
"ஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்
ரகசியம் சொன்னது அப்போது தானா
ஓசைகள் ஏதும் இல்லாமல் வெய்யிலின் வண்ணம்தான்
ஓவியமானது அப்போதுதானா"
இன்றைக்கு எத்தனை முறை இந்தப் பாட்டைக் கேட்டிருப்பேன்....?
கணக்கில்லை,
ஏன் இந்தப் பாட்டை இன்று கேட்கவேண்டும் என்று மனம் உந்தியது...?
தெரியவில்லை
ஆனால் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கின்றேன், கைகள் தானாகத் தட்டச்சும் போதும் காதுகளை நிறைக்கின்றது இந்தப் பாடல்.
மணக்கோலத்தில் கோட் சூட் அணிந்த ஆண்மகனும், பாரதிராஜா படங்களில் வரும் வெள்ளுடைத் தேவதையாகப் பெண்மகளின் வெண் கையுறையில் கரம்பதித்து நிலம் நோகாமல் மெல்லக் கால் பதித்து வந்து யாருமில்லாத அந்த அமைதி கும்மிய அறையின் மேசையில் மெழுகுதிரி மெல்ல அலுங்காமல் குலுங்காமல் மெல்ல ஆடி ஒளிபரப்ப வேறெந்த வெளிச்சமோ, ஓசைகளோ இல்லாத அந்த வேளை ஒலிக்க வேண்டும் இந்தப் பாடல் என்று கற்பனை செய்து திருப்தி கொள்கிறது என் மனம்.

இந்தப் பாடலை கல்யாண ரிஸப்ஷன் வீடியோவில் இணைத்துப் பாருங்கள் ஒரு புது அர்த்தம் கிட்டும்.
திருதிரு துறுதுறு படத்தை இன்னும் பார்க்கவில்லை, படத்தின் இயக்குனர் நந்தினி ஜே.எஸ் என்ற பெண்ணாம். இந்தப் பாடல் கொடுத்த சுகந்தத்தில் பாடலாசிரியர் முத்துக்குமாராகத் தான் இருக்கும் என்ற ஆவலில் தேடினால் எழுதியவர் லலிதா ஆனந்த் என்ற புதுமுகக் கவிஞராம். கவிஞரே உங்களின் பாடல்வரிகளின் பொருளுணர்ந்து உயிர்கொடுத்த மணிஷர்மாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
எப்போது என்னில் கலந்தாய் நீ.....
ஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்
ரகசியம் சொன்னது அப்போது தானா
ஓசைகள் ஏதும் இல்லாமல் வெய்யிலின் வண்ணம்தான்
ஓவியமானது அப்போதுதானா
விண்மீன்கள் யாவும் அன்று பல கண்களாக மாறி
நமை உற்றுப்பார்த்த போது தானா
நம் சுவாசம் கூட அன்று இரு கைகளாக மாறி
மெல்ல தொட்டுக் கொண்ட போது தானா
ஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்
ரகசியம் சொன்னது அப்போது தானா
தலையணை உள்ளே அன்று நான்
பறவைகள் பாடும் ஓசை கேட்ட பொழுதா
உலர்த்திய போது அன்று என் உடைகளின்
உந்தன் பார்வை உதிர்ந்த பொழுதா
மணல்வெளியில் பாதம் கோடி
உன் சுவடை பார்க்கும் போதா
எப்போது என்னில் கலந்தாய் நீ.....
ஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்
ரகசியம் சொன்னது அப்போது தானா
மழைத்துளி எல்லாம் அன்று பல நிறங்களில்
உந்தன் மீது விழுந்த பொழுதா
பனித்துளி உள்ளே அன்று ஓரழகிய
வானம் கண்டு ரசித்த பொழுதா
குளிரிரவில் தென்றல் தீண்ட
உன் விரல் போல் தெரிந்து போனாய்
எப்போது என்னில் கலந்தாய் நீ.....
3 comments:
நல்ல பாடல் தல..;)
Oorule ills Ella songsum podureengga. Naan kettathai mattum vanjanai pandreengga. Naan ingge kiddie 'kaa'
super Kana anna
Post a Comment