Pages

Friday, January 10, 2025

மலையாளத்தின் மகோன்னதங்கள் தாஸேட்டன் & ஜெயேட்டன்

வருஷம் 1958,

State School Arts கேரளாவின் மாநில இளையோர் இசை நிகழ்வில் இரண்டு இளையோர் மேடைக் கச்சேரியை அலங்கரிக்கிறார்கள். 

ஒருவர் 18 வயசு நிரம்பியவர், Palluruthy பள்ளியில் இருந்து

கே.ஜே.ஜேசுதாஸ் பாடகராகவும்,

இன்னொருவர் இரிஞ்சாலக்குடா தேசியப் பள்ளியில் இருந்து, 14 வயது நிரம்பிய P.ஜெயச்சந்திரன் மிருதங்க வாத்தியக் கலைஞராகவும் அந்தக் கச்சேரி அமைகின்றது.

மலையாள சினிமாவின் அடுத்த யுகத்தின் முன்னணி இசை நட்சத்திரங்களாக ஒளிவீசுவார்கள் என்று அப்போது நினைத்திருப்பார்களோ தெரியவில்லை. ஆனால் காலம் அப்போது கணக்கு வைத்துக் கொண்டது.

பாடகராக வருவதற்கு முன்பே ஜெயசந்திரன் சகோதரர் அமரர் சுதாகரனின் நண்பராக விளங்கியவர் கே.ஜே.ஜேசுதாஸ். பதிவு:கானாபிரபா ஜெயச்சந்திரனின் இளைய சகோதரர் கிருஷ்ணகுமாருக்கு ஹிந்திப் பாடகர்களில் கிஷோர் குமார் என்றால் இஷ்டம், ஜேசுதாஸுக்கோ மொஹமெட் ரஃபி என்றால் கொள்ளைப் பிரியம். இருவரும் சேர்ந்து பாடி மகிழ்வார்களாம்.

ஜெயசந்திரனை மலையாளத்தின் மகோன்னத இசைமைப்பாளர் 

தேவராஜன் மாஸ்டரிடம் அறிமுகம் செய்து வைத்தவர் கே.ஜே.ஜேசுதாஸ் தான். பதிவு:கானாபிரபா

காட்டுப்பூக்கள் படத்துக்காக தேவராஜன் மாஆடர் இசையில் ஜேசுதாஸ் பாடிய 

மாணிக்க வீணையுமாய்

https://www.youtube.com/watch?v=Li18fB13CPQ

பாடலைப் பாடிக் காட்டுகிறார் ஜெயச்சந்திரன்.

களித்தோழன் (1966) என்ற படத்துக்காக, கே.ஜே.ஜேசுதாஸுக்காக ட்ராக் பாட வேண்டும் என்று அழைக்கப்படுகிறார்.

முதலாவது, இரண்டாவது என்று மீளப் பாடுகிறார், தேவராஜன் மாஸ்டருக்குத் திருப்தியே இல்லை. மூன்றாவதாகப் பிராவகம் எடுக்கிறது பாடல்.

அதுதான்

மஞ்ஞலையில் முங்கிதோர்த்தி

https://www.youtube.com/watch?v=FtjykWLrC8w

எந்தவித முடிவும் சொல்லாமல் பாடலுக்கான ஊதியத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று 50 ரூபா இயக்கு நர் கிருஷ்ணன் நாயரால் ஜெயசந்திரனிடம் கொடுக்கப்படுகிறது.

ஜேசுதாஸுக்கான ட்ராக் பாடல் தானே என்ற ஒரு குழப்ப நிலையில் இருந்த ஜெயச்சந்திரன்,

பாடல் ஓகேயா?

என்று தயங்கிக் கேட்க,

“ஆமாம் நீங்கள் பாடிய பாடல் தான் அப்படியே இருக்கப் போகிறது”

பலமாகச் சிரித்தவாறே கிருஷ்ணன் நாயர் சொன்னாராம்.

அப்போது தான் தேவராஜன் மாஸ்டர் குறும்புத்தனமாக ஏமாற்றியது புரிந்தது அந்த 21 வயசு வாலிபன் ஜெயச்சந்திரனுக்கு.

அதன் பின் மலையாளம், தமிழ் என்று சங்கீதச் சிற்றரசனாகக் கோலோச்சினார் என்பது வரலாறு.

தேவராஜன் மாஸ்டரிடம் உதவி இசையமைப்பாளராக அப்போது இருந்த ஆர்.கே.சேகரின் மகன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கூடப் பாடி விடுங்கள் என்று எழுதி வைத்ததும் காலதேவன் கணக்கு.

ஜெயச்சந்திரன் நம்மை விட்டுப் பிரிந்த ஜனவரி 9 ஆம் திகதி பின்னிரவோடு,

இன்று ஜனவரி கே.ஜே.ஜேசுதாஸ் பிறந்த தினமாக அமைந்திருக்கிறது.

கானா பிரபா


0 comments: