கடந்த பதிவில் குறிப்பிட்டது போன்று தமிழ்த்திரையிசைப்பாடல்களில் பல்லாயிரம் நம் மனதில் இடம்பிடித்திருந்தாலும் அவற்றை ஆக்கிய பாடலாசிரியர் யார் போன்ற விபரங்கள் பலரை எட்டாதிருக்கும். அப்படியானதொரு அருமையான பாடல் தான் "ஏரிக்கரைப் பூங்காத்தே நீ போறவழி தென்கிழக்கோ". தூறல் நின்னு போச்சு படத்தில் வந்த இந்த இனிமையான பாடல் இசைஞானி இளையராஜா இசையில் புலவர் சிதம்பரநாதன் எழுதியது.
புலவர் சிதம்பரநாதனோடு கவிஞர்கள் வாலி, முத்துலிங்கம். வைரமுத்து, இயக்குனர் கங்கை அமரன் என்றே டைட்டில் கார்டில் போட்டு அவருமாக பாடல்கள் எழுதிய இந்தப் படத்தில் எல்லாப்பாடல்களுமே முத்துக்கள்.
புலவர் சிதம்பரநாதன் இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்களுக்குப் பாடல்கள் எழுதியவர். கே.ஜே.ஜேசுதாஸ் பாக்யராஜுக்காகப் பாடி நிறைவில் முப்பது நொடிகள் முதியவருக்கான குரலாக ஜேசுதாஸ் மாறி எம்.என். நம்பியாருக்காகப் பாடியிருப்பார்.
ஏரிக்கரைப் பூங்காத்தே! நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு
ஏரிக்கரைப் பூங்காத்தே! நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு
ஏரிக்கரைப் பூங்காத்தே....
பாதமலர் நோகுமுன்னு நடக்கும் பாதை வழி பூ விரிச்சேன்
மயிலே
பாதமலர் நோகுமுன்னு நடக்கும் பாதை வழி பூ விரிச்சேன்
மயிலே
ஓடம் போல் ஆடுதே மனசு கூடித்தான் போனதே வயசு
காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது
அந்தப் பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது
ஏரிக்கரைப் பூங்காத்தே நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு
ஏரிக்கரைப் பூங்காத்தே....
ஓடிச் செல்லும் வான்மேகம் நெலவை மூடிக்கொள்ளப் பார்க்குதடி
அடியே
ஓடிச் செல்லும் வான்மேகம் நெலவை மூடிக்கொள்ளப் பார்க்குதடி
அடியே
ஜாமத்தில் பாடுறேன் தனியா ராகத்தில் சேரணும் துணையா
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்
அந்த ராசாங்கம் வரும் வரை ரோசாவே காத்திரு
ஏரிக்கரைப் பூங்காத்தே நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு
ஏரிக்கரைப் பூங்காத்தே.......நீ போற வழி....தென்கிழக்கோ
அட தென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு
ஏரிக்கரைப் பூங்காத்தே
Thursday, February 28, 2013
Subscribe to:
Posts (Atom)


