புதிய மன்னர்கள் படத்தில் தன் வழக்கமான கூட்டணிப் பாடலாசிரியர் பழநி பாரதியோடு, இயக்குநர் விக்ரமன் ரஹ்மானுடன் இணைகிறார்.
ஒண்ணு ரெண்டு மூணடா பாடல் மட்டும் கவிஞர் காளிதாசன் (திருப்பத்தூரான்) வரிகளில் இசையமைக்கப்பட்டாலும், மீதி நான்குமே பழநி பாரதி ஒரே பாடலாசிரியருக்குப் போகின்றது
ஒரு பாடலின் சூழலைச் சொல்லி ஏ.ஆர்.ரஹ்மானிடம் அதற்கான டியூன்களை வாங்கி திருப்தி தராத சூழலில் நாலைந்து மாதங்கள் காத்திருப்பில்
“நீங்களே ஒரு பாடலைக் கொடுங்கள் இசையமைத்துத் தருகிறேன்” என்று ரஹ்மான் வேண்டவும்,
பழநி பாரதியை வைத்து பாடல் எழுத வைத்து ஒரு மணி நேரத்தில் திருப்தியோடு பதிவான பாட்டுத் தான் “நீ கட்டும் சேலை மடிப்பில நான்” . அந்தப் பாடல் பெற்ற பெரும் புகழே இந்தப் படத்துக்கும் ஆப்பாய் அமைந்ததை விக்ரமன் தன் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் பட வெளியீட்டில் இன்னொரு படம் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பழநி பாரதி வரிகளில் வெளியாகி முந்தி விட்டது.
அந்தப் பாடல் தான் "பவித்ரா" படத்தில் இடம்பெற்ற
"ஈச்சம் பழம் நாவப்பழம் என் மாமா உன்ற கருப்பு"
https://www.youtube.com/watch?v=BYzXIGaxa1U
"மதுற மதுற தான்"
"கோயமுத்தூர் கோயமுத்தூர் தாண்டி"
அதைத் தொடர்ந்து கோவை சரளாவின் கோயம்புத்தூர் பேச்சு சரமாரியாகக் கொட்டவும், பாடல் தொடங்கும்.
வடிவேலுவுக்காக சாஹுல் ஹமீதுவும், கோவை சரளாவுக்காக சித்ராவும் பாடியிருப்பார்கள்.
கோவை சரளாவுக்கு இளையராஜாவும் (மாருக்கோ மருக்கோ - சதிலீலாவதி), ஏ.ஆர்.ரஹ்மானும் ( ஈச்சம்பழம் நாவப்பழம்) இசையமைக்க சித்ரா பாடியது பெருமை மிகு வாய்ப்பு என்றால்,
வடிவேலு இளையராஜா & ஏ.ரஹ்மான் இசையில் தானே பாடியது இன்னும் பெரும் வாய்ப்பு.
ஏ.ஆ.ரஹ்மானிடம் ஐந்து பாடல்கள் வாங்கி விட்டால் போதும் என்ற காலத்தில் இந்த மாதிரிப் பாடல்களில் அவரின் வித்தகத் திறன் புதுமையாக வெளிப்பட்டிருக்கும். அந்தக் காலத்தில் பண்பலை வானொலிகளின் ஆரம்ப யுகத்தில் கொழும்பு எஃப் எம் 99 வானொலியில் சக்கை போடு போட்ட பாடல்களில் இந்த ஈச்சம் பழமும் ஒன்று.
0 comments:
Post a Comment