Pages

Friday, September 29, 2023

💛💛💛இளவட்டம் கை தட்டும் டும் டும் ❤️❤️❤️

கனவுக்குள் கண்ணுக்குள்

வந்தாயோ…

மனதுக்குள் நெஞ்சுக்குள்

நின்றாயோ…

“மை டியர் மார்த்தாண்டன்” இசைப் பேழையைக் கேட்டாலேயே அது ஒரு உற்சாக பானத்தை (energy drink) கொடுத்த புத்துணர்வைக் கொடுக்கும்.

ஒவ்வொரு பாடலைத் திறந்தால் Coke போத்தலின் மூடியைத் திறந்தால் பொங்கும் நுரைப் பிரவாகம் தான்.

ஒரு சமயம் “இளவட்டம் கை தட்டும் டும் டும் (எஸ்.ஜானகியுடன் எஸ்பிபி) பாடிய பாடலை எஸ்;பி.சரண் சிலாகித்துப் பாடிய போது 

“அடடே நல்ல பாடலாக இருக்கிறதே”

என்று SPB சொல்லவும், இளையராஜா இசையில் எஸ்பிபி தான் பாடிய விஷயத்தைச் சரண் சொன்னாராம். அப்போது கூட

“என்னமா இசையமைச்சிருக்கான்” என்று ராஜாவைத் தான் புகழ்ந்து தள்ளினாராம் SPB.

நமக்கெல்லாம் இந்தச் செய்தி அதிசயமாக இருக்கும் என்னடா இவ்வளவு நல்ல, பிரபலமான பாடலெல்லாம் மறந்துட்டாரா என்று. ஆனால் இது போலவே “அன்பே ஆருயிரே” (செவ்வந்தி) பாடலை சூப்பர் சிங்கரில் ஒரு சமயம் பையன் ஒருவன் பாடி முடித்ததும் இந்தப் பாட்டு நான் பாடினேனா என்று ஆச்சரியம் பொங்க SPB கேட்டிருப்பார்.

டக் டுடு டக் டக் டுடு டக் இசையோடு தொடரும்

அந்த ஆரம்பக் கூட்டுக்குரல்களே பூவில் மிதக்கும் தேனீக்கள் போல.

SPB & ஜானகி என்ற இரண்டு அசுரர்கள் பாடும் போது கேக் இல் கிரீம் பூச்சுப் போல பின்னால் ஒட்டிக் கொண்டு ஒப்புவிக்கும் கூட்டுக் குரலோசை ❤️

இடையில் SPB யின் வேலையைப் பறித்துத் தானே சிரித்து வைக்க, பதிலுக்கு SPB 

பெண்ணின் நாணம் விடுமா? என்று பாடும் போது தொனிக்க விடும் ஒரு எள்ளல்தனமான சங்கதி

சொர்க்கமய்யா இதையெல்லாம் அனுபவித்துக் கேட்டால்.

இளவட்டம் கை தட்டும் போலவே அதே சந்தத்தை வைத்து வார்த்தை விளையாட்டு போட்டிருப்பார் கவிஞர் வாலி.

பாடலாசிரியரே ராகங்களின் திறன் அறிந்தவராகவும் இருப்பதன் இலாபமென்ன?

கல்யாணி ராகம் தானய்யா இந்தப் பாட்டு என்று போகிற போக்கில் நிறுவி விடுவார். 

“சுந்தரி கண்ணால் ஒரு சேதி” பாடலில் ஒரு மெது நடையாகப் பயணித்த கல்யாணியா அதே கூட்டணிக் குரல் + இசையோடு துள்ளித் துள்ளிப் பாய்கிறாள்? ஆகா 😍

வாத்திக்கருவிகளில் மட்டுமல்ல ராகங்களைக் கையாள்வதிலும் புதிய புதிய உத்திகளை நிறுவ முடியும் என்பதற்கான காலத்தின் சாட்சி நம் இசை ஞானியார் ❤️

https://youtu.be/LDB3Z8RD7dI?si=C_5GCMsB8LHYu3Fx

குரல் வண்ணம் கொஞ்சட்டும்

கல்யாணி

❤️❤️❤️

கானா பிரபா

0 comments: