Saturday, October 30, 2021
அதோ மேக ஊர்வலம்....❤️
Wednesday, October 27, 2021
சிவகுமார் 80
“இது ராஜபாட்டை அல்ல...” சிவகுமாரின் சினிமா வாழ்வியல் அனுபவங்களோடு வெளிவந்த அந்தப் புத்தகமும் ஈழத்தில் இருந்து புலம்பெயரும் போது என் மெல்பர்ன் வாழ்வியலின் தனித்த நாட்களில் துணையாக இருந்தது.
சொல்லப் போனால் ஒரு திரையுலகப் பிரபலத்தின் வாழ்வியல் அனுபவத்தைப் படித்த கணக்கில் அதுதான் முதலாவது. அதன் பின் ஏராளம் பேரினதும் வாங்கிக் குவித்து விட்டேன். ஆனால் சிவகுமாரின் எழுத்தாற்றலும், நினைவாற்றலுமாகக் கொட்டிய அற்புதமான படைப்பு அது.
ஒரு ஓவியர், எழுத்தாளர் தாண்டித் தமிழ் திரையுலகின் குணச்சித்திரமாகவும், நாயகனாகவும் தோன்றி ஒரு கட்டத்தில் தன் சம வயதுக்காரர் ஶ்ரீகாந்த் போலவே நடிப்பில் இருந்து ஒதுங்கிக் கொண்டு விட்டார். ஆனாலும் அவரின் உடல் உறுதிக்கு இன்னும் தொடர்ந்து பயணிக்க வேண்டியவர்.
தன் திரையுலக, சின்னத்திரை வாழ்வியலுக்குப் பின் அவர் வரித்துக் கொண்டது தன் தமிழாற்றலை மேடை தோறும் சிறப்பித்தது. அவை பின்னர் டிவிடிகளாக வருமளவுக்கு அங்கும் தன் ஆளுமையை நிலை நிறுத்திக் கொண்டவர். சிவகுமாரின் ஓவியக் கண்காட்சியும் சிறப்பாய் நடந்தது. இப்படியாகத் தன் பன்முகத் தன்மையை நிறுவியவர்.
ஏவிஎம் பாசறை வழியே அறிமுகமான அதிஷ்டம் கொண்டவர்.
சிவகுமார் இயக்குநர்களின் நடிகர், அதனால் தான் தேவராஜ் – மோகன், கே.ரங்கராஜ் உள்ளிட்டவர்களோடும் இன்னொரு புறம் கே.பாலசந்தர் போன்றோராலும் சிறப்பான வேடங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டவர்.
கந்தன் கருணையில் அழகன் முருகனாக அச்சொட்டாகத் தோன்றினார்.
இசைஞானி இளையராஜாவின் அன்னக்கிளியில் தொடங்கிய ராசியான நாயகன், தொடர்ச்சியாக அந்தக் காலத்து இளையராஜா பாடல்களுக்கும் அணி செய்தவர்.
ரோசாப்பூ ரவிக்கைக்காரி, சிந்து பைரவி, மறுபக்கம் என்று அவரின் நடிப்புக்காகக் கொண்டடப்பட்டவை.
நடிகர் சிவகுமார் இன்னொரு வகையில் அதிஷ்டசாலி, அவருக்கு எந்த இசையமைப்பாளர் கொடுத்தாலும் தேன் தோய்த்த பலாச்சுளைப் பாடல்கள், அவ்விதம் என் தொகுப்பு ஒன்று. இவற்றில் ஜோடிப் பாடல்கள் தவிர, பெண் குரல் பாடல் ஒரு சிலவற்றையும் இணைத்தது அவற்றின் இனிமை கருதி.
இசைஞானி இளையராஜாவுக்கு முன்பே மெல்லிசை மன்னர், கே.வி.மகாதேவன், சங்கர் கணேஷ் அதன் பின் சந்திரபோஸ், டி.ராஜேந்தர், தேவா ஈறாக, ஏன் இசையமைப்பாளர் மலேசியா வாசுதேவன் உள்ளடங்கலாக இந்தப் பாடல்கள் எல்லாமே சிவகுமாருக்குக் கிடைத்த பொக்கிஷங்கள்.
1. என் கேள்விக்கென்ன பதில் – உயர்ந்த மனிதன்
https://www.youtube.com/watch?v=71Mmq0XErhE
2. ஐயனாரு நிறைஞ்ச வாழ்வு கொடுக்கணும் – காவல் தெய்வம்
https://www.youtube.com/watch?v=DYEeXSr3TLI
3. பெளர்ணமி நிலவில் – கன்னிப் பெண்
https://www.youtube.com/watch?v=22OWQ4j5EC8&t=82s
4. உள்ளங்கள் பலவிதம் – திருமகள்
https://www.youtube.com/watch?v=MLqoXUXGyvg
5. அனகன் அங்கஜன் – கண்காட்சி
https://www.youtube.com/watch?v=71oX-WFq1uo
6. முள்ளில்லா ரோஜா – மூன்று தெய்வங்கள்
https://www.youtube.com/watch?v=ANBtaWBvNPc
7. என்ன சொல்ல என்ன சொல்ல – பாபு
https://www.youtube.com/watch?v=lDQGZ5BbtZ0
8. தேன் சிந்துதே வானம் – பொண்ணுக்குத் தங்க மனசு
https://www.youtube.com/watch?v=GpqykUJQb9g
9. ஒரு வித மயக்கம் – கட்டிலா தொட்டிலா
https://www.youtube.com/watch?v=qZwKhf9SebM
10. நீ நினைத்த நேரமெல்லாம் – பெண்ணை நம்புங்கள்
https://www.youtube.com/watch?v=nh_vAevEaj4
11. சொல்லத்தான் நினைக்கிறேன் – சொல்லத்தான் நினைக்கிறேன்
https://www.youtube.com/watch?v=6JfoFOnFTGU
12. காதல் விளையாட – கண்மணி ராஜா
https://www.youtube.com/watch?v=_kx8igoGl5c
13. ஓடம் கடலோடும் – கண்மணி ராஜா
https://www.youtube.com/watch?v=GngQfJA4Oss
14. கண்ணெல்லாம் உன் வண்ணம் – ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு
https://www.youtube.com/watch?v=jGyJW9sNxok
15. வா இளமை அழைக்கின்றது – எங்கம்மா சபதம்
https://www.youtube.com/watch?v=Wkt7LsRjfkg
16. முத்துமகன் வந்துனக்கு– தாய்ப்பாசம்
https://www.youtube.com/watch?v=TF9V5hkDWNA
17. யாருமில்லை இங்கே – பணத்துக்காக
https://www.youtube.com/watch?v=GAnztW_ecTY
18. துளித் துளித் துளி – புதுவெள்ளம்
https://www.youtube.com/watch?v=amRSv2bahWw
19. உன்னிடம் மயங்குகிறேன் – தேன் சிந்துதே வானம்
https://www.youtube.com/watch?v=F-2rN5T0M30
20. கலைமகள் கைவீணை – மேல் நாட்டு மருமகள்
https://www.youtube.com/watch?v=3DOEmAa4qLI
21. என் காதலி – தங்கத்திலே வைரம்
https://www.youtube.com/watch?v=n56L6-CHZVQ
22. பொங்குதே புன்னகை – இப்படியும் ஒரு பெண்
https://www.youtube.com/watch?v=23NnyOiLyxQ
23. என்னோடு வந்தான் – பட்டிக்காட்டு ராஜா
https://www.youtube.com/watch?v=6GsLyTtmCIc
24. அன்னக்கிளி உன்னை – அன்னக்கிளி
https://www.youtube.com/watch?v=NnCge4x-df0
25. ஏரியில் ஒரு – மதன மாளிகை
https://www.youtube.com/watch?v=s0vdpipmNKU
26. ஒரு நாள் உன்னோடு – உறவாடும் நெஞ்சம்
https://www.youtube.com/watch?v=FPb5AmQ8Lgs
27. கண்ணன் ஒரு கைக்குழந்தை – பத்ரகாளி
https://www.youtube.com/watch?v=_GNXi6UgZEo&t=1s
28. சுகம் பெற ஒரே வழி – எதற்கும் துணிந்தவன்
https://www.youtube.com/watch?v=voKQrovOec8
29. எங்கெங்கோ சில மணிகள் – சொன்னதைச் செய்வேன்
https://www.youtube.com/watch?v=_lQtDUUH_T4
30. வேலும் மயிலும் துணையாக – பெண்ணைச் சொல்லிக் குற்றமில்லை
https://www.youtube.com/watch?v=8szp2YsjGu4
31. என் மனது ஒன்று தான் – பெருமைக்குரியவள்
https://www.youtube.com/watch?v=Gyw_dgGBfcs
32. சின்னக்கண்ணன் அழைக்கிறான் – கவிக்குயில்
https://www.youtube.com/watch?v=tOdhWd5ZF2g&t=3s
33. சுகமோ ஆயிரம் – துணையிருப்பாள் மீனாட்சி
https://www.youtube.com/watch?v=IwicEdF583Y
34. பூந்தென்றலே – புவனா ஒரு கேள்விக்குறி
https://www.youtube.com/watch?v=hsKDC_CwbJ8&t=148s
35. பருத்தி எடுக்கையிலே – ஆட்டுக்கார அலமேலு
https://www.youtube.com/watch?v=Y_IP5-WqgTY
36. தேவி செந்தூரக் கோலம் – துர்காதேவி
https://www.youtube.com/watch?v=UttYmGEG7XM
37. ஒரு காதல் தேவதை – சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
https://www.youtube.com/watch?v=R_2YfVyKqSA
38. இது இளமைக்கால இரவு – கைப்பிடித்தவள்
https://www.youtube.com/watch?v=r3XudiWD7e4
39. என் கண்மணி – சிட்டுக்குருவி
https://www.youtube.com/watch?v=1q27kfl2hwg
40. இரவில் பார்த்தேன் – கண்ணாமூச்சி
https://www.youtube.com/watch?v=MyspaVncWWQ
41. மேகமே தூதாக வா – கண்ணன் ஒரு கைக்குழந்தை
https://www.youtube.com/watch?v=0RSLGjgBdMk
42. மாம்பூவே – மச்சானைப் பார்த்தீங்களா
https://www.youtube.com/watch?v=C8g3NkOSQl0
43. செங்கரும்பு தங்கக் கட்டி – அதை விட ரகசியம்
https://www.youtube.com/watch?v=wnmhz1YVAow
44. மயிலே மயிலே – கடவுள் அமைத்த மேடை
https://www.youtube.com/watch?v=Gf6Xixp8lA8
45. மாமன் ஒரு நாள் – ரோசாப்பூ ரவிக்கைக்காரி
https://www.youtube.com/watch?v=XE5kKXdgRuw&t=121s
46. வா பொன்மயிலே – பூந்தளிர்
https://www.youtube.com/watch?v=L52ebSa7I2c
47. மஞ்சள் நிலாவுக்கு – முதல் இரவு
https://www.youtube.com/watch?v=iXntSfhbZZo
48. பூந்தேனில் கலந்து – ஏணிப்படிகள்
https://www.youtube.com/watch?v=78uSUEOo324
49. செவ்வானமே சீர் கொண்டு வா – காதல் கிளிகள்
https://www.youtube.com/watch?v=mbPvqfqdXuo
50. இல்லம் சங்கீதம் – அவன் அவள் அது
https://www.youtube.com/watch?v=nxjhOVsF9bc
51. மாலை வேளை ரதி மாறன் – சாமந்திப்பூ
https://www.youtube.com/watch?v=T8pEeYFaDrE
52. தேவி வந்த நேரம் – வண்டிச்சக்கரம்
https://www.youtube.com/watch?v=gaxcycwkjJ8&t=30s
53. கல்யாண மாலை – ராமன் பரசுராமன்
https://www.youtube.com/watch?v=n4bOM2NOATM
54. உள்ளத்தில் ஒரு ஊஞ்சல் – கோடீஸ்வரன் மகள்
https://www.youtube.com/watch?v=7ntnNpQCMf8
55. முத்து முத்து தேரோட்டம் – ஆணி வேர்
https://www.youtube.com/watch?v=ukmITZucNp4
56. 56. கல்யாண மேளங்களே - நெல்லிக்கனி
57. எங்கெங்கும் அவள் முகம் – நெருப்பிலே பூத்த மலர்
https://www.youtube.com/watch?v=9wD93On05IM
58. ஒரு ராகம் பாடலோடு – ஆனந்த ராகம்
https://www.youtube.com/watch?v=q-ioEgmMMF0
59. சேலை குடை பிடிக்க – ஆயிரம் முத்தங்கள்
https://www.youtube.com/watch?v=aMYOwCg9J8I
60. முத்து மாணிக்க கங்கை – துணைவி
https://www.youtube.com/watch?v=zMpwwnRIU8s
61. ராகம் தாளம் பல்லவி – தீர்ப்புகள் திருத்தப்படலாம்
https://www.youtube.com/watch?v=EyGDdCRZOZk
62. சீனத்துப் பட்டு மேனி – தாய் மூகாம்பிகை
https://www.youtube.com/watch?v=Ccj6IDandcc
63. கனாக் காணும் – அக்னி சாட்சி
https://www.youtube.com/watch?v=Z4hahi_HvxI
64. டிஸ்கோ சங்கீதம் தான் – நம்பினால் நம்புங்கள் (சிவகுமார் நாயகன்)
https://www.youtube.com/watch?v=sUeAbs1K8mM
65. மெளனமே நெஞ்சில் நாளும் – உறங்காத நினைவுகள்
https://www.youtube.com/watch?v=5ivd40z0Ozw
66. வாடா கண்ணா – தம்பதிகள்
https://www.youtube.com/watch?v=ZMX2unYUvpw
67. பொன் வானம் – இன்று நீ நாளை நான்
https://www.youtube.com/watch?v=VBHqrR5VeO4
69. நானும் நீயும் சேர்ந்து – தண்டிக்கப்பட்ட நியாங்கள்
https://www.youtube.com/watch?v=pSDPAzawv7Y
71. பகலென்றும் இரவென்றும் – தங்கைக்கோர் கீதம்
https://www.youtube.com/watch?v=t4L5BswaPYA
72. பாடும் வானம்பாடி – நான் பாடும் பாடல்
https://www.youtube.com/watch?v=lRhbwAqw1As
73. சீர் கொண்டு வா – நான் பாடும் பாடல்
https://www.youtube.com/watch?v=-AG0xwV8g9M
74. பாரிஜாதம் – நிலவு சுடுவதில்லை
https://www.youtube.com/watch?v=pwhfon66Xm4&t=105s
75. தேவன் தந்த வீணை – உன்னை நான் சந்தித்தேன்
https://www.youtube.com/watch?v=MrAX0UorGnM
76. தெய்வம் வந்தது – புதுயுகம்
https://www.youtube.com/watch?v=AB3JLWsKiu0
77. நிழல் தேடி வந்தேன் – பெளர்ணமி அலைகள்
https://www.youtube.com/watch?v=ZeSkfMOZGTs
78. ஆத்தைக் கடக்க வேணும் – சுகமான ராகங்கள்
https://www.youtube.com/watch?v=zeYRO0f-epE
79. விளக்கேற்றி வைத்தால் – கற்பூர தீபம்
https://www.youtube.com/watch?v=xlANTrpW5XA
80. வண்ணம் இந்த வஞ்சியின் – பிரேம பாசம்
https://www.youtube.com/watch?v=CQ77tSY7yxU
81. கலைவாணியே – சிந்து பைரவி
https://www.youtube.com/watch?v=iCCE4tFurCQ
82. பருவம் கனிந்து வந்த – யாரோ எழுதிய கவிதை
https://www.youtube.com/watch?v=veYUwsqN1NY
83. எந்தன் கைக்குட்டையை – இசை பாடும் தென்றல்
https://www.youtube.com/watch?v=8zfLuYqQlqs
84. கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன – மனிதனின் மறுபக்கம்
https://www.youtube.com/watch?v=a59YdPHhEJo
85. கண்ணா உனைத் தேடுகிறேன் – உனக்காகவே வாழ்கிறேன்
https://www.youtube.com/watch?v=eDHoo4Qknjk
86. பனி விழும் பருவ நிலா – பன்னீர் நதிகள்
https://www.youtube.com/watch?v=VNC7Kj9ANsM
87. என்று தணியும் – இனி ஒரு சுதந்திரம்
https://www.youtube.com/watch?v=cdx77BDpvUE&t=64s
88. உனை நானே அழைத்தேனே – சின்னக்குயில் பாடுது
https://www.youtube.com/watch?v=MzVwRcq6p_U
89. பல்லவியே சரணம் – ஒருவர் வாழும் ஆலயம்
https://www.youtube.com/watch?v=YsmMH4mmilc
90. தென்பாண்டித் தமிழே – பாசப் பறவைகள்
https://www.youtube.com/watch?v=99a2XDU2Oys
91. நந்தவனம் பூத்திருக்கு (இல்லம்) சிவகுமார் நாயகன்
https://www.youtube.com/watch?v=RAVxifJMFSg
92. வண்ண நிலவே – பாடாத தேனீக்கள்
https://www.youtube.com/watch?v=YglpOFkdA64
93. இங்கே இறைவன் – சார் ஐ லவ் யூ
https://www.youtube.com/watch?v=42-J-cHeXZc
94. சந்த்ரிகையும் சந்திரனும் – பொறந்த வீடா புகுந்த வீடா
https://www.youtube.com/watch?v=kX9-VL6QoOA&t=13s
95. தேவியின் திருமுகம் - வெள்ளிக்கிழமை விரதம்
https://www.youtube.com/watch?v=x8bK1RX2Msw
96. அந்தரங்கம் நானறிவேன் - கங்கா கெளரி
https://www.youtube.com/watch?v=tyjtdXa-sQY
97. காமி சத்யபாமா - ஶ்ரீ கிருஷ்ண லீலா
https://www.youtube.com/watch?v=jE33kRmFsao
98. ஒரு சின்னப் பறவை - மதன மாளிகை
https://www.youtube.com/watch?v=qCNJ26_u9qU
99. ஆராரோ ஆரிராரோ - தசரதன்
https://www.youtube.com/watch?v=tz_Y1V4V-10
சிவகுமாரின் 175 வது படம் வாட்ச்மேன் வடிவேலு
100. சந்திரனும் சூரியனும்
https://www.youtube.com/watch?v=AsdOD0mj0ZU
கானா பிரபா
27.10.2021
இந்தப் பாடல்களைத் தொகுத்தளிக்க மூன்று மணி நேரங்கள் பிடித்தது. ஆகவே பிரதியெடுப்பவர்கள் தொகுத்தவரின் உழைப்பைக் கருத்தில் கொள்ளவும்.
Tuesday, October 26, 2021
இசைஞானி இளையராஜா இசை வழங்க பாடகர் மனோ பிறந்த நாள் இசைக் கொண்டாட்டம் ❤️🎙
இன்று பாடகர் மனோவின் பிறந்த நாள்.
இந்திரன் சந்திரன் (இந்திருடு சந்துருடு), இதயத்தைத் திருடாதே (கீதாஞ்சலி) போன்ற படங்களின் பாடல்களைத் தெலுங்கில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய அளவுக்கு நியாயம் செய்யவில்லை என்றெல்லாம் மனக் குறை உண்டு. அத்தோடு பாடகர் மனோவுக்கு இசைஞானி இளையராஜா வாரி வழங்கியதில் இன்னதெல்லாம் இவர் பாடியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்றெல்லாம் மனம் ஒப்பிட்டுப் பார்க்கும். ஆனால் அதையும் தாண்டி மனோ பாடிய பாடல்களில் ஏராளம் என் நெஞ்சுக்கு நெருக்கமானவை. அதற்குக் காரணமும் உண்டு.
மனோவுக்கானதாக ஆக்கப்பட்டது என்ற வகையில் அப்படியொன்று,
ஒரு பெரும் மழை அடிப்பதற்குக் கட்டியம் கூறுமாற்போல ஒரு நீர்க்குட்டை ஒன்றில் மெல்ல மெல்ல வந்து விழுமாற்போல அந்தப் பியானோ இசை ஆரம்பிக்கிறது. அதைப் பெருப்பித்து ஊதி ஊருக்கே பறைசாற்றுமாற்போலக் கூட வரும் வயலின் கூட்டணி மேலே இழுத்துச் செல்கிறது அந்த ஆர்ப்பரிப்பைக் கொஞ்சம் அடக்கி மெல்ல அரவணைக்கும் புல்லாங்குழல் மனோவிடம் கொடுக்க
"மெளனம் ஏன் மெளனமே வசந்த காலமா..... நினைவிலே வளர்ந்தது பருவராகமா...
தனிமையில் நீ இனிமையை அழைத்து வா...... மனதில் ஆட வா"
என்று நிதானிக்க ஒரு ட்ரம்ஸ் இசைக்கீற்று இதயத்தின் படபடப்பாய் ஒலிக்க
மீண்டும்
"மெளனம் ஏன் மெளனமே
வசந்த காலமே....மெளனம் ஏன் மெளனமே"
https://www.youtube.com/watch?v=2gfahVbt09I
என்று தொடருகிறார்.
யோசித்துப் பார்த்தால் இன்னொரு உண்மை தெரியும், எத்தனையோ ஆயிரம் பாடல்கள் பிறக்கின்றன. எல்லாமே எல்லோரையும் ஆட்கொள்ளும் அளவுக்கு ஆவதில்லை. எங்கோ, எப்போதோ இசையமைத்த பாட்டு ஒன்று அவ்வளவு பிரபலமாகாத பாட்டை நம் மனசுக்கு மட்டும் நெருக்கமாக வைத்திருக்கும் போது இன்னொருவரும் அதே அலைவரிசையில் இருக்கும் போது நம் இசைஞானம் அங்கீகரிக்கப்பட்டது போன்ற ஒரு பெருமிதம்.
"மெளனம் ஏன் மெளனமே" பாட்டை எனக்கு தொண்ணூறுகளின் ஒரு ஞாயிறு சென்னை வானொலியின் திரைகானம் தான் அறிமுகப்படுத்தியது. அந்த நேரத்து திண்டாட்டமான வயதும் மனதும் இந்தப் பாட்டுக்கு நெருக்கமாக இருப்பதாக உணர்ந்து கொண்டதாலோ என்னவோ மிகவும் பிடித்துப் போனது.
பள்ளிக்காலத்தில் தீவிரமாகப் பாட்டுக் கேட்டு வாழத் தலைப்பட்ட சூழலில் எங்களுக்கு முதல் தேர்வாக அமைந்தது அப்போது சுடச் சுட வந்து கிட்டியவை இசைஞானி இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல்கள். அதுவும் மனோ & சித்ரா கூட்டணி என்றால் கேட்கவே வேண்டாம்.
அதுவும் பூந்தோட்டக் காவல்காரன் படத்தில் வரும் "பாராமல் பார்த்த நெஞ்சம்" பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் மனசுக்குள்ளால் வெளிக் கிளம்பும்.
"ஒரு நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக" பாடலைக் கேட்ட காலமெல்லாம் "சிறகுகள் வாங்கி உறவெனும் தேரில் வெகு வெகு தூரம் போகலாம்" என்று காதலாகிக் கனிந்த காலங்கள்.
மனோவின் பாடல்களை வைத்துக் கொண்டே என் இளமைக் காலத்தின் ஒவ்வொரு கூறுகளையும் அசை போட முடியும். அவ்வளவு நெருக்கமான ஞாபகக் கிளப்பிகள் அவை.
என்னைப் போலவே இசைஞானியின் இசை அடிமை நண்பர் கலைச்செல்வனோடு காரில் ஊர் சுற்றும் போது அவர் பாட்டுக்கு எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன் என்று ஆரம்பிக்க, நான் பதிலுக்கு மனோவை எடுத்து விட
"ஐயா உங்களுக்கு மனோ எண்டால் லவ்ஸ்"
என்று கிண்டலடித்துச் சிரிப்பார்.
அவ்வளவுக்கு மனோ பாடிய பாடல்களில் நேசம் வரக் காரணம் ஒவ்வொரு பாடலுக்குக்குப் பின்னால் பள்ளிக்கால ஆட்டோகிராப் நினைவு ஏதாவது புதைக்கப்பட்டிருக்கும்.
பாடகர் மனோ இளையராஜாவிடம் நிறையப் பாடியதற்கு ஒரு காரணம், ராஜாவின் இசை வேகத்துக்குத் தீனி போட்ட ஏராளம் படங்களோடு அந்த வேகத்தோடு நச்சென்று சொல்வதைப் புரிந்து பாட்டுக் கட்டும் திறன் தான்.
மனோவின் ஆரம்ப காலத்துப் பாடல்களில் சங்கதிகளில் வெகு சிரத்தையாகக் கையாண்டு நுணுக்கமாகப் பேர் வாங்கியவை ஏராளம் அப்படியொன்று
“தேன்மொழி.....
எந்தன் தேன் மொழி
https://www.youtube.com/watch?v=DGBEFNPPtI8
தன் ஆரம்பப் பயணத்திலேயே ராஜாவிடம் நன் மாணக்கான் பெயர் பெற்ற பாட்டு.
இந்தப் பதிவுக்காகத் தயாரித்த புகைப்படக் கோவைக்காகத் தேர்ந்தெடுத்த படங்கள் பாடகர் மனோ குழுமத்தில் எடுக்கப்பட்டவை.
இன்று மனோவின் பிறந்த நாளில் இசைஞானி இளையராஜாவோடு இணைந்து கொண்ட வகையில் எனக்குப் பிடித்த பாடல்களின் திரட்டைப் பகிர்கிறேன்.
1. மீனம்மா மீனம்மா - ராஜாதி ராஜா
2. வா வா வா கண்ணா வா - வேலைக்காரன்
3. பாராமல் பார்த்த நெஞ்சம் - பூந்தோட்டக் காவல்காரன்
4. மதுரை மரிக்கொழுந்து வாசம் - எங்க ஊரு பாட்டுக்காரன்
5. வானத்துல வெள்ளி ரதம் - எங்க ஊரு மாப்பிள்ளை
6. மல்லியே சின்ன முல்லையே - பாண்டித்துரை
7. ஒரு போக்கிரி ராத்திரி பார்க்கிற பார்வை தான் - இது நம்ம பூமி
8. அருகமணி கருகமணி - மாப்பிள்ளை வந்தாச்சு
9. காதோரம் லோலாக்கு - சின்ன மாப்ளே
10. நிலாக்காயும் நேரம் சரணம் - செம்பருத்தி
11. ஆடிப்பட்டம் தேடிச் செந்நெல் வெத போட்டு - தென்மதுரை வைகை நதி (மைக்கேல் மதன காமராஜன் ரெக்கார்ட்டில் வந்தது)
12. அடிச்சேன் காதல் பரிசு - பொன்மனச் செல்வன்
13. வானில் விடிவெள்ளி - ஹானஸ்ட் ராஜ்
14. மாலை நிலவே - அன்புக் கட்டளை
15. ஓ ப்ரியா ப்ரியா - இதயத்தைத் திருடாதே
16. ஆத்தாடி ஏதோ ஆசைகள் - அன்புச் சின்னம்
17. நினைத்தது யாரோ - பாட்டுக்கு ஒரு தலைவன்
18. சித்திரை மாதத்து நிலவு வருது - பாடு நிலாவே
19. ஒரு நாள் நினைவிது - திருப்புமுனை
20. அன்பே நீ என்ன - பாண்டியன்
21.சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு - பாண்டி நாட்டுத்தங்கம்
22. அழகான மஞ்சப்புறா - எல்லாமே என் ராசாதான்
23. ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு - குரு சிஷ்யன்
24.நிக்கட்டுமா போகட்டுமா - பெரிய வீட்டுப் பண்ணக்காரன்
25. அடி பூங்குயிலே பூங்குயிலே - அரண்மனை கிளி
26. சித்திரத்துத் தேரே வா - நாடோடிப் பாட்டுக்காரன்
27. மலைக்கோவில் வாசலில் - வீரா
28. ஒரு மந்தாரப்பூ - சின்ன ஜமீன்
29. ஒரு மைனா மைனாக்குருவி - உழைப்பாளி
30. சின்ன ராசாவே - வால்டர் வெற்றிவேல்
31. சோலை இளங்குயில் - காவலுக்குக் கெட்டிக்காரன்
32. நிலவ நிலவ - காத்திருக்க நேரமில்லை
33. மணியே மணிக்குயிலே - நாடோடித் தென்றல்
34. வந்தாள் வந்தாள் ராஜகுமாரி - ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி
35. மருதாணி அரைச்சேனே - ராஜா கைய வச்சா
36. சிங்கார மானே தேனே - தாய் மொழி
37. சொல்லிவிடு வெள்ளி நிலவே - அமைதிப்படை
38. மானே மரகதமே - எங்க தம்பி
39. சத்தம் வராமல் - மை டியர் மார்த்தாண்டன்
40. தென்றல் காத்தே தென்றல் காத்தே - கும்பக்கரை தங்கய்யா
41. தண்ணீரிலே முகம் பார்க்கும் - மணிக்குயில்
42. வெட்டுக்கிளி வெட்டி வந்த வாசம் - பிரியங்கா
43. நினைக்காத நேரமில்லை - தங்கக்கிளி
44. கண்ணே இன்று கல்யாணக்கதை - ஆணழகன்
45. கேக்குதடி கூக்கூ கூ - கட்டுமரக்காரன்
46. நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன்
47. அடி அரைச்சு அரைச்சு - மகராசன்
48. பூங்காற்றே இது போதும் - படிச்ச புள்ள
49. பூத்தது பூந்தோப்பு - தங்க மனசுக்காரன்
50. விழியில் புதுக்கவிதை படித்தேன் - தீர்த்தக்கரையினிலே
51. அதோ மேக ஊர்வலம் - ஈரமான ரோஜாவே
52. சிங்காரப் பெண் ஒருத்தி - ஒருவர் வாழும் ஆலயம்
53. தேன்மொழி எந்தன் தேன்மொழி - சொல்லத் துடிக்குது மனசு
54. காவியம் பாடவா தென்றலே - இதயத்தைத் திருடாதே
55. மெளனமேன் மெளனமே - என் ஜீவன் பாடுது
56. ஓ ஜனனி என் ஸ்வரம் நீ - புதிய ராகம்
57. மலையாளக் கரையோரம் - ராஜாதி ராஜா
58. கல கலக்கும் மணியோசை - ஈரமான ரோஜாவே
59. ராசாத்தி மனசுல - ராசாவே உன்னை நம்பி
60. காதல் ராகமும் கன்னித் தமிழும் - இந்திரன் சந்திரன்
61. வண்ணச் சிந்து வந்து விளையாடும் - கோயில் காளை
62. இங்கே இறைவன் இன்னும் கலைஞன் - சார் ஐ லவ் யூ
63. பொன்மானே பொன்மானே - அன்புக் கட்டளை
64. பாடுமோ ஓவியம் - புதிய ராகம்
65. பூவான ஏட்டத் தொட்டு - பொன்மனச் செல்வன்
66. பாசமுள்ள பாண்டியரு - கேப்டன் பிரபாகரன்
67. ஆச்சி ஆச்சி - மனதில் உறுதி வேண்டும்
68. குடகு மலைக் காட்டில் வரும் - கரகாட்டக்காரன்
69. காதல் கிளியே - ஜல்லிக்கட்டு
70. ஓர் பூமாலை - இனிய உறவு பூத்தது
71. பாடுங்கள் பாட்டுப் பாடுங்கள் - பாடு நிலாவே
72. ஒரு உறவு அழைக்குது - கிருஷ்ணன் வந்தான்
73. அந்தியிலே வானம் - சின்னவர்
74. ஒரு நிலவு வந்தது - என்றும் அன்புடன்
75. மணிக்குயில் இசைக்குதடி - தங்கமனசுக்காரன்
76. கண்ணே என் கண்மணியே - கவிதை பாடும் அலைகள்
77. உந்தனின் பாடல் என்னை - ராக்காயி கோயில்
78. செண்பகமே செண்பகமே - எங்க ஊரு பாட்டுக்காரன்
79. வான் நிலா தேன் நிலா - கவிதை பாடும் அலைகள்
80. சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி - என்னப் பெத்த ராசா
கானா பிரபா
26.10.2021
Monday, October 25, 2021
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோன்றுதடி
Sunday, October 24, 2021
விடை பெற்ற இசையமைப்பாளர் இனியவன்
இன்று காலை இசையமைப்பாளர் இனியவன் இவ்வுலகை விட்டு மறைந்து போனார் என்ற சோகச் செய்தியை விதைத்தது நண்பர் கல்லாறு சதீஷ் Arulrasa Nageswaran அவர்களது ஃபேஸ்புக் இடுகை.
இசையமைப்பாளர் இனியவன் குறித்து முன்பும் சிலாகித்து எழுதியிருக்கின்றேன். அவரைத் திரையுலகம் வீரியமாகப் பயன்படுத்தியிருந்தால் தொண்ணூறுகளில் முக்கிய இசை ஆளுமையாக விளங்கியிருப்பார்.
இசையமைப்பாளர் இனியவன் அற்புதமான இசையாற்றல் கொண்டவர் என்பதை அவரின் “கெளரி மனோகரி” படம் பறையும்.
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது
அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா
இசை ஒன்றே .......
லயம் ஒன்றே .........
https://www.youtube.com/watch?v=v7msses-Bo4
சங்கீத சாகரம் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் உடன் பாடும். நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் இணைந்து பாடிய அழகான பாட்டு இது.
இதே படத்தில் “பார்த்த பார்வையில் என்னுள்ளம் என்ன பள்ளம் ஆனது” https://www.youtube.com/watch?v=9QjGwWZJak4
என்ற இன்னொரு அற்புதமான காதல் பாடலை எஸ்.ஜானகி & எஸ்.பி.பி பாடியிருக்கிறார்கள். இந்த இரண்டும் தொண்ணூறுகளின் பண்பலைகளைக் கலக்கியது. என் பங்குக்கு நானும் கொடுத்திருக்கிறேன் வானொலியில்.
“தங்கமே உந்தன் காதல் தன்னை
கண்கள் ஏன் மறைத்தது..
தாவணி போட்டு மூடி வைக்கும்
ஆசைதான் முளைத்தது....”
“இதயத்தில் உன்னை ஏற்றி வைத்து
என்றுமே வாழுவேன்
இமைகளால் உன்னை மூடிக் கொண்டு
இரவில் நான் தூங்குவேன்”
சரணத்தில் நோகாமல் பயணிக்கும் வித்தையிலேயே அப்போது வியக்க வைத்து இந்தப் பாடல் மேல் காதல் கொள்ள வைத்தார்.
சாஸ்திரிய சங்கீதத்தை அடி நாதமாகக் கொண்டு கெளரி மனோகரி படத்தில் இவ்விதம் அமைந்த பாடல்களோடு தியாகராஜர் கீர்த்தனையான “சங்கீத ஞானமு” https://www.youtube.com/watch?v=N3kDIQrYrLk பாடலை எஸ்.ஜானகிக்காகக் கொடுத்திருந்தார்.
இத்தகு ஆற்றல் மிகு இசையமைப்பாளர் தமிழ் சினிமாவில் அதிகம் ஆளுமைப்படவில்லையே என்ற ஏக்கம் என் போன்ற ரசிகர்களுக்கு எப்போதும் உண்டு.
கவிஞர் வைரமுத்துவோடு தொடர்ந்து பயணித்த இசையமைப்பாளராக இனியவன் விளங்கினார்.
அதில் மிகவும் பிரபலம் பூத்தது “கவிதையே பாடலாக” என்ற வைரமுத்துவின் கவிதைகள் பாடல்களாக இனியவன் இசையில் பூத்த போது.
அதிலும் புகழ் பூத்த பாடகர்கள் பலரை இணைத்திருக்கின்றார்.
https://www.youtube.com/watch?v=Rp1FK65KSNM
சுனாமிப் பேரவலம் நிகழ்ந்த போது அதைத் தொடர்ந்து வெளியான “வீழ மாட்டோம்” இசைத் தொகுப்பிலும் வைரமுத்துவின் பாடல்களுக்கு இனியவன் இசை வழங்கியிருந்தார்.
அதில் வீழ மாட்டோம் என்ற பாடல் புலம் பெயர் வானொலிகளில் வழி தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.
“ஜென்மம் நிறைந்தது”
https://www.youtube.com/watch?v=MG79HQDIDzM
சமீப ஆண்டுகளில் புலம் பெயர் தேசங்களில் மரணச் சடங்குகளில் அறிவிக்கப்படாத நிரந்தர இடம் பிடித்த கீதம் கூட வைரமுத்து வரிகளில் இனியவன் கொடுத்ததே.
இன்று இனியவனுக்கான விடை கொடுப்புப் பாடலாகவும் அமைந்தது பெரிய சோகம்.
https://www.youtube.com/watch?v=D7Cpl-z8o58
திரையிசையில் எத்தனையோ ஆளுமைகள், ஆனால் அதிஷ்டமும் நிறைந்தவராக இருக்க வேண்டும் என்ற துரதிஷ்டக் கணக்கில் அமிழ்ந்து போன நம் இசையமைப்பாளர் இனியவன் என்றென்றும் இசை ரசிகர் மனதில் வீற்றிருக்கட்டும்.
கானா பிரபா
24.10.2021
Saturday, October 23, 2021
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்....
“அல்லிப்பூவின் மகளே
கன்னித்தேனை தா ஹோய்....”
சில பாடல்களை நினைக்குந் தோறும் குறித்த பாடலின் இடை வரிக் கீற்றாக வெட்டி மறையும், அப்படித்தான் முன் சொன்ன சங்கதியும் இந்தப் பாட்டை நினைக்கையில் முன் வந்து நிற்கும்.
அந்த வரிகளை ஒப்புவிக்கும் போது எஸ்பிபியிடம் என்னவொரு குழைவு ஆகா
“ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்” பாடலைக் கேட்கும் போது
கண்மணியே பேசு
மெளனம் என்ன கூறு
https://www.youtube.com/watch?v=B1aC-9MmMEY
பாடலையும் கூடவே கேட்டு விட்டுப் போ என்று மனம் உந்தும்.
நியாயமாகப் பார்த்தால் இந்த “ரோஜா ஒன்று” பாடல் கூட கமல்ஹாசனுக்கான பட்டியலில் போய்ச் சேர வேண்டியது.
அந்த அளவுக்கு உணர்ச்சிப் பிரவாகமாக எஸ்பிபி இங்கேயும் கொடுத்திருப்பார்.
“மயக்கத்தில் தோய்ந்து
மடியின் மீது சாய்ந்து”
வரிகள் இன்னொரு முறை வரும் போது
மடியின்
மீது
சாய்ந்து
என்று அப்படியே வரிகளை மடித்து நிமிர்த்துவார்.
அது போலவே ரோஜா ஒன்று என்பதை ஆரம்பத்தில் இணைத்தும் பின் சங்கதியில்
ரோஜா
ஒன்று
என்று பிரித்தாண்டும் ஜாலம் காட்டுவார்.
எஸ்பிபி & எஸ்,ஜானகி கூட்டுப் பாடல்களில் தவிர்க்க முடியாத ரத்தினம் இந்தப் பாட்டு.
எண்பதுகளின் பாடல்கள் என்ற டெம்ப்ளேட்டில் கச்சிதமாக ஒட்டிப் பார்க்கும்.
“ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்” பாடலை எவ்வளவு தூரம் கொண்டாடுகிறார்கள் என்பதற்கு ஸ்மூலில் இருந்து யூடியூப் ஈறாக இறைந்து கிடக்கும் திடீர்ப் பாடகர்களே சாட்சி. அது தவிர இந்தப் பாடலை மீண்டும் காணொளியாக்கிச் செறிவானதொரு படைப்பாகக் கொடுத்திருக்கிறார்கள் இங்கே.
https://www.youtube.com/watch?v=yluZlQ0qUs8
இந்தப் பாடல் இடம்பெற்ற கொம்பேறி மூக்கன் படத்தை இயக்கிய ஏ.ஜகன்னாதனின் இன்னொரு படமான ஓ மானே மானே படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் இதே எஸ்பிபி & எஸ்.ஜானகி “ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது” https://www.youtube.com/watch?v=8BIpecchHk0 இன்னொரு பரிமாணத்தில் பாடியிருப்பார்கள். இந்த இரண்டு பாடல்களயும் எழுதியது கூட வைரமுத்து தான்.
இரண்டு பாடல்களிலும் இன்னொரு பொது ஒற்றுமை கிட்டார் வாத்தியத்தின் அபரிதமான பயன்பாடு.
“ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்” பாடலில் சம்பந்தா சம்பந்தமில்லாதது போலத் திடீரென்று தபேலாவும், புல்லாங்குழலும் பேசிக் கொள்ள அதற்கு விடை கொடுக்குமாற் போல ஒரு துள்ளல் இசையில் வரும் கிட்டார், அப்படியே ஒரு வயலின் குழுவினரிடம் சங்கமிக்கும் அழகியல் பிறக்கும் இரண்டாவது சரணத்தில். இந்தப் பாடல் ஒரு போதை மருந்து. கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
மயக்கத்தில் தோய்ந்து
மடியின் மீது சாய்ந்து
ரோஜா ஒன்று
முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும்
ஒன்றாய் இன்று சேரும்
https://www.youtube.com/watch?v=lhxjW2SzBSU