவிழி மான்சாயல்
லலலா ..... லலலா .....
என்று ஜானகி பிற்பாட்டுப் பாடுவதுமாகப் பாடல் முழுவதும் இதே சங்கதிதான்.
இப்படியான பாடல்களை எந்தவித சங்கீதப் பின்னணி இல்லாத நம்மைப் போன்ற சாதாரணர்கள் 
மெட்டில் கொட்டியிருக்கும் ஏற்ற இறக்கங்களைக் கேட்டுக் கிறங்கிவிட்டுப் போகவேண்டியதுதான். 
நுட்பமான சங்கீத அனுபவம் நிரம்பப்பெற்றவர்களுக்கு இன்னும் இந்தப் பாடல் கொடுத்திருக்கும் மேன்மை ஒருபடி மேலே தெரியும்.
இசைஞானி இளையராஜா போன்ற மேதையின் மெட்டை உள்வாங்கிக் கிடைத்த இடத்தில் எல்லாம் தன் ஆளுமையைக் காட்டி அதே சமயம் அதிமேதாவித்தனமாகக் குட்டையைக் குழப்பிவிடாத இங்கிதம் தெரிந்த பாடலாசிரியர்களுள் கங்கை அமரனின் பெருமை அதிகம் உலகம் அறியாதது.
பகல் நிலவு படத்தில் எல்லாப்பாடல்களுமே அவரின் கைவண்ணம் தான். "மைனா மைனா மாமன் புடிச்ச மைனா" என்று எழுதிய அதே கைதான் இந்தப் பாடலையும் எழுதியிருக்கின்றது. மேற்சொன்ன பாடல் வரிகளில் கங்கை அமரன் தன்னுடைய தனித்துவத்தைப் பாடல்வரிகளில் புதைத்திருப்பதை ஒரு உதாரணமாகவே பார்க்கலாம். பின்னால் இழைந்து வரும் அந்த ராஜா, ஜானகியின் வரிகளை டம்மியாக லலலா என்றே முழுதுமாக மெழுகியிருக்கலாம். ஆனால் அங்கும் கூடத் தேர்ந்தெடுத்த வரிகளால் ஜொலிக்க வைக்கிறார். பாடலாசிரியர் கங்கை அமரனின் இப்படியான சொற்சிலம்ப வரிகளை வைத்து ஒரு பட்டியல் போடலாம் என்றால் அவர் அண்ணன் பாடுவதற்காக எழுதிக் கொடுத்ததை வைத்தே கலசத்தில் வைக்கலாம். "மோகம் தான் சிந்தும் தேகம் தான் தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான்" நினைவிருக்கும் தானே இந்தப் பாடல் வரிகள்?
இப்படியொரு அழகான பாடலைத் தூக்கிக் கொடுத்து விட்டுக் கடந்து செல்லும் ராஜாவுக்கு விசுவாசமாக அமைந்த காட்சியமைப்பு, கண்ணுக்குள் நிற்குமளவுக்குப் பொருத்தமாக அமைந்திருக்கின்றது. இருபத்தேழு ஆண்டுகள் என்ன இன்னும் பல தசாப்தங்கள் வாழ்ந்தால் கூடவே பயணிக்கும் இந்தப் பாட்டு. ஒவ்வொரு முறை கேட்கும் போதும் இன்று கேட்ட அதே பரவசம் வயலின், புல்லாங்குழல், வீணை கொண்டு மனதை மீட்டும்.
 காற்று சுதி மீட்ட காலம் நதி கூட்ட கனவுகள் எதிர் வரும் அனுபவம், பூமாலையே தோள் சேரவா....

Sunday, December 9, 2012

Ordinary (Malayalam) சுகமான பயணம்

பிரயாணத்தில் சந்திக்கும் மாந்தர்களின் குணாதிசயங்களையும், வழி நெடுகக் கிட்டும் சுவாரஸ்த்தையும், சேர்த்தாலே நம்மூரில் ஏகப்பட்ட கதைகளை அள்ளலாம். ஆனால் இப்படியான படைப்புக்களை அதிகம் கொடுக்காத குறையோடே பயணிக்கிறது சினிமாவுலகம். கடைசியாக தமிழில் மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி திரைப்படம் முற்றிலும் புதுமுகங்களை முக்கிய பாத்திரங்களை வைத்துக் கொடுத்திருந்தது. பரவலாக இந்தப்படம் பலரை ஈர்க்காவிட்டாலும் எனக்கு என்னவோ மிகவும் பிடித்திருந்தது. பயணம் மீதான அதீத காதலாலோ என்னவோ தெரியவில்லை. அந்தவகையில் இன்று பார்த்த Ordinary என்ற மலையாளப்படத்தைப் பார்த்ததும் முதல் வரியில் சொன்ன அந்த திருப்தி கிட்டியது.

பத்தனம்திட்டாவில் இருந்து கவி என்ற எழில் கொஞ்சும் மலைக்கிராமத்துக்குச் செல்லும் ஒரேயொரு அரச பஸ் சேவை, பஸ் ஓட்டுனர் பிஜூ மேனன், வழி நடத்துனர் குஞ்சக்கோ போபன் இவர்களோடு கவி கிராமத்து மக்கள் என்று இடைவேளை வரை நல்லதொரு கலகலப்பான பயணமாகப் பதிவு செய்கிறது, அதன் பின் தொடரும் மர்ம முடிச்சும் முடிவில் கிட்டும் விடையுமாக அமைகிறது Ordinary படம்.
தொண்ணூறுகளின் நாயகன் பின் குணச்சித்திரம் என்று இயங்கும் பிஜூ மேனனுக்கு மிக முக்கியமான படங்களில் ஒன்றாக இதைச் சொல்லலாம். கொஞ்சம் முரட்டுத்தனம் கலந்த குணாம்சத்தைத் தன் குரலில் வெளிப்படுத்தும் பாங்கிலேயே வித்தியாசத்தைக் காட்டுகிறார். நாயகன் குஞ்சக்கோ போபனுக்கு இன்னொரு படம் என்ற அளவில் மட்டுமே.வழக்கமாக கதாநாயகரிடம் அடிபட்டுக் கதறும் மாமூல் வில்லன் பாத்திரங்களில் வந்த பாபுராஜ் இந்தப் படத்தில் குடிகாரப்பயணியாக வந்து கலகலப்பூட்டி ஆச்சரியப்படுத்துகிறார் தன் கலக்கல் நடிப்பால்.

கேரள மலைக்கிராமம் Gavi இன் அழகை அள்ளிச்சுமந்திருக்கிறது இந்தப் படம். மசாலாப்படத்திலும் கூட இயற்கை கொஞ்சும் எழிற் கிராமங்களைச் சுற்றிக் காட்சியமைத்துக் கவர்வதில் மலையாளிகள் தனித்துவமானவர்கள் என்பதைப் பல படங்கள் உதாரணம் சொல்லும். இதுவும் அப்படியே.

இந்தப்படத்தின் இன்னொரு பலம் பாத்திரமறிந்து கொடுத்த இசை வள்ளல் வித்யாசாகருடையது. உறுத்தாது பயணிக்கும் பின்னணி இசை மட்டுமன்றி, முத்தான பாடல்களும் முதல்தடவை கேட்டபோதே ஒட்டிக்கொண்டுவிட்டன. இடையில் எத்தனையோ புது இசையமைப்பாளர்கள் வந்துவிட்டாலும், வித்யாசாகருக்கான இடத்தைக் கேரளர்கள் கெளரவமாக வைத்திருப்பதற்கான காரண காரியம் தேடவேண்டியதில்லை

Ordinary சாதாரண கதை ஆனால் அசாதாரணமாக மனசில் ஒட்டிக்கொள்கிறது.















Monday, December 3, 2012

மனசை நிறைய வைத்த "உஸ்தாத் ஓட்டல்"


"வயிறு நிறையிறதுக்கு சமையல் பண்ண யாராலும் முடியும், ஆனா மனசும் நிறையணும் அதான் முக்கியம்" திலகன் (உஸ்தாத் ஓட்டல்)
மலையாள சினிமா கொஞ்ச வருஷமாகத் தன் சுயத்தை இழந்து கோலிவூட், டோலிவூட்  வைரஸ் பரவிக்கொண்டிருக்கும் சூழலில் அடுத்த தலைமுறைக் கலைஞர்கள் எங்கே போகப்போகின்றார்கள் என்றதொரு கவலை கேரளத்தின் நல்ல சினிமாவை நேசிக்கும் ரசிகர்களின் நிஜமான கவலையாக இருக்கும். இப்படியானதொரு சூழலில் சில நம்பிக்கைகளை ஏற்படுத்தும் படைப்புக்கள் ஆங்காங்கே பூக்கும் போது இனம் கொள்ளாத சந்தோஷம் தோன்றும். அப்படியானதொரு நிறைவை ஏற்படுத்தியிருந்தது உஸ்தாத் ஓட்டல் திரைப்படத்தைப் பார்த்து முடித்த பின்னர்.

கேரளத்தின் பெரும் நடிகர் மம்முட்டியின் மகன் தல்குவார் சல்மான் நடித்த இரண்டாவது படம் இது. வாரிசு நடிகரைக் களமிறக்கும் போது ஏகப்பட்ட மசாலாவை அள்ளித் தூவி பில்ட் அப் கொடுப்பது தானே இன்றைய நடைமுறையாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் தல்குவார் சல்மானின் பாத்திரம் ஆரம்பம் முதல் இறுதி வரை அந்தப் பங்கத்தைச் செய்யாது கதையின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றாக மட்டுமே தன் பங்களிப்பைச் செய்கின்றது. இன்னும் சொல்லப்போனால் உஸ்தாத் ஓட்டல் சொந்தக்காரராக வரும் கரீம் என்ற திலகனுக்கான இறுதி யாத்திரையின் மகத்தான அஞ்சலிகளில் ஒன்று இந்தப் படம் எனலாம்.

லண்டனில் ஒரு பெரும் நட்சத்திர ஓட்டலில் பிரதம சமையற்காரராக வேலை செய்யவேண்டும் என்ற கனவோடு  ஃபைஸி (தல்குவார் சல்மான்), அவனின் தந்தைக்கோ தம் சொந்த ஊரான கோழிக்கோடுவில் ஒரு நட்சத்திர ஓட்டலின் உரிமையாளராக ஃபைஸியை வைக்கவேண்டும் என்ற இலட்சியம்.  தந்தை, மகனுக்குள்ளிருக்கும் இந்த இலட்சிய முரண்பாடுகளால், கோழிக்கோடுவில் உஸ்தாஸ் ஓட்டல் என்றதொரு பிரியாணிக்கடை நடத்திவரும் ஃபைஸியின் தாத்தா கரீமின் கவனிப்புக்குள்ளாகும் ஃபைஸியின் வாழ்க்கை எப்படி மாறுகின்றது என்பதே இந்தப் படத்தின் அடி நாதம். சொல்லப்போனால் இந்தக் கதையை ஏகப்பட்ட துண்டுகளாக வெவ்வேறு வடிவங்களிலேயே தமிழிலேயே ஏராளம் படங்கள் வந்து குவிந்து விட்டன. ஆனால் உஸ்தாத் ஓட்டல் பார்க்கும் போது அந்தக் கழிந்த கதைகளையெல்லாம் கடந்து ஒரு சேதி வெகு இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கும். அது தான் இந்தப் படத்தின் வெற்றி. 

கரீம் என்ற முஸ்லீம் கிழவராக வாழ்ந்திருக்கும் திலகனைப் பற்றி என்ன சொல்ல? வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன். கண்டிப்பான முதலாளியாகவும், கனிவான தாத்தாவாகவும் தன் பேரனோடு கொள்ளும் அந்தப் பந்தம், இவருக்குள் இருக்கும் இருவேறு குணாம்சங்களை இந்த ஒரே படத்தில் காட்டியிருக்கிறது.  மம்மூட்டி மகன் தல்குவார் சல்மான் இதுபோன்ற கதை நாயகனாக இன்னும் தேடித் தேடி நடித்தால், இது போன்ற  அடக்கமான நடிப்பில் மகன் தந்தைக்காற்றும் உதவியாக இருக்கும். 
படத்தின் கதையை எழுதியிருக்கும் அஞ்சலி மேனன், படத்தின் முடிவில் கொடுக்கும் அந்த முடிச்சு ஒன்றே அவரின் சிந்தனையில் இருந்து புதிதாய்ப் புறப்பட்டதாக இருக்கும், அதுவே போதும் அவரின் பணியை மெச்ச. அதோ போன்று ஒளிப்பதிவு, அரங்க அமைப்பு என்று ஒவ்வொன்றிலும் தெரியும் நேர்த்தியோடு இசையமைப்பாளர் கோபி சந்தர் கொடுக்கும் அந்த இஸ்லாமியப் பின்னணியோடு மணக்கும் இசை இன்னொரு கச்சிதம். இயக்குனர் அன்வர் ரஷித் முன்னர் எடுத்த ராஜமாணிக்கம் உள்ளிட்ட மோசமான கார மசாலாச் சமையலை மன்னிக்க வைத்து விடுகிறது இந்த சுலைமானி.
 "இவனுக்கு சமையலைக் கற்றுக் கொடுத்துவிட்டேன், எதுக்காக சமைக்கிறோம்னு கற்றுக் கொடு" மதுரையில் இருக்கும் தன் நண்பர் நாராயணன் கிருஷ்ணனுக்கு கரீம் எழுதிய அந்தக் கடிதம்தான் வாழ்க்கையின் இன்னொரு அர்த்தம் புரிய வைக்கிறது, அதற்காக உஸ்தாத் ஓட்டலைத் தலைமேல் ஏற்றிக் கொண்டாடலாம்.

Thursday, November 8, 2012

"நாயகன்" பின்னணி இசைத்தொகுப்பு

இன்று நவம்பர் 7, 2012 கலைஞானி கமல்ஹாசன் 58ஆவது அகவையில் காலாடி வைத்திருக்கிறார். நாயகன் படத்தின் பின்னணி இசைத்தொகுப்பைக் கொடுக்கவேண்டும் என்ற பல நாட் கனவு இன்று மெய்ப்பட்டிருக்கிறது. உண்மையில் இந்தப் படத்தின் பின்னணி இசையை இதே ஆண்டு இந்தப் படம் வெள்ளி விழாக் கொண்டாடிய நாளில் கொடுக்கவெண்ணியிருந்தாலும் வேலைப்பழுக்களால் இழுபட்டு இன்று ஒப்பேறியிருக்கிறது. 0000000000000000000000000000000000000000000000000000
இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. அப்போது பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம், கல்கி இதழின் முகப்பு அட்டையில் நாயகன் படத்தில் கமல்ஹாசன், சரண்யா இருவரும் ஒரு பழைய காரில் உட்கார்ந்திருப்பது போன்ற ஒரு ஸ்டில்லோடு வெளிவந்திருந்தது. பள்ளிக்கூடத்திற்கு அருகே இருந்த கடையில் இருந்த அந்த ஒரேயொரு கல்கி இதழை வாங்கி வைத்துக் கொண்டேன். வித்தியாசமான அந்த ஸ்டில்லைப் பார்த்துக்கொண்டே இருப்போம் என்று. ஆனால் எப்படியோ சில நாட்களில் என் கை நழுவிப்போய்விட்டது அந்தப்புத்தகம். ஆசையாக வைத்திருந்த பொருள் தொலைந்த ஏக்கம் அப்போது பல நாட்கள் நீடித்தது. இப்போதும் மனதுக்குள் அதை நினைத்துச் சிரித்துக் கொள்வேன். 0000000000000000000000000000000000000000000000000000
நாயகன் படம் அக்டோபர் 21, 1987 ஆம் ஆண்டு வெளிவந்தது. அப்போது அந்தப்படம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்ப முக்கிய காரணம் கமலின் வித்தியாசமான கெட்அப் ஐத் தாக்கிவந்த பேசும்படம், பொம்மை உள்ளிட்ட சஞ்சிகைகளில் வந்த விளம்பரம் கூட. சின்னத்திரையின் ஆக்கிரமிப்பே இல்லாத சூழலில் சினிமா சஞ்சிகைகள் தான் ரசிகர்களைத் தியேட்டருக்கு இழுக்கும் முக்கிய சக்திகளாக இருந்த நேரம். முக்தா பிலிம்ஸ் தயாரிப்பு என்று என்று வந்த விளம்பரங்கள் பின்னர் சுஜாதா பிலிம்ஸ் லிமிட்டெட் வெளியீடு என்று வந்தபோது ஒரு குழப்பம். ஏனென்றால் ஏற்கனவே பாலாஜியின் சுஜாதா சினி ஆட்ஸ் நிறுவனமும் படத்தயாரிப்பில் அப்போது மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்த நேரம். பின்னர் சுஜாதா பிலிம்ஸ் லிமிட்டெட் தன்னுடைய அக்னி நட்சத்திரம் படத்தயாரிப்போடு ஜி.வி பிலிம்ஸ் ஆனது இன்னொரு வரலாறு. மணிரத்னத்தின் சகோதரர் ஜி.வெங்கடேஸ்வரனும் இந்தத் தயாரிப்பு நிறுவனம் மூலம் முன்னணித் தயாரிப்பாளர் ஆனார். நாயகன் படத்தின் உருவாக்கம், அது பின்னர் ஜி.வெங்கடேஸ்வரனுக்குக் கைமாறியதைப் பற்றி அண்மையில் கமல்ஹாசன் ஹிந்து பத்திரிகையில் கொடுத்த பகிர்வில் அறிந்திருப்பீர்கள்.
ஒரு படைப்பை நேர்மையாகக் கொடுக்கும் போது கிட்டும் அதீத கெளரவம் இந்தப் படத்துக்கும் கிட்டியிருக்கிறது. வெகுஜன அபிமானம் மட்டுமல்ல, Time சஞ்சிகையின் எல்லாக்காலத்திலும் கெளரவித்துக் கொண்டாடக்கூடிய 100 படங்களில் ஒன்று என்ற தனிச்சிறப்பையும் பெற்றிருக்கிறது. கமல்ஹாசன் இந்தப் படத்துக்கு முன்பே எத்தனையோ சோதனை முயற்சிகளின் மூலம் தன் பாத்திரப்படைப்பில் வித்தியாசத்தைக் காட்டமுனைந்திருந்தாலும், ஒரு பூரணத்துவம் என்பது இந்தப் படத்திலேயே கிட்டியிருக்கிறது. அதற்கு மணிரத்னம் என்ற சிறந்த நெறியாளரின் முக்கிய பங்கு கண்டிப்பாகப் பங்கு போட்டிருக்கிறது. கூடவே ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம். இவர்களோடு நம்ம இளையராஜா. பாத்திரங்க்கள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றை முழுமையாக நிரப்பித் தன் பங்கை நிறைவாகச் செய்து, அந்த வெற்றிப் புளகாங்கிதத்தோடே நின்றுவிடாமல் அடுத்த படைப்புக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் இசைஞானியின் பங்கு இந்தப் படத்தின் ஆரம்ப நிமிடம் முதல் இறுதிச் சொட்டு வரை இசையால் இழைத்து இழைத்துப் பண்ணப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் இதையெல்லாம் நுட்பமாகக் கேட்டிருந்திருக்க முடியாது. ஆனால் ராஜாவின் இசை காலம் கடந்தது என்பதற்கு 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது ஒவ்வொரு இசைத்துணுக்குகளாகக் கேட்டு அனுபவிக்கும் பாக்கியம் கிட்டியதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கமல்-மணிரத்னம்-இளையராஜா இந்தப் படத்தில் இணைந்தது போன்ற இன்னொரு வாய்ப்பு வந்தாலும் இந்தப் படம் கொடுத்த சிறப்பிற்கு நிகராக இருக்குமா என்பது ஐயமே.
00000000000000000000000000000000000000000000000000000000 நாயகன் படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பிற்காகப் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படத்தைப் போட்டுவிட்டு ஒவ்வொரு காட்சியாக உறுமீன் வருமளவுக்கும் வாடி நிற்கும் கொக்குப்போல இருப்போம் என்று நினைத்திருந்தேன். ஆனால் நினைத்ததற்கு மேலாக கைகொள்ளாத அளவு இசைக்குளிகைகளைப் பிரித்து எடுத்துக் கொண்டேன். கிட்டத்தட்ட மூன்று நாள் பகுதி நேர உழைப்பு. ஆனால் ராஜா இதையெல்லாம் ஒரே மூச்சில் கொடுத்திருப்பார். மொத்தம் 29 இசைக்குளிகைகள் கிட்டியிருக்கிறது இந்த இசைக்குளிகைகளில் தென்பாண்டிச் சீமையிலே மட்டுமே பாடல், மற்றயவை எல்லாமே இசை ஆலாபனைகள். இதைவிட இன்னும் காட்சியோட்டத்தோடு இழத்து இழைத்துக் கொடுத்த நுணுக்கமான இசையைப் பிரிக்கமுடியாத அளவுக்கு நேர்த்தியான, சவாலான படைப்பாக அதை எதிர்கொண்டேன். இதோ தொடர்ந்து "நாயகன்"பின்னணி இசை பேசட்டும் 000000000000000000000000000000000000000000 இந்தப்படத்தின் ஹைலைட்டான இசைத்துணுக்குகள் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பாலியல் விடுதியில் வேலு கல்லூரி மாணவியான அவள் மீது நேசம் கொள்ளும்போது  
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு நாயக்கர் மனைவி துப்பாக்கிச் சூடுபட்டு இறக்கும் காட்சி, மேலே கொடுத்த அதே இசைத்துண்டம் சோகவடிவாக மாறும் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு நாயக்கர் மகன் இறந்த செய்தியைக் கேட்கும் போது 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலுநாயக்கர் புது அசிஸ்டெண்ட் கமிஷனர் வீடு தேடிப்போகும் காட்சி, ஆக்ரோஷத்தோடு போகும் அவர் தன் மகள் வீடு என்று அறியும் போது அடங்கியொடுங்கும் கணத்தை இசையால் காட்டும் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 நாயகன் படத்தின் முழு இசைப்பகிர்வு 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 சிறுவன் வேலு போலீசிடம் இருந்து தப்புவதற்காக காட்டில் மறைவாக இருக்கும் தன்னுடைய தந்தையைக் காணச் சொல்லும் போது 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 சிறுவன் வேலுவின் தந்தையைக் கொன்ற போலீஸ்காரை இடுகாட்டில் வைத்துக் கொன்றுவிட்டு வேலு ரயிலேறித் தப்புகிறான் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 சிறுவன் வேலு பம்பாய்க்குச் சென்று அடைக்கலம் தேடுதல் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 நாலு பேருக்கு உதவணும்னா எதுவும் தப்பில்லை - வேலுவிடம் வளர்ப்புத் தந்தை 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலுவை போலீஸ் நிலையத்தில் விசாரணை செய்யது, அடிபட்ட காயங்களுடன் அவனைத் தெருவில் இறக்கும் போது 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 தன் குடியிருப்பில் இருக்கும் சிறுவர்களோடு தன் காயத்தை மறைத்துச் சந்தோஷம் கொண்டாடும் வேலு 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 நாலுபேருக்கு உதவணும்னா எதுவுமே பாவம் இல்லை தன் வளர்ப்புத்தந்தை சொன்னதையே மீளவும் வேலு சொல்லும் போது 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு முதன்முதலில் கள்ளக்கடத்தலில் இறங்கும் போது 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பாலியல் விடுதியில் தன் வருங்காலத் துணையை வேலு முதன்முதலில் சந்திக்கும் காட்சி 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலுவின் வளர்ப்புத்தந்தையைக் கொன்றபோலீஸ்காரரைத் தேடிப் பழிதீர்க்கும் போது, இதிலிருந்து வேலு நாயக்கர் தராவி குடியிருப்பு வாசிகளின் ஆபத்பாந்தவராக மாறுகிறார். 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு நாயக்கரின் மனைவியைக் கொன்றவர்களைத் தேடித் தேடிப் பழிதீர்த்தல் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு நாயக்கரின் மகள் தன் தாய் இறந்த காரணத்தைக் கேட்கும் போது 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு நாயக்கரால் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் மனவளர்ச்சி குன்றிய மகனை அவர் சந்திக்கும் போது 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு நாயக்கரின் மகள் இவரின் தவறுகளுக்கு எதிராக வாதம் செய்யும் போது 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு நாயக்கருக்கு எதிராக அப்ரூவர் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு நாயக்கரின் மகன், அப்ரூவரை நீதிமன்றத்தில் வைத்துக் கொலை செய்யச் செல்லும் காட்சி 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 போலீசிடமிருந்து தப்பி ஓடும் வேலு நாயக்கர் மகன் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு நாயக்கருக்கு எதிராக புதிய அசிஸ்டெண்ட் கமிஷனர் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 நீண்ட நாட்களுக்குப் பிறகு மகளைச் சந்திக்கும் வேலு நாயக்கர் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு நாயக்கருக்கு அரெஸ்ட் வாரண்ட் அதைத் தொடர்ந்து அவரைத் தேடும் போலீஸ் குழு 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 இன்ஸ்பெக்டரைக் கொன்றது வேலு நாயக்கர் என்று அவரின் மகன் அசிஸ்டெண்ட் கமிஷனர் மூலம் அறியும் போது 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு நாயக்கர் சரணடையும் போது 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு நாயக்கர் தன் பேரனுடன் உரையாடும் காட்சி 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு நாயக்கரால் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் மகன் பழிதீர்க்கத்தயாராதல் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு நாயக்கர் கொல்லப்படும் அந்த நிமிடங்கள் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

Monday, October 29, 2012

"கவிஞர் வாலியும் இசைஞானி இளையராஜாவும்"

"ஒரு திரைப்பட இசையமைப்பாளர் என்கிற முறையில் இளையராஜாவோடு எனக்குக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதுண்டு. ஓர் இறையருள் மிக்க இசைக்கலைஞர் என்னும் வகையில், மாற்றுக்கருத்தே என்னுள் என் இதயத்தில் முளைவிட்டதில்லை. அவர் ஒரு மகாபுருஷர் என்கின்ற மதிப்பை இப்பிறவி முழுதும் நான் என் மனத்துள் பொன்னே போல் வைத்துக் காப்பேன்" - கவிஞர் வாலி "நானும் இந்த நூற்றாண்டும் (1995)

இன்றோடு (Oct 29) கவிஞர் வாலி அவர்களுக்கு எண்பத்து ஒன்று வயதாகிவிட்டது. கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இசைஞானி இளையராஜாவோடு இணைந்து பணியாற்றும் பாடலாசிரியர் கவிஞர் வாலி என்பது ஒரு தனித்துவம் மிக்க விஷயம். இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப காலத்தில் பஞ்சு அருணாசலத்தில் இருந்து கங்கை அமரன், வைரமுத்து உள்ளிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே ஒரு படத்தின் முழுப்பாடல்களையும் எழுதும் கெளரவம் வழங்கப்பட்டிருக்கிறது. இசைஞானி இளையராஜாவோடு அவரின் ஆரம்ப காலம்தொட்டுத் தொடர்ந்து வரும் பாடலாசிரியர்களில் பஞ்சு அருணாசலத்துக்கு அடுத்து கவிஞர் வாலியைப் பார்க்கிறேன்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்தில் கண்ணதாசனுக்கு ஒரு மாபெரும் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுத் தொடர்ந்த கூட்டணி போலவே இசைஞானி இளையராஜா,பாடலாசிரியர் வாலி கூட்டணியையும் பார்க்கிறேன். கவிஞர் வாலி அவர்கள் இசைஞானி இளையராஜாவுக்கு முற்பட்ட காலத்தின் இசையமைப்பாளர்கள் பலரோடு பல்லாண்டுகள் முன்னரேயே பணியாற்றி ஏராளம் சிறப்பான பாடல்களைக் கொடுத்தாலும் இளையராஜாவோடு சேர்ந்து பணியாற்றியபோது கிடைத்த மக்களின் அபிமானம் தனித்துவமானது என்பது என் எண்ணம். இதைவகையான உதாரணத்தைப் பாடகி எஸ்.ஜானகிக்கும் கொடுக்கலாம்.

அதிலும் குறிப்பாக கவிஞர் வாலி அவர்கள் எண்பதுகளின் இறுதிப் பகுதியில் இருந்து தொண்ணூறுகளின் நடுப்பகுதி வரை ஏராளம் படங்களுக்கு இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல் எழுதியவர் என்ற கெளரவத்தை விட, அதில் நிறையவே படங்கள் கவிஞர் வாலி மட்டுமே முழுப்பாடல்களும் எழுத வெளிவந்தவை. குறிப்பாக அக்னி நட்சத்திரம், தளபதி, வருஷம் 16 போன்ற மாபெரும் வெற்றிப்படங்களும் உள்ளடங்குகின்றன. இந்தச் சிறப்புப் பகிர்வில் கவிஞர் வாலி அவர்கள் இசைஞானி இளையராஜாவின் இசையில் முழுப்படத்துக்கும் பாடல்கள் எழுதிய பத்துப் படங்களில் இருந்து பாடல்கள் அலங்கரிக்கின்றன. கவிஞர் வாலி அவர்கள் நீண்ட நாள் நோய் நொடியின்றி வாழ வாழ்த்தி வருகின்றன இந்தப் பாடல்கள்.

மீரா படத்தில் இருந்து "புது ரூட்டுல தான்" பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

கிளிப்பேச்சு கேட்கவா படத்தில் இருந்து "சிவகாமி நெனப்பினிலே" பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
 

வருஷம் 16 படத்தில் இருந்து "பழமுதிர்ச்சோலை எனக்காகத் தான்" பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி படத்தில் இருந்து "ராஜா ராஜா தான்" பாடியவர்கள்: எஸ்.ஜானகி, அருண்மொழி குழுவினர்
 

மகுடம் படத்தில் இருந்து "சின்னக்கண்ணா" பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

அக்னி நட்சத்திரம் படத்தில் இருந்து "ஒரு பூங்காவனம்" பாடியவர்: எஸ்.ஜானகி

ராசா மகன் படத்தில் இருந்து "வைகாசி வெள்ளிக்கிழமை தானே" பாடியவர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம்

மாமியார் வீடு படத்தில் இருந்து "என்னை தொடர்ந்தது" பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி

தளபதி படத்தில் இருந்து "சின்னத்தாயவள் தந்த ராசாவே" பாடியவர்:எஸ்.ஜானகி

தாலாட்டு கேட்குதாம்மா படத்தில் இருந்து "நேந்துக்கிட்ட நேர்த்திக்கடன் தீர்த்துப்புட்டேன்" பாடியவர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம்
 

Saturday, October 20, 2012

இன்று வந்த காற்று என் பாட்டைக் கொண்டு வந்து தந்தது

"மேகங்களைத் தொடுப்பேன் மஞ்சமதை அமைப்பேன் எந்தனுயிரே எந்தனுயிரே, வானவில்லைப் பிடிப்பேன் ஊஞ்சல் கட்டிக் கொடுப்பேன் கண்ணின் மணியே கண்ணின் மணியே, உடல் தழுவத் தழுவ நழுவிப் போகுதே" கண்மணி படத்தில் வந்த இந்தப் பாடலை இன்று எதேச்சையாக ஒரு பண்பலை வானொலியில் ஒலிபரப்பக் கேட்டபோது உள்ளுர இனம்புரியாதவொரு சந்தோஷம் எனக்குள் . 

ஏ.ஆர்.ரஹ்மான் அலை அடித்துக்கொண்டிருந்த   நண்பர்களுக்குள் கோஷ்டி பிரிந்து ரஹ்மான் கோஷ்டி, ராஜா கோஷ்டி என்று வாதப்பிரதிவாதம் செய்து கொண்டிருந்த வேளை அது. 1994 ஆம் ஆண்டில், "கண்மணி" திரைப்படம் வருவதாகச் செய்தி வந்திருந்தபோது உள்ளுர ஒரு மனோபலம். ஏற்கனவே செம்பருத்தி படத்தில் கலக்குக் கலக்கிய இயக்குனர் செல்வமணி - இசைஞானி இளையராஜா கூட்டணி மீண்டும் இணையும் படம். இந்தப் படத்தின் பாடல்களை வைத்தே எதிர்க்கோஷ்டியை மடக்கிவிடலாம் என்று எண்ணியிருந்தேன்.  உள்ளூரில் பாடல்களை ஒலிநாடாவில் பதிவு செய்து விற்கும் ரெக்கோர்டிங் நிலையம் ஒன்றின் நிரந்தர வாடிக்கையாளன் நான். கடன் கொடுத்தவன் கூட அந்தக் கடைக்கு அடிக்கடி போகமாட்டான். அவ்வளவு அந்நியோன்யம் அந்தக் கடைக்காரருக்கும் எனக்கும் ;-). கடும் யுத்தச் சூழலில் கொழும்பில் இருந்து யாராவது ஒருவர் கொண்டுவரும் பாடல் ஒலிநாடாவை வைத்தே அவரும் பிழைப்பை ஓட்டிவிடுவார்.

"அண்ணை, கண்மணி பாட்டுகள் வந்துட்டுதோ" என்று நானும் சதா கேட்பதும், "இல்லைத்தம்பி, கொழும்பில் இருந்து தான் கசட் வரவேண்டும், பாத்துக் கொண்டிருக்கிறன்" என்று அவருமாக இழுபறிப்பட்டு கடைசியில் ஒருநாள் இந்தப் படத்தின் பாடல்கள் வந்த செய்தியைச் சொன்னார். "எனக்கு முழுப்பாட்டையும் அடிச்சுத் தாங்கோ"  கண்மணி படப்பாடல்களின் ஒன்றைத் தானும் அதுவரை கேட்காமல் நான் கேட்க, அவரும் சிரித்துக் கொண்டே "நாளைக்கு வாரும்" என்று சொல்லிவிடுகிறார்.


அடுத்தநாள் கடை திறக்கும் வரை பழியாய்க் கிடந்து கஸெட்டைக் கவர்கின்றேன். வீடு போய் முதல் வேலையாக சைக்கிள் டைனமோவைச் சுழற்றி மின் பிறப்பாக்கி அதில் பொருத்திய வயர் வழியே டேப்ரெக்கார்டருக்கு உயிர் பாய்ச்சுகிறேன். அப்போது மின்சாரம் மருந்துக்கும் இல்லாத காலம். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் மின்சாரமே இப்படித்தான் பார்த்தோம். பாடல் பதிவு செய்த ஒலிநாடாவை, என் டேப்ரெக்கார்டரில் போட்டுவிட்டு ஒருகையால் டைனமோவைச் சுற்றிக்கொண்டே, உச்சஸ்தாயியில் ஒலியை வைத்துப் பாடல்களைப் போடுகின்றேன். ஒவ்வொன்றாகக் கழிகின்றன. மனதில் பெரிதாக ஒட்டமறுக்கின்றன. "புதுப்படம் தானே திரும்பத் திரும்பக் கேட்டால் பிடிக்கப் போகுது" எனக்கு நானே சொல்லிவிட்டு, எதிர்க்கோஷ்டிக்கு "கண்மணி" படத்தின் பாடல்கள் வந்த விஷயத்தையே சொல்லாமல் அமுக்கிக் கொள்கிறேன்.
ஆனால் நானோ விடாப்பிடியாகத் திரும்பத் திரும்பக் கேட்கிறேன். மெல்ல மெல்ல என்னை ஆக்கிரமிக்கின்றன அந்தப் பாடல்கள். குறிப்பாக "நேற்று வந்த காற்று என் பாட்டைக் கொண்டு வந்து தந்ததா" பாடலை ராஜாவும், ஜானகியும் பாடிய பாங்கும் இசையும் புதுமையாக இருந்தது. அதற்குப் பின்னர் "ஓ என் தேவதேவியே" யும் மனதுக்கு நெருக்கமாக வர, "ஆசை இதயம்" பாடலும் சேர்ந்து கொள்கின்றது.  

இவற்றையெல்லாம் கடந்து ஒரு பாடலை மட்டும் இரகசியமாக ஒலியளவைக் குறைத்து, வீட்டுக்காரரின் காதில் படாமல் எனக்கு மட்டுமாகக் கேட்கிறேன்.  "உடல் தழுவத் தழுவ நழுவிப் போகுதே" என வரிகளோ விவகாரமாக இருக்கிறது, ஆனால் அந்தப் பாடல் மெட்டமைக்கப்பட்ட பாங்கும் இசைக்கோர்வையும் சும்மா விட்டால் தானே,
ஏனோ இனம்புரியாத ஈர்ப்பு அந்தப் பாடலில்.அந்தப் பாடலைப் பற்றி அன்று என்னோடு கோஷ்டியமைத்த நண்பர்களுக்கும் கூடச் சொல்லிச் சிலாகிக்கவில்லை. ஏனென்றால் இப்படியான பாடல்களின் வரிகளை வைத்தே "ஆளின்ர வயசுகுக் கேக்கிற பாட்டைப் பார்" என்ற ரீதியில் மேம்போக்கான ஒரு முத்திரை வந்திடும் ;) இல்லாவிட்டால் இதென்ன இந்தப் பாட்டில் அப்படி என்ன இருக்கு என்று கடந்து போய்விடுவார்கள். எல்லாம் என் தனிப்பட்ட ரசனை அனுபவம்தான்.
ஆனால் எப்போவாது இந்தப் பாடல் என் காதுகளை நெருங்கும் போது அதே பழைய சினேகிதத்தோடு வாரிக்கொள்வேன். செம்பருத்தி படம் போல எடுக்க ஆசைப்பட்டுக் கையைச் சுட்டுக்கொண்ட செல்வமணி கூட இந்தப் படத்தையே மறந்திருக்கலாம். ஆனால் இந்தப் பாடல் என்னோடு நெருக்கமாகப் பயணிக்கும் எனக்கும் இந்தப் பாடலுக்குமான பந்தம் அப்படி. அது ராஜாவின் பாடல்களை ஏன் பிடிக்கும் என்று கேட்கும் போது ஒற்றை வரியில் சொல்ல முடியாத விளக்கமாகவும் இருக்கும்.
 "உடல் தழுவத் தழுவ" பாடலைக் கேட்க

Monday, September 24, 2012

கிரீடத்தை இறக்கி வைத்த நடிகர் திலகன்

'பவித்ரம்" என்றதொரு மலையாளப் படம், கிட்டத்த ஏழெட்டு வருஷங்களுக்கு முன்னர் பார்த்திருந்தேன். இளந்தாரி மகன் மோகன்லால் ஷோபனாவுடன் காதல் வயப்பட்டு கல்யாணம் முடிக்கும் தறுவாயில் ஒரு புறம், இன்னொரு புறம் மூத்த மகன் சீனிவாசன் மணம் முடித்தும் குழந்தைப் பாக்கியம் இல்லாதிருப்பவர், இவர்களின் பெற்றோர் திலகன், ஸ்ரீவித்யா. தன் மூத்தமகனுக்குக் குழந்தை கிடைக்கவேண்டும் என்று வேண்டுதலோடு இருக்கும் ஸ்ரீவித்யாவுக்கு திலகன் மூலம் மீண்டும் ஒரு குழந்தை. பிறக்கும் போதே தாயைப் பரலோகம் அனுப்பிய பாவம் அந்தக் குழந்தைக்கு. திலகனுக்கோ தன் இச்சையின் விளைவு குழந்தையாக வந்து எள்ளலுக்கு ஆட்படும் அவமானம், ஒரு நாள் எல்லோரது கண்காணாத இடத்துக்குப் போய்விடுகிறார். தன் காதலை இழந்து, தந்தையாகவும், சகோதரனாகவும் மாறவேண்டிய அவல வாழ்வில் மோகன்லால். இறுதியில் எல்லாம் இழந்து பைத்தியக்காரன் ஆகிவிடுவார் மோகன்லால் . இப்படியான சின்னப்பாத்திரம் என்றாலும் மிகை நடிப்பற்ற, இயல்பான தன் நடிப்பினால் கேரளம் கடந்தும் அறியப்பட்டவர் திலகன். செங்கோல், கிரீடம் போன்ற படங்களில் திலகனின் பங்கு பெரும்பங்கு.

மலையாள சினிமாவின் குணச்சித்திரங்களின் பட்டியலில் முரளி, கொச்சின் ஹனீபா, ராஜன்.பி.தேவ் ஐத் தொடர்ந்து திலகனின் இழப்பு இன்று. இப்படியான மலையாள நடிகர்களை பெரும்பாலும் வில்லத்தனமாகக் காட்டும் எல்லையோடு நிற்கும் தமிழ் சினிமாவிலும் திலகனின் பரவலான அறிமுகம் சத்ரியன் படத்தின் அருமை நாயகம் என்ற வில்லனாக மலையே கவிழ்ந்தாலும் காட்டுக்கூச்சல் கத்தாத மென் நடிப்பில் பன்னீர்ச்செல்வம் என்ற விஜயகாந்த் இற்கு பெரும் தலைவலியாகப் படம் முழுதும் வருவார். பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகனுக்கோ கடுப்பேத்தும் நோகாமல் கொல்லும் இவரின் வில்லத்தனம். கரகரத்த சிரிப்பும், தீர்க்கமான பார்வையும், அலட்சியமான முகபாவமும் திலகனின் சொத்து.

சாணக்யன் போன்ற மலையாளப்படங்களில் முக்கிய வில்லன் பாத்திரத்தில் வைத்திருந்தாலும் தமிழில் கமல் போன்ற முன்னணி நடிகர்களே திலகனை ஆராதிக்கவில்லை. சத்ரியனுக்குப் பிறகு அவருக்குக் கிடைத்த பாலா படத்தில் சிறப்பாகச் செய்திருந்தாலும் அதற்கு முன் வந்த மேட்டுக்குடி படம் தான் அவருக்கான இன்னொரு சொல்லிக்கொள்ளும் படமாகத் தமிழில் கிட்டியது. மலையாளத்தின் எண்ணற்ற படங்களில் நடித்துக் கரைகண்டிருந்த திலகனின் சமீப ஆண்டுகள் தொழில் ரீதியில் அல்லல் மிகுந்தவை ஆனாலும் சளைக்காத போர்க்குணத்தோடு தன் கருத்தில் வழுவாது இருந்தவர். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.
திலகன்  oil paint வரைஞர்:  Rajasekharan Parameswaran

Thursday, September 13, 2012

றேடியோஸ்புதிர் 67 : ஆதியும் அந்தமும் ஆன இசை

ஏற்கனவே சினிமாவில் தன் பங்களிப்பை வழங்கியிருந்தாலும், இயக்குனர் என்ற வகையில் அவருக்கு முதல் படம் அப்போது பரபரப்பான பிரபலமாக மாறிய ஒரு நாயகனை முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்க வைத்திருந்தார். அந்த முதல் படம் ஒரு நாவலை மையமாக எடுக்க்கப்பட்டிருந்தது. பல சோதனைகளோடு அந்தப் படம் வெளிவந்து கவனிக்கப்படத்தக்க இயக்குனர் என்ற முத்திரையையும் பெற்றுக் கொண்டார்.

இரண்டாவதாக எடுத்த படமும் இன்னொரு நாவலாசிரியரின் கதையை மையப்படுத்தி எடுத்திருந்தார். ஆனால் ஒரு வித்தியாசம், தன்னை இயக்குனராக வெளிப்படுத்திய சமயம் பிரபல நாயகனைக் கொண்டு முதல் படம் எடுத்து அதில் பெரு வெற்றியும் பெற்றிருந்தாலும் அந்த வெற்றியை வைத்து பிரபலங்களின் பின்னால் ஓடாமல் இம்முறை அறிமுகங்களையும், அப்போது வளர்ந்து வந்த நடிகர்களையும் போட்டு எடுத்திருந்தார். படத்தின் பூஜை நாளன்றே "போயும் போயும் இந்தப் பெண்ணா நாயகி" என்று அவர் காதுபடவே பேசுமளவுக்கு நிலமை. ஆனாலும் பிடிவாதத்தோடு இயக்கினார். வெற்றி கண்டார். 32 ஆண்டுகள் ஆகிவிட்டது இன்றும் தமிழ் சினிமாவின் தரம் பேசும் படங்களில் இந்தப் படத்தை விலத்திப் போகமுடியாது. அவ்வளவுக்குக் காலம் கடந்து நிற்கின்றது.

இந்தப் படத்தின் பின்னணி இசை என்பது மிகவும் கவனமாக, காட்சியையும், வசனங்களின் போக்கையும் சிதைத்து விடாது கண்ணாடி இழையாகப் பின்னப்பட்டிருக்கின்றது. படத்தின் குறிப்பாக இங்கு நான் தந்திருக்கும் இசைத்துண்டம் 1.32 நிமிடங்கள் இயங்கும் இசையில் பரபரப்பும், ஆர்ப்பரிப்பும் மேலெழுந்து மெல்ல மெல்ல அடங்கிப் போய்ப் புல்லாங்குழல் வழியே ஏதோவொரு இனம்புரியாத சோகத்தைக் கடத்தி விட்டு ஓயும். படத்தின் முகப்பில் ஆரம்பித் இசை, முடிவில் ஒரு சுற்றுப் பயணித்து மூலத்தில் வந்து நிற்கும் இந்த இசையைக் கேளுங்கள், இந்தப் படம் என்ன பதிலோடு வாருங்கள்.

ஒகே மக்கள்ஸ்

போட்டி முடிவடைந்து விட்டது,

சரியான பதில்கள்

மகேந்திரனின் முதற்படம் முள்ளும் மலரும்
இரண்டாவது படம் உதிரிப்பூக்கள்

போட்டியில் கலந்து சிறப்பித்த உங்கள் அனைவருக்கும் நன்றி

Saturday, September 1, 2012

"தட்டத்தின் மரயத்து" ஒரு சுகானுபவம்

அனுபவப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளையும், கவிதைகளையும் படித்துப் பழகியவனுக்கு அறிமுகப் படைப்பாளியின் படைப்பைப் பார்த்தபின் எழும் திருப்தியான சுகானுபவம் கிட்டியிருக்ககிறது இன்று பார்த்த மலையாள சினிமா "தட்டத்தின் மரயத்து" மூலம். இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பை எற்கனவே இணையத்தளங்கள், சஞ்சிகைகள் மற்றும் படத்தின் இயக்குநர் வினித் ஶ்ரீனிவாசனின் விகடன் பேட்டி ஆகியவை கிளப்பியிருந்தாலும், தியேட்டருக்குப் போய்ப் படம் பார்க்கும் வரை ஒருவித சந்தேக உணர்வே தொடர்ந்தது. காரணம் இப்போதெல்லாம் ஆகா ஓகோவென்று விமர்சனத்தில் கிளப்பப்படும் படங்களைப் பார்த்தபின் "கல்"அடிபடுவதுதான்.

வினோத் என்ற இந்துமத நாயர் பையனுக்கும் ஆயிஷா என்ற முஸ்லீம் பெண்ணுக்கும் வரும் காதல், தடைகளை மீறி அவர்கள் ஜெயித்தார்களா? என்ற சாதாரண ஒற்றைவரிக் கதைதான். ஆனால் படம் ஆரம்பித்த நிமிடம் முதல் இறுதிக் காட்சி வரை கட்டிப்போட வைக்கும் சுவாரஸ்யமிக்க காட்சியமைப்புக்கள், வசனம், ஒளிப்பதிவு, இசை என்று எல்லாமே கூட்டணி அமைத்து அதகளம் பண்ணியிருக்கின்றன.

மலையாள சினிமாக்களில் நடிகர் தேர்வு என்று வரும்போது அதிகம் அவர்கள் மெனக்கெடுவதில்லை. K.P.A.C லலிதா, இன்னசெண்ட், சலீம்குமார் உள்ளிட்ட ஒரு தொகை நடிகர்களே பெரும்பாலான படங்களின் குணச்சித்திரங்களாக ஆக்கிரமிப்பர். ஆனால் இந்தப் படத்தில் நாயகன் நிவின் பெளலி (இரண்டாவது படம்), மனோஜ்.கே.ஜெயன், மற்றும் ஶ்ரீனிவாசன் தவிர்ந்த மற்ற எல்லோருமே மலையாள சினிமாக்களில் அதிகம் அறியப்படாதவர்கள். அதிலும் குறிப்பாக நாயகியாக வரும் அறிமுகம் இஷா தால்வார் என்னவொரு கச்சிதமான தேர்வு, முஸ்லீம் பெண் பாத்திரத்துக்கு இவரை விட்டால் வேறு பிரபலங்களையே நினைத்துப்பார்க்க முடியாத அடக்கமான நடிப்பு. இப்படியான படங்களுக்குக் கூடவே ஒட்டும் நண்பன் என்ற சமாச்சாரத்துக்கு விதிவிலக்கில்லாமல் வரும் நடிகர் அஜூ வர்கீஸ் இன் நகைச்சுவையும் அளவான அழகு. மனோஜ் கே.ஜெயனுக்கு குரலை வித்தியாசப்படுத்திப் பேசுவதில் இருந்து படத்தின் ஓட்டத்துக்குக் கணிசமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.
நாம் நேசிக்கும் படைப்பாளிகளின் வாரிசுகள் நல்லதொரு நிலைக்கு வரும் போது நம் வீட்டுப் பிள்ளையை ஆராதிப்பது போல ஒரு மானசீகமான கொண்டாட்டம் இருக்கும். நடிகர் ஶ்ரீனிவாசன் மலையாளத் திரையுலகின் எண்பதுகளில் இருந்து இன்று வரை தன்னளவிலான கெளரவமான பங்களிப்பைக் கதாசிரியராகவும், நடிகராகவும் வழங்கியிருக்கிறார். அவரின் மகன் வினீத் ஶ்ரீனிவாசன் பாடகராகவும், ஒரு சில படங்களில் நடிகராகவும் அறியப்பட்டிருந்தாலும் இந்தப் படம் அவரைப் பொறுத்தவரை இவருக்கான துறையைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துக் கைகாட்டி விட்டிருக்கிறது.



மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களே துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்ற நிலையில் இருக்கும் சூழல், மாபெரும் கதா நடிகன் மம்முட்டி "ஒய் திஸ் கொலவெறி" என்றெல்லாம் பஞ்ச் அடித்து ஓவர் ஹீரோயிசம் காட்டி எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற காலமிது. ஆனால் ரசிகர்களுக்கு, அது பழகிப்போன கதையாகக் கூட இருக்கட்டும் ஆனால் நேர்மையான விதத்தில் கொடுத்தால் ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கு இந்தப் படம் இன்னொரு சாட்சி. சக நடிகர் முகேஷ் உடன் நடிகர் ஶ்ரீனிவாசனும் இணைந்து 14 லட்சத்தில் எடுத்த படம் இன்று பத்துக் கோடியைத் தாண்டியிருக்கிறது இலாபம். (ஆதாரம் விக்கிப்பீடியா)

கதையோடு ஒட்டாது விலகி நிற்கும் நகைச்சுவை, வேண்டாத காட்சியமைப்பு எல்லாம் களைந்து கதையோட்டத்தோடு வரும் நகைச்சுவையிலும் நடைமுறை வாழ்வில் காணும் சினிமா, கிரிக்கெட் உதாரணங்களையெல்லாம் கலந்து கட்டி அடித்திருக்கிறார். நாயகனுக்கும் ஓவர் ஹீரோயிசம் கொடுக்காமல் நம்மில் ஒருவராகப் பள்ளி நாட்களை அசைபோட வைக்கும் அளவுக்குக் குணாதிசியங்களைக் கொண்டு உருவாக்கிய பாத்திரம்.

இந்தப் படத்தின் பாடல்களை முன்னரேயே கேட்ட அனுபவம் இல்லாத நிலையில் ஒவ்வொரு பாடல்களும் கதையோடு பயணிக்கையில் இதில் எது நல்லது என்று மனக்கணக்கில் போடுமளவுக்கு முத்து முத்தான பாடல்கள். பாடல் இசை, பின்னணி இசை இரண்டிலும் ஷான் ரஹ்மான் நம்மை ஈர்க்கிறார். அவரைப்போலவே ஒளிப்பதிவாளர் ஜோமோன் T.ஜான்
வினீத் ஶ்ரீனிவாசனுக்கு இசை, ஒளிப்பதிவு ஆகிய இரண்டும் பெரிய பலமாக அமைந்திருக்கின்றன. இதுவே பாதி வெற்றி அவருக்கு.

"நாம ஆசைப்பட்ட விஷயங்களைப் பின்னாளில் நாமளே மறந்தாலும் ஆண்டவன் மறக்கமாட்டான்" படத்தை முடித்து வைக்க இயக்குநர் வினீத் ஶ்ரீனிவாசன் கொடுத்த வாசகம் அது, அவரிடம் இன்னும் நல்ல படைப்புக்களை எதிர்பார்க்க வைக்கின்ற ஆரம்பமாக.

Friday, August 24, 2012

கவிஞர் பொன்னடியானும் இசைஞானி இளையராஜாவும்

"இன்று வந்த இன்பம் என்னவோ அதைக் கண்டு கண்டு அன்பு பொங்கவோ, குயில் பாட்டு ஹோ வந்ததென்ன இளமானே" சுந்தரக்குரல் சொர்ணலதா பாடிய இந்தப் பாடலை எத்தனை தடவை அலுக்காமல் கேட்டிருப்போம். அதுவும் "என் ராசாவின் மனசிலே" படம் வந்த காலத்தில் இந்திய வானொலி வர்த்தக ஒலிபரப்பு விவித்பாரதியில் மிஞ்சிப்போனால் அரை நிமிடமோ அதற்குச் சில நொடிகளோ மட்டுமே கஞ்சத்தனமாக அறிமுகமான நாள் முதல் இந்தப் பாடலின் மீதான காதல் குறையவில்லை, படம் வெளிவந்து 21 ஆண்டுகள் கழிந்தும்.


இசைஞானி இளையராஜாவின் ஆரம்பகாலக் கவிஞர் பஞ்சு அருணாசலத்தில் இருந்து பின்னாளில் கங்கை அமரன், வாலி, வைரமுத்து போன்ற பரவலாக அறியப்பட்ட பாடலாசிரியர்கள் வரை ஒரு குழாம் இருக்க, இன்னொரு வரிசையில் புலமைப்பித்தன், பிறைசூடன், மு.மேத்தா, முத்துலிங்கம் என்ற வகையில் கவிஞர் பொன்னடியானும் இருந்திருக்கின்றார். ஆனால் திரையிசைப்பாடல்களின் நீண்டகாலத்துரதிஷ்டமாக, பாடலாசிரியர்கள் குறித்த அறிமுகமில்லாமல் பாடல்களைக் கேட்டு ரசிக்கப் பழகிவிட்டோம். வானொலிகளும் நைச்சியமாக அவற்றைத் தவிர்த்துவிட்டன. இசைஞானி இளையராஜாவின் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை முப்பதுக்கும் மேற்பட்ட பாடலாசிரியர்களைப் பட்டியலிடலாம். ஆனால் நமக்கு அதிகம் அறிமுகமான பாடல்களில் வைரமுத்து, வாலி போன்றவர்களே ஓரளவு இனங்காணப்பட்ட பாடலாசிரியர்களாக அந்தந்தப் பாடல்களுக்கு உரித்துடையவர்களாகின்றார்கள்.


எண்பதுகளிலே இவ்வாறு இளையராஜாவின் கடைக்கண் பார்வையில் அருமையான பாடல்கள் பலவற்றைக் கொடுத்த கவிஞர் பொன்னடியானைச் சிறப்பிக்கும் வகையில் இந்தப் பதிவைக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன். கவிஞர் பொன்னடியான், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ஜி.கே.வெங்கடேஷ், சந்திரபோஸ் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுக்கும் பாடல்களை எழுதியிருந்தாலும், இசைஞானி இளையராஜா உச்சத்தில் இருந்த போது ஜோடி கட்டிய பாடல்கள் அளவுக்கு மற்றைய இசையமைப்பாளர்களின் இசையில் வந்த இவரது பாடல்கள் அதிகம் அறியப்படவில்லை.

கவிஞர் பொன்னடியான் இசைஞானி இளையராஜா கூட்டணியில் வந்த ஒரு சில நன்முத்துக்களை இங்கே பகிர்கின்றேன்.

சொல்லத்துடிக்குது மனசு, எடிட்டர் லெனின் இயக்கத்தில் வந்த படம். இசைஞானி இளையராஜாவின் பாடல்களைப் படங்கள் எடுத்துக் கெடுத்த பாவம் லெனினையும் சேரும். சொல்லத்துடிக்குது மனசு படத்தில் வந்த பாடல்கள் அத்தனையும் முத்துக்கள். இந்தப் படத்தில் வந்த "குயிலுக்கொரு நிறம் இருக்கு" என்ற மலேசியா வாசுதேவன் பாடலைப் பாடுகின்றார்.
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 கவிஞர் பொன்னடியானுக்கு ஒரு படத்தின் முழுப்பாடல்களையும் எழுதவைத்துக் கெளரவம் கொடுத்த பாடம் "ஒருவர் வாழும் ஆலயம்". இந்தப் படத்தின் கதைக்களனும் இசை சார்ந்தது. "உயிரே உயிரே", "மலையோரம் மயிலே", "சிங்காரப் பெண் ஒருத்தி" போன்ற இந்தப் படத்தின் பாடல்கள் வரிசையிலே கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "நீ பெளர்ணமி என்றும் என் நெஞ்சிலே" பாடலும் சிறப்பானது. 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 இசைஞானி இளையராஜாவின் குடும்ப நிறுவனம் "பாவலர் கிரியேஷன்ஸ்" தயாரிப்பில் வந்த படம் "ராஜாதி ராஜா". இருந்தாலும் கங்கை அமரன் தவிர, பிறைசூடனும், பொன்னடியானும் பாடல்களிலே தம் பங்களிப்பை வெளிப்படுத்தினர், குறிப்பாக "எங்கிட்ட மோதாதே" பாடல் அன்றைய எதிராளி சந்திரபோஸ் இற்கு குட்டு வைக்கவும் பயன்பட்டிருக்கலாம் என்று நண்பர்களிடையே அப்போது பேசிக்கொண்டோம். சந்திரபோஸ் தன் பங்கிற்கு "வில்லாதி வில்லனையும் தோற்கடிப்பேன் நான் ராஜாதிராஜனையும் ஜெயிச்சிடுவேன்" என்று பதிலுக்கு பாட்டைப் போட்டார். 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 தொண்ணூறுகளிலே முக்கியமான தயாரிப்பாளராக விளங்கி ஏ.ஜி.சுப்ரமணியம் தயாரிப்பில் வந்த படம் "தங்கக்கிளி". வழக்கம்போல அவரது தோல்விப்படங்களில் இதுவும் ஒன்று. காரணம் என்ற இயக்குனராக ஆசைப்பட்ட ராஜவர்மனின் மாமூல் கதை. நடிகர் முரளி, இசைஞானி இளையராஜா ஆகியோர் சேர்ந்த கூட்டணி என்றளவில் மட்டுமே இன்றுவரை நினைப்பிருக்கும். இந்தப் படத்திலே வரும் "நினைக்காத நேரமில்லை" பாடல் இலங்கை வானொலிகளில் இன்றளவும் நேசிக்கப்படும் பாட்டு. பொன்னடியான் வரிகளுக்கு மனோ, எஸ்.ஜானகி பாடியிருக்கிறார்கள். 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 ராமராஜனின் இறங்குமுகம் ஆரம்பிக்கும் வேளை வந்த படங்களில் ஒன்று "பாட்டுக்கு நான் அடிமை" இந்தப் படத்தில் வரும் "தாலாட்டு கேட்காத பேர் இங்கு யாரு" ரயில் சத்தம் சந்தம் போட பொன்னடியான் வரிகள் இசைஞானியின் இசையில் மயிலிறகாய். 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 எஸ்.பி.பாலசுப்ரமணியம், விஜய்காந்த் அண்ணன் தம்பியாக நடித்த பரதன் படத்தில் வரும் "அழகே அமுதே" பாடல் பொன்னடியானுக்குக் கிடைத்த இன்னொரு முத்து. 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
"என் ராசாவின் மனசிலே" தொண்ணூறுகளில் கொடுத்த பிரமாண்டமான வெற்றி இன்றளவும் மறக்கமுடியாது. வெற்றியில் சம அளவு பங்குபோட்டன இசைஞானி இளையராஜாவின் இனிய பாடல்கள். முரட்டு சுபாவம் உள்ள தன் கணவனை வெறுத்து ஒதுக்கும் அவள், தன் கணவனின் நேசம் உணர்ந்து பாடும் பாட்டு. தம் திருமண பந்தத்தின் அறுவடையாய் தம் வயிற்றில் சுமக்கும் குழந்தையோடு பாடும் இந்தப் பாடலை பொன்னடியான் களம் உணர்ந்து பொருள் கொடுத்து எழுதியிருக்கிறார். பாடலின் வரிகளோடு சீராகப் பயணிக்கும் இசை, சொர்ணலதாவின் குரல் என்று எல்லாமே சரிசமமாக அமைந்த பெருஞ்சுவை. இதே பாடல் இந்தப் படத்தில் மூன்று பாடல்களாக (சோகம் உட்பட) பொன்னடியான் அவர்களால் எழுதப்பட்டிருக்கின்து. அடுத்த தடவை "குயில்பாட்டு ஓ வந்ததென்ன இளமானே" பாடலைக் கேட்கும் போது கண்டிப்பாகக் கவிஞர் பொன்னடியானும் உங்கள் நினைப்பில் வருவார். 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000



Tuesday, August 7, 2012

தமிழ்த்திரையிசையில் "கெளரவ"ப்பாடகர்கள்

தமிழ்த் திரையிசைப்பாடல்களில் வாத்திய இசையோடு கூட்டுக் குரல்களும் வரிகளை உச்சரிக்காது ஆலாபனை செய்யும் வண்ணம் பல பாடல்கள் தொன்று தொட்டு வந்திருக்கின்றன. இன்னும் விசேஷமாக பிரபல பாடகர்களை இந்த இடைக் குரலுக்குப் பயன்படுத்தியது எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்துப் பாணி. எம்.எஸ்.விஸ்வநாதன், எல்.ஆர்.ஈஸ்வரி போன்றோரின் பாடல்கள் சில உதாரணமாக விளங்கி நிற்கின்றன. உதாரணமாக பாலிருக்கும் பழமிருக்கும் பாடலை P.சுசீலா பாட, பின்னாலே "ம்ஹும்" என்று மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்பாடல் முழுக்கக் குரல் கொடுத்திருப்பார்.
இன்னும் சொல்லப்போனால் எண்பதுகளில் பிரபல பாடகியாக விளங்கிய எஸ்.பி.சைலஜாவின் அறிமுகமே இப்படியான ஒரு இடைக்குரலாக "மழை தருமோ என் மேகம்" என்ற பாடல் மூலமே ஆரம்பித்தது. இசைஞானி இளையாராஜாவின் இசையில் மலர்ந்த பல பாடல்கள் தான் இவ்வாறான பிரபல பாடகர்களின் இடைக்குரல்களோடு அதிகம் காதுக்கு எட்டுகின்றன. பின்னாளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களில் கோரஸ் பாடியவர்கள் முன்னணிப் பாடகர்களாகவும், அதே குரல்கள் இடைக்குரல்களாகவும் பாடல்களில் விளங்கியிருக்கக் காணலாம்.

இவ்வாறு அமைந்த ஐந்து பாடல்களை கடந்த றேடியோஸ்புதிரில் கொடுத்திருந்தேன். அவற்றோடு இன்னும் சேர்த்து இங்கே பகிரும் இந்த பிரபல பாடகர்களின் கெளரவ இடைக்குரல்களோடு அமையும் பாடல்களைக் கேட்டு ரசியுங்கள்.
இதே பாங்கில் வந்த பாடல்கள் உங்களுக்கும் தெரிந்தால் பின்னூட்டத்தில் அறியத்தாருங்கள்.

பாடல் ஒன்று : மெளனமேன் மெளனமே திரைப்படம்: என் ஜீவன் பாடுது இடைக்குரல்: சித்ரா, முன்னணிக் குரல் மனோ: இசை: இசைஞானி இளையராஜா 0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பாடல் இரண்டு : நாரினில் பூத்தொடுத்து மாலை ஆக்கினேன் திரைப்படம்: இரண்டில் ஒன்று இடைக்குரல்: சித்ரா இசையமைத்துப் பாடுகின்றார் இசைஞானி இளையராஜா 0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பாடல் மூன்று: அதோ மேக ஊர்வலம் திரைப்படம்: ஈரமான ரோஜாவே இடைக்குரல்: சுனந்தா முன்னணிக்குரல்: மனோ இசை: இசைஞானி இளையராஜா 0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பாடல் நான்கு : தீர்த்தக்கரை தனிலே திரைப்படம்: தைப்பொங்கல் இடைக்குரல் ஜென்சி முன்னணிக்குரல்: கே.ஜே.ஜேசுதாஸ் பாடல் இசை: இசைஞானி இளையராஜா. இதே பாடலை ஜென்ஸி முழுமையாகப் பாடும் இன்னொரு வடிவமும் உண்டு 0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பாடல் ஐந்து : மழை தருமோ என் மேகம் திரைப்படம்: மனிதரில் இத்தனை நிறங்களா இடைக்குரல்: சைலஜா முன்னணிக்குரல் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசை: ஷியாம் 0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பாடல் ஆறு: சின்னப்புறா ஒன்று திரைப்படம்: அன்பே சங்கீதா இடைக்குரல்: எஸ்.பி.சைலஜா முன்னணிக்குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசை: இசைஞானி இளையராஜா 0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பாடல்: வானுயர்ந்த சோலையிலே திரைப்படம்: இதயக்கோவில் இடைக்குரல்: எஸ்.ஜானகி முன்னணிக்குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசை: இசைஞானி இளையராஜா

Sunday, August 5, 2012

றேடியோஸ்புதிர் 66 - லால லாலா லா லா

தமிழ்த் திரையிசைப்பாடல்களில் வாத்திய இசையோடு கூட்டுக் குரல்களும் வரிகளை உச்சரிக்காது ஆலாபனை செய்யும் வண்ணம் பல பாடல்கள் தொன்று தொட்டு வந்திருக்கின்றன. இன்னும் விசேஷமாக பிரபல பாடகர்களை இந்த இடைக் குரலுக்குப் பயன்படுத்தியது எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்துப் பாணி. எம்.எஸ்.விஸ்வநாதன், எல்.ஆர்.ஈஸ்வரி போன்றோரின் பாடல்கள் சில உதாரணமாக விளங்கி நிற்கின்றன.
இங்கே நான் தந்திருக்கும் றேடியோஸ்புதிர் பாடல் துளிகளும் அவ்வமயமே, எழுபதுக்குப் பின் வெளிவந்த பிரபல பாடகர்களை இடைக்குரல் ஆலாபனைக்குப் பயன்படுத்திய பாடல்கள். உங்கள் வேலை, இங்கே தரப்பட்ட பாடல்கள் என்ன என்ன, அவற்றில் வந்து கலக்கும் இடைக்குரல் பாடகர்கள் யார் என்பது. எங்கே ஆரம்பிக்கட்டும் போட்டி ;-)



பாடல் ஒன்று பாடல் இரண்டு பாடல் மூன்று பாடல் நான்கு பாடல் ஐந்து


ஓகே மக்கள்ஸ் போட்டி முடிந்தது இதோ பதில்கள்

பாடல் ஒன்று : மெளனமேன் மெளனமே - இடைக்குரல் சித்ரா

பாடல் இரண்டு : நாரினில் பூத்தொடுத்து மாலை ஆக்கினேன்
இடைக்குரல் சித்ரா

பாடல் மூன்று: அதோ மேக ஊர்வலம்
இடைக்குரல் சுனந்தா

பாடல் நான்கு : தீர்த்தக்கரை தனிலே
இடைக்குரல் ஜென்சி

பாடல் ஐந்து : மழை தருமோ என் மேகம்
இடைக்குரல் சைலஜா

Thursday, July 19, 2012

இசைஞானியின் மலர்ந்தும் மலராத "கண்ணுக்கொரு வண்ணக்கிளி"


இசைஞானி இளையராஜா இசையமைத்து பல்வேறு காரணங்களால் திரைப்படத்தில் வெளிவராத பாடல்கள் அல்லது திரைப்படமே வெளிவராது தொலைந்த பாடல்கள் என்று "மணிப்பூர் மாமியார்" காலத்தில் இருந்து அண்மைய "நந்தலாலா" வரை சில நூறு தேறும். படம் வெளிவருவதற்கு முன்பே பாடல்கள் வெளியாகிப் பிரபலமாகுவது ஒருபக்கம் இருக்க, படம் வந்ததா வராததா என்று கூடத் தேடிப்பார்க்காமல் ராஜாவின் பாடல்களைத் தேடி ரசிக்கும் ரசிகர் கூட்டத்தில் நானும் ஒருவன். அதுவும் கிடைத்தற்கரிய பாடல்களை இயன்றவரை தரமான இசைத்தட்டாக வாங்கிச் சேமிக்கும் வழக்கமுண்டு.
அப்படியானதொரு படம் தான் "கண்ணுக்கொரு வண்ணக்கிளி". இன்று நண்பர் கிருஷ் இந்த "கண்ணுக்கொரு வண்ணக்கிளி" படத்தின் பாடல்களைப் பற்றி விசாரித்தபோது உள்ளூரச் சந்தோஷம். ஏனென்றால் இப்படியான அரிய பாடல்களைக் கேட்டு ரசிக்கும் சக நண்பர்களையும் அவ்வப்போது இனங்காண முடிவதில். இசைஞானி இளையராஜா இப்படி மணி மணியாகக் கோர்த்த இசையை ஏண்டா எடுப்பாகப் படம் பிடிக்கும், மொக்கைக் கதையில் இடையில் செருகும், அல்லது பாடலையே சேர்க்காத இயக்குனர் பட்டியல் மேல் எனக்குத் தார்மீகக் கோபம் வருவதுண்டு. ஆனால் நண்பர் கோ.அரவிந்தன் (@tpkd)சொன்னது போல, "நல்ல தண்ணிக் கிணற்றில் என்ன போட்டாலும் நல்ல தண்ணி தானே வரும்" என்று மனசை ஆற்றிக் கொள்வது தான் சரி.

இன்றுவரை இந்தப் படத்தை இயக்கியவர் யார், நடித்தவர்கள் யார் யாரென்று எந்தத் தகவலும் கிட்டவில்லை. ஆனால் மணி மணியாக மொத்தம் ஒன்பது பாடல்கள். அதில் இரண்டு பாடல்கள் ஒரே மெட்டில் ஆனால் இருவேறு பாடகர்கள் பாடும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் பாடகர்கள் பட்டியலைப் பற்றிப் பார்த்தபோது லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே சகோதரிகளின் இரண்டு பாடல்கள் உண்டு. என் சிற்றறிவுக்கு எட்டியது வரை தமிழில் லதா மற்றும் ஆஷா போன்ஸ்லே சகோதரிகள் ஒரே படத்தில் பாடியது என்றால் இந்தப் படமாகத் தான் இருக்கும்.
கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், P.சுசிலா, மனோ ஆகியோரோடு இசைஞானி இளையராஜாவும் பாடியிருக்கிறார். கூடவே எஸ்.ஜானகி, சித்ராவையும் சேர்த்திருந்தால் எண்பதுகளின் உச்ச நட்சத்திரப்பாடகர்கள் சேர்ந்த படமாக இது இருந்திருக்கும். ஒரேயொரு பாடலை அனுராதா என்ற பாடகி பாடியிருக்கலாம், அனுராதா பட்வால் ஆக இருக்கலாம். வேறு யாரும் அப்போது அந்தப் பெயரில் பாடியதாக நினைவில் இல்லை.
சரி இனிப் பாடல் தொகுப்பிற்குப் போவோம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆஷா போன்ஸ்லே பாடிய 'உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன்"



கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன்" முன்னர் கொடுத்த ஜோடிப்பாடலின் மெட்டு ஆனால் இசை வேறு, இந்தப் பாடல் இணையத்தில் பரவலாக இல்லை மூல இசைத்தட்டில் மட்டுமே கிடைக்கின்றது.



கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "யார் அழுது யார் துயரம் மாறும்"



இளையராஜா பாடும் "யார் அழுது யார் துயரம் மாறும்" முன்னர் கொடுத்த அதே பாடலின் மெட்டும், இசையும் ஆனால் பாடகர் வேறு. இதுவும் இணையத்தில் பரவலாக இல்லை மூல இசைத்தட்டில் மட்டுமே கிடைக்கின்றது.




லதா மங்கேஷ்கர் பாடிய "இங்கே பொன்வீணை"




அனுராதா பாடிய "வாலிபம்" இந்தப் பாடல் இணையத்தில் பரவலாக இல்லை, மூல இசைத்தட்டில் மட்டுமே கிடைக்கின்றது



இளையரஜா பாடிய "கானம் தென்காற்றோடு"



P.சுசீலா,மனோ பாடும் "துளித் துளி மழையாய்"



மனோ குழு பாடிய "பதினாறு பதினேழு வயதோடு"