மறந்தால்தானே
நினைக்கணும் மாமா
நினைவே நீதானே
நீ தானே....
"குடகுமலைக் காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி" வெளிவந்த காலத்தில் முன் சொன்ன அடிகள் பல காதலர்களின் மனவோசையாக இருந்தது. சொல்லப் போனால் கரகாட்டக்காரன் படத்தின் ஒவ்வொன்றுமே அதிமதுரம் என்றாலும் இந்தப் பாடலிலேயே நாள் முழுக்கத் தங்கியவர்கள் பலர்.
சமீபத்து இரண்டு பேட்டிகளிலும் கங்கை அமரன் இந்தப் பாடல் பிறந்த கதை பற்றிச் சொல்லும் போது,
"மாங்குயிலே....
பூங்குயிலே...."
என்று சோக ராகமாக இன்னொரு பாடலைத் தன் அண்ணனிடம் கேட்ட போது,
“ஏற்கனவே இதே பாட்டு இரண்டு வடிவில் இருக்கே எதுக்கு மூணாவது?”
என்று சொல்லி “குடகுமலைக் காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா” அந்த நிமிடத்தில் போட்டுக் கொடுத்ததாகச் சொன்னார்.
தன் தம்பியின் ஆசையை விடுவானேன் என்று நினைத்தோ என்னமோ இந்தப் பாடலுக்கு முந்திய காட்சியில் “மாங்குயிலே” பாடலின் சோக ராகம் பின்னணி இசையாகக் கொடுத்திருப்பார் இசைஞானியார் இப்படி
http://www.radio.kanapraba.com/karakattakaran/k15.mp3
இன்னொரு விஷயம், தொடர்ந்து வெளிவந்த கங்கை அமரன் இயக்கி, அதே ராமராஜன் நடித்த வில்லுப்பாட்டுகாரன் படத்தில் இதே பாங்கில் ஒரு பாட்டு சந்தோஷமும், சோகமுமாக இருக்கும் இப்படி
கலைவாணியோ ராணியோ (சந்தோஷம்)
https://www.youtube.com/watch?v=0zLEj3ttcJw
கலைவாணியோ ராணியோ (சோகம்)
https://www.youtube.com/watch?v=No9uoFWlS0c
சரி அப்படியென்றால் ஒன்றுக்கு மூன்றாக இசைஞானியார் முன்பு கொடுக்கவில்லையா என்றால் அதுவும் உண்டே?
கங்கை அமரன் படமான “எங்க ஊரு பாட்டுக்காரன்"
செண்பகமே செண்பகமே (ஆஷா போன்ஸே)
https://youtu.be/nYvTirVZX48?si=JXL_iAg1qs04wtcj
செண்பகமே செண்பகமே (மனோ)
https://youtu.be/sUr1Mg7Q4o4?si=KObygCXn5k-5-2s5
செண்பகமே செண்பகமே (சுனந்தா & மனோ)
https://youtu.be/K83mjZR9YOM?si=lQ_oJ8Luf0JiLQ53
“பிள்ளை நிலா” படத்தில் “ராஜா மகள்" மூன்று வடிவில்
“ராஜா மகள்" (ஜெயச்சந்திரன்)
https://www.youtube.com/watch?v=ST_1nt3QWIk
“ராஜா மகள்” (எஸ்.ஜானகி குமரிக் குரல்)
https://www.youtube.com/watch?v=lqWfX2irHzk
“ராஜா மகள்" (எஸ்.ஜானகி மழலைக் குரல்)
https://www.youtube.com/watch?v=hkfO98wdKIo
இதே போன்று மேலும் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில்
குயிலே குயிலே குயிலக்கா பாடல்
K.J.ஜேசுதாஸ், சித்ரா & பவதாரணி கூட்டணியிலும் சித்ரா & பவதாரணி மற்றும் ஜேசுதாஸ் தனித்தும் என்று மூன்று பாடல்கள். பதிவை எழுதியவர் : கானா பிரபா
புதுப் புது அர்த்தங்கள் படத்தில்
கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே SPB குரலில், இளையராஜா குரலில், மலேசியா வாசுதேவன் குரலில் என்று மூன்று வேறு வடிவங்களில் இருக்கும்.
சின்னத்தாயி படத்தில் கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் பாடல் உமாரமணன் மற்றும்கல்பனா குழுவினர், SPB குரலில் மற்றும் S.ஜானகி குரலில் என்றும்,
தங்க மனசுக்காரன் படத்தில் மணிக்குயில் இசைக்குதடி பாடலை
மின்மினி, சசிரேகா கூட்டணியிலும், மனோ தனித்து சந்தோஷம் மற்றும் சோக வடிவிலும் கொடுத்திருக்கிறார்.
கங்கை அமரனின் இயக்கத்தில் வெளிவராத பூஞ்சோலையில்
கானக் குயிலே பாடலை எஸ்பிபி & பவதாரணி மற்றும் உன்னிகிருஷ்ணன்
& பவதாரணி இவை தவிர இளையராஜா தனித்தும் பாடியுள்ளார். பதிவை எழுதியவர் : கானா பிரபா
தர்மா படத்தில் இரு கண்கள் போதாது நான்கு பாடல்களாக இளையராஜா & எஸ்பிபி சந்தோஷ மற்றும் சோக வடிவங்கள்.
ரமணா படத்தில் வானவில்லே வானவில்லே பாடல் இளையராஜா, ஹரிஹரன், சாதனா சர்க்கம் என்று மூன்று வடிவங்கள்,
ஒரு நாள் ஒரு கனவு படத்தில் “காற்றில் வரும் கீதமே” பாடலை இளையராஜா தனித்தும், பவதாரணி & ஸ்ரேயா கோசல் கூட்டு, தவிர ஹரிஹரனோடு பவதாரணி, ஸ்ரேயா கோசல் & சாதனா சர்க்கம் என்றும் அமைந்துள்ளன.
ஊரெல்லாம் உன் பாட்டு தான் இளையராஜா, ஜேசுதாஸ், ஸ்வர்ணலதா குரலில் தனித்தனியாக உண்டு.
கங்கை அமரன் இயக்கிய கொக்கரக்கோ படத்தில் கீதம் சங்கீதம் பாடல் எஸ்பிபி & சைலஜா குரலிலும், எஸ்பிபி தனித்துமாக மூன்று வடிவங்களில் உள்ளன.
தாயம் ஒண்ணு படத்தில் மனதிலே ஒரு பாட்டு பாடல் SPB; சுசீலா; SPB & சுசீலா ஆகிய வடிவங்களிலும்,
கற்பூர முல்லையில் பூங்காவியம் பேசும் ஓவியம் ஜேசுதாஸ்; சுசீலா; ஜேசுதாஸ், சுசீலா & சித்ரா என்று மூன்றாகவும்,
குயில் பாட்டு ஓ வந்ததென்ன பாடல் ஸ்வர்ணலதா Happy & Sad, இளையராஜா & ஸ்வர்ணலதா என்று என் ராசாவின் மனசிலே படத்துக்காகவும்,
அம்மன் கோயில் திருவிழா படத்தில் இடம்பெற்ற நான் சொன்னால் கேளம்மா பாடல் இளையராஜா; ஜானகி; மனோ & ஜானகி ஆகியோர் குரல்களிலும்,
சின்னதம்பி படத்தில் தூளியிலே ஆட வந்த பாடல் மனோ happy & sad, சித்ரா ஆகவும்,
எங்கிருந்தோ அழைக்கும் பாடல் இளையராஜா; லதா மங்கேஷ்கர்; மனோ & லதா மங்கேஷ்கர் எனவும்
மேலும் உள்ளன.
இவற்றில் சில track இற்காகப் பாடி பின்னர் இசைத்தட்டிலும் வந்திருந்தாலும் தனித்துவமாகக் காட்சிச் சூழலுக்குக் கொடுத்த மூன்று பாடல்கள் கவனிக்கத் தக்கவை.
ஊரென்ன சொன்ன என்ன
ஒண்ணாக நின்னா என்ன
உன் பேரை பாடி நிப்பேன் மாமா
குடகு மலை காற்றில் வரும்
பாட்டு கேக்குதா
பதிவை எழுதியவர் : கானா பிரபா
இளையராஜா ஒன்றுக்கு மூன்றாகக்
கொடுத்தவை ❤️❤️❤️
0 comments:
Post a Comment