Pages

Thursday, May 27, 2010

றேடியோஸ்புதிர்: 55 இயக்குனர்சிகரம் எடுத்த மெட்டு; இயக்கியதோ இன்னொரு முத்து

அந்தப் பெரிய நடிகரின் தீராத ஆசை குறித்த பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று. அந்த ஆசையை நடிகரின் குருநாதரே தயாரித்து இன்னொரு இயக்குனரை இயக்க வைத்து குறித்த நடிகரின் இலட்சிய பாத்திரத்தில் நடிக்க வைத்து மனம் நிறைந்ததே மிச்சம் கல்லா நிறையவில்லை.

மீண்டும் கூட்டணி சேர்ந்தார்கள். இயக்குனர் சிகரம் தயாரிப்பு, அதே நடிகர் நடிப்பு, இயக்கம் கூட அதே முந்திய இயக்குனர் தான். இம்முறை முழுமையான மசாலா, நகைச்சுவை கலந்த படம். படம் எடுத்ததோ வடமாநிலத்தில். இந்த நிலையில் குறித்த இயக்குனர் நடிகர் பட்டாளத்தோடு வடமாநிலத்துக்குக் கிளம்பிவிட்டார். தயாரிப்பாளராக இருந்த சிகர இயக்குனர் , இந்தப் படத்தின் இயக்குனரின் ரசனை எப்படியிருக்கும் என்பதைக் கணித்து அதற்கேற்றாற்போலப் பாடல்களை மு.மேத்தாவை எழுத வைத்து இசைஞானி இளையராஜா மூலம் இசையமைத்து வந்த பாடல்களை உடனுக்குடன் வடமாநிலத்தில் இருக்கும் ஷூட்டிங் தளத்துக்கு அனுப்பி வைத்தாராம். பாடல்கள் அனைத்துமே முத்து, இன்றுவரை கேட்டாலும். குடும்பப்பாங்கான படங்களை இயக்கிய இயக்குனர் ஒரு மசாலா இயக்குனரின் ரசனையறிந்து பாடல்களைக் கேட்டு வாங்கிக் கொடுத்ததென்பது புதுமை. படம் நூறு நாட்கள் வெற்றிகரமாக ஓடி தயாரிப்பாள சிகரத்தின் நெஞ்சையும் கல்லாவையும் நிறைத்தது. அந்தப் பாடல்கள் வந்த படம் என்னவென்பது தான் கேள்வியே ;)

தந்தந்தான தந்தன்னன்னா தந்ததந்தான தன்னன்னா....

சரியான விடை இது தான்

அந்த தயாரிப்பாளர் - இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்
நடிகர்: ரஜினிகாந்த்
இலட்சிய வேடம் பூண்ட படம்:
ஸ்ரீ ராகவேந்திரர்
இயக்குனர்: எஸ்.பி.முத்துராமன்
வெற்றிகண்ட மசாலாப்படம்: வேலைக்காரன்

போட்டியில் கலந்து சிறப்பித்த நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி