Pages

Monday, December 20, 2021

“உன் பேரைக் கேட்டாலே எதுவும் தோணாது” பாடகர் யுகேந்திரன்



1999 வாக்கில் மெல்பர்னில் நான் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி குழுவினரோடு கங்கை அமரன் இசைக்குழுவும் வந்து இசைக்கச்சேரி படைத்திருந்தார்கள். என்னளவில் தென்னிந்திய இசை நட்சத்திரங்களைப் பிரமிப்போடு பார்த்த முதல் மேடை அது. அந்த நிகழ்வு முடிந்த பின்னர், கூட்டம் மெல்ல மெல்லக் கலைந்தாலும் நான் ஓரமாக நின்று மெல்ல மெல்ல மேடையில் நின்று கொண்டிருந்த கங்கை அமரன் பக்கம் போனேன் தயக்கத்தோடு.
“சார்!”
என் குரலைக் கேட்டதும் மேடையில் நின்றிருந்தவர் கிட்ட வந்து கையை இறுக்கினார்.
“பூஞ்சோலை எப்போ வரும்?”
என் கேள்வியை எதிர்பார்த்தவர் போல
“கண்டிப்பாக வரும் வரணும்”
என்று விட்டு விடை கொடுத்தார். இசைப்பிரபலத்துடனான என் முதல் பேட்டியும் அதுதானோ 
“பூஞ்சோலை” படம் ஏன் வரவேண்டும் என்ற ஆவலைக் கிளப்பியதற்கு முதற்காரணம்
““உன் பேரைக் கேட்டாலே இனி எதுவும் தோணாது”
இந்தப் பாடல் வெளிவந்த நாட் கொண்டு பித்துப் பிடித்தது போலக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் இந்தப் பாடலைப் பாடிய போது வயது 20. இணைந்து ராஜாவின் மகள் பவதாரணி பாடினார்.
மனோஜ் - கியான் இரட்டையர் இசையில் வெளிவந்த விஜயகாந்த் படமான "உழவன் மகன்" திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், வித்யா பாடிய "செம்மறியாடே செம்மறியாடே செய்வது சரிதானா" என்ற பாடலின் இடையில் வரும் மழலைக் குரல் தான் யுகேந்திரன் பாடகராக அறிமுகமானது.
ஆனால் என் கணிப்பில் அவர் வளர்ந்த பாடகராக முதன் முதலில் பாடியது ‘பூஞ்சோலை’ படத்தின் “உன் பேரைக் கேட்டாலே” பாடல் தான்.
உண்மையில் இந்த மாதிரித் தாழ்ந்த தொனியில் யுகேந்திரனுக்கு இன்னும் ஏராளம் பாடல்கள் கிட்டியிருக்க வேண்டும். அவ்வளவுக்கு அற்புதமாகக் கலக்கியிருப்பார் இந்தப் பாடலில்.
கங்கை அமரன் தன் மகன் வெங்கட் பிரபுவை போட்டு எடுத்திருந்த "பூஞ்சோலை" திரைப்படத்தில் இளையராஜா இசையில் "உன் பேரைக் கேட்டாலே" என்ற பாடலை பவதாரணியுடன் சேர்ந்து பாடினார் யுகேந்திரன். அந்தப் படம் பத்து வருஷங்களுக்கு மேலாகக் கிடப்பில் இருக்கின்றது. "ஒருவன் ஒருவன் முதலாளி" என்ற பெயரில் அதனைப் பெயர் மாற்றி 2006 ஆம் ஆண்டில் மீண்டும் கொண்டு வர இருந்தார்கள். அப்படியும் வரவில்லை.
இங்கே ஒரு வினோத ஒற்றுமையைக் குறிப்பிட வேண்டும்.
எப்படி யுகேந்திரன் வளர்ந்த பாடகராக இளையராஜா இசையில் அடையாளப்பட்டாரோ, அது போலவே குழந்தைக் குரலாக இருந்த சரணுக்கு “புண்ணியவதி” படத்தில் கொடுத்தார் “உனக்கொருத்தி பொறந்திருக்கா” பாட்டு. அதுவும் பூஞ்சோலை போல வெளிவராத படம் ஆயிற்று. இந்த வாரிசுகள் எல்லாரும் சேர்ந்து நடித்த “காதல் சாம்ராஜ்யம்” பாடல்கள் வெளிவந்தும் 20 வருடம் கடந்து விட்டது.
அதன் பின்னர் தேவாவின் இசையில் "பொற்காலம்" திரைக்காக "சின்னக் காணங்குருவி ஒண்ணு" என்ற பாடலைப் பாடினார்.அதுவும் இசைத்தட்டில் வந்ததோடு சரி. படத்தில் வரவில்லை. இவர்களை எல்லாம் கடந்து இசையமைப்பாளர் பரத்வாஜின் அருள் யுகேந்திரனுக்குக் கிடைக்கவே "பூவேலி" திரைப்படத்தில் "பொள்ளாச்சி சந்தையிலே" என்ற பாடலைப் பாடி நல்லதொரு அறிமுகத்தைப் பெற்றார். தொடர்ந்து பரத்வாஜின் இசையில் நிறையப் பாடல்களைப் பாடியிருக்கின்றார் இவர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் "காதலர் தினம்" திரைக்காக "ஓ மரியா" பாடலை தேவனுடன் இணைந்து பாடியும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் "முதன் முதலாய்" பாடலை மதுமிதாவுடன் இணைந்தும் பாடி அந்தப் பாடல்கள் பிரபலமாயிருக்கின்றன. "வீரமும் ஈரமும்" என்ற திரைப்படத்திற்கு இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியிருக்கின்றார்.
சிங்கப்பூர் ஒலி வானொலியில் நிகழ்ச்சி படைத்திருந்த மாலினி என்னும் அறிவிப்பாளர் இலங்கையின் சுவர்ண ஒலி என்ற வானொலியின் நிகழ்ச்சிப் பணிப்பாளராகச் சென்றபோது அந்த நேரத்தில் கெளரவ அறிவிப்பாளராக வந்து நிகழ்ச்சி படைத்திருந்த யுகேந்திரனுடன் காதல் மலர்ந்து சிங்கப்பூரையும் தமிழ்நாட்டையும் கொழும்பு இணைத்தது 😉
அவர்தான் பிரபல பாடகர் மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன். இவரது தங்கை பிரசாந்தியும் வளர்ந்து வரும் பின்னணிப் பாடகிகளில் ஒருவர். இவர் பின்னாளில் பாடகராகவும், நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்றைய தொகுப்பிலே யுகேந்திரன் பாடிய சிறந்த பாடல்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்கின்றேன். கேட்டு மகிழுங்கள்.
யுகேந்திரன் மழலையாகப் பாடிய "செம்மறி ஆடே" பாடல் உழவன் மகன் படத்திலிருந்து
மனோஜ் கியான் இசையில் இணைந்து பாடியவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், வித்யா
தேவாவின் இசையில் பொற்காலம் திரையில் வரும் "சின்னக் காணாங்குருவி ஒண்ணு" தன் தந்தை மலேசியா வாசுதேவனுடன்
பரத்வாஜின் இசையில் பார்த்தேன் ரசித்தேன் படத்திற்காக ரேஷ்மியுடன் "பார்த்தேன் பார்த்தேன்"
சித்ரா சிவராமனுடன் பாண்டவர் பூமி திரைக்காக "தோழா தோழா" பரத்வாஜ் இசையில்
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் லேசா லேசா திரைப்படத்தில் இருந்து "முதன் முதலாய" இணைந்து பாடியவர் மதுமிதா
ஆட்டோ கிராப் திரையில் இருந்து " கிழக்கே பார்த்தேன்" பரத்வாஜ் இசையில்
சபேஷ் முரளி இசையில் தவமாய் தவமிருந்து திரைக்காக "என்ன பார்க்கிறாய்" இணைந்து பாடியவர் சுசித்ரா
கானா பிரபா

1999 வாக்கில் மெல்பர்னில் நான் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி குழுவினரோடு கங்கை அமரன் இசைக்குழுவும் வந்து இசைக்கச்சேரி படைத்திருந்தார்கள். என்னளவில் தென்னிந்திய இசை நட்சத்திரங்களைப் பிரமிப்போடு பார்த்த முதல் மேடை அது. அந்த நிகழ்வு முடிந்த பின்னர், கூட்டம் மெல்ல மெல்லக் கலைந்தாலும் நான் ஓரமாக நின்று மெல்ல மெல்ல மேடையில் நின்று கொண்டிருந்த கங்கை அமரன் பக்கம் போனேன் தயக்கத்தோடு.

“சார்!”

என் குரலைக் கேட்டதும் மேடையில் நின்றிருந்தவர் கிட்ட வந்து கையை இறுக்கினார். 

“பூஞ்சோலை எப்போ வரும்?” 

என் கேள்வியை எதிர்பார்த்தவர் போல

“கண்டிப்பாக வரும் வரணும்” 

என்று விட்டு விடை கொடுத்தார். இசைப்பிரபலத்துடனான என் முதல் பேட்டியும் அதுதானோ 

“பூஞ்சோலை” படம் ஏன் வரவேண்டும் என்ற ஆவலைக் கிளப்பியதற்கு முதற்காரணம் 

““உன் பேரைக் கேட்டாலே இனி எதுவும் தோணாது”

https://www.youtube.com/watch?v=nCmy8JLcvIQ

இந்தப் பாடல் வெளிவந்த நாட் கொண்டு பித்துப் பிடித்தது போலக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் இந்தப் பாடலைப் பாடிய போது வயது 20. இணைந்து ராஜாவின் மகள் பவதாரணி பாடினார்.

மனோஜ் - கியான் இரட்டையர் இசையில் வெளிவந்த விஜயகாந்த் படமான "உழவன் மகன்" திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சசிரேகா பாடிய "செம்மறியாடே செம்மறியாடே செய்வது சரிதானா" என்ற பாடலின் இடையில் வரும் மழலைக் குரல் தான் யுகேந்திரன் பாடகராக அறிமுகமானது.

ஆனால் என் கணிப்பில் அவர் வளர்ந்த பாடகராக முதன் முதலில் பாடியது ‘பூஞ்சோலை’ படத்தின் “உன் பேரைக் கேட்டாலே” பாடல் தான்.

உண்மையில் இந்த மாதிரித் தாழ்ந்த தொனியில் யுகேந்திரனுக்கு இன்னும் ஏராளம் பாடல்கள் கிட்டியிருக்க வேண்டும். அவ்வளவுக்கு அற்புதமாகக் கலக்கியிருப்பார் இந்தப் பாடலில்.

கங்கை அமரன் தன் மகன் வெங்கட் பிரபுவை போட்டு எடுத்திருந்த "பூஞ்சோலை" திரைப்படத்தில் இளையராஜா இசையில் "உன் பேரைக் கேட்டாலே" என்ற பாடலை பவதாரணியுடன் சேர்ந்து பாடினார் யுகேந்திரன். அந்தப் படம் பத்து வருஷங்களுக்கு மேலாகக் கிடப்பில் இருக்கின்றது. "ஒருவன் ஒருவன் முதலாளி" என்ற பெயரில் அதனைப் பெயர் மாற்றி 2006 ஆம் ஆண்டில் மீண்டும் கொண்டு வர இருந்தார்கள். அப்படியும் வரவில்லை.

இங்கே ஒரு வினோத ஒற்றுமையைக் குறிப்பிட வேண்டும்.

எப்படி யுகேந்திரன் வளர்ந்த பாடகராக இளையராஜா இசையில் அடையாளப்பட்டாரோ, அது போலவே குழந்தைக் குரலாக இருந்த சரணுக்கு “புண்ணியவதி” படத்தில் கொடுத்தார் “உனக்கொருத்தி பொறந்திருக்கா” பாட்டு. அதுவும் பூஞ்சோலை போல வெளிவராத படம் ஆயிற்று. இந்த வாரிசுகள் எல்லாரும் சேர்ந்து நடித்த “காதல் சாம்ராஜ்யம்” பாடல்கள் வெளிவந்தும் 20 வருடம் கடந்து விட்டது.

அதன் பின்னர் தேவாவின் இசையில் "பொற்காலம்" திரைக்காக "சின்னக் காணங்குருவி ஒண்ணு" என்ற பாடலைப் பாடினார்.அதுவும் இசைத்தட்டில் வந்ததோடு சரி. படத்தில் வரவில்லை. இவர்களை எல்லாம் கடந்து இசையமைப்பாளர் பரத்வாஜின் அருள் யுகேந்திரனுக்குக் கிடைக்கவே "பூவேலி" திரைப்படத்தில் "பொள்ளாச்சி சந்தையிலே" என்ற பாடலைப் பாடி நல்லதொரு அறிமுகத்தைப் பெற்றார். தொடர்ந்து பரத்வாஜின் இசையில் நிறையப் பாடல்களைப் பாடியிருக்கின்றார் இவர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் "காதலர் தினம்" திரைக்காக "ஓ மரியா" பாடலை தேவனுடன் இணைந்து பாடியும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் "முதன் முதலாய்" பாடலை மதுமிதாவுடன் இணைந்தும் பாடி அந்தப் பாடல்கள் பிரபலமாயிருக்கின்றன. "வீரமும் ஈரமும்" என்ற திரைப்படத்திற்கு இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியிருக்கின்றார்.

சிங்கப்பூர் ஒலி வானொலியில் நிகழ்ச்சி படைத்திருந்த மாலினி என்னும் அறிவிப்பாளர் இலங்கையின் சுவர்ண ஒலி என்ற வானொலியின் நிகழ்ச்சிப் பணிப்பாளராகச் சென்றபோது அந்த நேரத்தில் கெளரவ அறிவிப்பாளராக் வந்து நிகழ்ச்சி படைத்திருந்த யுகேந்திரனுடன் காதல் மலர்ந்து சிங்கப்பூரையும் தமிழ்நாட்டையும் கொழும்பு இணைத்தது 😉

அவர்தான் பிரபல பாடகர் மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன். இவரது தங்கை பிரசாந்தியும் வளர்ந்து வரும் பின்னணிப் பாடகிகளில் ஒருவர். இவர் பின்னாளில் பாடகராகவும், நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்றைய தொகுப்பிலே யுகேந்திரன் பாடிய சிறந்த பாடல்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்கின்றேன். கேட்டு மகிழுங்கள். 

யுகேந்திரன் மழலையாகப் பாடிய "செம்மறி ஆடே" பாடல் உழவன் மகன் படத்திலிருந்து

மனோஜ் கியான் இசையில் இணைந்து பாடியவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சசிரேகா

https://www.youtube.com/watch?v=hAeKsg9TUcA

தேவாவின் இசையில் பொற்காலம் திரையில் வரும் "சின்னக் காணாங்குருவி ஒண்ணு" தன் தந்தை மலேசியா வாசுதேவனுடன்

https://www.youtube.com/watch?v=RiPux2MXUd4

பரத்வாஜின் இசையில் பார்த்தேன் ரசித்தேன் படத்திற்காக ரேஷ்மியுடன் "பார்த்தேன் பார்த்தேன்"

https://www.youtube.com/watch?v=cCL2lcAan8Q

சித்ரா சிவராமனுடன் பாண்டவர் பூமி திரைக்காக "தோழா தோழா" பரத்வாஜ் இசையில்

https://www.youtube.com/watch?v=GdRFWtp1298

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் லேசா லேசா திரைப்படத்தில் இருந்து "முதன் முதலாய" இணைந்து பாடியவர் மதுமிதா

https://www.youtube.com/watch?v=OtI9LsNgJBY

ஆட்டோ கிராப் திரையில் இருந்து " கிழக்கே பார்த்தேன்" பரத்வாஜ் இசையில்

https://www.youtube.com/watch?v=Ybri1L10Dfk

சபேஷ் முரளி இசையில் தவமாய் தவமிருந்து திரைக்காக "என்ன பார்க்கிறாய்" இணைந்து பாடியவர் சுசித்ரா

https://www.youtube.com/watch?v=XrJqwCX5z-U

கானா பிரபா

0 comments: