Pages

Sunday, August 31, 2014

யுவன் ஷங்கர் ராஜா கொடுத்ததில் பிடித்த ஐம்பது

வீட்டில் ஒரு பிள்ளையை பெரிதும் நம்பிக் கொண்டிருக்க, இன்னொரு பிள்ளை சத்தமில்லாமல் ஜெயித்துக் காட்டுவது தமிழ் சினிமாவின் மாமூல் கதைகளன் மட்டுமல்ல ராஜா வீட்டிலும் இதுதான் கதை. 

அம்மா கிரியேஷன்ஸ் சிவாவே இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவின் வருகையை அரவிந்தன் படம் மூலமாக வழியேற்படுத்திக் கொடுத்தார்.
ஆனால் யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களின் பரவலான அறிமுகத்தைப் பெற வசந்த் இயக்கத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார் படம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. தொடர்ந்து செல்வராகவனும் சினிமாவுக்கு வந்து சேர துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி என்று தொடர்ந்த இசை வெற்றிகளையும் கொடுத்தார் யுவன்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களில் ஒட்டுமொத்தமாக எல்லாப்பாடலும் சிறந்து விளங்கிய மிகச் சிறந்த இசைப்படைப்பு எது என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்வார்கள். அதில் 7ஜி ரெயின்போ காலனி பெருவாரியான வாக்குகளைப் பெறும். ஆனால் எனக்குத் தனிப்பட்ட ரீதியில் தீனா படத்தின் பாடல்கள் மீது தான் கொள்ளை ஆசை. யுவனோடு ஜோடி கட்டிய ஏ.ஆர்.முருகதாஸ் இற்கு இன்று வரை அதற்குப் பின்னால் ஒட்டுமொத்தப் பாடல்களும் சிறந்து விளங்கிய படம் வரவில்லை என்பேன்.

யுவனின் இசையுலக வெற்றிக்கு வஸந்த், செல்வராகவன் போன்ற இயக்குனர்களின் கையைப் பிடித்து இழுப்பார்கள். ஆனால் முன்னர் நான் ட்விட்டரில் சொன்னது போன்று யுவன் ஷங்கர் ராஜா பிரபலமாகப் பேசப்படும் படங்களை விட அதிக கவனத்தை ஈர்க்காத படங்களிலேயே அதிகம் சாதித்திருக்கிறார். ஆனால் அந்தப் பாடல்களைத் தேடிக் கேட்கும் பொறுமை அநேகருக்கு இல்லை. 

இளையராஜா காலத்துக்குப் பின்னர்  கூட்டணி ஆட்சி தான் இசைத்துறையில். அதிலும் தனித்து நின்று ஜெயிப்பதும், ( தகப்பனின் நிழல் படாமல் ) அவ்வளவு சுலபமில்லை. யுவனுக்கு அரவிந்தன் படம் எவ்வளவு முதல் சரிவைக் கொடுத்ததோ அது போலவே அவரின் இசைப்பயணத்தில் வெற்றியும் சறுக்கலும் மாறி வருகிறது. ஆனால் தகுந்த சந்தர்ப்பம் கிடைக்கும் போது அடித்து ஆடுவார். இன்றைய சூழலில் யுவனுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இசையமைப்பாளருக்குமே சீரான சகாசங்கள் கிடைப்பதில்லை.

யுவன் இசையமைத்த சில பாடல்களைக் கேட்கும் போது நம்பவே முடியாத அளவுக்கு மெட்டமைப்பும், இசைக்கோர்ப்பும் இருக்கும். இசை சம்பந்தமாக யுவனிடம் கேட்கும் கேள்விகளுக்கு அவரின் பதில்களைப் படித்துப் பாருங்கள் நிறையவே தெளிவிருக்கும். 
யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களில் என்னைக் கவர்ந்த ஐம்பது பாடல்களை இன்று அவரின் பிறந்த நாளில் கொடுக்கும் வாய்ப்புக்கிட்டியிருக்கிறது. இந்தப் பதிவே அஜித் மாதிரி எழுதினேன். ஹிஹி அதாவது நடந்து கொண்டே.
இந்தப் பட்டியல் எந்தத் தரவரிசையும் கொண்டிராது என் ஞாபக அடுக்குகளின் வெளிப்பாடு மட்டுமே.
1. நினைத்து நினைத்துப் பார்த்தேன் - 7G ரெயின்போ காலணி
2. சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல் - தீனா
3. யாரோ யாருக்கு - சென்னை 28
4. சின்னஞ்சிறுசுக மனசு - குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்
5. ஆனந்த யாழை மீட்டுகிறாள் - தங்க மீன்கள்
6. இரவா பகலா - பூவெல்லாம் கேட்டுப்பார்
7. வயது வா வா என்கிறது - துள்ளுவதோ இளமை
8. தொட்டு தொட்டு - காதல் கொண்டேன்
9. இதயம் இதயம் - பில்லா 2
10. தீப்பிடிக்க தீப்பிடிக்க - அறிந்தும் அறியாமலும்
11. மேற்கே மேற்கே - கண்ட நாள் முதல்
12. தாவணி போட்ட தீபாவளி - சண்டக்கோழி
13. காதல் வைத்து - தீபாவளி 
14. இதுவரை இல்லாத - கோவா
15. ஐய்யய்யோ - பருத்தி வீரன்
16. என் ஃபியூசும் போச்சு - ஆரம்பம்
17.  துளி துளி மழையாய் - பையா
18. என் அன்பே - மெளனம் பேசியதே
19. என் ஜன்னல் வந்த காற்று - தீராத விளையாட்டுப் பிள்ளை
20. இறகைப் போல - நான் மகான் அல்ல
21. பேசுகிறேன் - சத்தம் போடாதே
22. அடடா என் மீது - பதினாறு
23. என்ன என்ன ஆகிறேன் - காதல் சொல்ல வந்தேன்
24. சொல் பேச்சு - தில்லாலங்கடி
25. ஏதோ செய்கிறாய் - வாமனன்
26. மஞ்சக்காட்டு மைனா - மனதை திருடி விட்டாய்
27. முன்பனியா - நந்தா
28. ஈர நிலா - அரவிந்தன்
29. கொங்கு நாட்டு - வானவராயனும் வல்லவராயனும்
30. வானம் தூவும் - புன்னகை பூவே
31. ஏ நெஞ்சே - ஏப்ரல் மாதத்தில்
32. தீண்டி தீண்டி - பாலா
33. காதல் வளர்த்தேன் - மன்மதன்
34. தாஜ்மஹால் - கள்வனின் காதலி
35. எங்க ஏரியா - புதுப்பேட்டை
36. அரபி நாடே - தொட்டால் பூ மலரும்
37. ஆத்தாடி மனசு தான் - கழுகு
38. மெர்க்குரி பூவே - புதிய கீதை
39. காதல் என்பது - ஒரு கல்லூரியின் கதை
40. ஒரு கல் ஒரு கண்ணாடி - சிவா மனசுல சக்தி
41. கோடானு கோடி - சரோஜா
42. அலைபாயும் நெஞ்சிலே - ஆதலால் காதல் செய்வீர்
43. ராசாத்தி போல - அவன் இவன்
44. நீ நான் - மங்காத்தா
45. வெண்மேகம் - யாரடி நீ மோகினி
46. மச்சான் மச்சான் - சிலம்பாட்டம்
47. இரு கண்கள் சொல்லும்  - காதல் சாம்ராஜ்யம்
48. வானத்தையும் மேகத்தையும் - மச்சக்காரன்
49. பறவையே பறவையே - கற்றது தமிழ்
50. நட்பின் கதைகளை - காதல் 2 கல்யாணம்



Wednesday, August 27, 2014

பாடல் தந்த சுகம் : நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே

"ஒரு பாட்டுக்கு மெட்டமைத்து விட்டு, வார்த்தைகளால் அந்த டியூன் மேல நடந்து பார்த்து சரி பார்ப்பது இசைஞானி இளையராஜாவின் வழக்கம்" இந்தப் பாடலை எழுதிய கவிஞர் மு.மேத்தா இப்படிச் சொல்லியிருந்தார். கூடவே "இந்தப் பாடலின் ஆரம்ப வரிகளான "நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே" ஐயும் கொடுத்தது இளையராஜா தான். அவரின் இசையில் வெளிவந்த பல பாடல்களின் ஆரம்ப வரிகளின் சொந்தக்காரரும் அவர் தான் என்று சொல்லி வைத்தார் மேத்தா.

"நிக்கட்டுமா போகட்டுமா" பாடல் சென்னை வானொலி எனக்கு அறிமுகப்படுத்திய இன்னொரு பாடல். விமானக் குண்டு வீச்சுகள் உச்சம் பெற்ற போர்க்காலங்களில் சைக்கிளின் டைனமோவைச் சுழற்றி மின் பிறப்பாக்கி, அதை வானொலிப்பெட்டிக்குள் செருகிப் பாட்டுக் கேட்ட சிரம காலத்தில் கிட்டிய சிகரப் பாட்டுகளில் ஒன்று என்பதாலோ என்னமோ இன்றும் என் பிரிய நாய்க்குட்டி போல எனக்கு நெருக்கமான பாடல்களில் இதுவுமொன்று.

நாடக நடிகராக வேஷம் கட்டிய காலத்தில் இருந்தே ராஜாவுடன் ஒட்டுறவாக இருந்த சங்கிலி முருகன் தயாரித்த மீனாட்சி ஆட்ஸ் நிறுவனத்தின் படங்களின் பாடல்களுக்கு ஒரு தனிக்கவனம் இருக்குமாற் போல இருக்கும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்று தான் "பெரிய வீட்டுப் பண்ணக்காரன்".
கார்த்திக், கனகா  நடித்த இந்தப் படத்தில் " மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ" பட்சமுள்ள பாட்டை மறக்க முடியுமா?

மு.மேத்தா "நிக்கட்டுமா போகட்டுமா  நீலக்கருங்குயிலே" என்று தொடங்கும் இந்தப் பாடலின் வரிகளை அவ்வளவு உன்னிப்பாகக் கவனித்ததில்லை அப்போதெல்லாம். ஆனால் பாடலை நேசிக்க ஆரம்பிக்கக் காரணமான இசையில் மூழ்கித் திளைத்த பிறகு அடுத்தது என்ன என்று வரும் போது வரிகளையும் அரவணைக்க வைத்து விடும். அப்படி ஒன்றுதான் இது.


ஓடையில் நான் அமர்ந்தேன் 
அதில் என் முகம் பார்த்திருந்தேன்
ஓடையில் பார்த்த முகம் 
அது உன் முகம் ஆனதென்ன
வாடையில் வாடிடும் பூவினைப் போல்
என் நெஞ்சமும் ஆனதென்ன

என்று காதலி கேட்க

தேரடி வீதியிலே ஒரு தோரணம் நான் தொடுத்தேன்
தோரண வாசலிலே ஒரு தோழியைக் கைப்பிடித்தேன்
பிடித்த கரம் இணைந்திடுமா இணைந்திடும் நாள் வருமா

என்று காதலன் தொடர்வான். பாடலின் முதல் சரணம் காதலர்களுக்கிடையிலான கேள்விக்கணைகளில் அவர்களின் நேசம் தான் தொக்கு நிற்கும்.
இப்படியான எளிமையான வரிகளால் நடை பழகிய மு.மேத்தாவைத் தன் பிரிய வட்டத்தில் ராஜா வைத்திருப்பதில் சந்தேகமே எழாது. அந்தச் சூழலுக்கேற்பத் தன்னை இறக்கிக் காட்சிக் களத்தில் எளிமையை வரிகளாக்கி, மெட்டுப் பாதையில் நிதான நடை போட்டால் அந்தப் பாதை போட்டவருக்கு வேறென்ன திருப்தி வேண்டும்.

இந்தப் பாடலுக்கும் சரி, மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ என்ற சக பாடலிலும் சரி நுரை தள்ளும் பிரவாகத்தோடு கோரஸ் குரல்களின் ஆர்ப்பரிப்பைக் கேட்கும் சுகானுபவம் சொல்லில் அடங்காது.

"நிக்கட்டுமா போகட்டுமா" என்ற இந்தப் பாடலை நான் இசைஞானியின் கோரஸ் குரல்கள் போட்டியில் http://radiospathy.wordpress.com/2014/04/12/rajachorusquiz47_48/ கொடுத்த போது போட்டியாளராக வந்து சிறப்பித்த உமா கிருஷ் இந்தப் பாடல் குறித்த சிலாகிப்பை

இந்தப் பாட்டும் மதுரை,தேனி பக்கம் எடுக்கப்பட்ட ஒன்றுதான்.மலை பின்னணியில்தங்கக் கோபுரம் தெரிய ஆடுவது இயற்கை எழில் கொஞ்சும் அழகர் கோவில். இந்தப் படத்தில் வரும் பல்லாக்குக் குதிரையில பாடல் தான் இன்றளவும் மீனாட்சி பவனி வரும் பொழுது சும்மா அதிரும் ஸ்பீகர்ல :)அந்தப் பாடலில் கார்த்திக் அணிந்திருக்கும் கெட் அப் கள்ளழகர் வேடத்தை முன் மாதிரியாகக் கொண்டது .அதுல பெட்டி சுமந்து வருவது போல இன்றளவும் பெட்டியில் அம்மனை வைத்துக் கும்பிடும் கிராமத்திற்கு வருடா வருடம் சிவராத்திரிக்கு நான் செல்வதுண்டு .அப்படியே மண் மணத்தை படம் பிடித்த படங்களும் பாடல்களும் இவை எல்லாம்.அதனால் எனக்கு மிகப் பிடித்தவை.

இப்படிப் பகிர்ந்திருந்தார். இப்படியான இசை ரசனைகளைக் கேட்டு ரசிப்பதற்காகவே எத்தனை ஆயிரம் போட்டியும் வைக்கலாம் போல.

நான் அடிக்கடி நினைப்பதுண்டு,  தமிழகம் இன்னொரு வகையில் புண்ணியம் பெற்றிருக்கின்றது. எத்தனை எத்தனை ஆயிரம் பாடல்கள் உருப்பெற்ற போது அந்தப் பாடல்களின் காட்சி வடிவத்தில் தமிழகத்து நிலமெல்லாம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பாக்கியம் பெற்றிருக்கின்றது. அதிலும் குறிப்பாகக் கிராமிய மணம் கமழும் இம்மாதிரியான பாடல்களை எத்தனை ஆண்டுகள் கடந்தும் அந்த மண் மணத்தோடு சேமித்து வைத்திருக்கின்றது பாருங்கள்.


துல்லிய இசைவடிவத்தோடு நான் இட்ட யூடியூப் பகிர்வு

https://www.youtube.com/watch?v=R_53xz-z34Y&feature=youtu.be

காட்சிப்பகிர்வோடு இந்தப் பாடல்

https://www.youtube.com/watch?v=kCeOlgAokjw



Monday, August 18, 2014

சங்கீத சாகரம் கே.ஜே.ஜேசுதாஸ் பேசுகிறார்

சிட்னியில் இசை நிகழ்ச்சி படைக்க வருகை தரும் இசையுலக ஜாம்பவான், பாடகர் டாக்டர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களை நமது ஆஸி தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தானம் (ATBC) வானொலி சார்பில் பேட்டி காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

இதோ அந்தப் பேட்டியின் ஒலி வடிவம்



Download பண்ணிக் கேட்க

என்னுடைய வானொலி வாழ்வில் இன்னொரு மறக்கமுடியாத தருணம் அது. பேட்டி முடியும் போது "பிரபாங்கிற பேரைக் கேட்கும் போது சந்தோஷமா இருக்கு ஏன்னா என் மனைவி பேரும் பிரபா ஆச்சே" என்றார் சிரித்துக் கொண்டே.

வானொலிப் பேட்டிக்காக நேற்று நான் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களை அழைக்க நினைத்த போது கொஞ்சம் தயக்கத்தோடு தான் தொலைபேசியை அழைத்தேன். ஆனால் "ச்சொல்லுங்கோ ப்ரபா எப்பிடி இருக்கீங்க? பேட்டி அஞ்சு மணிக்குத் தானே நான் தயாரா உட்கார்ந்திருப்பேன்" என்ற போது என் மனதில் இன்னொரு படி உயர்ந்து நின்றார். நிறைகுடம் ஆச்சே.
சமீபகாலமாக இளம் பாடகர்கள் ஆஸி மண்ணுக்க் வரும்போது அவர்கள் செய்யும் இசை நிகழ்ச்சிகளுக்காக சிறப்புப் பேட்டிகளைச் செய்யும் போது சிலர் கொடுத்த அலும்பில் அசதியாகியிருந்த என் மனதுக்கு ஒத்தடமாக இருந்தது கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களுடனான உரையாடல்.

வானொலிப் பேட்டியில் சேர்த்துக் கொண்ட கேள்விகள் சிலவற்றை இங்கே தருகின்றேன். விரைவில் அந்தப் பேட்டியை ஒலி வடிவில் பகிர்கின்றேன்.

இசை உலகில் ஒரு நீண்ட வரலாற்றைச் சுமந்து நமக்கு முன்னால் இருக்கும் உங்களைப் பார்ப்பதே நமக்குப் பெரும் தவம், மீண்டும் ஆஸ்திரேலிய ரசிகர்களை நீங்கள் சந்திக்க வருகின்றீர்கள் என்பது எங்களுக்கெல்லாம் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஜேசுதாஸ் அவர்களின் பாடல்களைக் கேட்கும் போது மனதில் அமைதி பிறக்கின்றது, சோகப்பாடல்களைக் கேட்கும் பொது எம்மை அறியாமல் அழுதுவிடுகின்றோம் இப்படியெல்லாம் ரசிகர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம் இந்த மாதிரி அனுபவங்களை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

நீங்கள் நேசிக்கின்ற சாஸ்திரீய சங்கீதத்தை மகத்துவம் செய்து வந்த படங்களில் மலையாளத்தில் பரதம் உள்ளிட்ட ஏராளம் படங்கள், தமிழில் அபூர்வ ராகங்கள், சிந்து பைரவி தெலுங்கில் மேக சந்தேசம் போன்ற படங்கள் கிட்டிய போது உங்கள் உணர்வு எப்படி இருந்தது?

சினிமாவில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்ற போதும் சாஸ்திரீய சங்கீதமேடையை நீங்க விட்டுக் கொடுத்ததே இல்லை இசைக்கலைஞராக இந்த இரண்டு தளங்களிலும் இயங்குவதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

ஹரிவராசனம் என்ற பாடலைப் பாடும் போது நீங்க பயபக்தியோடு விரதமிருந்து பாடியதாக அறிகின்றோம். ஐயப்ப பக்தர்கள் என்ற அடையாளம் தாண்டி அந்தப் பாடல் எல்லா இசை ரசிகர்களுக்கும் ஒரு தெய்வீகச் சூழலுக்கு இழுத்துச் செல்லும், அந்தப் பாடல் பாடிய அனுபவம்?

திரையுலகில் ஐம்பது ஆண்டுகளைக் கடந்த இசைப்பயணத்தின் கெளரவ நிகழ்வில் இசைஞானி இளையராஜா வந்து கலந்து சிறப்புச் சேர்த்தார், திரையிசையில் இளையராஜாவின் பங்களிப்பு குறித்து உங்கள் பார்வை?

சாஸ்திரீய சங்கீதம் தழுவிய பாடல்களைத் தவிர நிறைய மேற்கத்தேய பாடல்களை இளையராஜா கொடுத்திருக்கிறார். குறிப்பாக ஆரம்ப காலத்தில் வச்ச பார்வை தீராதடி போன்ற பாடல்களில் ஆரம்பித்தது அந்த மாதிரிப் பாடல்கள் கிடைத்தபோது எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?

வடக்கும் நாதன் படத்தில் கங்கே என்ற பாடலை நீங்கள் பாடிய அந்தக் கணத்தை திரையில் கண்ட போது கண்கள் கலங்கியது உங்க ஆத்ம நண்பர் ரவீந்திரனை நினைத்துக் கொண்டேன் அப்போது, இசையமைப்பாளராக அவர் இயங்கியபோது உங்க அனுபவம்?

ரவீந்திரன் மாஸ்டர் குறித்து நிறையப் பேசினார் ஆசை தீர. குறிப்பாக கங்கே பாடலின் உருவாக்கம் பற்றியும்.


இன்று காதலிக்க நேரமில்லை படம் வெளிவந்து ஐம்பது ஆண்டுகளைக் கொண்டாடும் நிகழ்வுக்கு திடீர் அழைப்பு வந்ததாக் குறிப்பிட்டு அந்தப் படத்தின் நினைவுகளையும் பகிர்ந்து "என்ன பார்வை உந்தன் பார்வை" போன்ற பாடல்களையும் பாடி நிறைவு செய்துகொண்டார் பெருமதிப்புக்குரிய கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள்.

Sunday, August 17, 2014

பாடகர் விஜய் ஜேசுதாஸ் வழங்கிய வானொலிப் பேட்டி

சிட்னியில் இசை நிகழ்ச்சி படைக்க வருகை தரும் பாடகர் விஜய் ஜேசுதாஸ் அவர்களை நமது ஆஸி தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தானம் (ATBC) வானொலி சார்பில் கண்ட ஒலிப்பேட்டியினை இங்கே பகிர்கின்றேன்.

இதோ அந்தப் பேட்டியின் ஒலி வடிவம்



Download பண்ணிக் கேட்க

பேட்டியில் இடம்பெற்ற சில கேள்விகள்

சினிமாவில் வாரிசுகள் ஜெயிப்பது சவாலான காரியம் ஆனால் உங்களுக்கு என்று தனி இடம் கிடைச்சிருக்கு இதை எப்படிப் பார்க்கிறீங்க?


உங்க அப்பா மிகப்பெரும் பாடகர் என்பதோடு பாடும்போது எந்த சமரசமும் செய்யக்கூடாதுன்னு பேட்டிகளிலேயே சொல்லுமளவுக்கு கண்டிப்பானவர் பாடகரா நீஙக் சினிமாவுக்கு வந்ததை எப்படி ஆரம்பத்தில் எடுத்துக் கொண்டார் இப்போ உங்க வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறார்?

சமீபத்தில் மெமரிஸ் படத்தில் திரையும் பாடலுக்கு பெரும் வரவேற்பு கிட்டியிருக்கிறது அந்தப் பாடல் பாடிய அனுபவம் பற்றிச் சொல்லுங்களேன்

நீங்க பாட ஆரம்பிச்சு குறுகிய காலத்தில் இசைஞானி இளையராஜாவிடம் பாடியிருக்கீங்க ராஜா சார் உடன் பணியாற்றிய அனுபவத்தை அறிய ஆவல்

சிவாஜி திரைப்படம் வழியாக ரஹ்மான் உங்களுக்கு ஒரு அறிமுகத்தைக் கொடுத்திருந்தார் அதன்பின்னான வாய்ப்புகள் பற்றி சொல்லுங்களேன்?

தாவணி போட்ட தீபாவளின்னு மெலடி பாடல்களையும் பாடுறீங்க, திடீர்னு மாமா மாமான்னு டப்பாங்குத்துப் பாட்டிலும் கலக்குறீங்க உங்களுக்கு எந்த மாதிரிப்பாடல்கள் பாடுவது மன நிறைவைக் கொடுக்குது?

மலையாளத்தில் உங்க அப்பா ஜேசுதாஸ் ஐ ஆண்டவனின் இசைத்தூதுவரா போற்றிப் பாராட்டும் சூழலில் உங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே நல்ல பல பாடல்கள் கிட்டியிருக்கு குறிப்பாக அங்கே பெரும் இசையமைப்பாளர் ஜெயச்சந்திரன் இசையில் உங்களோடு சிட்னி வரும் ஸ்வேதாவோடு பாடிய கோலக்குழல் கேட்டோ அந்தப் பாடலுக்கு அப்போது விருது எல்லாம் கிடைச்சிருக்கு ஜெயச்சந்திரன் எப்படி வேலை வாங்குவார்?


உங்க அப்பா கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் சாஸ்திரீய சங்கீத மேடைக்கும் சரி சமமா பங்கு வச்சிருக்கிறார் அந்தத் துறையிலும் மேடை ஏறணும்கிற ஆவல் இருக்கா?