Pages

Thursday, August 9, 2007

நீங்கள் கேட்டவை 17

இன்றைய நீங்கள் கேட்டவை பதிவும் பல்வேறு காலகட்டத்துப் பாடல்களோடு மலர்கின்றது. சரி, உடனேயே இன்றைய பாடல் பகுதிக்குப் போகலாம்.

முதலில் வெயிலான் விரும்பிக் கேட்ட "பெண்ணல்ல நீ ஒரு பொம்மை" என்ற பாடல் வி.குமாரின் இசையில் "சொந்தமடி நீ எனக்கு" திரைப்படத்திற்காக ஜெயச்சந்திரன், சுசீலா பாடும் பாடலாக மலர்கின்றது.

அடுத்ததாக மாயாவின் விருப்பமாக "நெஞ்சில் ஓர் ஆலயம்" திரையில் இருந்து P.B.ஸ்ரீநிவாஸ் குரலில் "நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்" என்ற பாடல் வருகின்றது.
பாடல் இசை எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையர்கள்

கோபிநாத் விருப்பமாக "புதிய பறவை" திரையில் இருந்து "பார்த்த ஞாபகம் இல்லையோ" பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா பாடுகின்றார்.

நட்பு திரையில் இருந்து நக்கீரன், கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி பாடும் இளையராஜா இசையில் வரும் "அதிகாலை சுபவேளை" பாடலைக் கேட்கலாம்.

நிறைவாக சர்வேசனின் விருப்பமாக "ராஜா சின்ன ராஜா" என்ற இனிய பாடலை பூந்தளிர் படத்திற்காக பி.சுசீலா, இளையராஜா இசையில் பாடுகின்றார்.

Powered by eSnips.com

14 comments:

மாயா said...

மிக்க நன்றி அண்ணா . . .

Anonymous said...

நன்றி! நன்றி!! நன்றி!!! பிரபு. இன்னும் ஒரு பாடல் - 'வான மழை போலே!!!'

வடுவூர் குமார் said...

புதிய,பழைய பாடல்கள் என்று அருமையாக கலந்துள்ளது.

கானா பிரபா said...

வாங்கோ மாயா

கேட்டதைக் கொடுப்போம் ;-)

Anonymous said...

பிரபா, நன்றி.

அலுவலகத்தில் பாடல்களைக் கேட்க முடியவில்லை. நாளை கேட்டு மகிழ்கிறேன்.

வாழ்க்கை ஒடம் செல்ல ஆற்றில்..
என்ன சொல்லி நான் எழுத...

மீண்டும் நன்றி

Sundari said...

அருமையான தொகுப்பு...

உரிமை கீதம் படத்தில் "அஞ்சு விரல் கெஞ்சுதடி" பாடல் கிடைக்குமா....

கோபிநாத் said...

தலைவா

அனைத்து பாடல்களும் அருமை....நன்றி ;-))

நெல்லைக் கிறுக்கன் said...

தல,
எல்லாப் பாட்டும் அருமை... என் அடுத்த தேர்வு "பாட வந்ததோர் கானம், பாவை நெஞ்சில் ஓர் நானம்" பாடல். படம் "இளமைக் காலங்களில்"னு நெனைக்கிறேன்.

கானா பிரபா said...

வெயிலான், வடுவூர் குமார், நக்கீரன்

வருகைக்கு நன்றிகள்

உங்கள் பாடல்கள் தொடர்ந்தும் ஒலிக்கும்

கானா பிரபா said...

சுந்தரி

நீங்க கேட்ட பாட்டு நிச்சயம் வரும்

தல கோபி

தொடர்ந்த வருகைக்கு நன்றி ;-)

நெல்லைக் கிறுக்கரே

படப்பெயர் சரியாத் தான் சொல்லியிருக்கீக. பாட்டு வரும் ;-)

Sud Gopal said...

ஆனந்த ராகம் கேட்கும் காலம் - பன்னீர்புஷ்பங்கள்
வந்தாள் வந்தாள் ராஜகுமாரி - ஒரு ஊர்லே ஒரு பிரின்சஸ்

அட்வான்ஸ் நன்றிகள் :-)

கானா பிரபா said...

வாங்க சுதர்சன்

கேட்கும் பாடல்களை ஒரு தனித்துவமான தெரிவில் கேட்பது உங்கள் ஷ்பெஷாலிட்டி. இந்த இரண்டு பாட்டுமே அருமையான தேர்வுகள். நிச்சயம் வரும்.

SurveySan said...

Thanks you so much prabha :)

eppadidhaan pudikkareengalo indha paattellaam. kalakkal.

aduthathaa,
1) paadaadha paattellaam paada vandhaal

2) kaadhodudhaan naan paduven

3) thulluvadho ilamai, theduvadho thanimai

4) vani jayarams 'vandhe matharam'
:)

Chennai boy said...

பூந்தளிர் படப்பாடலுக்கு மிக்க நன்றி. இந்த பாடலை தான் தேடிக் கொண்டிருந்தேன். இந்த படத்தின் மத்த பாடல்கள் கிடைத்து விட்டது. மிக்க நன்றி.

என் பெயர் சீனா.