Pages

Thursday, May 25, 2023

பாடலாசிரியர் நா.காமராசன் ❤️ துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ


தமிழ்ப் புதுக்கவிதையின் முன்னோடி இயக்கக்காரர், மரபுக் கவிதையில் வளர்ந்து வந்தவர் புது மரபையும் உள்வாங்கிக் கவி படித்தவர் நா.காமராசன் அவர்களின் ஐந்தாண்டு நினைவு தினம் 24.05.2023 ஆகும்.

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடலாசிரியர் என்ற சிறப்பையும் தாங்கியவர் நா.காமராசன் அவர்கள்.

கனவுகளே ஆயிரம் கனவுகளே

கனவுகளே ஆயிரம் கனவுகளே

காதல் தேவனின் தூதர்களே

என் கண்மணியை இங்கு வரச் சொல்லுங்கள்

கொஞ்சம் வரச் சொல்லுங்கள்

https://www.youtube.com/watch?v=SnIlQowzIa4

இப்படியாக “நீதிக்குத் தலைவணங்கு” படத்தில் தொடங்கி, “போய் வா நதியலையே” (பல்லாண்டு வாழ்க), “தொட்ட இடமெல்லாம்” (இதயக்கனி),”இதயத்தில் இருந்து” (இன்று போல் என்றும் வாழ்க), “புரியாததைப் புரிய வைக்கும்” ( நவரத்தினம்), “தொட்ட இடமெல்லாம் “ ( இதயக் கனி) என்று எம்.ஜி.ஆரின் ஒரே படத்தில் இடம்பிடித்த பாடலாசிரியர்களில் ஒருவராக அமர்ந்தவர்.

இசைஞானி இளையராஜா தன் இசையில் சீராட்டிய பாடலாசிரியர்களில் இவரும் ஒருவர் என்பதோடு 2014 இல் “கவிஞர் வாலி” விருது நிகழ்வில் கலந்து சிறப்பித்து இவருக்கான அந்த விருதையும் அளித்துச் சிறப்பித்தார்.

இசைஞானி இளையராஜா இசையில் 58 பாடல்களை எழுதி அளித்திருக்கும் நா.காமராசன் வரிகளில் அமைந்த பாடல்களில் புகழ் பூத்தவையை பொறுக்க உதவியது சகோதரர் அன்பு தொகுத்த இசைஞானி பாடல் திரட்டு, அதிலிருந்து தேர்ந்தெடுத்தவை.

1. வெளக்கு வச்ச நேரத்துலே – முந்தானை முடிச்சு

https://www.youtube.com/watch?v=jKCdeWecKes

2. அடுக்கு மல்லிகை – தங்கமகன்

https://www.youtube.com/watch?v=cY_zHt4qWdM

3. ஓ மானே மானே – வெள்ளை ரோஜா

https://www.youtube.com/watch?v=KgOgyuIOUd0

4. முத்துமணிச் சுடரே வா – அன்புள்ள ரஜினிகாந்த்

https://www.youtube.com/watch?v=51N8_swDzLc

5. தெற்குத் தெரு மச்சானே – இங்கேயும் ஒரு கங்கை

https://www.youtube.com/watch?v=9mARPaSy5Ak

6. கண்ணுக்குள்ளே யாரோ – கை கொடுக்கும் கை

https://www.youtube.com/watch?v=RXXQM-g2sl0

7. வெண்ணிலா ஓடுது – நாளை உனது நாள்

https://www.youtube.com/watch?v=YNX2cOlBF_s

8. பாடும் வானம்பாடி – நான் பாடும் பாடல்

https://www.youtube.com/watch?v=ZJHjnYc8h2U

9. சிட்டுக்குச் செல்லச் சிட்டுக்கு – நல்லவனுக்கு நல்லவன்

https://www.youtube.com/watch?v=9IX3ps0Yob4

10. நானே ராஜா – நீங்கள் கேட்டவை

https://www.youtube.com/watch?v=fU3ae-huCIU

11. ஓ தேவன் கோவில் – ஓ மானே மானே

https://www.youtube.com/watch?v=bfarKJ_3vJA

12. வெள்ளி நிலா பதுமை – அமுத கானம்

https://www.youtube.com/watch?v=qcHOHLrqYro

13. பாட்டுத்தலைவன் பாடினால் – இதயக் கோவில்

https://www.youtube.com/watch?v=MLTUKKECcls

14. வானிலே தேனிலா – காக்கிச் சட்டை

https://www.youtube.com/watch?v=Qr_Lr4Dt-oo

15. மானே தேனே கட்டிப்புடி – உதய கீதம்

https://www.youtube.com/watch?v=JYz2Nbrvvd0

16. கானலுக்குள் மீன் பிடித்தேன் – காதல் பரிசு

https://www.youtube.com/watch?v=QiHZdSG_pFQ

17. துப்பாக்கி கையில் எடுத்து – கோடை மழை

https://www.youtube.com/watch?v=y-XB6mPgrg0

18. கண்ணனைக் காண்பாயா – மனிதனின் மறுபக்கம்

https://www.youtube.com/watch?v=S0WIpg-paBw

19. மந்திரப் புன்னகையோ – மந்திரப்புன்னகை

https://www.youtube.com/watch?v=XZo1pisb43w

20. பவள மல்லிகை – மந்திரப்புன்னகை

https://www.youtube.com/watch?v=aJ5qLjx82LU

21. நான் காதலில் புதுப்பாடகன் – மந்திரப்புன்னகை

https://www.youtube.com/watch?v=1CkpLyqyybE

22. கண்ணன் வந்து பாடுகின்றான் – ரெட்டை வால் குருவி

https://www.youtube.com/watch?v=9QKSaElfwQM

23. தேன்மொழி அன்புத் தேன்மொழி – சொல்லத் துடிக்குது மனசு

https://www.youtube.com/watch?v=DGBEFNPPtI8

24. தோப்போரம் தொட்டிக் கட்டி – எங்க ஊரு காவக்காரன்

https://www.youtube.com/watch?v=EzqK8QU6Q1c

25. ஒரு தேவதை வந்தது – நான் சொன்னதே சட்டம்

https://www.youtube.com/watch?v=1lhAlc3aJBw

26. சின்னஞ்சிறு கிளியே – படிச்ச புள்ள

https://www.youtube.com/watch?v=Mb2S36C_jfA

27. வாசமுள்ள வெட்டி வேரு – அம்மன் கோவில் திருவிழா

https://www.youtube.com/watch?v=WvWBvGOKK5k

28. இந்திர சுந்தரியே – என் அருகில் நீ இருந்தால்

https://www.youtube.com/watch?v=Uf3Ff4jjvTE

29. நிலவே நீ வர வேண்டும் – என் அருகில் நீ இருந்தால்

https://www.youtube.com/watch?v=zlzH2_K4X64

30. உதயம் நீயே – என் அருகில் நீ இருந்தால்

https://www.youtube.com/watch?v=0FeWUz7WvJM

31. ஓ உன்னாலே நான் – என் அருகில் நீ இருந்தால்

https://www.youtube.com/watch?v=HQka8qaX1Bg

32. சிங்காரச் செல்வங்களே – மருது பாண்டி

https://www.youtube.com/watch?v=TlAbvhfYNe4

33. மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ – பெரிய வீட்டுப் பண்ணக்காரன்

https://www.youtube.com/watch?v=XtPGd9adRQg

34. வானம்பாடி பாடும் நேரம் – சார் ஐ லவ் யூ

https://www.youtube.com/watch?v=TGZyt0C28cc

35. வானத்தில் இருந்து – வெள்ளையத் தேவன்

https://www.youtube.com/watch?v=gYYVP3X8o28

36. ஒரு மாலைச்சந்திரன் – உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்

https://www.youtube.com/watch?v=9ISU6tvioKI

37. சித்திரத்துத் தேரே வா – நாடோடிப் பாட்டுக்காரன்

https://www.youtube.com/watch?v=tivOmNNgNgU

கானா பிரபா

25.05.2023


Monday, May 22, 2023

ஓ தேவன் கோவில் வீணை பாடும் இசை கேட்கும் 💚❤️🧡🎸


ராஜா பாடல் க்விஸ் ஐ மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கில் இந்த வாரத்துக்கான பாடல்களை நேற்றுத் தொகுத்துக் கொண்டிருந்த போது அடடா இந்தப் பாடலைக் கேட்டு எவ்வளவு நாளாச்சு என்று உச்சுக் கொட்டியவாறே ரசித்தேன். என்னவொரு அற்புதமான ஆலாபனையோடு ஜானகிம்மா குரல் மிதந்து வர, அப்படியே ஏந்திப் பாடும் எஸ்.பி.பியும் இணைய, நீண்ட நாட்களுக்குப் பின் கேட்ட அந்த சுகம் ஆகா.

இனிமேல் தான் வேடிக்கை 😀
நேற்று மாலை பின்னணி விபரங்களைப் போட்டியின் க்ளூவாகத் திரட்டும் போதுதான் அவதானித்தேன், பாடல் இடம்பெற்ற “ஓ மானே மானே” படத்தைத் தயாரித்தது ஃபிலிம்கோ.

நேற்றுக் காலையில் தான் ஃபிலிம்கோவின் தயாரிப்பு நிர்வாகி கஃபாரின் பேட்டியை சாய் வித் சித்ராவில் https://www.youtube.com/watch?v=_lFei1PSXDs பார்த்திருந்தேன். அதில் அவர் பிலிம்கோ சார்பில் “வெள்ளை ரோஜா” படம் உருவான கதையைச் சொல்லியிருந்தார். ஆனால் “ஓ மானே மானே” படம் பற்றிய பேச்சு வரச் சம்பந்தம் வாய்க்கவில்லை.
இந்த இடத்தில் தான் ஒரு முடிச்சுப் போட்டுப் பார்த்தேன்.
“வெள்ளை ரோஜா” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் ஏ.ஜகந்நாதன் அவர்களுக்கே இன்னொரு படத்தையும் கொடுத்திருக்கிறார்கள் இந்த ஃபிலிம்கோ நிறுவனத்தினர்.
அத்தோடு “வெள்ளை ரோஜா” படத்தில் இடம்பெற்ற புகழ் பூத்த பாடலான “ஓ மானே மானே உன்னைத்தானே” பாடலின் ஆரம்ப வரிகளையே அந்த இன்னொரு படத்தின் தலைப்பாக்கி இருக்கிறார்கள். அத்தோடு எப்படி வெள்ளை ரோஜா படத்துக்கு சிவாஜியை ஒப்பந்தம் செய்ய உறுதுணையாக இருந்தாரோ அதே வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன் தான் “ஓ மானே மானே” படத்தின் வசனமும்.

அத்தோடு கஃபாரின் பேட்டியில் ஃபிலிம்கோ நிறுவனம் தமது தயாரிப்புப் பணியை நிறுத்தியது குறித்த நிறுவனத்தின் மதக் கொள்கைக்கு எதிராக இருந்ததால் என்று சொல்லியிருந்தார். அது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அதுதான் முழுக்காரணமாக இருக்க வாய்ப்பில்லை.

தொடர்ந்து உயிருள்ளவரை உஷா, வெள்ளை ரோஜா, நீங்கள் கேட்டவை என்று வெற்றிப் படங்களை அளித்த இந்த நிறுவனத்தின் சறுக்கலில் ஒன்று “ஓ மானே மானே” படம், இது வெளிவந்த சுவடே பலருக்குத் தெரியாது. “பொன்மானைத் தேடுதே” பாடலை மோகனுக்காகக் கமல்ஹாசன் பாடியது என்ற புண்ணியத்தில் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.
அதோடு பிலிம்கோவின் அனுசரணையில் கஃபாரும் இன்னொரு தயாரிப்பு நிர்வாகியும் தயாரித்து ரம்யா கிருஷ்ணன் அறிமுகமாகிய “வெள்ளை மனசு" தோல்வி. “ரெட்டை வால் குருவி" முதலுக்கு மோசமில்லை.
அதை விட ஆகப்பெரிய சறுக்கல் என்னவெனில் “மை டியர் குட்டிச்சாத்தான்" 3D படத்தைப் பார்த்துச் சூடு போட்டுக் கொண்ட கதையாக பிலிம்கோவின் 3D படமான “தங்க மாமா” கூட எடுபடவில்லை. அந்தக் காலத்தில் அது பெரும் பொருட்செலவு பிடித்த படமாக இருந்திருக்கும்.

அத்தோடு இன்னொரு முடிச்சு என்னவென்றால், “ஓ மானே மானே உன்னைத்தானே” பாடலை எழுதிய பாடலாசிரியர் நா.காமராசனையே “ஓ மானே மானே” படத்தின் இந்த “ஓ தேவன் கோவில்" பாடலையும் எழுத வைத்து அழகு பார்த்திருக்கிறார்கள்.
ஒரு பேட்டியில் சொல்லாத கதை எப்படி நம்முடைய எண்ண அலையை உரசிப் பார்த்திருக்கிறது என்று நினைத்து ஆச்சரியப்பட்டுப் போனேன்.

பாட்டைக் கேட்டுப் பாருங்கள் நீங்களும் சொக்கிப் போவீர்கள்

ஓ தேவன்
கோவில் வீணை
பாடும் இசை கேட்கும்
காதல் சுகம் தேடும்

https://www.youtube.com/watch?v=bfarKJ_3vJA 

கானா பிரபா

Saturday, May 20, 2023

ராசாக்கண்ணு ❤️

உச்சிக்குள்ளே 

கிடந்த சனம்

கோணிச் சாக்கிலே 

சுருண்ட சனம்

பஞ்சம் பசி 

பார்த்த சனம்

படையிருந்தும் 

பயந்த சனம்

💔

முன்னிரவை எட்டிப் பிடிக்கும் நேரத்தில் இந்தப் பாட்டு வந்து சேந்தது இந்த வாரத்தின் ஒட்டு மொத்த மனநிலையையும் நாடி பிடித்து, தோள் பற்றி விசாரிப்பது போல இருந்தது.

தோற்றுப் போன சனங்களின் குரல் எங்கு ஒலித்தாலும் அது நம்முடைய குரலாகவே மாறிப் போய் விடுகிறது.

இது வெறும் பாடலல்ல, ஒப்பாரிக் கூப்பாடும் அல்ல. அடி மனசு எழுந்து வந்து பேசும் சாட்சியம்.

என்னதான் மகிழ்ச்சிப் படுக்கைக்கு இழுத்து வர முயன்றாலும், அடி மன ஆளத்தில் மாறாப் புண் இலிருந்து எழும் வலி இது.

காலை எழுந்து வந்து காணொளியில் உற்றுப் பார்த்துக் கொண்டேன் இங்கே பதிவு செய்யப்பட்டோரின் அங்க அசைவுகளை.

சனங்களின் கலைஞன் எங்களைச் சிரிக்க வைத்தான். அவன் ஓயக் கூடாது. அவன் ஒரு சுயம்பு.

அந்த செப்பில் படிந்த உப்பு கழுவப்பட்டிருக்கிறது.

வடிவேலு என்ற கலைஞன் இனி ஒரு தலை சிறந்த குணச்சித்திரமாக அடையாளப்படுத்த, இன்னும் இரு தசாப்தமாவது சுற்ற இந்த மாமன்னன் ஒரு திறவு கோலாகட்டும்.

தன் உடல் மொழியில் மின்னிய பரிமாணங்கள் இன்று முன்னெப்போதுமில்லாத பாடகன் வடிவேலுவிலும் மிளிர்கிறது.

“மலையிலே தான் 

  தீப்பிடிக்குது

  ராசா

  என் மனசுக்குள்ளே 

  வெடிவெடிக்குது 

   ராசா”

வடிவேலுவைக் காணவில்லை அங்கே. கொண்டு வரப் போகும் அந்தப் படைப்பு எழுந்து நின்று பாடுமாற் போல.

தின்னேலிப் பாசையில திட்டித் தீர்த்து வேலை வாங்கும் கடும் உழைப்பாளி. தனக்குத் திருப்தி வரும் வரை விடவே மாட்டார் என்று “பரியேறும் பெருமாள்” வழியாக நடிகர் மாரிமுத்து, இயக்குநர் 

மாரி செல்வராஜ் ஐப் பற்றிச் சொல்லி இருப்பார். இந்தப் பாடல் காணொலியில் மாரி செல்வராஜைக் கண் வெட்டாது பார்த்தேன். பரீட்சை மண்டபத்தில் பதற்றமாக இருக்கும் மாணவன் தோரணை. அந்தக் காட்சியையும் சிறைப்பிடித்துக் கொண்டேன்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு சமயம் ஏ.ஆர்.ரஹ்மான் வந்திருந்த போது போட்டிப் பாடகியிடம்

“கோயம்புத்தூர் பாசையில் ஒரு பாட்டு பாடுவிங்களா?”

என்று கேட்டபோது அந்த 2K kid பொத்தம் பொதுவாக ஒரு பாட்டைப் பாடவும்

“இது கோயம்புத்தூர் பாஷையா?” என்று ரஹ்மான் கலாய்த்து விட்டார்.

இந்த மாதிரி முற்பதிவு செய்யும் நிகழ்ச்சியில் ரஹ்மான் எதிர்பார்த்த பாட்டு

“ஈச்சம் பழம் நாவப்பழம்

 எ மாமா உன் ற கருப்பு”

https://youtu.be/bhqTjfnCydM

என்று அப்போது நினைத்துக் கொண்டேன். இதுவும் வடிவேலுவுக்கானது தான். அப்போதே புது முயற்சியாக கோவைக்கார சரளாவையும், மதுரைக்கார வடிவேலுவையும் பயன்படுத்தியிருந்தால் இதன் வீச்சு 2K ஐக் கடந்திருக்கக் கூடும்.

மலையுச்சியில் எங்கோ ஒரு மூலையில் எழும் ஒலி மெல்ல மெல்லப் பொங்கி வியாபிக்கும் பின்னணி கொடுத்த ரஹ்மானின் கிராமியத்தைக் கேட்ட நம் காதுகள் நம் மண் சார்ந்த இன்னுமொரு படைப்புக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இம்மாதிரி முயற்சிகளின் வெற்றி அவருக்கு ஒரு பிடிமானமாக இங்கேயே இருத்தி விடட்டும்

யுகபாரதி 

என்ன சொல்ல?

பெருக்கெடுக்கும் காட்டாறு தேங்கிய வெள்ளத்தை அடித்து அலசித் தன் நன்னீரைப் பாய்ச்சும் இன்றைய யுகத்து எழுது கோலான்.

ஒரு இரண்டரை மணி நேரப் படத்தை முன்னோட்டம் போட்டு அசை போட வைத்து விடும் அந்தப் படைப்புக்குக் கொடுக்கப்பட்ட அடி நாதமாய் விளங்கும் பாடல்.  வணிக சமரசங்களுக்குக் கட்டுப்படாத எழுத்து.

மாரி செல்வராஜுக்கு முகவரி

எங்களின் “முக” வரி இது

பட்ட காயம் 

எத்தனையோ

அத சொல்லிப்புட்டா

ஆறிடுமோ ராசா…..

ஆறிடுமோ

ராசா ❤️

https://youtu.be/3AqeVDETiQA

கானா பிரபா

21.05.2023


Tuesday, May 9, 2023

இன்னொருவர் இயக்க 🎬 இசை கொடுத்த T.ராஜேந்தர் 🎸

"விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்" இப்படியான அழகான கவித்துவம் மிகுந்த வரிகளைக் கட்டிப்போட வைக்கும்இசை கலந்து கொடுத்து அந்தக் காலத்து ராஜாவின் ராஜ்ஜியத்தில்திரும்பிப்பார்க்கவைத்தவர் இந்த டி.ராஜேந்தர். தமிழ் சினிமாவில்இசையமைபாளரே பாடலாசிரியராகவும் அமர்ந்து எழுதி, அவரே எழுதி, சமயத்தில்அவரே கூடப்பாடி வருவது என்பது என்னமோ புதுமையான விஷயம் அல்லவே. இசைஞானி இளையராஜாவில் இருநது, ஆரம்ப காலத்துப் படங்களில்எஸ்.ஏ.ராஜ்குமார் போன்றோரும் அவ்வப்போது செய்து காட்டிய விஷயம். இந்தப்பாடலாசிரியர் - இசையமைப்பாளர் என்ற இரட்டைக்குதிரையை ஒரே நேரத்தில்கொண்டு சென்று இவையிரண்டையும் வெகுசிறப்பாகச் செய்து காட்டியவர்களில்டி.ராஜேந்தருக்கு நிகர் அவரே தான் என்பேன். 

இனிமேலும் இவரின் இடத்தை நிரப்ப இன்னொருவர் வரும் காலம் இல்லை என்றுநினைக்கிறேன் இப்போதெல்லாம் பாடல்களுக்கு வரிகளா முக்கியம், முக்கிமுனகத் தெரிந்தால் போதுமே.

டி.ராஜேந்தர் என்ற இசையமைப்பாளர் சக பாடலாசிரியரை எடுத்துக் கொண்டுபதிவு ஒன்று தரவேண்டும் என்ற எண்ணம் றேடியோஸ்பதியின் ஆரம்ப காலத்தில்இருந்தே இருந்தாலும் அவரின் ஒவ்வொரு பாடல்களிலும் உள்ள கவியாழத்தைத்தொட்டு எழுதுவது ஒரு ஆய்வாளனுக்குரிய வேலை. எனவே அந்த விஷயத்தைத்தலைமேற்கொள்ளாமல் தவிர்த்து வந்தேன். ஆனால் டி.ராஜேந்தர் தன்னுடையஇயக்கத்தில் வெளிவந்த படங்களில் மட்டுமன்றிப் பிற இயக்குநர்களின்இயக்கத்தில் வெளிவந்த படங்கள் சிலவற்றுக்கும் இசையமைத்து, கூடவேபாடல்களையும் எழுதி முத்திரை பதித்திருக்கின்றார். அப்படியான படங்களில் சிலமுத்துக்களை எடுத்துக் கொடுக்கலாமே என்ற எண்ணத்தில்முக்குளித்திருக்கின்றேன்.

தமிழ் சினிமாவில் தங்க இசைத்தட்டு விருது பெற்றது "கிளிஞ்சல்கள்" படத்தின்இசை. பசி என்ற கலைப்படம் தந்த துரை இயக்கத்தில் வந்த மோகன் பூர்ணிமாஜெயராம் இணையில் வந்த அருமையான காதற்படம். இந்தப் படத்தில்ஜெயச்சந்திரன் பாடிய "காதல் ஒரு வழிப்பாதை பயணம்" பாடலோடு எஸ்.பி.பிபாடிய அழகினில் நனைந்தது, பி.சுசீலா பாடிய "சின்னச் சின்னக் கண்ணா" போன்ற பாடல்களோடு டாக்டர் கல்யாண், ஜானகி ஜோடிப்பாடலாக அமைந்த"விழிகள் மேடையாம்" என்று எல்லாப்பாடல்களுமே தங்க இசைத்தட்டுக்கானஅங்கீகாரத்தை நிரூபித்தவை. 

விழிகள் மேடையாம் பாடல் இந்த வேளையில்

https://www.youtube.com/watch?v=F75_LCOzjeA

எண்பதுகளிலே கச்சிதமான காதல் ஜோடிகள் என்றால் சுரேஷ் - நதியா ஜோடிதான் கண் முன் நிற்பார்கள். அந்தக் காலத்துக் காதலர்களுக்கு இவர்கள் தான்தேவதூதர்கள் போலவாம் 😉. 

அப்படி இந்த இருவரும் ஜோடி கட்டிக் கோடி குவித்த ஒரு வெற்றிப்படம்"பூக்களைப் பறிக்காதே" வி.அழகப்பன் இயக்கத்தில் வந்த இந்தப் படத்தில் வரும்"பூக்களைத் தான் பறிக்காதீங்க காதலைத் தான் முறிக்காதீங்க" பாடல் அந்தக்காலத்துக் காதலர்களின் தேவாரம், திருவாசகம் எனலாம்.

எஸ்.பி.பி , ஜானகி குரல்களில் "மாலை எனை வாட்டுது மணநாளை மனம் தேடுது" இந்தப் பாடலைக் கேட்டுக் கிறங்காதவர் நிச்சயம் காதலுக்கு எதிரியாகத் தான்இருப்பார்கள். இடையிலே வரும் "விழி வாசல் தேடி" என்று வரும் அடிகளுக்கு ஒருசங்கதி போட்டிருப்பார் டி.ஆர் அதை நான் சொல்லக்கூடாது நீங்கள் தான் கேட்டுஅனுபவிக்கணும்.

https://www.youtube.com/watch?v=71whh__t5ks

"மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்" ஒரு பாட்டைத் தேடிஇணையம் வராத காலத்தில் கொழும்பில் உள்ள ரெக்கோடிங் பார் எல்லாம்அலையவைத்ததென்றால் அது இந்தப் பாட்டுக்குத் தான், கடைசியில்வெள்ளவத்தையில் ஸ்ரூடியோ சாயாவுக்குப் பக்கத்தில் இருந்த Finaz Music Corner தான் அருள்பாலித்தது. ஆகாசவாணி எனக்கு அறிமுகப்படுத்தியபாடல்களில் "பூக்கள் விடும் தூது" படப்பாடல்கள் மறக்கமுடியாது. இந்தப்படத்தின் பாடல்கள் எப்பவாவது இருந்துவிட்டு ஏதோ ஒரு தருணத்தில்ஆசையாகக் கேட்கவென்று வைத்திருக்கும் பட்டியலில் இருப்பவை. ஒன்றல்லஇரண்டு பாடல்களை இப்போது உங்களுக்காகத் தருகின்றேன்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான்கேட்கிறேன்"

https://www.youtube.com/watch?v=kgBoZ78ojM8

அதுவே சித்ராவோடு கூட்டணியில் இன்னொரு ரம்மியம்

https://www.youtube.com/watch?v=TKn9BVrtJ5Y

கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "கதிரவனைப் பார்த்து காலை விடும் தூது வண்டுகளைப்பார்த்து பூக்கள் விடும் தூது"

https://www.youtube.com/watch?v=TxLysTHzCvE

சிவாஜி, சத்யராஜ், பாண்டியராஜன் என்று அந்தக்காலத்தின் பெரும் நட்சத்திரங்கள்ஒன்று சேரும் படம். இந்தப் படத்தின் இயக்குநர் ஜகந்நாதன் ஏற்கனவேஇசைஞானியோடு வெள்ளை ரோஜாவில் இணைந்து அட்டகாசமான பாட்டுக்களைஅள்ளியவர். இருந்த போதும் இந்தப் பெரும் கூட்டணியில் இசைக்கு அவர் மனம்இசைந்தது டி.ராஜேந்தருக்குத் தான். "முத்துக்கள் மூன்று" இந்தப் படத்தில்கே.ஜே.ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன் பாடும் "தேவன் கோயில் தீபமே" பாடல்சோர்ந்து போயிருக்கும் போது ஒத்தடமாகப் பலதடவை எனக்குப்பயன்பட்டிருக்கிறது, உங்களுக்கு?

https://www.youtube.com/watch?v=qlFd2BZoKhc

பூக்களைப் பறிக்காதீர்கள் வெற்றியில் அதே இயக்குனர் வி.அழகப்பன்"பூ" ராசியோடு தலைப்பு வைத்து எடுத்த படம் "பூப்பூவாப் பூத்திருக்கு" யாழ்ப்பாணத்தின் பெருமை மிகு சினிமா நினைவுகளைக் கொடுத்த குட்டிதியேட்டர் லிடோவில் ஓடிய கடைசிப்படம் இதுதான். அதற்குப் பின்னர் லிடோவின்நிலை கடந்த இருபது வருஷங்களில் அந்த நாளில் படம் பார்த்தவர்களில்மனங்களில் தான் வீற்றிருக்கின்றது. "வாசம் சிந்தும் வண்ணச்சோலை" என்றுவாணி ஜெயராம் பாடி வரும் அழகான பாட்டு ஒருபுறம், "எங்கப்பா வாங்கித் தந்தகுதிர அதில நானும் போகப்போறேன் மதுர" என்று குட்டீஸ் பாடும் பாட்டு என்றுஇன்னொரு புறம் இசைபரவ, "பூப்பூத்த செடியைக் காணோம் வித போட்ட நானோபாவம்" என்று ஜெயச்சந்திரன் பாடும் பாடல் படத்தின் அச்சாணி எனலாம்.

வாசம் சுந்தும் வண்ணச் சோலை

https://www.youtube.com/watch?v=4Sh1fRqXlrs

பூ பூத்த செடியைக் காணோம்

https://www.youtube.com/watch?v=h3nz2B8MZ6s

இசையமைப்பாளர் T.ராஜேந்தர் இன்னொரு நட்சத்திரத்துக்கு இசையமைத்துப்பெரும் புகழீட்டிய படங்களில் தலையாயது “கூலிக்காரன்”.

பாடல்கள் எல்லாமே அன்று பட்டையைக் கிளப்பின.

“குத்துவிளக்காக குலமகளாக 

நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்

என் வானிலே நீ வெண்ணிலா

நட்சத்திரம் உன் கண்ணிலா”

எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடிய இந்தப் பாடலை இன்று கேட்டுப்பாருங்கள். அதே பொலிவோடு இசைப் பிரவாகம் கொட்டும் பாட்டு. 

T.ராஜேந்தரின் மிருதங்கப் பின்னணி முத்திரை இருந்தாலும் இசையில் ஒரு புதுப்பரிமாணம் கையளப்பட்டது, மெட்டிலும் கூட.

“சோலைக்கொரு வசந்தம் போல் நீ வந்தாய்” என்று இந்தப் பாடல் கேட்டுமுடிந்தும் முணுமுணுக்க வைக்கும். பாடகர் இருவரது வழக்கமான குறும்புச் சிரிப்பு, மேலதிக சங்கதிகள் எல்லாம் இருக்கும்.

“வெச்ச குறி தப்பாது இந்தப் புலி தோற்காது” என்றொரு துள்ளிசைப் பாட்டு. எஸ்.பி.பாலசுப்ரமணியக் பாடும் இந்தப் பாட்டும் கூலிக்காரன் வெற்றிப்பாடல்களில் பங்கு போட்டது.

“ஐய்யே ஐய்யே ஐய்யே தொட்டதும் துவண்டிடும் ரோசா” என்று போதையைத்தேக்கி வைத்த குரலோடு எஸ்.ஜானகி பாடும் இன்னொரு பாட்டு, மலேசியாவாசுதேவன் “வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி” (படத்தில் பாண்டியனுக்குக்கொடுக்கப்பட்டிருக்கும்), “பாழும் வயிறு தான்” என்னும் இன்னொரு தத்துவப்பாடலையும் அவரே பாடியிருக்கிறார். அந்தப் பாடல் கூலிக்காரர்களின் வேதனைசொல்லும் பாட்டு. 2017 இல் மதுரை சென்றிருந்த போது இன்னமும்கைவண்டிக்காரர் இயங்குவதைக் கண்டேன். இந்தப் படத்தில் விஜயகாந்த் நடித்தபோது மேலமாசி வீதியின் கைவண்டி ஓட்டும் கூலிக்காரர்களை மனதில்வைத்திருப்பார் என்பதை மறுக்க முடியுமா என்ன?

“போதையேற்றும் நேரம்” பாடலை எஸ்.ஜானகி & எஸ்.பி.பி பாடியிருந்தாலும்பெரிதாக வெகுஜன அபிமானம் பெறாத பாட்டு. 

கூலிக்காரன் பாடல்களைக் கேட்க

https://youtu.be/7wpWkgrItww

விஜயகாந்துக்கு ஒரு சூப்பர் ஹிட் இசை விருந்தை “கூலிக்காரன்” படத்துக்காகஅளித்த T.ராஜேந்தர் இதற்கு முன்பே “சட்டம் சிரிக்கிறது” என்ற படத்துக்காகஇசையமைத்திருக்கிறார். அந்தப் படத்தில் விஜயகாந்துடன் பிரதாப், ரயில்பயணங்களில் புகழ் ஜோதி, ஸ்வப்னா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சட்டம்சிரிக்கிறது படத்தின் பாடல்கள் அச்சொட்டான ஆரம்ப கால T.ராஜேந்தர்படங்களின் இசையின் வாடை கொண்டவை. இதனோடு ஒப்பிடும் போதுகூலிக்காரன் படத்திற்கு எவ்வளவு பிரமாண்டமும் புதுமையும் இசையில்காட்டப்பட்டிருக்கின்றது என்ற ஒப்பீட்டையும் செய்யலாம். 

சட்டம் சிரிக்கிறது படப் பாடல்களில் 

“மலரே மலரே உனக்கின்று மணம் வருமா” P.சுசீலா பாடியது

https://youtu.be/-9XHoeYt0YA

“மலை முகப்பினில் நடுக்காட்டினில்” எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிபாடியது. 

https://youtu.be/vktTd7Jry3A

மேலுமொரு பாட்டு எஸ்.பி.பி & ஜானகி கூட்டணியில்

“கண்கள் கள்ளானது” என்ற வரிகளோடு அமைந்திருக்கும்.

இந்தப் பாடலைக் கேட்கும் போது கிளிஞ்சல்கள் படத்தில் T.ராஜேந்தர்இசையமைத்த “விழிகள் மேடையாம்” பாடலும் நினைவுக்கு வந்து போகும்.

https://youtu.be/bMRI4Mkv3Og

“கனகாம்பரம் பூ வாங்கு” என்ற சாய்பாபா குழுவினர் பாடும் பாட்டு ஒருதலை ராகம் படத்தில் வரும் “கூடையில கருவாடு” காட்சியை நினைவுபடுத்தும் 

https://youtu.be/4mTtvr7NnpE

சி.வி.ராஜேந்திரன் இயக்கிய “உனக்காக ஒருரோஜா”, மோகன், அம்பிகா, சுரேஷ் ஆகியோர்நடித்தது. இந்தப் படம் எத்தனை பேருக்குநினைவில் இருக்கும்?

ஆனால் இதில் வந்த “ஒரு புல்லாங்குழல்ஊமையானது” https://youtu.be/UlJucvJZsxY

T.ராஜேந்தரின் அடையாளம் பேசும்.

“எங்க வீட்டு வேலன்” சிம்பு நடிப்பில் ராஜேந்தர் இசையோடு இயக்கம் கொடுத்துஒரு நல்ல வெற்றி பெற,

சசிமோகன் இயக்கிய “சபாஷ் பாபு”, மற்றும் சரவணன் நடித்த “பெற்றெடுத்தபிள்ளை” (இயக்கம் : பூர்ணசந்திரன்) ஆகியவற்றுக்கும் இசை கொடுத்தார்.

அது போல் ராம்கி நடிப்பில் “என் ஆசை தங்கச்சி” (K.சண்முகமணி இயக்கியது), எஸ்.எஸ்.சந்திரன் இயக்கிய “பொம்பள சிரிச்சாப் போச்சு”ஆகியவை அதிகம்பெயர் பெறா ராஜேந்தர் இசைத்தவை.

டி.ராஜேந்தர் இசையமைப்பாளராகப் பணியாற்றிய படங்கள் பிரபு நடித்த"இவர்கள் வருங்காலத்தூண்கள்" (வெங்கட் இயக்கம்), இராம நாராயணனின் 'எங்கள் குரல் "மற்றும் பாண்டியராஜன் நடித்த "ஆயுசு நூறு" (பொன்மணி ராஜன்), ஶ்ரீ பண்ணாரி அம்மன் ( பாரதி கண்ணன் இயக்கம்) என்று நீளும், 

ஆயுசு நூறு படத்தில் “பிரம்ம தேவன் அவன்”

https://www.youtube.com/watch?v=1aqKvJRfIY0

அந்தக் காலத்துச் சென்னை வானொலி உங்கள் விருப்ப காலத்தைநினைவுபடுத்தும்.

ஆனால் இந்தப் பதிவுக்கு இந்த முத்திரைகளே போதும் என்று நினைக்கிறேன், இன்னொரு பதிவில் கவிஞர் டி.ராஜேந்தரோடு.

சோலைக்கொரு 

வசந்தம் போல் நீ வந்தாய் காளைக்கென்றும் 

சொந்தம் என்று 

நீ ஆனாய்

https://youtu.be/S_D_5jQlaMg


கானா பிரபா


Tuesday, April 25, 2023

எம்.எஸ்.ராஜேஸ்வரி செல்லம் கொஞ்சும் குரலின் நினைவில் ஐந்தாண்டுகள் ❤️

“அம்மாவும் நீயே அப்பாவும் நீயே

அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே” 

கலையுலகில் கலைஞானி கமல்ஹாசனின் 62 வருடகால ஓய்வறியாத் திரை இயக்கத்தைக் காட்டும் போதெல்லாம் இந்தப் பாடல் தான் மனத்திரையில் அங்கேறும். 

என்று களத்தூர் கண்ணம்மாவில் தன் முப்பது வயது குரலில் அப்போதைய ஆறு வயதுக் குழந்தைக் கமலுக்குக் குரல் கொடுத்தவர் தான்,  தன் அறுபது வயதில் பேபி ஷாம்லியின் ஆறு வயதுக் குரலாக  

“பாப்பா பாடும் பாட்டு கேட்டு தலைய ஆட்டு” (துர்கா),

https://www.youtube.com/watch?v=ndMacY2PdYs&t=21s

“யக்கா யக்கா யக்கா கிளியக்கா” (செந்தூர தேவி) 

https://www.youtube.com/watch?v=qBniaRcPXIo

பாடிய புதுமை படைத்தவர். இவ்விதம் சங்கர் – கணேஷ் ஆட்சியிலும் குழந்தைக் குரலாக இருந்தவர்.

திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய 

“மண்ணுக்கு மரம் பாரமா

 மரத்துக்கு இலை பாரமா

 கொடிக்கு காய் பாரமா

 குழந்தை தாய்க்குப் பாரமா”

பாடலின் தாளக் கட்டு பின்னாளில் பல இசையமைப்பாளர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்து “கேவிஎம் ரிதம்” என்றே அதனை அடையாளக் குறியிட்டுச் சிறப்பிப்பார்களாம்.

“படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்

படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு”

என்று கே.வி.மகாதேவனே இதே தாளக்கட்டில் இவருக்குப் பாட்டளித்துத் தொடர்ந்து சிறப்பித்தவர்.

“அம்புலிமாமா வருவாயா”

https://www.youtube.com/watch?v=VqN7T25mBOk

கே.வி.எம் இவருக்குக் கொடுத்த இன்னொரு பாட்டு.

“பூப்பூவா பறந்து போகும்

பட்டுப்பூச்சி அக்கா

நீ பளபளன்னு போட்டிருப்பது

யாரு கொடுத்த சொக்கா”

https://www.youtube.com/watch?v=BWqfrLY-BUg

“திக்குத் தெரியாத காட்டில்" பாட்டெல்லாம் அன்றைய இலங்கை வானொலியின் பொற்காலப் பாட்டுகளில் ஒன்று.

“புதுப் பெண்ணின் மனசைத் தொட்டுப் போறவரே” (பராசக்தி), 

“சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?” (டவுண் பஸ்),

போன்ற காதல் பாடல்களிலும் தன்னை அடையாளப்படுத்தியவர்.

 “நான் சிரித்தால் தீபாவளி” 

 நாளுமிங்கே ஏகாதசி”

என்று நாயகன் பாடலில் புழம்பெரும் பின்னணிப் பாடகி ஜமுனா ராணியுடன் 

பழமைத் தொனியில் பாடியவர்.

சந்திரபோஸ் இசையிலும் இவரைக் குழந்தையாக்கி 

“எந்தக் கதை சொல்ல”

https://www.youtube.com/watch?v=vidLHP4Ph6M

பாட வைத்ததோடு புதுமையாக அதில் கே.ஜே.ஜேசுதாஸையும், எஸ்.பாலசுப்ரமணியம் ஆகியோரையும் இணைத்தார்.

கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் – கணேஷ் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் மட்டுமல்ல இளையராஜாவும் தன் பங்குக்கு இவரைக் குழந்தையாக்கி

“ஒரு பாட்டு உன் மனசை இழுக்குதா”

https://www.youtube.com/watch?v=OhkvSwG0CCw

“பாசமழை” பாடலில் அழகு பார்த்தார்.

எம்.எஸ்.ராஜேஸ்வரியின் புகழ்பூத்த பாட்டுப் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம், நூறைத் தாண்டும்.

இன்னும் எனக்கு மனசுக்கு நெருக்கமாக இருக்கும் பாட்டு ஒன்று உண்டு. அது “மகாதேவி” படத்தில் இடம்பிடித்த, பாலசரஸ்வதியோடு இணைந்து பாடிய

“சிங்காரப் புன்னகை 

கண்ணாரக் கண்டாலே 

சங்கீத வீணையும் 

ஏதுக்கம்மா……”

https://www.youtube.com/watch?v=ljIlGUsw8Ww

குழந்தைத் தனம் கொண்ட குரலாள் எம்.எஸ்.ராஜேஸ்வரியை 

என்றும் நினைவில் கொள்வோம்.

கானா பிரபா

25.04.2023

Sunday, April 23, 2023

எஸ்.ஜானகி 85 ❤️

திரையிசை கண்ட உன்னதமான ஆளுமைகளில் எஸ்.ஜானகி ஒரு பாட்டுப் பல்கலைக் கழகம். 

"எஸ்.ஜானகி அளவுக்கு பாடல் தாங்கியிருக்கும் உணர்வை வெளிப்படுத்த இந்தியாவிலேயே யாரும் இல்லை" 

என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் குறிப்பிடுவது வெறும் புகழ்ச்சி மாலை அல்ல என்பதை எம் போன்ற கடைக் கோடி ரசிகனும் உணர்ந்து நிற்பான்.

பாடகி சித்ராவின் ஆரம்ப காலத்தில் ஜானகி அம்மாவின் பாட்டைக் கேளு அவங்க ஒரு பாடலை எவ்வளவு தூரம் நியாயம் செய்து பாடியிருக்காங்க என்று இளையராஜா கை காட்டிய போது அங்கே நடமாடும் பாட்டுப் பல்கலைக் கழகமாகத் திகழ்ந்து காட்டுகிறார்.

திரையிசைப் பாடல் என்பது வெறுமனே சங்கீத சாகித்தியத்தின் திரட்டு அல்ல அது பாத்திரத்தின் பண்பை, காட்சிச் சூழலின் அனுபவத்தைக் இசைக் கூட்டில் குரல் வழியே கடத்துவது. அங்கே ஒட்டுமொத்த பாடலுமல்ல ஒவ்வொரு வரிகளுக்குமே உணர்வு பேதம் கற்பித்துக் கொண்டு வர வேண்டும் என்ற நுட்பத்தைப் போதித்தவர்கள் திரையிசையில் ஒரு சிலரே. அங்கு எஸ்.ஜானகி அம்மாவின் பங்கு அளப்பரியது.

ஒரு சாதாரண அல்லது அமைதியாகப் போகும் பாட்டின் உணர்ச்சியை நம்முள் அசுரத்தனமாக ஊடுருவி இறக்கி விடுகிறது எஸ்.ஜானகியின் குரல்.

எந்த ஒரு துறையிலும் இறங்கியவர்கள் அப்படியே மாற்றமின்றி அதன் போக்கில் வாழ்ந்தவர்கள் அப்படியேதானிருக்கிறார்கள்,அதையும் தாண்டிக் கடந்து சிந்தனையைச் செயல்படுத்தியவர்கள் சாதனையாளர்களாக மாறுகிறார்கள். எஸ்.ஜானகியின் இந்த அறுபதாண்டு இசை வாழ்வு அவரைச் சாதனையாளராக முன்னுறுத்துகிறது. தனக்கு வாய்ந்த அழகிய குரல் என்பது அதன் இனிமையைச் சுவைக்க அல்ல அனுபவிக்கவென்று குரல் பேதங்களில் வெளிப்படுத்தும் உணர்வின் வழி நிரூபித்துக் காட்டியவர்.

எமக்கெல்லாம் இசையரசி பி.சுசீலா அம்மாவின் பாட்டு அன்னையின் குரல் என்றால் பாட்டுக் குயில் எஸ்.ஜானகியின் ஓசை தோழியின் குரலாக நிற்கின்றது.

எண்பதுகளின் இலங்கை வானொலிப் பிரியர்கள் மறக்கவொண்ணாத பாடல்களில் ஒன்று "கண்ணா நீ எங்கே வா வா நீ எங்கே". 

ருசி கண்ட பூனை திரைப்படத்துக்காக பாடகி எஸ்.ஜானகி மழலைக் குரலாக மாறிப் பாடிய 

இந்தப் பாடல் அப்போது புதுமையாகப் பார்க்கப்பட்டு ரசிக்கப்பட்டது. 

"கண்ணா நீ எங்கே" பாடலுக்குப் பின்னால் பலரும் அறியாத செய்தி ஒன்றும் இருக்கிறது. இந்தப் பாடலைப் பாடியது மட்டுமன்றி எழுதியதும் எஸ்.ஜானகி தான் என்பதே அது.

இப்படியாகப் பன்முகக் குரலாட்சி செய்யும் எஸ்.ஜானகி அவர்களுக்குக் கிடைத்த இன்னொரு பேரு, பல்வேறு இசையமைப்பாளர்களோடு அவர் பாடிச் சிறப்பித்தது.


இங்கே இன்னொரு விடயத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். எஸ்.ஜானகி அவர்கள் "மெளனப் போராட்டம்" என்ற திரைப்படத்தின் இசையமைப்பாளராகவும் இயங்கியிருக்கிறார். 

எஸ்.ஜானகி என்ற இசையமைப்பாளர், தன் ஆத்ம பந்தப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு இணைந்து பாடிய

“லோலிலிட்டா லோலிலிட்டா”

https://www.youtube.com/watch?v=QZ5lKR-1DK8

ஏக பிரபலம் கொண்டு இன்னும் விளங்குகிறது தெலுங்கு தேசத்தில்.

எஸ்.ஜானகி இசையமைத்த தெலுங்குப் படமான “மெளனப் போராட்டம்” படத்தில் உதவி இசையமைப்பாளராகவும், பின்னணி இசை வழங்கியவராகவும் இருந்தவர் எஸ்பிபி. 

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்குப் பெரும் புகழைக் கொடுத்த, அவர் இசையமைத்த “மயூரி” திரைப்படத்தில் எஸ்.ஜானகி பாடிய “இதினா ப்ரிய நர்த்தன வேளா” 

https://www.youtube.com/watch?v=QZ5lKR-1DK8

பாடலுக்குத் தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று எஸ்பிபி ரொம்பவே எதிர்பார்த்தாராம்.

மயூரி திரைப்படத்தில் இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு இணைந்து பாடிய 

“மெளனம் நாணம்” 

https://www.youtube.com/watch?v=7fyPxhquT1A

பாடல் இப்போது கேட்டாலும் இனிக்கும். கானாபிரபா

பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன் ஒரு சில படங்களுக்கு இசையமைத்த போது, அங்கும் பாடிச் சிறப்பித்தவர் எஸ்.ஜானகி.

அப்படியாக வெளிவந்த ஒரு படம் “கொலுசு”.

இந்தப் படத்தில் இசையமைப்பாளர் மலேசியா வாசுதேவனுடன் இவர் பாடிய பாடல் 

“மச்சான் கண்ணு”

https://www.youtube.com/watch?v=1poUG7KJuSg


பாடகராகவும், இசையமைப்பாளராகவும் அறியப்படும் இன்னொரு ஆளுமை எம்.எஸ்.ஶ்ரீகாந்த். இவரின் பெயரைக் கேட்டால் வாணியம்மாவுடன் பாடிய 

“நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு”

ஞாபகம் வருகிறதல்லவா?

இது போலவே, எம்.எல்.ஶ்ரீகாந்த் இசை வழங்கிய “கல்யாண வளையோசை” படத்தில் எஸ்.ஜானகியோடு பாடிய 

“வள்ளுவன் குறளில் சொல்லெடுத்து”

https://www.youtube.com/watch?v=yrsvV3Q3PL8

இவருக்கு இன்னொரு புகழ் கொடுத்த பாடல். எஸ்.ஜானகியின் அற்புதமான ஆலாபனையோடு மிளிரும் அற்புதம்.

இன்னும் கொஞ்சம் காலத்தைப் பின்னோக்கி இழுத்துப் போனால் அங்கே மிதப்பது ஏ.எம்.ராஜா என்ற ஒப்பற்ற பாடகர் மற்றும் இசையமைப்பாளர் எஸ்.ஜானகியோடு கூட்டுச் சேர்ந்த பாடலகள்.

தேனான பாடல்களைக் குழைத்துக் கொடுத்த ஏ.எம்.ராஜா இசைத்துத் “தேன் நிலவு” தந்த

“ஓஹோ எந்தன் பேபி

 நீ வாராய் எந்தன் பேபி”

https://www.youtube.com/watch?v=_I5kqlNUfu8

பாடல் அந்தக் காலத்து எஸ்.ஜானகிக்கும் புகழை வழங்க ஏதுவானதைச் சொல்லவும் வேண்டுமா?

எஸ்.ஜானகிக்கு மிக அற்புதமான பாடல்களை வழங்கிய ஷியாம் அவர்களின் இசையில் நன் முத்துகளைத் தோண்டத் தோண்டக் கிட்டும். அப்படியொன்று “பஞ்சகல்யாணி”.

இந்தப் படத்தில் ஒரு புதுமை, 

படத்துக்கு இசை வழங்காத இசையமைப்பாளரான சந்திரபோஸ் அவர்களோடு, எஸ்.ஜானகி பாடியிருக்கும் 

“ராசா வந்தாண்டி”  

https://www.youtube.com/watch?v=iMFsRVLTfQI

எனும் பாடல்.

இம்மாதிரி இன்னொரு இசையமைப்பாளர் வேறொருவர் இசையில் பாடிய பாடல்களில் எஸ்.ஜானகியும் இணைந்திருக்கும் புதுமையின் நீட்சியாகச் சொல்லிக் கொண்டே போனால்

T.V.ராஜூ அவர்களின் இசையில் “ரிஷ்ய சிருங்கார்” படத்தில்

“விண்ணாளும் சுந்தர ரூபம் 

https://www.youtube.com/watch?v=KmCmkSE_NGI

பாடலை இன்னொரு இசையமைப்பாளர் மற்றும் புகழ் பூத்த பாடகர் கண்டசாலாவுடன் பாடியது சாட்சாத் ஜானகியம்மாவே தான்.

“Kaise Kahoon”

https://www.youtube.com/watch?v=I8btjaXIaUY

தமிழில் வந்த ஹிந்திப் பாட்டு. அதிலும் ஓர் புதுமை, இன்னொரு பாடகர் P.B.ஶ்ரீநிவாஸ் பாட்டெழுத, ஹிந்தியில் கோலோச்சிய வாத்திய விற்பன்னர், இசையாளர், கடந்த 2022 இல் நம்மை விட்டு மறைந்த பூபேந்திர சிங் அவர்கள் எஸ்.ஜானகியோடு இசைஞானி இளையராஜா இசையில் பாடிய பாட்டு.

இங்கே ஒரு விடயம், தமிழில் தான் இத்தனை இசையமைப்பாளர்களோடு ஜோடி கட்டிய ஜானகி அவர்கள் இன்னும் மற்றைய மொழிகளிலும் தோண்டி எடுத்தால் இன்னும் பல கிட்டும்.

இளையராஜாவின் குரு நாதர் ஜி.கே.வெங்கடேஷ் அவர்களால் எஸ்.ஜானகிக்குக் கிடைத்த அற்புதமான கன்னட, தெலுங்குப் பாடல்கள் தமிழில் அவருக்கு இருந்த இடைவெளியை நிரப்பிய காலங்கள். பின்னர் தமிழில் பெரும் சகாப்தம் அவர் படைக்க “அன்னக்கிளி” இளையராஜா வந்தார். அன்னக்கிளி பாடல் வரலாற்றில் எஸ்.ஜானகி அவர்கள் எத்துணை தூரம் புதிய இசையமைப்பாளரின் ஒத்திகை நிகழ்விலும் ஒத்துழைப்புக் கொடுத்தார் என்பது உப வரலாறு.

இங்கே ஜி.கே.வெங்கடேஷ் அவர்களைத் தன் இசையில் எஸ்.ஜானகியின் பாடலொன்றின் முகப்புக் குரலாய் இணைத்து அணி செய்திருக்கிறார் இளையராஜா. 

அதுதான் “கவிக்குயில்” கொண்ட

“மானத்துலே நீயிருக்க” தொகையறாவோடு

“உதயம் வருகின்றதே”

https://www.youtube.com/watch?v=r6_9zhS10LY


“அழகு மலராட அபிநயங்கள் கூட

சிலம்பொலியும் சிலம்புவதைக் கேள்?

https://www.youtube.com/watch?v=oE8kjdqQ3RA

இன்று தொலைக்காட்சிப் பாட்டுப் போட்டிகளில் தவிர்க்க முடியாத சங்கீர்த்தனம் இந்தப் பாடல். இங்கே ஜானகியோடு ஜதி சொல்லிப் பாடும் T. S. ராகவேந்திரா, “வைதேகி காத்திருந்தாள்” படத்தில் ரேவதியின் தந்தையாகவும் நடித்திருப்பார். அவரின் இன்னொரு முகம் விஜயரமணி என்ற இசையமைப்பாளர். 

விஜயரமணி என்ற T. S. ராகவேந்திரா தன் ஆரம்ப காலத்து இசை நட்பு இளையராஜாவோடு எண்பதுகளில் இயங்கிய போது பல புதிய பாடகிகளை ராஜாவுக்கு அறிமுகம் செய்து பாடல்களை வாங்கிக் கொடுத்தவர் என்பதும் ஒரு உபரித் தகவல்.

இசையமைப்பாளராகவும், பாடகராகவும் விளங்கிய கங்கை அமரன் வஞ்சகமில்லாமல் பல இசையமைப்பாளருக்குப் பாடியிருக்கும் போது தன் அண்ணன் மட்டும் விதிவிலக்கா என்ன? 

இளையராஜா இசையில் எஸ்.ஜானகி & கங்கை அமரன் கூட்டணி பாடல்கள் பலது இருந்தாலும்,

“பொங்கும் ஆகாய கங்கை” 

https://www.youtube.com/watch?v=0MtPuQRocE8

என்று காதல் ரசம் கொண்டு பாடும் பாடுவதும்,

“வாடி என் பொண்டாட்டி நீதானே”

https://www.youtube.com/watch?v=9qNJxv-b53Q

என்று ரகளையாகப் பாடியதும் இருக்க,

எனக்கு ஆத்மார்த்தமாக இனிக்கும் பாடலொன்று உண்டு.

அதுதான்

“மனித ஜாதி” படத்தில் கங்கை அமரனும், எஸ்.ஜானகியும் பாடும்

“புதுசு புதுசு புதுசு

உன்னோட கொலுசு கொலுசு கொலுசு”

https://www.youtube.com/watch?v=L500Xj21LSw

என்றதோர் இனிமை சொட்டும் அரிய பாட்டு. கானாபிரபா


இவ்விதம் இசையமைப்பாளர் கங்கை அமரன் இன்னொரு இசையமைப்பாளருக்காக எஸ்.ஜானகிக்காகப் பாடிய இன்னொன்று என்றால் எல்.வைத்தியநாதன் அவர்களின் இசையில் வந்த “ஏர்முனை” படப் பாடலான

“முத்துசாமி பேர”

https://www.youtube.com/watch?v=fCQ1adugj2Q

“அள்ளி அள்ளி வீசுதம்மா

 அன்பை மட்டும் அந்த நிலா நிலா”

https://www.youtube.com/watch?v=v6Ls9ylLrPU

இசையமைப்பாளர் கங்கை அமரன் இசையில்  தனக்குப் பிடித்த பாடல் என்று மெல்பர்ன் இசை மேடையில் புகழாரம் சூட்டியவர் எஸ்.ஜானகி. 

“காலம் நேரம் வந்தாச்சு” 

https://www.youtube.com/watch?v=lT5tVdoZciY

என்ற பாடல் கங்கை அமரன் இசையில் “அர்த்தமுள்ள ஆசைகள்” படத்தில் இடம்பெற்ற போது மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகியோடு துணைப் பாடகராகவும் பாடிச் சிறப்பித்தார்.

கங்கை அமரன் இசையில், இளையராஜா & எஸ்.ஜானகி பாடிய "போடய்யா ஒரு கடுதாசி" 

https://www.youtube.com/watch?v=CskQxI8lSrI

பாடியளித்ததும் சிறப்பு. 

 

இசையமைப்பாளர் தட்சணாமூர்த்தி சுவாமிகளை, இளையராஜா இசையில் எஸ்.ஜானகியோடு பாட வைத்துப் பெருமை சேர்த்தது "மரகத வீணை". அதில் வரும்

"சுதா மாதுர்ய பாஷண"

https://www.youtube.com/watch?v=ad110ow5w3Y

இந்த வரலாற்றை எழுதி வைத்தது.

“மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட

மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக

மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக

கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே”

https://www.youtube.com/watch?v=IDYAjpR0xQ4


அப்படியே காற்றில் அலைந்து திரிவோமே இதைக் கேட்கும் தோறும்?

இசைஞானி இளையராஜா எத்தனையோ பின்னணிப் பாடகிகளோடு ஜோடி சேர்ந்தாலும், “கவிதை சொல்லும்” எஸ்.ஜானகி குரலோடு சேரும் போதெல்லாம் 

“உந்தன் கிள்ளை மொழியினிலே

உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன்”

என்று அவர் பாடலில் சொல்வது போலத் தான்.

இவ்விருவர் கூட்டுப் பாடல்களைக் கூட்டிப் பார்த்தாலே இன்னொரு தொகை பதிவு தேறும்.

“காற்றில் மிதக்கும் புகைபோலே

அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே

மனவீடு அவன் தனிவீடு அதில்

புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ....

“சொல்லத் தான் நினைக்கிறேன்”

https://www.youtube.com/watch?v=wxvpmaSKM54

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் பாடியளித்த மிகச் சில காதல் ஜோடிப் பாடல்களில் அதி சிறந்தது என்று நானும் சொல்லத்தான் நினைக்கிறேன். 

எஸ்.ஜானகியம்மா தலைமுறை தாண்டி நிலைத்து நிற்கும் குரல் என்பதற்கு முன் சொன்ன தலைமுறை இசையமைப்பாளர்களோடு கூட்டுச் சேர்ந்ததில் மெல்லிசை மன்னர் தம் பங்குக்கும் இவருக்கு முதல் மரியாதை செய்திருக்கிறார்.

சொல்லப் போனால் இந்தப் பதிவை எழுத எனக்கு மூல காரணியாக மூளையில் அந்த எண்ணம் தோன்ற ஏதுவாக அமைந்ததே இந்தப் பாடல் தான். 

“ஆஹா 

சொல்லத்தான் நினைக்கிறேன்

உள்ளத்தால் துடிக்கிறேன்

வாய் இருந்தும் சொல்வதற்கு

வார்த்தையின்றி தவிக்கிறேன் 

ஆஹா...”

நினைத்துப் பார்த்தாலே போதும், இந்த வரிகளில் ஜாலம் காட்டி, வளைந்தும், நெளிந்தும் ஓடும் ஓர் மலையருவியாக நிலைப்பார்

எஸ்.ஜானகி.

கானா பிரபா

23.04.2023



Thursday, April 6, 2023

SPB, Drums சிவமணிக்காகத் தானே எழுதி தானே இசையமைத்துத் தானே இசையமைத்த ஆங்கிலப் பாடல்

இந்திய இசை உலகில் ட்ரம்ஸ் வாத்தியக் கலையில் சிவமணி 

ஒரு தனி அத்தியாயம். 

தன்னுடைய 13 வது வயதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களால் இசையுலகுக்குத் தத்தெடுக்கப்பட்டவர். 

உங்கள் மகனை நான் இசைச் சுற்றுலாவுக்கு 

அழைத்துப் போகப் போகிறேன்

என்று சிவமணியின் தந்தையிடம் உரிமையோடு கேட்டு

அனுமதி பெற்றுத் தன் பக்கம் வைத்திருந்தவர் தான் ஒன்றல்ல இரண்டல்ல 35 வருடங்கள் சிவமணியைத் தன் பக்கமே வைத்திருந்தார் எஸ்பிபி.

சிவமணி தன் இசை உலகில் God Father ஆகச் சொல்லிக் கொள்வது எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களைத் தான்.

“உங்களோடெல்லாம் இணைஞ்சு வேலை பண்ணுனது

எனக்கு ரொம்ப சந்தோஷம்

கடவுள் எப்போதும் நம்மிடம் இருப்பார்”

என்று சிவமணிக்கு எஸ்பிபி அனுப்பிய குறுஞ்செய்தி அவரின் கடைசி நாட்களில் ஆத்மார்த்தமாக அனுப்பியதில் ஒன்றாகி விட்டது.

“படமத்தி சந்தியா ராகம்" (Padamati Sandhya Ragam ) என்ற தெலுங்குப் படம் பிரபல தெலுங்கு இயக்குநர் ஜண்டியாலாவின் கை வண்ணத்தில் 1987 இல் வெளிவந்தது.

அமெரிக்க வாலிபனை, இந்திய ஆசாரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் திருமணம் முடிப்பதால் எழும் கலாசாரச் சிக்கலைப் பேசிய படம்.

இதில் நாயகியாக விஜயசாந்தியும், அவர் காதலிக்கும் அமெரிக்க வாலிபனாக ஹாலிவூட் நடிகர் Tom Jane நடித்தார். விஜயசாந்தியைக் காதலிக்கும் ஒரு கறுப்பின வாலிபராக நடித்தது வேறு யாருமல்ல ட்ரம்ஸ் சிவமணி தான். இந்தப் படத்தில் சிவமணி ஏற்றிருந்த இசைக்கலைஞர் பாத்திரமும் அத்தோடு ஒத்துப்போனது.

படத்துக்கு இசை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். அதாவது எஸ்பிபி இசையமைத்த 45 படங்களில் இதுவுமொன்று. கானா பிரபா

இந்தப் படத்தில் சிவமணியின் பாத்திரமும் முக்கியமானது, எனவே அவருக்கு ஒரு ஆங்கிலப் பாடலையும் வைத்தார்கள்.

அதுதான்

Life is Shabby

https://www.youtube.com/watch?v=Xba3RvcYD2U

தன்னுடைய இசை வளர்ப்புக்கு இப்படியொரு வாய்ப்பைத் தானாக அமைத்ததும் எஸ்பிபி சொன்னது போல,

“கடவுள் எப்போதும் நம்மோடு” 

என்பதாக்கும்.

Padamati Sandhya Ragam வெளிவந்து இந்த வாரத்தோடு 35 ஆண்டுகளைத் தொடுகின்றது. படம் ஏப்ரல் 3, 1987 இல் வெளியானது.

இந்த பதிவை நான் எழுத வேண்டும் என்று மாதக் கணக்கில் காத்திருந்தது எதிர்பாராமல் அமைந்திருக்கிறது.

கானா பிரபா

06.04.2023

Tuesday, April 4, 2023

எஸ்.ஜானகி “பாடகியாகப்” பிறந்த நாள் ❤️

எஸ்.ஜானகி அம்மாவின் தீவிர ரசிகர் ஶ்ரீனிவாசன் என்ற நண்பர் எனக்குத் தொடர்ந்து ஜானகிம்மா குறித்த செய்திகளைப் பகிர்வார். இன்றும் அவருக்குக் கிடைத்த இந்த அரிய படத்தைப் பகிர்ந்துதவினார்.

எஸ்.ஜானகி அவர்கள் 04.04.1957 ஆம் ஆண்டில் முதன் முதலில் பாடிய இந்தப் படம் பெயர் என்ன தெரியுமா? 

விதியின் விளையாட்டு

படம் கூட வெளிவரவில்லை.

ஆனால் அதன் பின்னர் எத்தனை தசாப்தங்கள் 

அவர் திரையிசையில் சகாப்தமாகக் கோலோச்சினார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?


Monday, April 3, 2023

ஹரிஹரனிஸம் ❤️💛💚

இறைவனிடம் வரங்கள் கேட்டேன் 

ஸ்வரங்களை அவனே கொடுத்தான்

மனிதரில் இதை யாரும் அறிவாரோ

நான் பாடும் பாடல் எல்லாம் 

நான் பட்ட பாடே அன்றோ

பூமியில் இதை யாரும் 

உணர்வாரோ……..!

மு.மேத்தாவின் வரிகள் இசை வார்த்த இளையராஜாவுக்கு மட்டுமல்ல, பாடிக் கொடுத்த ஹரிஹரனுக்கும் கூடப் பொருந்திப் போகும். அப்படியானதொரு கடந்து வந்த பாதையில் தான் இன்று 

ஒட்டுமொத்த இசை வானில் 45 வருடங்களாகக் கோலோச்சிக் கொண்டிருக்கும் அவரின் பின்னணி தொடங்கியது.

தனது எட்டு வயதில் தந்தையை இழந்து தாயாரின் குடும்பத்தினரின் தலைப் பிள்ளையாகச் சீராட்டப்பட்ட அவரின் இசைப் பயணத்துக்குத் தன் அம்மாவே உறுதுணையாக இருந்ததை நன்றி பெருக அண்மையில் Zee Tamil சரிகமப நிகழ்ச்சியில், அவரின் பக்கத்தில் இருந்தவாறே சொன்னார் ஹரிஹரன்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் விளம்பரப் பாட்டுக்கு வந்த ஹரிஹரனிடம், தன்னுடைய முதல் படத்திலேயே பாட அழைத்தார்.

“தமிழா தமிழா 

நாளை நம் நாளே”

பாட்டு வரிகள் கட்டியம் கூறினவோ?

1992 இல் தொடங்கியது, ஆகக் குறைந்தது ஒரு தசாப்தம் தமிழ்த் திரையின் உச்ச நட்சத்திரமாக ஹரிஹரன் கொண்டாடப்பட்டவர் இன்றும் அந்த அலையின் சுழலில் இருக்கிறார்.

தொண்ணூறுகளின் நிறம், அல்லது அடையாளம் என்றால் அங்கே ஹரிஹரன் தான்.

ரோஜா தொடங்கி அந்தத் தொண்ணூறுகளின் குறிப்பிடத்தக்க வெற்றிகளுக்குப் பின்னால் ஹரிஹரனும் இருப்பார்.

“உயிரே....உயிரே...

வந்து என்னோடு கலந்து விடு....”

என்று காதலன் ஏக்கத் தொனியாக மட்டுமன்றி,

“கண்ணைக் கட்டிக் கொள்ளாதே

கண்டதை எல்லாம் நம்பாதே”

என்று புரட்சிக் குரலாக நிறமூட்டினார்.

தன்னை ஒரு பன்முகப் பரிமாணத்தில் காட்டியவர் ஏ.ஆர்.ரஹ்மானே என்று ஹரிஹரன் மனம் விட்டுப் புகழ்ந்திருக்கிறார்.

தமிழுக்கு அந்நியமான பாடகர்கள் முன்பும், பின்பும் வந்திருந்தாலும் எல்லா இசையமைப்பாளர்களாலும் கொண்டாடப்பட்டவர்கள் மிகச் சிலர். அதில் ஹரிஹரனும் முதல்வர்களில் ஒருவர்.

ஒரு பக்கம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் புத்திசை மேல் காதல் கொண்டு இயங்கிக் கொண்டே, இன்னொரு பக்கம் இசைஞானி இளையராஜா மேல் அளவற்ற பயபக்தியோடு தோள் கொடுத்தார்.

“என்னைத் தாலாட்ட வருவாளோ” இளையராஜா ரசிகர்கள் பால் ஹரிஹரனை இழுத்தாலும், ராஜாவிடம் ஹரிஹரன் பாடிய ஆகச் சிறந்தவை இன்னும் அதிகம் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும்.

அப்படியொன்று “மீட்டாத ஒரு வீணை”.

“காசி”யில் ஆறும் ஹரிஹரனைச் சேர்ந்ததும், இளையராஜா ஹரிஹரன் மீதான ஆத்ம பந்தத்தின் வெளிப்பாடெனலாம்.

“இரவா பகலா என்னை ஒன்றும் செய்யாதடி”

யுவனுக்குப் புகழ் வெளிச்சம் கொடுத்த பாடல் என்ற ரீதியில் அங்கேயும் ஹரிஹரன் இருக்கிறார். All the Best  என்று அறிமுக யுவனுக்காகப் பாடியவர் தான், 

“சொல்லாதே சொல்லச் சொல்லாதே” என்று அறிமுக இசையமைப்பாளர் பாபியின் பாடலிலும் அவரே இருப்பார்.

"ஓ காதலின் அவஸ்தை 

எதிரிக்கும் வேண்டாம்

நரக சுகம் அல்லவா

அமிலம் அருந்திவிட்டேன்

ஓ நெருப்பை விழுங்கிவிட்டேன்

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்

என் காதல் தேவதையின் கண்கள்”

சுடு கரண்டியில் விழுந்த ஐஸ்கிரீமாய் உருகி வழியும் ஹரிஹரன் குரலைக் கேட்கையில் அஜித் இன் வாயசைப்புத் தான் நினைப்பூட்டும்.

முரட்டுத்தனமான முரணாக ஒரு மெல்லிசைக் காதல் அங்கே விழுகிறது இந்தப் பாட்டு. 

“இருதயமே துடிக்கிறதா....

 துடிப்பது போல் நடிக்கிறதா...”

எப்படி “விழிகளின் அருகினில் வானம்” வழியாக இவ்விதம் பாடலாசியர் கவிவர்மன் அரிதாகப் பாடல் பண்ணி ஈர்த்தாரோ அது போலவே

நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்

மருந்தை ஏனடி தர மறந்தாய்

வாலிபத்தின் சோலையிலே

ரகசியமாய் பூப் பறித்தவள் 

நீதானே

தட தடக்கும் சந்தத்தின் பின்னிசை இயந்திரப் படிக்கட்டுகளை உருட்டும் பட்டி போல இயங்க, வழுக்கிக் கொண்டே போகும் பாடலாசிரியர் விஜயசாகர் வரிகள்.

அப்போது விழுந்தவர்கள் தான் தீனா படம் வந்து இன்று 23 வருடம் கடந்து விட்டது. இதன் இடையிசையைக் கேட்டாலேயே மகுடி கண்ட பாம்பு போல ஆகி விடுகிறோம்.

“என் காதல் தேவதையின் கண்கள்

கண்ணோரம் மின்னும் அவள் காதல்….”

பாட்டு முடிந்தாலும் வெளிவேற மனமில்லாமல் ஹரிஹரன் போல அனாத்திக் கொண்டிருக்கும் வார்த்தைத் துண்டுகள்.

“வானே வானே” பாடலில் ஸ்ரேயா கோசலுடன் பாடும் இந்த ஹரிஹரனை ஏறக்குறைய மறந்து போன ஒரு யுகத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறோமோ என்று.

தொண்ணூறுகளில் ஹரிஹரன் ஒரு பக்கம், உன்னி கிருஷ்ணன் ஒரு பக்கம் ஏரியா பிரித்து வகை தொகையில்லாமல் பாடி வந்தார்கள். 90s kids இல் ஒன்றைப் பிடித்து 

“டேய் தம்பி உனக்கு எந்தப் பாடகரைப் பிடிக்கும்?” 

என்று கேட்டால் ஹரிஹரனுடைய ஏதாவது ஒரு பாடலை சுதி மீட்டுமளவுக்குத் தொண்ணூறுகளில் தொட்டிலில் தொடக்கி வைத்தவர். அது தனியாக, விரிவாகப் பார்க்க வேண்டிய விடயம்.

அன்றைய நட்சத்திர நாயகர்களுக்கு குறிப்பாக இளம் நடிகர்களுக்கு ஹரிஹரன் பாட்டு ஒட்டிக் கொண்டு விடும். 

“கொஞ்ச நாள் பொறு தலைவா அந்த வஞ்சிக்கொடி இங்கே வருவா” என்று 1995 இல் ஆசை படத்தில் தான் அஜித்துக்காக முதலில் ஹரிஹரனைப் பாட வைத்துப் புண்ணியம் கட்டிக் கொண்டார் தேனிசைத் தென்றல் தேவா. பின்னர் கல்லூரி வாசல் படத்தில் 

“என் மனதைக் கொள்ளை அடித்தவளே” பாடலைக் கூட நடித்த பிரசாந்துக்குக் கொடுத்து விட்டார்.

அன்றைய காலகட்டத்தில் வானொலி நிகழ்ச்சி செய்யும் போது “காஞ்சிப்பட்டுச் சேலை கட்டி” பாடலோடு தான் எங்கட திருக்குமார் அண்ணர் திருக்குமார் நிகழ்ச்சியைத் தொடங்குவார். அவரின் வயசுக்கு அது அவருக்குத் தேசிய கீதம். “ரெட்டஜடை வயசு” படத்தில் வந்தது அந்தப் பாட்டு.

இப்படி ஒன்றொன்றாகக் கொடுத்து வந்த தேவா ஒரேயொரு பாடலை மட்டும் நவீனுக்கும், மனோவுக்கும் கொடுத்து விட்டு மீதி நான்கு பாடல்களையும் ஹரிஹரனுக்குக் கொடுத்த கொடை வள்ளல் ஆனார் “உன்னைத் தேடி” படத்துக்காக.

ஹரிஹரனின் தமிழ்த் திரையிசைப் பயணத்தில் உன்னைத் தேடி பாடல்கள் மிக முக்கியமானவை என்பேன். “நாளை காலை நேரில் வருவாளா” கிட்டத்தட்ட அவள் வருவாளா பாடலின் அலைவரிசை. “மாளவிகா மாளாவிகா” பாட்டு உருக வைக்கும் காதல் பாட்டு என்றால் “நீதானே நீதானே” காதல் துள்ளாட்டம், கூடவே ஹரிஹரனின் தனி ஆவர்த்தனமாய் “போறாளே போறாளே” என்று அட்டகாஷ் இசைத் தொகுப்பு இந்த உன்னைத் தேடி.

பாடலாசிரியர்கள் மூவரில் பழனி பாரதியின் முத்திரையான ஒரே சொல்லின் இரட்டை அடுக்கு வரிகள் அடையாளம் கற்பிக்கும். 

தொடர்ந்து தேவா - ஹரிஹரன் இசைக் கூட்டில் அஜித்குமாருக்குக் கிடைத்ததெல்லாம் அவல். சந்தேகம் இருந்தால் பட்டியலைப் பாருங்கள்,

“ஓ சோனா ஓ சோனா” என்று வாலியிலும் “செம்மீனா விண் மீனா” என்று ஆனந்தப் பூங்காற்றேவிலும் (இதே படத்தில் கார்த்திக்குக்கு “சோலைக்குயில் பாட்டு சொல்லிக் கொடுத்தது யாரு, பாட்டுக்கு பாலைவனம், வைகாசி ஒண்ணாந்தேதி என்று மூன்று பாட்டுகள் ) என்று பயணம் தொடர்ந்தது.

“சின்னச் சின்னக் கிளியே” என்று மீண்டும் பிரசாந்துக்காகக் கொடுத்தது கண்ணெதிரே தோன்றினாள் வெற்றியில் பங்கு போட்டுக் கொண்டது.

“ஏஹேஹே கீச்சுக் கிளியே 

என் காதில் தித்தித்தாய்

இசையாலே எனது புதிய நாளை,

நீ இன்று திறந்தாய்”

புத்தாயிரம் ஆண்டின் திறவுகோலாய், அஜித்துக்கு முகவரி கொடுத்த படத்தை மறக்க முடியுமா? 

அதே படத்தில் ஸ்வர்ணலதாவோடு கூட்டுச் சேர வைத்து ஹரிஹரனைப் பாட வைத்தார் தேவா “ஓ நெஞ்சே நெஞ்சே” என்று.

ரோஜா காத்து, நவம்பர் மாதம் என்று “ரெட்” படத்திலும் “ஆஸ்திரேலியா தேசம்” காட்டிய சிட்டிசனிலுமாக தேவா அதிகபட்சம் ஹரிஹரனை அஜித்குமாருக்காகப் பாவித்தார்.

“ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ

 ஒன் பேரச் சொல்லும் ரோசாப்பூ”

தொண்ணூறுகளை விட்டுப் பிரியாத மினி பஸ்கள் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஹரிஹரனை இவ்விதம்

எஸ்.ஏ.ராஜ்குமாரும் விட்டு வைக்கவில்லை. 

“மூக்குத்தி முத்தழகு மூணாம் பிறை பொட்டழகு

பொள்ளாச்சி மண்ணில் வெளஞ்ச நெல்லுமணி பல்லழகு”

என்னவொரு அற்புதமான கிராமியத் தெம்மாங்குக்கு, ஹரிஹரனுக்கு வேட்டி கட்டிப் பாட வைத்திருப்பார்.

ஒரு பக்கம் விஜய்க்கு

“எனக்கொரு சினேகிதி சினேகிதி”

“தொடத் தொட எனவே”

“இருபது கோடி நிலவுகள் 

கூடிப் பெண்மை ஆனதோ”

என்று கொடுத்துக் கொண்டே, 

“ஓ வந்தது பெண்ணா....

   வானவில் தானா” 

என்னவொரு அற்புதமான பாடல் “அவள் வருவாளா” படத்தில் அஜித்துக்குக் கொடுத்தார்.

 “ஒரு தேவதை வந்து விட்டாள்” பாடல் நீ வருவாய் என படத்தில் பார்த்திபனைச் சேர்ந்தது. அது போலவே ரஹ்மான் இசையில் “கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்” படத்தின் அதே வரிப் பாடல் அப்பாஸுக்குப் போனது. 

தோல்விப் படமென்றாலும் இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமாரின் “உன்னைக் கொடு என்னைத் தருவேன்” முத்திரை பதித்ததில் “இதயத்தைக் காணவில்லை” என்று அஜித்தாக வந்தார் ஹரிஹரன்.

வைரமுத்து - பரத்வாஜ் - சரண் கூட்டணிக்கு நட்சத்திர அந்தஸ்த்தைக் கொடுத்த அஜித் படங்களில் தலையாயது “காதல் மன்னன்”.

“வானும் மண்ணும் வந்து ஒட்டிக் கொண்டதே”

பாடல் பரத்வாஜ் இன் இசை யாத்திரையில் அற்புதமான இசைக்கம்பளம்.

“கொஞ்சும் மஞ்சள் அழகே உன்னைச் சொல்லும்” கார்த்திக் ராஜாவுக்கு அதிக வெளிச்சத்தைக் கொடுத்த “உல்லாசம்” படத்தில் இந்தப் பாடல் தனித்து நின்று ஜாலம் புரியும். ஹரிஹரன் & ஹரிணி ஜோடி குரல்களில் ஒரு அந்நியோன்யம் என்றால் இசையிலும் புதுமை காட்டியது.  ‪‬

“சிரித்து சிரித்துசிறையிலே,

சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்

ரகசியமாய் ரகசியமாய்

புன்னகைத்தால் பொருளென்னவோ?”

கார்த்திக் ராஜாவை இன்னமும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோமே அந்தக் கொண்டாட்டத்தின் திறவுகோலாய் இந்தப் பாடல் இருக்கும்.

“அன்பே அன்பே நீ என் பிள்ளை” 

பாடலைக் கேட்டாலேயே மடியில் வைத்துத் தாலாட்டுவது போலிருக்கும். “உயிரோடு உயிராக” படத்தில் உருக்கிய வித்யாசாகர்,

“ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம் சுகம் சுகம்” என்று வில்லனில் நெகிழ வைத்து விட்டார். ஹரிஹரனுக்கே உரித்தான அந்த நாசிக் குரலைக் கேட்டுக் கொண்டே  இருக்கலாம். 

“ஒரு தேதி பார்த்தா 

தென்றல் வீசும் 

ஒரு கேள்வி கேட்டா

முல்லை பேசும்”

விஜய்யின் ஆரம்ப காலத்துப் படைப்புகளில் கூடப் பாடல்கள் இனிக்கும் என்று வித்யாசாகர் தன் பங்குக்குக் கொடுத்திருப்பார்.

இதெல்லாம் மாயாஜாலம்.

அப்படியே லிங்குசாமிக்கு வெற்றி சமைத்த ரன்னில்

கொடுத்த

“கண்களால் கண்களில்

தாயம் ஆடினாய்

கைகளால் கைகளில்

ரேகை மாற்றினாய்

பொய் ஒன்றை ஒப்பித்தாய்

ஐய்யயோ தப்பித்தாய்

கண் மூடி தேடத்தான்

கனவெங்கும் தித்தித்தாய்”

ஒவ்வொரு அடுக்குகளிலும் ஜாலம் காட்டிச் செல்வார் இந்த வித்தகர்.

அந்தி மஞ்சள் மாலை

ஆளில்லாத சாலை

தலைக்கு மேலே போகும்

சாயங்கால மேகம்

முத்தம் வைத்த பின்னும்

காய்ந்திடாத ஈரம்

எச்சில் வைத்த பின்னும்

மிச்சமுள்ள பானம்

கன்னம் என்னும் பூவில்

காய்கள் செய்த காயம்

ப்ரியம் ப்ரியம்

ப்ரியம் ப்ரியம்

ப்ரியம் ப்ரியம்

ப்ரியம் ப்ரியம்

பனித்துளியை விட மெதுமெதுப்பாய் வார்த்தைகளைக் கையாளும் ஹரிஹர ஜாலம் ஆஹா, இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே நீளுமே?

“Muscle memory” என்றதொரு நுட்பத்தை ஹரிஹரன் கோடிட்டுக் காட்டினார். அதாவது தொடர்ச்சியும், பயிற்சியும் தான் ஒரு பாடகனை முழுமையாக்கும் என்று.

அந்தக் கூற்று பாடகர்களின் அகராதி என்று வைத்துக் கொண்டால,

நமக்கோ ஹரிஹரன் பாடலை யார் பாடினாலும் நம் memory இல் ஹரிஹரனின் குரல் தான் அதை மேவியதாக வந்தொலிக்கும்.

நம் ஊனில் உறைந்து போன memory என்பதாலோ?

நேற்று சிட்னியில் இசை விருந்து படைத்து விட்டு

இன்று தனது பிறந்த நாளில் கங்காரு தேசத்தில் இருக்கிறார்.

இன்று எங்கள் திருமண நாள்.

திருமண வீடியோவில் இளையராஜா பாட்டுகள் மட்டும் தான் இருக்க வேண்டும் என்று வீடியோ எடுத்த ஜெகதீசன் அண்ணனிடம் சொல்லி வைத்தேன். ஆனால் அவர் ஹரிஹரன் பாட்டு ஒன்று வைத்தார். அது இதுதான்

தவமின்றி கிடைத்த வரமே

இனி வாழ்வில் எல்லாம் சுகமே

https://www.youtube.com/watch?v=GO1ciIWZJmM 

என் கோபமெல்லாம் அதைக் கேட்டுப் பறந்துடுச்சு 😀

என் சுவாசம் உன் மூச்சில்

உன் வார்த்தை என் பேச்சில்

ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் 

என் வாழ்வே வா.....

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 

பாடகர் ஹரிஹரன் அவர்களுக்கு

கானா பிரபா

03.04.2023


Saturday, April 1, 2023

ஷெனாய் மேஸ்ட்ரோ பண்டிட் பாலேஷ்


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஸகரி ம கரிஸநி

ஸநிப ம பநி ஸகரி

https://www.youtube.com/watch?v=lrdErxdLQek

“எந்தன் நெஞ்சில் நீங்காத 

 தென்றல் நீதானா” பாடலின் 3.03 வது நிமிடத் துளியில் மிதக்கும் 

ஆலாபனையைக் கேட்டு விட்டு, அப்படியே ஓடிப் போய்

https://www.youtube.com/watch?v=4NIgHgQmpus

2.50 வது நிமிடத்தில் துள்ளிப் பாயும் “மகாநதி" ஷெனாய் என்ற இசை என்ற இன்ப ஊற்று “ஶ்ரீரங்க ரங்க நாதன்" ஐக் கண்ட புளகாங்கிதத்தில் கொட்டுவதை அப்படியே அள்ளிப் பருகவும்.

முன் சொன்ன அந்த ஆலாபனை குரலும், பின்னால் வந்த அந்த இசைப் பொழியலும் ஒருவரே, அவரே பண்டிட் பாலேஷ் அவர்கள்.

இசைஞானி இளையராஜாவின் இரண்டாவது காலகட்டத்து வாத்திய விற்பன்னர் கூட்டில் எண்பதுகளின் இறுதியில் தொடங்கித் தொண்ணூறுகளிள் ஷெனாய் மழை பொழிந்த பாடல்களின் வாசிப்பாளராகவும், பாடல்களின் இடையே ஒலித்த ஆலாபனைக் குரலாகவும் விளங்கியவர் பாலேஷ் அவர்கள். அதுமட்டுமல்ல பின்னணி இசைத் துணுக்குகளின் அடுக்குகளிலும் அவரின் அடையாளத்தை இனிமேல் தேடிக் கேட்டுக் கொள்ளுங்கள்.

ரமேஷ் நாயுடு, ஷியாம், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் - கணேஷ், இளையராஜா, கங்கை அமரன், ஏ.ஆ.ரஹ்மான், தேவா, வித்யாசாகர், எம்.எம்.கீரவாணி என்று இந்தியாவின் ஆகக் கூடிய இசையமைப்பாளர்களிடம் வாசித்த பெருமையும் பாலேஷ் அவர்களைச் சாரும்.


தன் பிள்ளை தகவல் தொழில் நுட்பத் துறையில் கற்றுத் தேர்ந்தாலும், தன்னுடைய தாய்த் துறையான ஷெனாய் ஐ கிருஷ்ணா பாலேஷ் ஐ இசை மேதை உஸ்தான் பிஸ்மில்லா கான் அவர்களிடம் கற்க வைத்து அந்தத் துறையிலேயே கலை படைக்கவும், இசைக் கற்கை கொடுக்கவும் வழி காட்டியிருக்கிறார்.

இந்த இசைக் கூட்டை நீங்களும் பருக

https://www.youtube.com/watch?v=y-5EdjZrX1k

தென்னிந்திய மொழிகளில் எஸ்பிபியும், இளையராஜாவும் கோலோச்சுவது போல, இசைத்துறையில் இன்றும் பெருமதிப்புடன் பார்க்கப்படும் ஒரு ஆளுமை பாலேஷ் அவர்கள்.

அதனால் தான் ராவணனில் ஏ.ஆர்.ரஹ்மானும், பாகுபலியில் கீரவாணியும் என்று விடாமல் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

பத்மஶ்ரீ விருது உட்பட ஆந்திரா, கர்னாடகம் எல்லாம் அவருக்கு விருதுகளாகக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

நாகசுரம் ஒரு தேவ வாத்தியம், அது கொடுக்கும் இசையின் கனதி மிக அதிகம் என்று வாயாப் போற்றியவர் இசைஞானி இளையராஜா. அதனால் தான் நாகசுர வாத்தியப் பாவனைக்கு மாற்றீடாக இந்த ஷெனாய் ஐ அவர் அதிகம் உள்வாங்கி, திரைப்படத்தின் மங்கலக் காட்சிகளிலும் பயனபடுத்தியிருக்கிறார்.



தொண்ணூறுகளில் நூற்றுக்கணக்காக இளையராஜாவின் பாடல்களிலும் பின்னணி இசையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இசைத் திறமை கொண்டோர் பலர் இருக்கலாம், ஆனால் அந்த Tone கைவரப்பெற்றவர்களே பாலேஷ் போல இசையமைப்பாளரின் அபிமானம் பெற்றவராய் இருக்க முடியும்.

பாலேஷ் ஐ மனதோடு மனோ, ஆதன் பேட்டி தவிர சுகாவும் விரிவாக சொல்வனம் இதழில் பேட்டியாகப் பகிர்ந்துள்ளார்

அதைத் தவறாமல் படியுங்கள்.

https://solvanam.com/2011/03/24/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B7%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE/


இன்னொரு வேடிக்கையான நிகழ்வு

“மதுரை மரிக்கொழுந்து வாசம்” பாடலில் https://www.youtube.com/watch?v=EJmyGS5RW8Q

1.29 வது நிமிடத்தில் ஒலிக்கும் ஷெனாய் வாத்தியக் கீற்றை பாலேஷ் இற்கு முன்னவர் இளையராஜாவின் வாத்தியக் குழுக் கலைஞர் சுபான் வாசித்ததை, பின்னர் தெலுங்கில் 

Jagadeka Veerudu Atiloka Sundari படத்தில் “யமஹோ நீ”

https://www.youtube.com/watch?v=1ssBzlc4fWE

பாடலில் பாலேஷ் ஐ வைத்து இன்னொரு வித்தியாசமான இசைக் கோவையாகக் கொடுத்திருப்பார் ராஜா.

“ஆலப் போல் வேலப் போல்”

https://www.youtube.com/watch?v=1Bmpg3s46L8

பாடலில் “தும்தும் தத் தும் தும்தும்” கூட்டுக் குரல்களைத் தொடர்ந்து பாலேஷ் இன் ஷெனாய் கல்யாண வீட்டுப் பன்னீர் தெளித்தல் போல வஞ்சனை இல்லாமல் வாரியிறைக்கும்.

கல்யாணக் காட்சியையும்,  இறுக்கமான மன நிலையையும் கலந்த சூழலில் கள்ளப்பார்ட் நடராஜன் (ரேவதியின் தந்தை) ஐயா என்று நெகிழ்வோடு கைகூப்பப் பிறக்கும்

https://www.youtube.com/watch?v=iIYSpTO3Ev8

அந்த இசையைக் கேட்டாலேயே மெய் சிலிர்த்துப் போய் கண்கள் குளமாகும். அப்பேர்ப்பட்ட இசையின் ஆக்க கர்த்தா 

பாலேஷ் அவர்கள் பல்லாண்டு காலம் இசையோடு வாழ

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Friday, March 31, 2023

சுஜாதா ❤️💚💛



“காற்றும் இவனுக்குக் கட்டுப்படும்

இவன் செப்படி வித்தைக்காரன்

தரை வேண்டாம் என்றான் 

தலை கீழாய் நின்றான்”


வாணியம்மா தொடங்க,


“தொண்டு கிழங்களும் 

 கண்டு பயப்படும் காரியம் கற்று வைத்தான் கடல் பாலாய் மாறும்”


என்றொரு பிஞ்சுக் குரல் பின்னால் வரும். யாரடா இது என்று அறியாப் பருவத்தில் அதிசயித்ததுண்டு. அந்தக் காலத்தில் உள்ளூர் தொலைக்காட்சி ஒலிபரப்பில் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலாக வந்து போன அந்தப் பாட்டு

“செல்லக் குழந்தைகளே

 சிந்தும் வசந்தங்களே”

 https://youtu.be/4DLmmQ7Fr8Q


அப்படி அதிசயத்த அந்தக் குரல் சுஜாதாவுடையது. 

எழுபதுகளில் இளையராஜாவிடமும்,

தொண்ணூறுகளில் ரஹ்மானிடமுமாக

தமிழில் இரு பிறவி எடுத்த குரல்.


பாடகி சித்ரா போலவே சுஜாதாவின் அந்தப் பிஞ்சுக் குரல் மீது அளவற்ற் பிரியம் எனக்கு.


இன்றைக்கு சூப்பர் சிங்கரில் வாண்டுகள் எல்லாம் இசைஞானி இளையராஜாவின் பாடல்களைப் பாடும் போது உள்ளூர ஒரு உவகை எழுமல்லவா? ஆனால் தனது 14 வயதிலேயே “காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ” என்று ராஜா இசையில் கவிக்குயில் படத்துக்காகப் பாடிவிட்டார் சுஜாதா. 

மலையாளத்தில் பாட வந்த போது அவருக்கு வெறும் 12 வயதே தான்.


தமிழ் சினிமாவில் பெண் குரல்களில் தனித்துவமாக மிளிரும் குரல் சுஜாதாவினுடையது.


அப்படியே மை டியர் குட்டிச்சாத்தானை  மலையாளத்திலும் கேட்டு விட்டு வாருங்கள். அங்கே ஜானகி என்ற ராட்சசியும், எஸ்.பி.சைலஜாவுமாக

ஆலிப் பழம் பெருக்கான்


https://youtu.be/wOraNbudSPY


எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்களைப் படமாக்கும் சீசனாக எழுபதுகளின் இறுதிப்பகுதி இருந்தது. அதில் முதல் முயற்சியாக அமைந்தது "காயத்ரி" என்ற திரைப்படம். ரஜினிகாந்த் ஆரம்பகாலத்தில் வில்லனாகவும், எதிர் மறை நாயகனாகவும் நடித்து வந்த காலத்தில் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்திய படங்களில் காயத்ரியும் ஒன்று. 


1977 ஆம் ஆண்டு வெளிவந்த அந்தப் படத்தில் வந்த ஒரு இனிய பாடல் "காலைப்பனியில் ஆடும் மலர்கள் காதல் நினைவில் வாடும் இதழ்கள்" அந்தக் காலகட்டத்தில் வெற்றிகரமான மசாலாத் திரைக்கதைகளை மட்டுமல்ல, இனிய பாடல்கள் பலவற்றுக்கும் திரையிசைக்கவிஞராக இருந்து சிறப்புச் சேர்த்திருக்கின்றார் பஞ்சு அருணாசலம். கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக இருந்த அனுபவம் இந்தத் திரையிசைக் கவிதைக்கு உதவி புரிந்திருக்கின்றது.


அந்தவகையில் அமைந்தது தான் "காலைப்பனியில் ஆடும் மலர்கள்" 


https://youtu.be/NPSqeBLBt4E


என்ற இந்தப் பாடல். மணமாகிப் புகுந்த வீடு போன அந்தப் பெண் அந்த மலர்ச்சியில் பாடும் சூழ்நிலைக்குப் பொருந்தும் வரிகளுக்குத் துணையாக மெல்லிசையாக இழைத்திருக்கின்றார் ராஜா. ஒரு காலைச் சூழ்நிலைக்குப் பொருந்தும் இதமான இசையாக கையாண்டிருக்கும் கருவிகளும் துணை போயிருக்கின்றன. ஆரம்பத்தில் மெல்லிய ஹம் கொடுத்து ஆரம்பிக்கும் சுஜாதாவின் குரல் கூட கள்ளங்கபடமில்லாத் தொனியோடு இருக்கின்றது. பாடலின் இடையிலும் லலலலா, இம்ஹிம் இம்ஹிம் என்று சங்கதிகளைக் குரலிசையாக ஹம் ஐ லாவகமாகச் செருகியிருப்பது சிறப்பு. ஒரு திகில்ப்படத்துக்கு இப்படியான பாடலை லாவகமாகப் பொருத்தமான இடத்தில் சேர்ப்பது ஒரு சவால். அதில் வெற்றி கண்டிருக்கின்றார்கள் பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம், பாடகி சுஜாதா கூடவே இசைஞானி இளையராஜா


ஒரே ஆண்டில் ராஜா இசையில் இரண்டு ஹிட் பாடல்களைக் கொடுத்து விட்டு இடையில் காணாமல் போய் பின்னர் ஒரு தசாப்தம் கழித்து (இடையில் தமிழில் ஒரு சில வாய்ப்புக்கள் கிட்டினாலும் பிரபலமாகவில்லை) இன்னொரு புதிய பாணி இசையமைப்பாளராக அறிமுகமான ரஹ்மான் இசையில் தமிழில் மறு அறிமுகமாகும் வாய்ப்பு அல்லது பெருமை சுஜாதாவைச் சேரும். பாடகி சுஜாதா 1977 இல் இளையராஜா இசையில் முன்னர் பார்த்த காயத்ரி பாடத்தில் பாடுவதற்கு முன்னதாக அவருக்கு வாய்த்தது "கவிக்குயில்" வாய்ப்பு. பாலமுரளி கிருஷ்ணா, எஸ்.ஜானகி போன்ற ஜாம்பவான்களோடு சுஜாதாவின் குரலைத் தனித்துவமாக்கியது "காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ" இங்கேயும் பஞ்சு அருணாசலம் தான் துணை போயிருக்கின்றார். பதின்மவயதுப் பாடகியாக ஜேசுதாசின் வழிகாட்டலில் இளையராஜாவிடம் அறிமுகம் கிட்டிய சுஜாதா பாடிய "காதல் ஓவியம் கண்டேன்" பாடல் ஒரு காலகட்டத்தில் இலங்கை வானொலியில் மகா மெகா ஹிட் பாடலாகப் பலகாலம் ஒலித்தது இன்னும் ஓயவில்லை. அந்தப் பெருமையில் 1980 ஆம் ஆண்டு கே.ஜே.ஜேசுதாஸ் யாழ்ப்பாணம் வந்தபோது வீரசிங்கம் மண்டபத்தில் இரட்டைச் சடை போட்ட சுஜாதா என்ற இந்தச் சிறுமியும் கூடவே வந்து பாடிய இந்தப் பாடலின் அந்தப் பசுமை நினைவுகளை இன்றும் அந்த வீடியோ கசட்டில் போட்டு இரை மீட்கின்றேன். 


"காதல் ஓவியம் கண்டேன் கனவோ" 


https://youtu.be/8jsH1QKn-Ao


45 வருஷங்கள் கழிந்த நிலையில் இன்றைய இளம் நாயகிக்குக் கூடப் பொருந்திப் பார்க்கக் கூடிய அதே புத்துணர்வைத் தன் இசையாலும் குரலினிமையாலும் நிரப்பிய பாடல். இந்தப் பாடலிலும் சுஜாதாவுக்குச் சுதந்திரமான துள்ளல்களை வெகு இலாவகமாக்கி அடக்கி விட்டிருக்கின்றது.


மேற்குறித்த இரண்டு பாடல்களுமே சுஜாதா ஒரே ஆண்டில் பாடிய வண்ணம் "கா" என்ற அடியில் வருவது இன்னொரு சிறப்பு.


சில பாடல்கள் பெண்களுக்கே உரித்தான, பெண்ணின் உணர்வுகளின் அடி நாதமாக விளங்கினாலும் அந்தப் பாடல்களை பொதுவானதொரு உணர்ச்சிப் பிரவாகமாக எல்லோராலும் ரசிக்கத்தக்கதாக மாறிக் கேட்டு ரசிக்க வைக்கும், எவ்வளவு தரம் கேட்டாலும் அவை திகட்டாது என்பதற்கு இந்த இரண்டு பாடல்களுமே சாட்சி.


ஜானி படத்தின் “ஒரு இனிய மனது” https://youtu.be/26nyoGoIxFs கூட சுஜாதாவின் கணக்கில் சேர்க்க வேண்டிய அற்புதம். எல்பியில் ஜென்சி ஆக்கி இருப்பார்கள்.


“நீ இல்லாத போது 

ஏங்கும் நெஞ்சம்

சொல்லாத கதை நூறு.....”


https://youtu.be/S1ScCPcqhzU


இந்தப் பாடலை இதுவரை கேட்காதவர்களோ அல்லது காலம் கடந்து மீண்டும் ஒருமுறை கேட்பவர்களோ ஆத்மார்த்தமாக உங்கள் காதுகளைக் கொடுத்துப் பாருங்கள் பிறகு தெரியும் சங்கதி. நாள் முழுக்க பல்லவியை முணுமுணுத்துக் கொண்டிருப்பீர்கள் அப்படியொரு அந்நியோன்யத்தை ஏற்பட்டுத்தும் பாட்டு இது.


அந்தக் காலத்தில் தானே இயக்காமல் கதை, வசனம் என்று பாக்யராஜ் பங்களித்த படங்களில் ஒன்று இந்தப் பாட்டு இடம்பெற்ற “இளமை கோலம்”. இந்தப் பாடத்தில் “வச்ச பார்வை தீராதடி”, “ஶ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா” போன்ற தேனான பாட்டுகளும் உண்டு. பாடல்களை கவிஞர் கண்ணதாசனும், கங்கை அமரனும் எழுதியிருக்கிறார்கள்.  “நீ இல்லாத போது” பாடலை கங்கை அமரன் யாத்திருக்கிறார்.


“புது வெள்ளை மழை” பாடலோடு தன்னோடு இரண்டாவது சுற்றை ஆரம்பித்த பாடகி சுஜாதாவின் முதல் சுற்றில் இளையராஜா இசையில் பாடியளித்த பொக்கிஷப் பாடல்களில் ஒன்று தான் இந்த “நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்” பாட்டு. எழுபதுகளின் இறுதியில் இசைஞானி இளையராஜாவின் இசையில் ஜென்ஸி, சொர்ணலதா (இன்னொருவர்), பூரணி, இந்திரா என்று கட்டுக்கடாத அறிமுகப் பாடகிகள் போன்று சுஜாதாவுக்கும் பல நல்ல பாடல்கள் கிட்டின. “நீ இல்லாத போது” பாடலைக் கேட்கும் போது ஒரு அனுபவப்பட்ட பாடகி போல இணைந்து பாடும் மலேசியா வாசுதேவனுக்கு ஈடு கொடுத்துப் பாடியிருக்கிறார். இதைப் பாடிய போது அவருக்கு வயது பதினேழு.


மலேசியா வாசுதேவன் அவர்களைப் பற்றி என்ன சொல்ல... இந்த மாதிரியான பாடலைக் கேட்கும் போதே “அலங்காரப் பொன்னூஞ்சலே” (சொன்னது நீ தானா), “நீங்காத எண்ணம் ஒன்று” (விடியும் வரை காத்திரு), “காலங்கள் மழைக்காலங்கள்” (இதயத்தில் ஒரு இடம்) என்று வரிசை கட்டி வந்து விடும் இவர் நினைப்போடு.

இந்த மாதிரி சாந்தமான பாவத்தோடு பாடும் பாடல்களில் வெகு அடக்கமாக, உணர்ச்சிப் பெருக்கோடு மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடுவதைக் கேட்பவர்களும் உணரக் கூடிய அளவுக்குக் கரைந்து பாடுவார்.


“எது வரையில் சுகமென அதை நான் காண்பேன்” என்று பயணிக்கும் இடங்களில் எல்லாம் மலேசியா முத்திரை இருக்கும்.

“நீ.....இல்லாத போது....ஏங்கும் நெஞ்சம்....” இப்படியானதொரு நீட்சியானதொரு சங்கதியைப் போட்டு பல்லவியிலேயே கேட்போரைக் கட்டிப் போடும் வித்தைக்கார ராஜாவின் இசையில் தவிர்க்கக் கூடாத பாட்டு இது.


இங்கு நாம் பாடுவோம்

புது கீதாஞ்சாலி

அலை நான்கு விளையாடும்

கவி பாடி


https://youtu.be/4DLmmQ7Fr8Q


இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாடகி சுஜாதாவுக்கு


கானா பிரபா

Thursday, March 30, 2023

கிழக்குச் சீமையிலே பாடல்கள் ❤️ ஒரு சிலாகிப்பு


செங்காட்டு மண்ணும் 

நம் வீட்டுப் பொண்ணும்

கை விட்டுப் போகக் 

கண்டா கண்ணீர் வருமே....

https://www.youtube.com/watch?v=joijwWyvKfk

ஏனோ தெரியவில்லை கடந்த நான்கு நாட்களாக இந்த வரிகள் மட்டும் மனசின் ஓரத்தில் ஒளிந்திருந்து அவ்வப்போது தலைதூக்கி முணுமுணுக்கும். இம்மட்டுக்கும் “கிழக்குச் சீமையிலே” படத்தைப் பற்றியோ, இந்தப் பாடலைப் பற்றியோ கூட யோசிக்காமல் தான் இருந்தேன். அப்படியிருந்தும் “நினைவுக் கிளப்பி" ஆகத் துரத்திக் கொண்டிருக்கிறது.

என்னதான் ஆயிரம் விமர்சனம் இருந்தாலும், கண்ணதாசனுக்குப் பின் ஒரு கதையின் கருவியாக, இன்னும் ஒரு படி மேலே போய் ஆன்மாக இயங்கும் வரிகளை யாத்ததில் வைரமுத்துவின் பங்கு அளப்பரியது. திறமை மிகு பாடலாசிரியர் பலர் என்பது வேறு, அந்தந்தக் களங்களில் குறித்த படைப்பின் ஆக்ககர்த்தாக்களில் இயக்குநர், இசையமைப்பாளருக்கு அடுத்ததாகப் பாடலாசிரியர் என்று வரும் போது அந்த அடையாளத்தை நிறுவிய வகையில் வைரமுத்துவின் பங்கு தனித்துவமானது. கிழக்குச் சீமையிலே பாடல்கள் ஒவ்வொன்றைக் கேட்டாலும், அல்லது ஒட்டுமொத்தமாக அந்தப் பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாகக் கேட்டாலும் அந்தப் படைப்பின் “நிறத்தை” பாடல்களில் கொண்டு வந்திருப்பார்.

ஏ.ஆர்.ரஹ்மானைப் பொறுத்தவரை “கிழக்குச் சீமையிலே” ஒரு கட்டுடைப்பு எனலாம். 

இந்தப் படத்துக்குப் பின்னரும் அவ்வப்போது கிராமியத் தெம்மாங்கைத் தொட்டுப் போகும் வகையில் அவர் பாடல்களை இசையமைத்திருந்தாலும், ஒரு ஒட்டு மொத்தப் படைப்புக்கும் நியாயம் கற்பிக்கும் பாடல்களைக் கொடுத்த வகையில் “கிழக்குச் சீமையிலே” சாதனையை அவராலேயே முறியடிக்கவில்லை என்று சொன்னாலும் தகும். 

“பச்ச ஒடம்புக்காரி 

பாத்து நடக்கச் சொல்லுங்க”

அந்த இடத்தைக் கேட்டாலேயே மயிர்க்கால்கள் குத்திட்டுச் சிலிர்க்கும்,

அப்படியே கொஞ்சம் தள்ளிப் போய்

“மச்சான திண்ணையிலே போத்திப்

படுக்கச் சொல்லு.. 

இஹ்ஹ்ஹு ஹி”

என்ற எள்ளலாகட்டும், எஸ்பிபி என்ற ராட்சசனை 

“மானூத்து மந்தையிலே” 

https://www.youtube.com/watch?v=DCArpOtp3z4

தாய்மாமன் சீர்செனத்தியோடு கூட அழைத்துப் பாட வைத்ததாகட்டும்,

வண்டிமாடு எட்டு வெச்சு

முன்னே போகுதம்மா

வாக்கப்பட்ட பொண்ணு மனம்

பின்னே போகுதம்மா

https://www.youtube.com/watch?v=Giy-Wwd0VnQ

அந்த ஜெயச்சந்திரன் குரலின் தொனியை முன் பின் கேட்டதுண்டா?

கூடவே தன் முத்திரை ஆலாபனையோடு எஸ்.ஜானகி....

“வலது கண்ணைப் பிரிஞ்சு போற 

இடது கண்ணே, 

அண்ணே உசிரு இங்க 

அரை உசுருஆனதம்மா

நீ விளையாட தாவாரம்

வெறிச்சோடிப் போனதம்மா

குறுணை போட்டு நீ வளர்த்த

கோழி கூட அழுவுதம்மா

வலது கண்ணைப் பிரிஞ்சு போற

இடது கண்ணே வா”

இப்படித்தான் ஆரம்பத்தில் “கத்தாழங்காட்டு வழி” பாடலுக்குத் தொகையறாவை அமைத்தாராம் வைரமுத்து. ஆனால் பாடலின் காட்சி வடிவத்துக்குப் பொருந்தவில்லை என்று ரஹ்மான் சொல்லவும் மாற்றிய தொகையறா தான் “கத்தாழங்காட்டு வழி” என்ற செய்தியை சாய் வித் சித்ராவில் இயக்குநர்/நடிகர் மாரிமுத்து பகிர்ந்திருந்தார். 

அப்படியே இள வட்டங்களுக்காக மனோ & சுஜாதாவை ஜோடியாக்கி

“அத்தைக்குப் பிறந்தவளே”

https://www.youtube.com/watch?v=wxX5-wvOoRc

பாண்டியனை மீண்டும் மறுவாழ்வு கொடுக்க, ஒரு பாட்டையும் கொடுத்த “எதுக்குப் பொண்டாட்டி” அதில் தன் ஆஸ்தான சாகுல் ஹமீத்துடன், ஆரம்ப காலத்து நட்பு டி.கே.கலாவையும் என்று கலவையான தொகுப்பாக அமைந்த ஒரு கிராமியக் கொண்டாட்டம் இந்த “கிழக்குச் சீமையிலே”

சொல்லப் போனால் கே.ஜே.ஜேசுதாஸ், சுசீலா, வாணி ஜெயராமையும் மட்டும் ஆட்டத்தில் சேர்த்திருந்தால் எண்ணிப் பாருங்கள்,

எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், ஜானகி, டி.கே.கலா, சசிரேகா சித்ரா, மனோ இவர்களுடன் சேர்ந்த ஒரு முந்திய யுகத்துப் பாடகர்களைக் கொண்டாடும் திருவிழா என்று கூட இந்த இசை ஆல்பத்துக்குச் சூட்டியிருக்கலாம்.

“கிழக்குச் சீமையிலே” பாடல்களில் அன்பு, அரவணைப்பு, பாசம், மகிழ்ச்சி, சோகம், காதல் என்று எல்லாமே உணர்வோட்டமாக இருந்ததால் தான் அவை அந்தப் படைப்போடும் மிக நெருக்கமாக அமைந்து முழுமையான வெற்றிக்கு வழி சமைத்தது. ஒரு அங்காளி பங்காளிக் கதையை (ரத்னகுமார் கதாசிரியர்) 90களில் ஒரு புதிய போக்கில் காட்சிப்படுத்தியவர் பாரதிராஜா. அதன் பின்னரும் இன்னொரு அலையும் எழும்பியது எனலாம்.  எல்லாமே சரி சம விகிதத்தில் அமைந்த கலவை அது.

அதன் பின் இதே கூட்டணியில் வெளியான “கருத்தம்மா” படத்தின் நிலவியலும், கதைக்களமும், பாடல்களோடு ஒட்டி உறவாடவில்லை. பாடல்கள் தனியே கேட்கத் தான் இனிக்கும்.

ஒரு பக்கம் “கிழக்குச் சீமையிலே” வைரமுத்து வரிகளிலும், இன்னொரு பக்கம் “உழவன்” வாலியின் வரிகளிலும் (மாரிமழை பாடல் இயக்குநர் கதிர்) என்று 1993 தீபாவளிக்கு வெளியாகிறது. அதாவது ஒரே தினத்தில் இரு கிராமியப் படங்களுக்கு ரஹ்மான் இசை. கூடவே இன்னொரு படமான “திருடா திருடா” வில் “ராசாத்தி என் உசுரு” வையும் சேர்த்து மூன்றாக்கலாம்.

ஏ.ஆர்.ரஹ்மான் தனி இசைத் தொகுப்புக்கு அணி சேர்த்த ஆரம்ப காலப் பாடகர் மலேசியா வாசுதேவன் 

டிஸ்கோ டிஸ்கோ பாடல்களைக் கேட்க 

https://www.youtube.com/watch?v=5al2Nxu1RiA&list=PLI8EXXUlH-NFfj1hYEkBUOfKMrga_BsKQ

பாசில் படங்களிலும், பாலுமகேந்திரா படங்களிலும் ஜேசுதாஸ் ஒரு கெளரவப் பாடகராக இயங்குமாற் போல பாரதிராஜா படங்களில்

மலேசியா வாசுதேவன். அந்தக் கணக்கில் கிழக்குச் சீமையில் வந்திருந்தாலும் கூட, ஏ.ஆர்.ரஹ்மான் மலேசியா வாசுதேவனுக்குக் கொடுத்த ஆகச் சிறந்த கெளரவமாக இந்தப் பாடலையே சொல்வேன்.  

“செம்மண்ணிலே தண்ணீரைப் போல் 

உண்டான பந்தம் இது” 

என்று அவரே பாடியது போல, 

கிராமியத்து ராகத்துக்கு மலேசியா வாசுதேவன் என்ற கலைஞன் குரல் ஆத்மார்த்தமாக அமைந்து விடும். அதையே இதுவும் மெய்ப்பிக்கின்றது. கேட்கும் போது பாசமென்னும் பெருஞ்சுமையை நம் மேல் இறக்கி வைக்கிறார். அதை நாம் பிரித்தெடுக்க முடியாமல் அடி மனக் கிணற்றில் போட்ட கல்லாகக் கீழிறங்கி விடுகிறது.

தாய் வீட்டுப் பேரும் தாய் மாமன் சீரும்

தெக்கத்திப் பொண்ணுக்கொரு சொத்து சுகமே

சீர்கொண்டு வந்தும் பேர்கெட்டுப் போனா

சொல்லாம துக்கப்படும் சொந்த பந்தமே

https://www.youtube.com/watch?v=joijwWyvKfk

கானா பிரபா

30.03.2023


Tuesday, March 28, 2023

மணிரத்னம் உதவி இயக்குநராக இருந்த படம்


“என் கானம்

 இன்று அரங்கேறும்

என் சோகம் 

இன்று வெளியேறும்

https://www.youtube.com/watch?v=emuoLGX3EHs

இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே அல்லது கேட்டு விட்டு மேற்கொண்டு படியுங்கள்.

திரைப்பட உலகத்துக்கு வருவதும், அதில் வெற்றி பெறுவதும் கூட ஒரு வகை விபத்துத்தான். அப்படியானதொரு செய்தி தான் இந்தப் பதிவும்.

சமீபத்தில் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் விஜயலட்சுமி அந்தப் பேட்டியில் தன்னுடைய தந்தை, பிரபல இயக்குநர் பந்துலுவைப் பற்றி அதிகம் பேசியிருந்தார். ஆனால் அவருடைய சகோதரன் பி.ஆர்.ரவிசங்கர் பற்றி ஒற்றை வரியில் முடித்துக் கொண்டார். ஆனால் அதற்குப் பின் ஒரு பெரிய செய்தி இருக்கிறது. அதை அவரும் சொல்லவில்லை.

தனக்கு சினிமாவில் ஈடுபடவே விருப்பம் இல்லாத சூழலில் தான் சினிமாவுக்குள் ஒளிப்பதிவாளராக நுழைவதற்கு முக்கிய காரணம், ஒளிப்பதிவாளர் அசோக்குமார் என்று குறிப்பிட்ட பி.ஆர்.விஜயலட்சுமி,  

தன் அண்ணன் இந்த விஷயத்தில் நேர்மாறாக, சினிமா குறித்த ஏராளம் புத்தகங்களை வாங்கிப் படித்துத் தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொண்டிருந்தார், மணிரத்னத்தின் நண்பர் என்று சொன்னதோடு சரி.

அந்த பி.ஆர்.ரவிசங்கர் வேறு யாருமல்ல.

இன்று இசைஞானி ரசிகர்களால் காலம் கடந்தும் கொண்டாடப்படும் “ஈரவிழிக் காவியங்கள்" படத்தின் இயக்குநர் தான் அவர்.

ஈரவிழிக் காவியங்கள் பாடல்கள் எல்லாமே காவியத் தரம். 

https://www.youtube.com/watch?v=tE-1bsXXWx4

ஆனால் அந்த ஆர்வத்தோடு பார்த்து விட்டுத் திட்டாதவர்களே இல்லை.

அது மட்டுமல்ல, நீங்கள் சிங்கப்பூர் வானொலிப் பிரியர் என்றால் இந்தப் பாடலை அடிக்கடி கேட்பீர்கள்

அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்

அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்

சுமை தாங்காமலே கரை தேடும்

சென்று சேரும்வரை இவள் பாவம் பாவம்

அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்

https://www.youtube.com/watch?v=5fNzDXvaLPo


எஸ்பிபி மற்றும் வாணி ஜெயராம் பாடிய அற்புதமான இந்தப் பாடல் இடம் பிடித்த, “அன்புள்ள மலரே” படத்தையும் இயக்கியவர் இந்த பி.ஆர்.ரவிசங்கர் தான்.

தமிழில் வருஷம் 16 வில்லன் விஜய் மற்றும் சாந்தி கிருஷ்ணா நடித்த இந்தப் படத்தின் இதே பாடல் தெலுங்கில் எஸ்பிபி & ஜானகி கூட்டில் ராஜ்குமார் படத்துக்காக சோபன் பாபு & அம்பிகாவுக்காக இப்படி வந்து ஹிட் அடித்தது.

https://www.youtube.com/watch?v=UQs9mkual70

இதெல்லாம் அரிய பாடல் தொகுப்புகள். 

பாடல்களில் கூட ஒரு தனித்துவமும் புத்துணர்வும் இருக்கும்.

அன்புள்ள மலரே படத்தின் அனைத்துப் பாடல்களையும் கேட்க

https://www.youtube.com/watch?v=S0Mwb2ZQG_c

“அலைமீது” பாடலை யாரோ கொலவெறி ரசிகர் “பல்லவி அனுபல்லவி” படப்பாடலோடு காட்சி வடிவம் கொடுத்ததை யூடியூபில் பார்க்கலாம். அவர் தெரிந்தோ தெரியாமலோ செய்த காரியத்தின் பின் ஒரு செய்தியும் உண்டு.

“சினிமாவில் நான் வந்தது முழுக்க முழுக்க விபத்து, மார்க்கெட்டிங் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருந்து வந்தேன். அப்போது நண்பர் ரவிஷங்கர் தன் முதல் பட வேலையில் ஈடுபட்டிருந்தார். காணி என்ற கன்னடப்படத்தில் நானும் ரவியும், இன்னொரு நண்பர் ராமனும் (வீணை எஸ்.பாலசந்தர் மகன்) சேர்ந்து திரைக்கதை எழுதினோம். ஒவ்வொரு நாளும் வேலை முடிந்த பின் திரைக்கதையை விவாதிப்போம். ஒரு படத்தை எப்படி எடுப்பார்கள் என்ற அறியாமை என்ற வேரில் இருந்து மரமாக வளர்ந்த நம்பிக்கை அது. இப்படியாக ரவிஷங்கர் பட வேலையை ஆரம்பித்த போது நான் வேலையை ராஜினாமா செய்து விட்டு நான் ஆங்கிலத்தில் எழுதிய வசனங்களை ரவிஷங்கர் வழியாகக் கன்னடமாக்கி படம் எடுத்தோம். விஷ்ணுவர்த்தன், ஶ்ரீ நாத், அம்பரிஷ், லட்சுமி போன்றோர் நடித்த படம் பாதியில் நின்று விட்டது. ஆனாலும் என் துறை சினிமா தான் என்பது எனக்குப் புரிந்து விட்டது”

இப்படி “மணிரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல்” நூலில் பரத்வாஜ் ரங்கனிடம் மணிரத்னம் சொல்லியிருக்கிறார்.

இதில் வேதனையான வேடிக்கை என்னவென்றால் சினிமா வேட்கையோடு தீவிரமாக உழைத்த அவரின் நண்பர் பி.ஆர்.ரவிசங்கரால் நிலைத்து நிக்காத துறை,

சினிமா மீது துளி ஆர்வமும் இல்லாத பி.ஆர்.விஜயலட்சுமியை ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் ஆக்கியிருக்கிறது.

இதுதான் சினிமா “விதி”

பி.ஆர்.விஜயலட்சுமி குறித்து நான் முன்னர் எழுதிய இடுகை மேலதிக வாசிப்புக்கு http://www.radiospathy.com/2009/12/blog-post.html

கானா பிரபா

28.03.2023


Friday, March 24, 2023

TMS என்பதோர் திருக்குரல் ❤️

“என் பாடல் செவி கேட்கும் விருந்தாகலாம்

என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்

என் மேன்மை இறைவா உன் அருளாகலாம்”

இவ்வளவு தான் அவரைப் பற்றிப் பேச என்று அவர் தம் பாடலின் வழியாகவே சொல்லி விடலாம். 

அதுதான் T.M.செளந்தரராஜன் என்ற பாட்டுலகச் சக்கரவர்த்தியின் பெருமை. அந்தப் பெயரைச் சொன்னால் ஒரு கம்பீரம் பிறக்கிறதே அந்தக் குரல் வலிமை தான் திரையிசையை நாடாள வைத்ததன் தார்ப்பரியம்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி என்று நீண்ட திரையுலக உச்ச நட்சத்திரங்களின் அணி செய் குரலாக இருந்ததும், அதுவும் எப்படி இவர் எம்.ஜி.ஆருக்குப் பாடும் போது அவரே ஆகவும்,

சிவாஜிக்குப் பாடும் போது சிவாஜியே ஆகவும் பிரதிபலிக்கிறாரே என்ற வியப்பெல்லாம் இயல்பாகி விட்டது.

அதை விட வியப்பான காரியம், ஒவ்வொரு பாத்திரப்படைப்பையும் செளந்தரராஜன் அவர்கள் அணி செய்த விதம். அதுதான் மிக முக்கியமானது. திரைப்படைப்புகளில் அண்ணனாக, தந்தையாக, நண்பனாக, இலட்சிய வேட்கை கொண்ட புரட்சிக்காரனாக, அப்பாவியாக என்று ஒவ்வொரு பாத்திரங்களுக்கும் இவர்தம் குரல் அணி செய்த விதம் ஒருவகை என்றால்,

இன்னொரு பக்கம் அண்ணனில் தான் எத்தனை வகை பாருங்கள்

“மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்" அண்ணன் சிவாஜிக்கும்,

“கல்யாணச் சாப்பாடு போடவா” அண்ணன் நாகேஷுக்கும் தான் எத்தனை வித்தியாசம்? இந்த நுணுக்கங்களையெல்லாம் ஒரு பாடலைக் கேட்கும் போது கொண்டு வர முடிகின்றதென்றால், அந்தக் குரல் ஆளுமையின் பின்னால் எப்பேர்ப்பட்ட ரகசியம் ஒளிந்திருக்கிறது பாருங்கள்.

பக்தி இலக்கியங்களாகவும், பாடியே நடித்தவர்களாகவும் திரையிசை இலக்கணம் இயங்கிய காலத்தில் இருந்து படிமுறை மாறுதலாக,

நடிகர்களுக்குக் குரல் கொடுக்கும் நிலைக்கு மாறிய போது அதில் எல்லா இலக்கணங்களுக்கும் சரிவரப் பொருந்தியவர் செளந்தரராஜன் அவர்கள். அவரின் நீட்சியே பின்னால் வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற இன்னொரு சகாப்தம்.

ஆனாலும் தனக்கு முந்திய யுகத்தின் பிரதிபலிப்பையும்

“வசந்த முல்லை போலே வந்து 

அசைந்து ஆடும் பெண் புறாவே

மாயமெல்லாம் நான் அறிவேனே 

வா வா ஓடி வா....”

தொட்டுக் காட்டி பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்தவர்.

இன்னும் நீட்டித்துப் பார்த்தால்,

சிவாஜி கணேசன் என்ற மகா நடிகருக்கு என்னதான் மாற்றுக் குரல்கள் வந்தாலும்,

“பாசமலரே.....!

அன்பில் விளைந்த வாசமலரே....!”

என்று எண்பதுகளில் குரல் கொடுத்த போது அச்சொட்டான அப்பன்காரனின் கனிவை எழுப்ப முடிகின்றதென்றால் அந்தக் குரலுக்கு ஓய்வில்லை என்று தானே அர்த்தப்படும்?

அற்ப வாழ்நாள் கொண்டிருந்தாலும் அற்புதக் கவியாற்றல் கொண்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களின் எழுச்சி மிகு பாடல்களுக்கு உணர்வு வடிவம் கொடுத்தது இன்னும் உயர வைத்தது டி.எம்.எஸ் இன் குரல்.

“பிறப்புக்கு முன்னால்

இருந்தது என்ன

உனக்கும் தெரியாது

இறந்த பின்னாலே

நடப்பது என்ன

எனக்கும் புரியாது

இருப்பது சிலநாள்

அனுபவிப்போமே

எதுதான் குறைந்துவிடும்

இரவினில் ஆட்டம்

பகலினில் தூக்கம்

இதுதான் எங்கள் உலகம்”

அந்த முரடனின் ஒவ்வொரு தள்ளாட்டத்தையும் பதிவு செய்யும் குரலாகி விடுவார்.

கண்ணதாசனின் காதலில் இருந்து எல்லா உணர்வையும் அசரீரியாகக் கொடுத்ததில் டி.எம்.செளந்தரராஜனின் குரலே முதன்மையானது.  தமிழ்த்திரையின் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி ஜெய்சங்கர், சிவக்குமார் வரையான நாயகர்களுக்கு ஏற்ற விதத்தில் பாடிச் சென்றவரின் பாடல்களை வெறுமனே ஒலி வடிவில் கேட்கும் போதே இது யாருக்கானது என்று கண்டுபிடித்துச் சொல்லுமளவுக்கு நுணுக்கம் நிறைந்தவர்.  

அவருக்குப் பின்னர் தான் திரைப்படத்தின் நாயகனின் பாத்திரத்துக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு பாடும் வல்லமையைத் தமிழ்த்திரையிசையுலகம் பதிவு செய்து கொண்டது. அந்த நிலையை இழந்து நிறமற்றது போலப் போய் நிற்கின்றது இன்றைய தமிழ்த்திரையிசையுலகம். 

டி.எம்.செளந்தரராஜன் குரல் போர்க்கால இலக்கியமாகக் கொண்டாடப்பட்ட அதே சமயம் ஆலயங்கள் தோறும் கொடியேறிக் கொண்டாட்டம் நடக்கும் போதும் இன்னும் முக்கிய திருவிழாக்களிலும் "உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே" என்றும் "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே" என்றும் "தில்லையம்பல நடராஜா" என்றும் அந்தந்த ஆலய மூல மூர்த்தியின் பெருமைதனைக் கூறும் பக்திப்பாடல்களிலும் இடம்பிடித்தவர் இன்னும் தொடர்கின்றார்.

"கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தே" என்ற பாடலை எங்களூர் வீரமணி ஐயர் அவர்கள்  கபாலீஸ்வரர் கோயில் உறையும் அன்னை மீது எழுத  அதை டி.எம்.செளந்தரராஜன் குரல் வடிவம் கொடுத்து ஈழத்தமிழகத்துக்கும், இந்தியத்தமிழகத்துக்கும் உறவுப்பாலம் அமைத்ததை இன்றும் பெருமையாகச் சொல்லிக்கொள்வோம்.

அன்றைய காலகட்டத்தில் நாங்கள் சிறுசுகளாக இருந்த போது,  மாமன், மச்சான் உறவுகளும் சரி ஊரில் தோட்டவேலை செய்து களைத்து விழுந்து வீடு திரும்பும்  உழைப்பாள சமூகமும் சரி இடம், பொருள் ஏவல் பாராமல், டி.எம்.எஸ் இன் குரலைத் தம்முள் ஆவாகித்துக் கொண்டு பாடியபோதெல்லாம் வேடிக்கை பார்த்ததை இப்போது நினைத்துப் பார்க்கும் போது அந்தக் கலைஞன் எவ்வளவு தூரம் எல்லாத்தளங்களிலும் நின்று தன்னை நிறுவியிருக்கிறான் என்ற ஆச்சரியமே மேலோங்குகின்றது.

உயர்ந்தவன் 

           தாழ்ந்தவன் 

இல்லையே நம்மிடம்.......

பள்ளிக்கால நண்பனைத் தேடி அலையும் மனம், அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே கேட்கும் போதெல்லாம்.

“நீ கொண்ட பெயரை

நான் உரைத்து கண்டேன் சாந்தி

நீ காட்டும் அன்பில்

நான் கண்டு கொண்டேன் சாந்தி

நீ பெற்ற துயரை

நான் கேட்டு துடித்தேன் சாந்தி

நீ பிரிந்த பின்னே நான் இழந்து நின்றேன் சாந்தி”

எண்பதுகளின் திரையிசைப்பாடல்களிலே டி.எம்.செளந்தரராஜனுக்கான கெளரவத்தை மீளவும் நிலை நிறுத்தியவர் டி.ராஜேந்தர். அவரின் ஒரு தலை ராகம் படத்தில் வரும் "நானொரு ராசியில்லா ராஜா" அன்றைய அண்ணன்மாரின் காதலுக்கான தேசிய கீதமாகவும், "என் கதை முடியும் நேரமிது" காதலின் விரக்தியில் நின்றோரின் உள்ளத்து ஓசையாகவும் அமைத்துக் கொடுத்தார் டி.ராஜேந்தர். இளையராஜா காலத்தில் புதுமையைத் தேடி எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், ஜேசுதாஸ் என்று மும்முனைப் போட்டியிருக்க, அங்கும் தன்னை நிலை நாட்ட வைத்தது ஒரு தலை ராகம் திரைப்படப் பாடல்கள். டி.ராஜேந்தரின் அடுத்த படைப்புக்களிலும் குறிப்பாக "ரயில் பயணங்களில்" படத்தில் "அமைதிக்குப் பெயர் தான் சாந்தி" என்றும் "நெஞ்சில் ஒரு ராகம்" திரைப்படத்தில் "குருடான கவிஞனுக்கு ஊதாப்பூ என்ன ரோசாப்பூ என்ன" என்றும் டி.எம்.செளந்தரராஜனின் குரலை அடுத்த தலைமுறையும் ஆராதிக்கும் வண்ணம் செய்தார். இதில் முக்கியமாக டி.ராஜேந்தரின் கவியாழமும் சிறந்ததால் இன்னும் ரசிக நெஞ்சங்களில் இடம்பிடிக்க முக்கிய ஏதுவாக அமைந்திருந்தன.

உன்னை தினம் தேடும் தலைவன்

கவி பாடும் கலைஞன்

காவல் வரும்போது கையில்

விலங்கேது கால்கள் நடமாடட்டும்

லலலலலலலலாலா

எண்பதுகளிலே திரைப்படக்கல்லூரி வழியாக வந்து பிரமாண்டத்தைத் திரையில் புகுத்தும் பரம்பரையில் மூத்தவர் ஆபாவாணன் வருகையும் டி.எம்.செளந்தரராஜனை மீள நிறுவுவதற்கு உசாத்துணையாக அமைகின்றது.  மனோஜ் கியான் இசையில் "உழவன் மகன்" திரைப்படத்தில் "உன்னைத் தினம் தேடும் தலைவன்" என்று அன்றைய முன்னணி நாயகன் விஜய்காந்துக்கான குரலாகப் பயன்படுத்திக் கொண்டார். இதற்கெல்லாம் மணிமகுடமாக அமைந்தது மனோஜ் கியான் மீண்டும் இசையமைக்க ஆபாவாணன் உதவி இசையை வழங்கிய 1989 இல் வெளிவந்த "தாய் நாடு" திரைப்படம். இந்தப் படத்தின் ஐந்து பாடல்களிலும் டி.எம்.செளந்தரராஜனைப் பாடவைத்துக் கெளரவம் சேர்த்தார் ஆபாவாணன்.

“அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி

அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி

பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்

 இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா

நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா”

குதிரை வலுவைப் பிறப்பிக்கின்ற அந்தக் குரலின் சக்தி ஒரு கட்டத்தில் அரசியல் மாற்றத்தின் திறவுகோலாகவும் பயன்படுகிறது.

“அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்”, "ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறதே" என்றும், "அச்சம் என்பது மடமையடா" என்றும் சில்லென்று காதை ஊடுருவுகிறது டி.எம்.எஸ் இன் கணீர்க்குரல், அந்தக் காலகட்டத்தில் இளைஞர்களின் எழுச்சிக் குரல் அது.

“சிந்து நதியின் மிசை நிலவினிலே

சேர நன்னாட்டிளம் பெண்களுடனே

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து

தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்”

என்று இன்னோர் புறம் கனிவான கவியாகவும் பாட முடிகிறதே?

“பன்னீர் மலர் சொரியும் மேகங்களே – எங்கள் 

பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களேன்”

கேட்கும் போது நின்ற இடத்தில் இருந்து மனமுருகிக் கைக்கூப்பி மெய்யார இறைஞ்சுதல் நிலைக்குப் போக முடிகின்றதென்றால் அந்தக் குரலை இயக்கும் சக்திக்குத் தான் என்ன பெயர்?

நான் நிரந்தரமானவன்

அழிவதில்லை

எந்த நிலையிலும் எனக்கு

மரணமில்லை

என்று கவியரசர் எழுதியதைப் பாடியளித்த செளந்தரராஜன் என்பதோர் திருகுரலுக்கும் கூட இது பொருந்திப் போகும்.

கானா பிரபா