Pages

Saturday, March 2, 2024

வித்யாசாகரம் ❤️❤️❤️


அடி தோழி..அடி...தோழி

அடை காக்கும் சிறு கோழி

மயில்முட்டை வாங்கி உனது

கூட்டில் வச்சேனே...

அடை காக்கும் முட்டைக்குள்ள

உசுர வச்சேனே....

https://www.youtube.com/watch?v=kvR4aXh315o

கல்யாணியின் குரல் நம் காதுகளை எட்டும் போது ஒரு இரட்டைப் பின்னல் கொண்ட பெண் குமரி ஆகிவிடும் மனசு.

வித்யாசாகரைக் கொண்டாட ஏராளம் கூறுகள் இருந்தாலும், அவர் தன் பாடல்களில் கையாண்ட பாடகர்களை, அதுவும் குறிப்பாக அதிகம் அறியப்படாதவர்களை, அல்லது அறியப்பட்டவர்களை விதவிதமாகக் காட்டிய வகையிலும் தனித்து நோக்க வேண்டிய ஒரு இசை ஆளுமை.

“தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்த்தானாஹ்ஹ்ஹ்"

அப்படியே கிண்ணென்று பிரதிபலிக்கும் மணிக்குரலாக புஷ்பவனம் குப்புசாமியைக் கொண்டு வந்து ஒரு மேற்கத்தேய இசைச்சாயம் கொண்ட குத்துப் பாடலுக்குப் போடுவார் பாருங்கள்.

ஆஹா சுல்த்தானே சுல்த்தானே என்று ஸ்வர்ணலதா போல ஆர்ப்பரிக்கும் மனசு. இந்த இடத்தில் நிறுத்தி விட்டு அப்படியே ஒருமுறை புஷ்பவனத்தார் தொடங்கும் சுல்த்தான்ஹாஆஆஆ வைக் கேட்டுவிட்டு வாருங்கள், கிறங்க வைக்கும்.

https://www.youtube.com/watch?v=0hxz-JMsu0I

இவரைப் போலவே ஒரு சாஸ்திரியப் பாடகரை வைத்து “கண்ணுக்குள்ள கெழுத்தி” ரேஞ்சில் எவ்வளவு கொடுத்திருப்பார் மணிக்க விநாயகம் அவர்களுக்கு. இதெல்லாம் வித்யாசாகரின் உள்ளே இருக்கும் வித்தியாச பார்வையின் வெளிப்பாடு.

பாதிக்கண்ணால் மூடும் மீதிக் கண்கள் தேடும்

மூடிக்கொண்டும் கண்கள் பார்க்கும் அய்யோ

https://www.youtube.com/watch?v=7Q_jK5mf9oc

பாடகி ஶ்ரீவர்த்தனிக்கு இன்று வரை அடையாளமாகத் திகழும் இந்த “கண்ணாலே மிய்யா மிய்யா” . 

“பார்வை தப்பும் நேரம் நாணம் கப்பல் ஏறும்

கூந்தல் கூட கொஞ்சம் கூசும் அல்லோ”

கூடப்பாடிய உன்னிமேனன் என்ன குறைச்சலா? அவர் எத்தனை ஆயிரம் பாடியிருந்தாலும் இந்த மாதிரிப் பாடல் எல்லாம் அவருக்குப் புதுமையானது. கானாபிரபா

ஹரிஹரன் என்ற இசை அசுரனின் அலைவரிசைக்குச் சற்றே கீழே இருக்கும் “குரல்வாகு” ஆனாலென்ன 

“பள்ளிநாளில் அரும்பாய் இருந்தேன்

பருவநாளில் முதலாய் இருந்தேன்

பார்வை உசுப்ப மலா்கள் தவிழ்ந்தேன்

ஸ்வரிசம் எழுப்ப மலராய் மலர்ந்தேன்”

https://www.youtube.com/watch?v=jro0C5Idg0U

அப்படியே அசரடித்து விடுவார் சந்தனபாலா “ஒரே மனம்....ஒரே குணம்" தொடங்கும் கணத்திலும் ஒரு ஏக்கம் தொனிக்கும் அங்கே.

மது பாலகிருஷ்ணனை அதிகம் அற்புதமாகக் கையாண்ட இசையமைப்பாளர், அல்லது மதுபாலகிருஷ்ணனின் பாடல்களில் அதிகம் அற்புதம் வாய்ந்தவை என்று கேட்டால் நோகாமல் கை நீட்டி விடலாம் வித்யாசாகர் இருக்கையை நோக்கி,

“நான்.....தேடுகின்ற யாவும் உன்னிடம்”

என்று ஒரு இழுப்பு இழுப்பாரே……..

ஆகா மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும்

“அற்றைத் திங்கள் வானிடம்...”

https://www.youtube.com/watch?v=e8UR4e_phMM

கேட்கையில்.

அங்கே அடக்கி வாசிப்பவர் தான், 

“கனாக் கண்டேனடி தோழி......”

https://www.youtube.com/watch?v=ZCm3FwF0has

என்று துள்ளிசைப்பார்.

சிவப்பதிகாரம் போல வித்யாசாகர் & மதுபாலகிருஷ்ணன் கூட்டைப் பற்றிப் பேச்செடுத்தால் அதை எழுதவே தனி அதிகாரம் தேவை.

பாடகி சுஜாதாவை மிக அழகாக ஒவ்வொரு பாடல்களிலும் வித்யாசாகர் கையாண்ட விதத்தையும் அவ்விதம் எழுதலாம். குறிப்பாக அவரின் பலவீனம் உச்ச ஸ்தாயியை உணர்ந்து ஒரு மத்திம அலைவரிசையிலேயே வித்யாசாகர் பாடல்கள் வைத்திருந்து சுஜாதாவுக்குப் பெருமை சேர்க்கும்.

இதை எழுதும் போதே “அழகூரில் பூத்தவளே” என்ற ஏக்கப் பெருமூச்சோடு எஸ்பிபி வந்து நிற்கிறார். 

“மெளனமே பார்வையாய் 

பேசிக்கொண்டோம்

நாணமே வண்ணமாய்

பூசிக் கொண்டோம்....” 

https://www.youtube.com/watch?v=jalDrNf2HdQ

இவ்வளவு அற்புதமாக வந்த பாடலைப் பயன்படுத்தாது விட எப்படிய்யா உங்களுக்கு மனசு வந்தது? என்று எஸ்பிபி நொந்து சொன்ன அந்த “அன்பே சிவம்” பாட்டில் கூட 

“புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம்

என்னிலே உன்னையே சுவாசிக்கின்றோம்....” 

கூட்டிசைக்கும் சந்தரயி உடைய நாசிக்குரல் இசைக்கருவிகளில் ஒன்று போலப் பேதமில்லாமல் இருக்கும்.

வித்யாசாகர் தான் முழுமையான இசையமைப்பாளராகப் பிறப்பெடுத்த “பூமனம்” படத்திலேயே அந்தக் காலத்து மெல்லிசைக் குரல் P.B.ஶ்ரீநிவாஸ் அவர்களை வைத்து

“சில நேரம் ஏதோ நடக்கும்” 

https://www.youtube.com/watch?v=siGifvcUFgA

பாடலைக் கொடுத்துப் புதுமை படைத்தவர்.

பாபநாசம் சிவன் அவர்களது “என்ன தவம் செய்தனை யசோதா” கீர்த்தனையை ஜலபதி சுப்ரமணியம் அவர்களை வைத்து மாதங்கள் ஏழு படத்தில் இப்படிக் கொடுத்தவர்

https://www.youtube.com/watch?v=dLg4VgfBEOA

அப்படியே அதைத் தூக்கிக் கொண்டு போய் பார்த்திபன் கனவு படத்தில் ஹரிணிக்குக் கொடுத்திருப்பார் இப்படி

https://www.youtube.com/watch?v=82wUgYO-PYI

இதே போலத்தான் பூமனம் படத்தில் கையாண்ட 

என் அன்பே

https://www.youtube.com/watch?v=4QEAtji8N-4

பாடலை மறுசுழற்சியில் பக் பக் பக் மாடப்புறா ஆகினார் பார்த்திபன் கனவில். இந்த என் அன்பே பாடலில் ஜொலிக்கும் தினேஷ் குரல் உன்னிமேனனை ஞாபகமூட்டும்.

கர்நாடக சங்கீதப் பாடகிகள் திரையுலகில் கோலோச்சிப் புகழ் பூத்து விளங்குவது என்னமோ காலத்தும் நிற்கும் விஷயம் என்றாலும் சுதா ரகுநாதன் என்னுமொரு ஒரு சாஸ்திரிய சங்கீதக் குரலை அழுத்தமான காட்சிச்சூழலுக்குக் கொடுப்பாரே

இப்படி

கண்ணா...... கண்ணா......கண்ணா....

https://www.youtube.com/watch?v=gPXdcBlVSeE

பல நாட்கள் இந்தப் பாடலில் நான் கட்டுண்டு கிடந்தேன். கானாபிரபா

“யமுனை ஆற்றிலே” என்று தளபதிக்காக ஒரு சில அடிகளோடு நிறுத்திக் கொண்ட மித்தாலிக்கு மீள் வரவாக வித்யாசாகர் கொடுத்தது, ஹரிஹரனை இணைத்து “உச்சிமுதல் பாதம் வரை”

https://www.youtube.com/watch?v=ZnW4t0KDE70

உமா ரமணனுக்கு அத்திப்பூவாய் ஒரு சில பாடல்கள் வித்யாசாகர் கூட்டில் அமைந்தாலும் “பூத்திருக்கும் வனமே” 

https://www.youtube.com/watch?v=wNNwhHrKflE

ஒரு தங்கப்”புதையல்”என்றால் 

ஹரிஷ் ராகவேந்திராவின் ஆரம்ப காலத் திறப்புப் பாடல் “வா சகி வா சகி வள்ளுவன் வாசுகி” 

https://www.youtube.com/watch?v=Zyd1k2vEcwc

இரண்டு பேரும் கூட்டாய் பண்ணிய அற்புதச் சுரங்கம். இரண்டு பாடல்களின் இசைக் கோப்புக் கூட ஒரே தொட்டிலில் வளர்ந்த குழந்தைகள் போல.

ஹரிஷ் ராகவேந்திராவின் குரல் அளவுப் பிரமாணங்களை அகலத் திறந்து விட்ட முதல் பாடலாக “வா சகி” ஐத் தான் அழைத்து வருவேன். “சிறகே இல்லாத” (தாலி புதுசு) முன்வரவாக அமைந்தாலும் கூட.

“கண்ணாளனே கண்ணாளனே

உன் கண்ணிலே

என்னை கண்டேன்

கண் மூடினாள் கண் மூடினாள்

அந்நேரமும் உன்னை கண்டேன்....”

நூறாண்டுக்கொருமுறை பூக்கின்ற பூவல்லவா”

https://www.youtube.com/watch?v=vvLsy7C3zew

கோபால் சர்மாவையும், தேவி நேத்தியாரையும்  இன்னமும் இலங்கையின் பண்பலை வானொலிகள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன இந்தப் பாடல் வழியாக.

மழை நின்ற பின்பும் தூறல் போல 

உனை மறந்த பின்பும் காதல்.....

அலை கடந்த பின்பும் ஈரம் போல 

உனை பிரிந்த பின்பும் காதல்....

https://www.youtube.com/watch?v=_2H6b1exlLM

இந்தப் பதிவைத் தொடக்கி வைத்த கல்யாணியே நிறைத்து வைக்குமாற்போல நினைப்பூட்டுகிறார் வித்யாசாகரத்தின் இன்னொரு முத்தாய்ப்புப் பாடலாக. இதைக் கேட்கப் போய் இதையும் கேட்டு விட்டு வந்தேன்

https://www.youtube.com/watch?v=SsNm1RzNf0E

இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே

இப்பவே இப்பவே பேசணும் இப்பவே.....

அதுதான் வித்யாசாகரம்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

✍🏻 கானா பிரபா

      02.03.2024


0 comments: