Pages

Saturday, May 23, 2026

பாடலாசிரியர் முத்துக்கூத்தன் மகன் கலைவாணன் மறைவில்


 தொன்று தொட்டு இன்று வரை 

ஏழை என்னும் ஜென்மத்துக்குத் துன்பம் ஐயா

இன்பம் என்றும் ஏழைக்கெல்லாம் 

வன்மம் கொண்டே துன்பம் தந்தால் 

தொல்லை ஐயா….

ஏழை படும் பாடு அது சொல்லி முடியாது

பொழுதே இருளானால் இனி இங்கே விடிவேது?

https://www.youtube.com/watch?v=XoszYudZyko

பாடலாசிரியர் முத்துக்கூத்தன் எழுதி “அவதாரம்” திரைப்படத்தில் மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்.

ஒரு சோகப் பரப்பில் எழும் விரக்தியை வரிகளிலும், ஆக்ரோஷத்தை இசையிலுமாகக் கொடுத்த வகையில்

இந்தப் படத்தின் மிக முக்கியமானதொன்று.

இப்படியானதொரு சூழலுக்கு ஒரு நாட்டுப் பண் கலைஞரைப் பாடல் எழுத வைக்க வேண்டும் என்ற தீர்மானம் நாசரின் தெரிவாக இருக்கக் கூடும்.

இசைஞானி இளையராஜாவின் பாடலாசிரியர்கள்  என்ற வரிசையில் தான் முத்துக்கூத்தன் என்ற பாடலாசிரியர் குறித்த அறிமுகம் எனக்குக் கிட்டியது.

இருப்பினும் அவர் பெரும் பெரும் ஆளுமை என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன்.

முத்துக்கூத்தன் பழம் பெரும் கவிஞர், பாடலாசிரியர், வில்லிசைக் கலைஞர் என்றும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் முன்னிலையிலேயே கலைவாணரின் வாழ்கையை வில்லிசைத்தவர் என்றும், எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தில் நடிகராகவும், எம்.ஜி.ஆர் நடித்த அரசிளங்குமரி, நாடோடி மன்னன், அரசகட்டளை, திருடாதே ஆகிய படங்களிலும் பாடல்களை எழுதியவர் என்று விக்கிப்பீடியா குறிப்பு அவரி வாழ்க்கைச் சுருக்கத்தைப் பகிர்கிறது.

கலைவாணர் என்.எஸ்.எஸ்.கிருஷ்ணனின் மேல் நேசம் கொண்டு தன் மகனுக்குக் கலைவாணன் என்றே பெயர் சூட்டினாராம்.

“கலைமாமணி” கலைவாணன், பொம்மலாட்டக் கலை மூலம் சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, சுகாதாரம் மற்றும் குழந்தைகள் நலன் போன்ற பகுத்தறிவு சிந்தனைகளை, சமூக முற்போக்குக் கருத்துகளை விதைத்தவர்.

இன்று நேற்று 68 ஆவது அகவையில் விடைபெற்று விட்டார்.

தன் தந்தையின் நீட்சியாகக் கலைப்பணியாற்றிவரின் களப்பணி ஓய்ந்து விட்டது.

அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!