Pages

Saturday, June 11, 2022

❤️ இயக்குநர் பாபு வை வழியனுப்பி வைத்த ஶ்ரீ ராம ராஜ்ஜியம் ❤️

தெலுங்குத் திரையுலகின் மூத்த இயக்கு நராக விளங்கிய பாபு (Bapu) என்ற சட்டிராஜூ லஷ்மிநாராயணா அவர்கள் தனது 78 வது வயதில் இயக்கிய திரைப்படம் ஶ்ரீ ராம ராஜ்ஜியம் வெளிவந்தது. 

இந்தப் படத்தை லவ குச சகோதரர்களின் கதையாகவே முதலில் எடுக்க இருந்தவர் சில மாற்றங்களோடு ஶ்ரீ ராம ராஜ்ஜியம் என்று எடுக்க முனைந்த போது மறு பேச்சில்லாமல் நந்தமூரி பாலகிருஷ்ணா பாபு என்ற மூத்த இயக்குநர் மீது நம்பிக்கை வைத்து முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார். 

இயக்குநர் பாபுவுக்கு சிறந்த இயக்குநருக்கான நந்தி விருதை அளிக்கிறது. அது மட்டுமல்ல சிறந்த படம், சிறந்த இசை (இளையராஜா) உட்பட இன்னும் பல நந்தி விருதுகளையும் அது அள்ளுகிறது.  

அந்தத் திருப்தியிலோ என்னமோ அதுவே தன் இறுதிப் படைப்பாகக் கொடுத்து விட்டு 2014 ஆம் ஆண்டில் இவ்வுலகை விட்டு மறைகிறார்.

இயக்குநர் பாபு அவர்கள் சமுதாயக் கண்ணோட்டம் சார்ந்த படங்கள் மட்டுமல்ல பக்தி இலக்கியங்களையும் திரையில் கொண்டு வந்தவர். 

சீதா கல்யாணம் என்ற தன் படைப்பில் இராமன் சீதையை மணம் முடிக்கும் வரையிலான கதையமைப்பைச் செய்திருக்கிறார். மேலும் பக்த கண்ணப்பாவும் இவர் படைப்பே.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக NTR என்ற என்.டி.ராமராவ் அவர்களின் இறுதித் திரைப்படமான Srinatha Kavi Sarvabhoumudu படைப்பை இயக்கியவரும் அவரே. இது 15 ஆம் நூற்றாண்டில் இயங்கிய ஶ்ரீநாத என்ற பெரும் புலவரின் வாழ்வில் சரிதம் பேசுவது.

மனிதனும் தெய்வமாகலாம், கிழக்கே போகும் ரயில், முள்ளும் மலரும், வண்டிச் சக்கரம், மயங்குகிறாள் ஒரு மாது, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு இவையெல்லாம் தெலுங்கு, ஹிந்தியில் உருவான போது அந்தந்தப் படங்களின் இயக்குநர் பாபு அவர்களே.

இவற்றில் கிழக்கே போகும் ரயில், முள்ளும் மலரும் படங்களின் தெலுங்குத் தழுவலுக்கு (Seethamma Pelli) இசை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள்.

இந்தப் படத்தில் நெகிழ்வூட்டும் பாடலொன்றைத் தன் பாணியில் SPB கொடுத்து வெகு பிரபலம் ஆக்கியிருக்கிறார். அந்தப் பாடல்  https://youtu.be/hLmF1Vykxd4

தமிழில் நீதி தேவன் மயக்கம் என்ற படம் வெளிவந்து எண்பதுகளில் பரபரப்பை உண்டு பண்ணியிருந்தது. அந்தப் படத்தில் கெளரவ வேடமேற்று ஒரு இராணுவ வீரராக நடித்திருப்பார். (தெலுங்கில் கிருஷ்ணா பண்ணியது).

இவரின் ஆஸ்தான இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் என்று சொல்லுமளவுக்கு தெலுங்கில் தொடர்ந்து இணைந்தே இயங்கினர். விதி விலக்காக எம்.எஸ்.விஸ்வநாதன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், பப்பி லஹரி, இவர்களோடு இளையராஜாவுமாக விரல் விட்டு எண்ணக் கூடிய படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள்.

இளையராஜாவோடு ஶ்ரீ ராம ராஜ்ஜியத்துக்கு முன்பே இணைந்து சிரஞ்சீவியை நாயகனாக்கி எடுத்த படம் Mantri Gari Viyyankudu அந்தப் படத்தின் பாடல்களெல்லாம் லட்டு மாதிரி. தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்தவை.

குறிப்பாக இது

https://youtu.be/NQOPYi35LqQ

தமிழும் ஞாபகத்துக்கு வந்து போகுமே 😍😀

முழுப் பாடல்களையும் கேட்க

https://youtu.be/qS5QA-B2qEE

இயக்குநர் பாபு அவர்களின் திரையிலகச் சாதனைக்கு நிகராகக் கொண்டாடப்படுவது அவரின் அற்புதமான ஓவிய ஆற்றலுக்காக. 

அது குறித்த காணொளி ஒன்று

https://youtu.be/qmT5dqkBhw8

ஓவியர் பாபுவின் சித்திரக் களஞ்சியம் இங்கே ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றது.

https://bapuartcollection.com/phone/index.html

இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்களில் ஊறித் திளைத்தவர் பாபு அவர்கள்.

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் தந்தை என்.டி.ராமராவின் இறுதிப் படத்தை இயக்கியவர், தன்னுடைய இறுதிப் படமாக என்.டி.ஆரின் தனையன் பாலகிருஷ்ணாவின் படத்தைத் தேர்ந்தெடுத்தாரோ என்று எண்ணத் தோன்றும்.

இதிகாசங்களைக் காதலித்த இந்தக் கலைப்படைப்பாளி இயக்குநர் பாபுவை

இசைஞானி இளையராஜாவின் 15 இறை அனுபவம் தரும் இன்னிசைப் படையல்  

https://youtu.be/dVoqDJMAM6c

ராஜமரியாதையோடு வழியனுப்பி வைத்தது.

கானா பிரபா

11.06.2022

0 comments: