கிளியே கிளியே
மணி மணி மேகத் தோப்பில்
ஒரு மலர் நுள்ளான் பூக்கும்
அழகின் அழகே….
https://youtu.be/Qk5rfuCTU9U?si=Ek1vyvEg_eKO3j2s
மற்றைய மொழிக்காரர்களை விட்டு விடுங்கள். இந்த மலையாளிகள் தம்
தேசத்துப் பாட்டுக்காரர்களில் கூட அணை போட்டு வைத்திருப்பார்கள்.
ஆனாலும் ஆச்சரியங்கள் நிகழ்ந்ததுண்டு.
அண்டை வீட்டு சங்கீதக்காரர்கள்
அரிதாகவே கொண்டாடப்பட்ட காலம் அது.
விதிவிலக்காக இசையமைப்பாளர்களைப் பொறுத்தவரை
சலீல் செளத்ரி என்றும், இளையராஜா என்றும் கொண்டாடினார்கள்.
பாடகி என்று வரும் போதே பி.லீலா போன்றோர் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்திலேயே ஜானகியை அரவணைத்து விட்டார்கள்.
1957 ஆம் ஆண்டில் “மின்னுன்னதெல்லாம் பொன்னல்ல” படத்தில் எஸ்.என்.ரங்கநாதன் இசையில் “இருள் மூடுகையோ என் வாழ்வில்” என்ற சோகப் பாட்டு.
அந்தப் பாட்டு ஹிந்தியில் முன் அப்போது வெளியான நாகின் படத்தின் இசைத் தழுவல்.
இதே ஆண்டு தான் சலபதி ராவ் இசையில் “விதியின் விளையாட்டு” (படம் வெளிவரவில்லை) "என் ஆசை பாழானது ஏனோ" என்ற சோகப் பாடல் தொடக்கமானது.
ஆனால் அந்த முரண் ராசி எல்லாம் இந்தக் குரலரசி அடுத்த தசாப்தங்களைக் கட்டி ஆள்வதைத் தடுக்கவில்லை.
ஒரு காலம் வரை
“தும்பி வா தும்பக் குடத்தின்”
https://youtu.be/BtAoUN0-yxg?si=PyMm1rPqPnfttOpK
பாடல் தான் கேரளத்தவர் மனம் நிறைந்தது என்று எண்ணியிருந்தேன்.
ஆனால் காலம் நிறைய நிறைய,
மலையாளத் திரையுலகில் கூடத் தனக்கொரு சாம்ராஜ்ஜியத்தை ஜானகி நிறுவியிருப்பது துலங்கியது.
வகை தொகையில்லாமல் அங்குள்ள இசையமைப்பாளர்கள் எல்லோருமே அவர் குரலை அரவணைத்திருக்கிறார்கள்.
“பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்” என்று ரவீந்திரன் மாஸ்டர் இசையில் “ரசிகன் ஒரு ரசிகை” யில் கேட்ட அந்தப் பாடலின் நதி மூலம் அவரிசையில் ஜானகிம்மா பாடிய
“தேனும் வயம்பும் நாவில் தூவும் வானம்பாடி”
https://youtu.be/4KdSr-_582Q?si=3-731w3tpnr6h2uF
“ஒண்ணா ரெண்டா தாமரைப்பூ” பாடலுக்கு மலையாள நிறம் பூசி அழகு பார்த்த இளையராஜாவின்
“வீணே வீணே வீணைக்குஞ்சே”
ஜானும்மா வாழும் காலத்திலேயே அவரின் பெருமையை அவர் பாட்டைப் பாடிப் பெருமை சேர்த்த சித்ராவின்
“மலர்க் கொடி போலே வர்ணத் துடி போலே”
https://youtu.be/b4IukJRngI4?si=0m3LPisLpeCAIvli
கேட்டுவிட்டு அப்படியே ஜானும்மா குரலுக்குத் தாவ வேண்டும்
https://youtu.be/-zuJY2MsAJY?si=w7NSIdmXNX4EMxoq
அந்த மலர்க் கொடியில் தான் எத்தனை வளைவுகள் அந்த குரலில். சலீல் செளத்ரியின் அற்புதமான சாகித்தியம் அது.
https://youtu.be/h7h9flbk7-4?si=qWecFrErhHs6gwCC
கேட்ட நாளில் இருந்து அந்தத் தேன் கூட்டிலேயே சிக்கி விட்டது மனசு.
ஜான்சன் மாஸ்டரின் “கூடெவிடே” படத்தில்
“ஆடி வா காற்றே”
https://youtu.be/E8KTUMgks9k?si=lviQ93Lx-ற்ஃட்ட்6
எம்.பி.ஶ்ரீனிவாசன் தந்த “ஏட்டுமானோர் அம்பலத்தில்”
https://youtu.be/GCAYAfIdUeM?si=FwR71X-cMtpjwpVW
என்று தொடரும் ஜானகி
ஸ்வரண முகிலே ஸ்வர்ணமுகிலே
https://youtu.be/WXgEADeRiRU?si=JI-S4qMkhcsbYnzy
என்று இது நிஜங்களோட கதா படத்தில், அவர் பாடியது, இந்தப் படத்தின் மூலமான பாலைவனச் சோலையில் நாம் கேட்ட “மேகமே மேகமே” பாடலுக்குத் துளி கூடச் சம்பந்தமில்லாத சங்கீதம்.
பாபுராஜ் மாஸ்டரின் “காட்டுத்துளசி” படத்தில் சுசீலா, ஜிக்கி,எல்.ஆர்.ஈஸ்வரி என்று பாடகிகளுக்கு ஒவ்வோர் பாட்டு அங்கே ஜானகியின் வானம்பாடி
https://youtu.be/5QvWHZN8hO8?si=lqCBLrbN9NWimew1
தனித்துத் துலங்கும்.
இன்றும் ஏஷியா நெட், அம்ருதா போன்ற தொலைக்காட்சிகளில் பாட்டுப் போட்டி என்று வந்து விட்டால் பழைய நினைவுகளில் தோய்ந்து ஜானும்மாவின் பெருமை தனைப் பேசுகிறார்கள் இசையுலகில் கோலோச்சும் நடுவர் பெருமக்கள்.
கேரளாவுக்கு வெளியே இருந்து வந்து மொத்தம் 11 கேரள அரசு விருதுகளைப் பெற்ற பாடகி என்ற தனித்துவத்தையும் எடுத்துக் கொண்டார் ஜானகி.
இளையராஜா எங்கு சென்றாலும் நாமும் அங்கே போய் விடுவோம். அங்கேயும் ஜானும்மா இருப்பார்.
அப்படித்தான்
“கொஞ்சிக் கரையல்லே”
https://youtu.be/Yd4TOWLCof8?si=7kz1qM7lumdqDVcZ
துன்பச்சுவையை ரசித்தோம்.
தான் போகும் இடமெல்லாம் அந்த ஆலாபனைக் குயிலை விட்டு நீங்காமல் அவரும் இருப்பதால் அதே படத்தில்
“பூங்காற்றினோடும்”
https://youtu.be/ADU0B95tbvo?si=jvkHaJ7K5obnuduE
பாடலில் ஜானும்மாவின் ஆலாபனையில் சொக்கிப் போனோம்.
“கிளியே…கிளியே…”
“தும்பி வா தும்பக் குளத்தே..”
இந்த இரண்டு படங்களும் அவலச்சுவை கொண்டு எடுக்கப்பட்ட படங்கள். இரண்டிலும் பூர்ணிமா ஜெயராம்.
பூர்ணிமா ஜெயராம் என்றதும் ஓளங்கள் படத்தில் “வேளாம்பல் கேளும்”
https://youtu.be/5mFWbNVMggU?si=xk1oC7vklgdFcy_ஜ்
ஜேசுதசைப் பாட விட்டு ஆலாபனை அரசி ஜானகி காட்டுவாரே பாட்டு முழுக்க அப்பப்பா..
அப்படியிருந்தும் செவ்வியல் சுவையோடு நினைவு மீட்டிக் கொண்டிருக்கிறது இந்த உலகம்.
ஜானகியின் குரலைத் தம் தாயின் தாலாட்டாக அள்ளியெடுத்துச் சுமக்கிறது.
கானா பிரபா
12.06.2026

0 comments:
Post a Comment