Pages

Friday, January 7, 2022

நினைவில் வாழும் பாடலாசிரியர் காமகோடியன்

பூஞ்சிட்டுக் குருவிகளா 

புதுமெட்டுத் தருவீகளா 

பாடத்தான் போறேன் பாட்டு

பலபேரு கதைய கேட்டு

அம்மாடி ஆத்தாடி 

பொல்லாத ஒலகமடா

https://youtu.be/po6s62vUzxk

சந்திரபோஸ் அவர்களே பாடி இசையமைத்த “பூஞ்சிட்டு குருவிகளா” (ஒரு தொட்டில் சபதம்) போன்று எண்ணற்ற இசையமைப்பாளர்கள், ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பாட்டிசைப் பயணம் என்று தன் இறுதி மூச்சு வரை இசையாக வாழ்ந்த பெருந்தகை காமகோடியன்.

பெண் வேணும் 

ஒரு பெண் வேணும் 

பசும் பொன்னு நெறத்துல 

பெண் வேணும்

சொல்லவா....சுகம் அல்லவா

https://youtu.be/oG7RULDjTwY

தொண்ணூறுகளில் இலங்கையின் பண்பலை வானொலிகள் தோற்றம் பெற்ற போது அள்ளிச் சுமந்த பாடலது, இன்னும் இறக்காமல் வைத்திருக்கிறார்கள் அவ்வளவுக்குப் புகழ் பூத்தது அங்கே. ஆனால் இந்தப் பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் காமகோடியான் அவர்களை இசை ரசிகர் உலகம் அவ்வளவாக அறிந்து வைத்திருக்கவில்லை. 

அதில் உச்சபட்சக் கொடுமை என்னவென்றால் விக்கிப்பீடியாவில் பகிர்ந்த 

“2015 ஆம் ஆண்டு திருட்டு ரயில் திரைப்படத்தில் ஒரு பாடல் ௭ழுதுவதற்காக அழைக்கப்பட்டார். இத்திரைப்படத்தில் அந்த பாடல் நன்றாக அமைந்ததால் அனைத்து பாடல்களையும் ௭ழுதும் வாய்ப்பை பெற்றார்.”

என்ற தவறான கருத்தைப் பத்திரிகைகள் ஈறாகப் பகிருந்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே அவர் முழுப்பாடல்களும் கொடுத்த பிரபலம்.

இவ்விதம் தேனிசைத் தென்றல் தேவா யுகத்திலும், ஏன்

“என் அன்பே என் அன்பே

என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி

என் அன்பே என் அன்பே

என் நெஞ்சுக்குள் காதல் வலி....”

https://youtu.be/EeU9bJ3FwEA

என்று “மெளனம் பேசியதே” வழியாக யுவன் ஷங்கர் ராஜா யுகத்திலும் எழுதவல்ல ஆற்றல் மிக்கோன் காமகோடியன் அவர்கள்.

“என் உடல் இங்கு

கடல் ஆனதே” என்பார் 

அப்படியே நீட்டி

“விழி பட்ட இடம் இன்று உளி பட்ட சிலையாக

இதுதானோ காதல் என்று அறிந்தேனடி”

என்றும் அந்தப் பாடலில் காமகோடியன் அவர்களின் வார்த்தை ஜாலம் இளமைத் துடிப்போடு அலைபாயும்.

அப்படியே எண்பதுகளுக்கு அழைத்துப் போனால் இசைஞானி இளையராஜாவின் “நினைக்கத் தெரிந்த மனமே” படத்தின் அனைத்துப் பாடல்களுமே இவரின் கை வண்ணம் தான்.

“நினைக்கத் தெரிந்த மனமே” படத்தில் “எங்கெங்கு நீ சென்ற போதும்” என்று உருகித் தள்ளியவர் “கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்” என்று துள்ளிசையிலும் தன் வார்த்தைக் குதிரையைத் தட்டி விட்டார். 

இந்தப் படத்தின் ஒவ்வொரு பாடல்களுமே முத்து முத்தாய் அமைந்ததை முன்னர் சிலாகித்திருந்தேன்.

http://www.radiospathy.com/2021/10/blog-post.html

இசைஞானி இளையராஜாவுக்கு ஆத்மார்த்தமான மூத்தோர்கள் கவிஞர் கண்ணதாசன், புலவர் புலமைப்பித்தன், வாலி, நா.காமராசன், மு.மேத்தா, பொன்னடியான் வரிசையில் இருந்த முக்கிய பாடலாசிரியர் காமகோடியன்.

இன்னும் இவரின் புகழ் பூத்த பாடல்களைக் கொண்டாட வேண்டுமென்றால்

“பாட்டு இங்கே ராபப்பா” என்று பூவிழி வாசலிலும், 

https://www.youtube.com/watch?v=CqjjL2p_Sm0

“தேவியே நான் சரணம்” என்று “தங்கத் தாமரைகள்”,

https://www.youtube.com/watch?v=oIsSQtxDSsQ

 “பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு (தங்க மனசுக்காரன்) 

https://youtu.be/dZhYPLrHnBU

“ஒரு கோலக்கிளி சொன்னதே” (பொன் விலங்கு) 

https://www.youtube.com/watch?v=5Yw8-gSG6Oc

“வெண்ணிலவில் மல்லிகையில் (அதிரடிப்படை), 

https://www.youtube.com/watch?v=eZNLWPKKEFs

“மல்லிகை மொட்டு மனசைத் தொட்டு இழுக்குதடி மானே (சக்திவேல்), 

https://www.youtube.com/watch?v=PrfpPwYzxIQ

“மேலூரு மாமன் மேலாகப் பாக்குறான்” (மக்கள் ஆட்சி) 

https://youtu.be/u9ygU8GFbSQ

“ஒரு சின்ன மணிக்குயிலு” (கட்டப் பஞ்சாயத்து), 

https://youtu.be/WL5A-QYWlQM

“வேண்டினால் வேண்டும் வரம்”(கட்டப் பஞ்சாயத்து), 

https://www.youtube.com/watch?v=vGW2o1PKoFY

“செம்பருத்தி பெண்ணொருத்தி” ( ராமன் அப்துல்லா),

https://www.youtube.com/watch?v=alZGH4hiJYs

“நாள் தோறும் எந்தன் கண்ணில்” (தேவதை),

https://www.youtube.com/watch?v=QRTSL6gmIpg

 “உன் பேரைக் கேட்டாலே” (பூஞ்சோலை),

https://www.youtube.com/watch?v=6KuVxwR56iM

 “கண்மணிக்கு வாழ்த்துச் சொல்லும்” (அண்ணன்), 

https://www.youtube.com/watch?v=z5XBD9visH4

“உன்னை நம்பும்” (கண்ணாத்தாள்), 

https://www.youtube.com/watch?v=HUBsd3-K7JU

என்று ஐம்பதைத் தொடும் பாடல்களோடு

“அலையெலாம் நடனமாடும்

தமிழர் கலையெலாம் தமது பண்பைப் பாடும்” 

https://www.youtube.com/watch?v=dxGeZhR4KS8

என்ற “உளியின் ஓசை” படம் ஈறாக இசைஞானியோடு கொடுத்த புகழ் பூத்த பாடல்கள். (இளையராஜா பாடல் பட்டியல் நன்றி நண்பர் அன்பு)

“கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு”

https://www.youtube.com/watch?v=wYVAiGJ4_Xo

என்று “மரிக்கொழுந்து” படத்தில் தேவா இசையிலும்,

“அழகா அழகா அழுதால் அழகா” (பொன்மனம்) 

https://youtu.be/k18zXs0xgKQ

என்று எஸ்.ஏ.ராஜ்குமார் இசையிகும் புகழ் பூத்த பாடல்களைக் கொடுத்தவர்.

பதிவை எழுதியவர் கானாபிரபா 

பாடகர் மலேசியா வாசுதேவன் இசையமைத்த “கொலுசு” படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் காமகோடியன் தான்.

“கானம் தென்காற்றோடு போய்ச் சொல்லும் தூது”

https://youtu.be/2vN3QPBSSCU

என்ற அற்புதமான பாடல் இளையராஜா பாடி, இசை படைத்திட்ட காமகோடியன் வரிகள் படைத்த வெளிவராத “கண்ணுக்கொரு வண்ணக்கிளி” படத்தின் முத்தான பாடல்களில் ஒன்று.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது மகன் சரணின் பிறந்த தினம். சரண் வளர்ந்த பாடகராக முதன் முதலாகப் பாடிய “புண்ணியவதி” படத்தில் பாடிய 

“உனக்கொருத்தி பொறந்திருக்கா”

https://www.youtube.com/watch?v=lLAeI8THtPk

என்று தன் தந்தை எஸ்.பி.பாலசுப்ரமணியம், இளையராஜா, சுனிதா குழுவினரோடு இணைந்த பாடல் கூட காமகோடியன் வரிகள் தான்.

“இருப்பவர்க்கு ஒரு வீடு

இல்லாதவர்க்கு பல வீடு

யாரை நம்பி யாரும் இல்ல

ஆண்டவன் துணையை நீ தேடு….

வாழுகின்ற மக்களுக்கு

வாழ்ந்தவர்கள் பாடமடி

பெற்றவர்கள் பட்ட கடன்

பிள்ளைகளைச் சேருமடி”

https://www.youtube.com/watch?v=m0Mt_LnGz8Q

என்ற அற்புதமான தத்துவப் பாடலை “பொன்னகரம்” படத்தில் சங்கர் – கணேஷ் இசையிலும் கொடுத்தவர் காமகோடியன்.

இப்படியாகப் பல நூறு பாடல்கள் ஊற்றெடுத்த கவியருவி காமகோடியன்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களது இறுதிக்காலம் வரை இயங்கிய பாடலாசிரியர்களில் ஒருவர் காமகோடியன். “வெற்றி விநாயகர்” படப் பாடல் “சந்தானமடி” அதற்கோர் சான்று.

இதற்கெல்லாம் மேலாக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களது இசை நிகழ்ச்சி தோறும் நிறைவுப் பாடலாக அலங்கரிக்கும் பாடலை எழுதியவர் காமகோடியன். அந்தப் பாடல் 

“அறிஞனாய் இரு,

கலைஞனாய் இரு,

அற்புதம் செய்யும் சிற்பியாய் இரு,

அரசனாய் இரு,

புருஷனாய் இரு,

ஆயிரம் கோடிக்கு அதிபனாய் இரு,

வீரனாய் இரு,

சூரனாய் இரு,

வித்தக தத்துவ ஞானியாய் இரு,

அனைவருக்கும் இங்கு ஒரே ஞாயிறு,

அதனால் என்றும் 

மனிதனாய் இரு…….”

ஜனவரி 5, 2022 இல் நம்மை விட்டு மறைந்த பாடலாசிரியர் காமகோடியனை நினைவில் நிறுத்துவோம்.

கானா பிரபா

05.01.2023


பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான காமகோடியன் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழில் பிரபல பாடலாசிரியராக திகழ்ந்தவர் கவிஞர் காமகோடியான். எம்.எஸ்.வி தொடங்கி இளையராஜா, தேவா, யுவன் ஷங்கர் ராஜா, பரத்வாஜ் என பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். 76 வயதாகும் காமகோடியன் நேற்று (ஜன 05) இரவு வயது மூப்பின் காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


தகவல்  நன்றி : தமிழ் இந்து திசை

1 comments:

Anonymous said...

2015 ஆம் ஆண்டில் தான் பத்திரிக்கையாளர்கள் கவிஞர் காமகோடியனை கவனித்திருப்பார்கள்