Pages

Wednesday, July 5, 2023

எம்.எஸ்.வி இசையில் அறிமுகப் பாடகர் , இசையமைப்பாளர் சிவாஜிராஜா பேசுகிறார்

“சின்னச் சின்ன மேகம்
என்னைத் தொட்டுப் போகும்
நினைவுகள் பூவாகும்
கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்....”

எண்பதுகளின் புகழ்பூத்த “காற்றுக்கென்ன வேலி" பாடல் வழியே
இன்றும் நம் எல்லோர் மனதில் வீற்றிருக்கும் இசையமைப்பாளர் சிவாஜிராஜா அவர்களைப் பல்லாண்டுத் தேடல்களுக்குப் பின்
வானலையில் சந்தித்தேன்.






அகமகிழ்வோடு தான் திரையிசைத் துறைக்கு வந்த அனுபவத்தை
இந்தப் பேட்டியின் முதற் பாகத்தில் பகிர்ந்து கொள்கின்றார்.

கண்ணதாசன் மகனின் நட்புக் கிடைத்ததால் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடகராக அறிமுகம்,

தன் குரு நாதர் ஜி.கே.வெங்கடேஷிடம் உதவி இசையமைப்பாளராக இருந்த போது கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுத்த கதை,

“அன்னக்கிளி" தயாரிப்பாளர்களாலேயே இன்னொரு ராஜாவாக சிவாஜிராஜா இசையமைப்பாளர் ஆன கதை,

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் முதன் முதலில் இரட்டை வேடமேடற்ற ராமன் ஶ்ரீராமன்,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நண்பர்கள் தயாரித்த “சித்திரமே சித்திரமே” படங்களுக்கு இசையமைத்தது உட்பட இன்னும் பல அரிய தகவல்களோடு இப்பேட்டியின் முதற் பாகத்தைப் பகிர்கிறேன்.







பேட்டியைக் கேட்க

https://www.youtube.com/watch?v=b5ET4pw4a4Y

கானா பிரபா

#SivajiRaja #MSV #MSViswanathan #GKVenkatesh

0 comments: