பாடகர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இன்னொருவர் இசை கொடுக்க ❤️
“காதல் என்பது மழையானால்
அவள் கண்கள் தானே கார்மேகம்...
இந்த ஈரடிகளை அப்படியே மெட்டில் பாய்ந்தது போலப் பாடிப் பார்த்து இன்னோர் முறை வேறொரு வடிவில் எம்.எஸ்.வி போலவே பாடிப் பார்த்தல் சுகம்.
அந்த
“சொல்லத்தான் நினைக்கிறேன்”
https://www.youtube.com/watch?v=wxvpmaSKM54
பாடல் வழியாகத் தான் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதன் அவர்களை ஒரு பாடகராகத் தீவிரமாக நேசிக்கத் தொடங்கிப் பின்னாளில் அவரின் அரிய பாடல்களை எல்லாம் தேடிப் பிடித்துக் கேட்டு ரசிக்க முடிந்த இணைய காலம் அது,
“நீ நினைத்தால் இந்நேரத்திலே
ஏதேதோ நடக்கும்”
https://www.youtube.com/watch?v=CTnR58WVkrQ
பாடலைக் கேட்கும் போதெல்லாம் கோட், சூட் போட்ட நவ நாகரிக இருபதுகளே இருக்கும் இளைஞனாக மிளிருவார். அந்தப் பாடலைப் பாடும் போது அவருக்கு நாற்பத்து மூன்றைத் தொட்ட வயசு.
அந்த ஆரம்ப ஆலாபனையிலேயே ஏதோ வாத்தியமொன்று பாட ஆரம்பித்த போன்ற நாதக் குரலாகத் தொனிக்கும்.
படத்தின் கதையோட்டத்தோடு மாறுபடும் காட்சியமைப்பு வரும்போது ஒரு கட்டியக்காரனாகவும், அசரீரியாகவும் பல படங்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் ஒரு பாடகராகவும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இன்று தமிழுலகம் போற்றும் கவியரசு கண்ணதாசனுக்கும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதனுக்கும் பிறந்த தினம்.
மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தும், இன்னொருவர் இசையிலும் பாடியவையைக் கொடுக்கிறேன்.
ஜூன் 24 இன்றைய தினம் மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநானுக்கு இன்று 93 வயது. தமிழ்திரையிசைச் சாதனையாளர்களில் மூன்று முக்கியமான ஆளுமைகளான மெல்லிசை மன்னர் எம். எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆ.ரஹ்மான் ஆகியோர் இயங்குகின்ற சூழலில் நாமும் இருக்கின்றோம் என்பதில் ஒரு பெருமை தானாக வந்து சேர்கின்றது. இன்றைக்கு கணினி யுகத்தில் ஏராளம் டெஸ்ட் டியூப் பேபிகள் இசையமைப்பாளர்களாகக் குவிந்து விட்டார்கள் ஆனால் எம்.எஸ்.விஸ்வநாதன் என்ற இசையுலக மாமன்னன் எவ்வளவு பெரிய சாதனையை தசாப்தங்களைக் கடந்து செய்து காட்டிவிட்டு அமைதியாக எல்லாவற்றையும் பார்க்கின்றார் என்னும் போது சாதாரணர்களாகிய நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய இன்னொன்றையும் அந்த அடக்கம் காட்டி நிற்கின்றது.
இன்றைக்குப் பன்மடங்கு பெருகிவிட்ட தொழில் நுட்ப முன்னேற்றத்தின் பல படிகள் பின்னோக்கிய காலகட்டத்தில் தான் எம்.எஸ்.விஸ்வநாதன் ஏராளம் பாடல்களை விதவிதமான சூழலுக்கேற்ப விதையாக்கிக் கொடுத்தார், இன்றைக்கும் பட்டுப்போகாத நல் விரூட்சம் போல அந்தப் பாடல்கள் ரசிகர் மனதில் எழுந்து நிற்கின்றன. ராமமூர்த்தி அவர்களோடு இணைந்து கூட்டாகப் படங்கள் கொடுத்த போதும், தனித்து இயங்கிய போதும் தன் அடையாளத்தை மிகக் கச்சிதமாக நிறுவியவர். இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப காலத்துப் பாடல்களைக் கேட்கும் போது எம்.எஸ்.வி தனம் இருக்குமளவுக்கு அடுத்த சகாப்தத்திலும் கொஞ்சப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டவர். மெல்லிசை மாமன்னர் விஸ்வநாதனோடு பணியாற்றிய இயக்குநர்கள் லேசுப்பட்டவர்களல்ல, ஒவ்வொருவருக்கும் தனிப்பாணி, இவர்கள் எல்லோருக்கும் ஏற்ற பாடல்களைப் பண்ணுவதோடு மட்டுமல்ல கவியரசு கண்ணதாசனோடு போராடியும், சந்தோஷித்தும் மெட்டுக் கட்டிய கதைகளைப் புத்தகம் ஆக்குமளவுக்கு அந்தப் பாடல்களுக்குப் பின்னால் ஏராளம் கதைகள். இவையெல்லாம் ஒரு மாமூல் கலைஞனுக்கு கிட்டாத அனுபவங்கள். அந்த வகையில் எம்.எஸ்.விஸ்வநாதனின் முழுமையான வரலாறு எவ்வளவு தூரம் பதிவாகியிருக்கின்றது என்பது கேள்விக்குறி.
எம்.எஸ்.விஸ்வநாதன் அளவுக்கு மற்றைய இசையமைப்பாளர்களோடு நேசம் கொண்டு, அவர்களின் படங்களிலும் கெளரவப்பாடகராக வந்துகாட்டும் போது அவரின் இன்னொரு பரிமாணம் வெளிப்படுகின்றது. இவர் அளவுக்குத் தமிழ் சினிமாவில் இவ்வளவு தொகை இசையமைப்பாளர்கள் இசையில் பாடிய இன்னொரு இசையமைப்பாளரை அடையாளம் காட்டுவது மிகக்கடினம், இரண்டாவது இடத்தில் கங்கை அமரனைச் சேர்த்துக் கொள்ளலாம்.
அந்த வகையில் தமிழ்த்திரையுலக முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் ( யுவனின் தில்லு முல்லு பாட்டைச் சொந்தம் கொள்ள முடியாது) எம்.எஸ்.வி பாடிய பாடல்கள் சில இங்கே,
இளையராஜா
தாயே மூகாம்பிகே (தாய் மூகாம்பிகை)
https://www.youtube.com/watch?v=dlDFIGxixIk
நல்ல காலம் பொறக்குது ( கருவேலம் பூக்கள்)
https://www.youtube.com/watch?v=2TGBK1yqtF0
எரிகனல் காற்றில் (ஒரு யாத்ரா மொழி) இந்தப் பாடலின் இன்னொரு வடிவம் இளையராஜா பாடியது
https://www.youtube.com/watch?v=EuTjfjz6w58
வி.குமார்
உனக்கென்ன குறைச்சல் (வெள்ளி விழா)
https://www.youtube.com/watch?v=iffttiDJcgU
கங்கை அமரன்
சொந்தங்களே (இனி ஒரு சுதந்திரம்) – படத்தில் இல்லாமல் இசைத்தட்டில் மட்டுமே வந்தது
ஓடம் எங்கே போகுது
https://www.youtube.com/watch?v=qC4S-qmpevM
சந்திரபோஸ்
எந்த வழி போவது (குற்றவாளி)
தேவா
கதிரவனை முத்தமிட்டு கடல் மேலே வித்தை செய்து (வைதேகி வந்தாச்சு)
https://www.youtube.com/watch?v=phXwoHDtT1Y
எஸ்.வி.ரமணன்
ஆண்டவனே உன்னை வந்து ( உருவங்கள் மாறலாம்)
ஏ.ஆர்.ரஹ்மான்
மழைத்துளி மழைத்துளி (சங்கமம்)
கானா பிரபா
0 comments:
Post a Comment