“என்னென்ன எண்ணங்கள்
உன் நெஞ்சிலே
காணாத சொர்க்கம்
உந்தன் காதல் அல்லவா
லா-லா-ல-லா-லா
லா-ல-லா-லா-லா-ல-லா.....”
இன்று விடிகாலை ஓட்டத்தில்
“என் வாழ்விலே வரும் அன்பே வா”
https://www.youtube.com/watch?v=qbvEK1y_T6c
பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த போது எண்ண அலைகள் கிளம்பின.
ஒரு இயக்குநர் தான் எடுத்த உரையாடலற்ற காட்சியை வைத்துக் கொண்டு, அதைப் பின்னணி இசையில் இளையராஜா கவனித்துக் கொள்வார் என்பது போலத் தான். எத்தனையோ பல பாடல்களை எஸ்பிபி கவனித்துக் கொள்வார் என்பது போலத்தான் இசையமைப்பாளர்கள் அவற்றின் சங்கதிகளை அவரிடமேயே விட்டு வைப்பார்கள் போல. அது மட்டுமன்றி “என் வாழ்விலே” போன்ற உதாரணப் பருக்கைகளில் பாடலாசிரியர்கள் கூட இந்த இடைவெளியை அவரிடமேயே ஒதுக்கி விடுவார்கள் போல.
இங்கே இன்னொரு விஷயமும் சொல்லி வைக்க வேண்டும். “என் வாழ்விலே” பாடல் முன்பேயே “சத்மா”வில் “ஹே ஸிந்தகி” என்ற பிறப்புக் கண்டு தான் இங்கு வந்தது. அங்கேயும் அந்த லாலல லாலா எல்லாம் உண்டு. ஆனால் இப்போது போய்க் கேட்டுப் பாருங்கள் சுரேஷ் வாட்கர் மறைந்து எஸ்பிபித்தனம் தான் அங்கே முன்னிற்கும்.
“செழித்த அழகில்
சிவந்து நிற்கும் செந்தேனே
என் கழுத்து வரையில்
ஆசை வந்து நொந்தேனே”
“SPB பாடகன் சங்கதி நூலில் ஏ.ஆர்.ரஹ்மானும் எஸ்பிபியும் குறித்த பகிர்வில் அந்த “தங்கத்தாமரை மகளே” பாடல் உதாரணத்தோடு தான் தொடங்கும்.
ஒரு மொழியை “அறுத்து உறுத்து” பிரயோகிக்கும் ஆற்றல் தான் மிக முக்கியமானது, அதன் பின்னர் தான் நல்ல குரல் வளமும், சங்கதியும் என்பதில் மிகக் கடுமையான கொள்கை கொண்டவர் எஸ்பிபி. அதையே போட்டிப் பாட்டு மேடைகளில் சொல்லி வந்தவர்.
40,000 பாடல்களைப் பாடியவர் என்ற கணக்கில் இருந்து ஒரு 10,000 ஐ எடுத்துக் கொள்ளுங்கள், சரி அதுவும் வேண்டாம் ஒரு சைபரை எடுத்து விட்டு 1000 என்ற கணக்கை வைத்துக் கொண்டு பாருங்கள்.
எத்தனை விதமான பாத்திரங்கள், எத்தனை எத்தனை காட்சிச் சூழல்கள் ஆனால் எல்லாமே வித்தியாசமான எஸ்பிபிகள்.
ஒரு கமல் அல்ல, பல கமல்கள், ஒரு ரஜினி அல்ல பல ரஜினிகள் என்று பொழுதுபோக்குச் சித்திரங்களிலும் ஒவ்வொரு பாடல்களிலும் மின்னுவார் எஸ்பிபி.
இன்று 77 வது பிறந்த நாள் காணும் எஸ்பிபிக்கான புகழ் மாலையாக இங்கே நான் பகிர்வது, தமிழில் மட்டும் அவர் ‘முக”வரியாய் அணி செய்த பாடலாசிரியர்கள்.
இந்தப் பாடலாசிரியர்களின் ஒரு சில பாடல்கள் அல்லது பல நூறு பாடல்களைப் பாடியிருந்தாலும் இங்கே காட்டியிருப்பது உதாரணக் குறிகள் தான். அந்தந்தப் பாடலாசிரியர்களின் தனித்துவமும், எஸ்பிபியின் தனித்துவமும் இணை சேர்ந்தவற்றை இயன்றவரை இணைத்துப் பகிர்கிறேன்.
1. ஆண்டாள் – வாரணம் ஆயிரம் ( கேளடி கண்மணி)
https://www.youtube.com/watch?v=POxGgSX-uik
2. புலமைப்பித்தன் - ஆயிரம் நிலவே வா (அடிமைப் பெண்)
https://www.youtube.com/watch?v=iNhhDdxs8Q0
3. கண்ணதாசன் - அங்கும் இங்கும் (அவர்கள்)
https://www.youtube.com/watch?v=IvTxaQ6UesY
4. சுப்ரமணிய பாரதியார் - தீர்த்தக்கரையினிலே ( வறுமையின் நிறம் சிகப்பு)
https://www.youtube.com/watch?v=yNQzciNAvyw
5. பாரதிதாசன் – காலை இளம் பருதியிலே (கண்ணன் ஒரு கைக்குழந்தை)
https://www.youtube.com/watch?v=NBC6HXtbra4
6. முத்துலிங்கம் - ராகதீபம் ஏற்றும் நேரம் (பயணங்கள் முடிவதில்லை)
https://www.youtube.com/watch?v=YZDNVNQxnE4
7. ஜெயகாந்தன் – சித்திரப்பூ சேலை ( புதுச் செருப்பு கடிக்கும்)
https://www.youtube.com/watch?v=MJhsR7bjsRw
8. பாவலர் வரதராஜன் – வானுயர்ந்த சோலையிலே ( இதயக் கோயில்)
https://www.youtube.com/watch?v=0WaS7-SgqTg
9. பொன்னடியான் – வானின் தேவி வருக ( ஒருவர் வாழும் ஆலயம்)
https://www.youtube.com/watch?v=C11N8SBZKL0
10. காமகோடியன் - உனக்கொருத்தி பொறந்திருக்கா ( புண்ணியவதி)
https://www.youtube.com/watch?v=lLAeI8THtPk
11. வாலி – உலகம் ஒரு வாடகை வீடு ( தையல்காரன்)
https://www.youtube.com/watch?v=g8arQDY37fc
12. இளையராஜா – இதயம் ஒரு கோயில் ( இதயக் கோவில்)
https://www.youtube.com/watch?v=A_SXPo8PL9Y
13. கு.மா.பாலசுப்ரமணியம் – வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே (கனவுகள் கற்பனைகள்)
https://www.youtube.com/watch?v=DnJX1EVHil8
14. பஞ்சு அருணாசலம் – வா பொன்மயிலே (பூந்தளிர்)
https://www.youtube.com/watch?v=fo4fKE-wS-g
15. எம்.ஜி.வல்லபன் – என்னோடு பாட்டு பாடுங்கள் ( உதயகீதம்)
https://www.youtube.com/watch?v=gRef9NgUNmM
16. நா.காமராசன் – பாடும் வானம்பாடி ( நான் பாடும் பாடல்)
https://www.youtube.com/watch?v=ZJHjnYc8h2U
17. மு.மேத்தா – யார் வீட்டில் ரோஜா ( இதயக் கோவில்)
https://www.youtube.com/watch?v=THgaQGJCQSY
18. குருவிக்கரம்பை சண்முகம் - செங்கமலம் சிரிக்குது (தாவணிக்கனவுகள்)
https://www.youtube.com/watch?v=GXMWVecrjKw
19. விஸ்வம் – முத்துத்தாரகை (ஒரு கை ஓசை)
https://www.youtube.com/watch?v=pE3lOFNeACg
20. சிதம்பர நாதன் – பூமாதேவி போலே வாழும் (பஞ்சகல்யாணி)
https://www.youtube.com/watch?v=yKW-7lyYHVs
21. கங்கை அமரன் – தோளில் விழும் மாலையே ( உள்ளத்தில் நல்ல உள்ளம்)
https://www.youtube.com/watch?v=fXdlP-5KFqg
தொகுப்பு கானா பிரபா
22. வைரமுத்து – வண்ணம் கொண்ட வெண்ணிலவே ( சிகரம்)
https://www.youtube.com/watch?v=pBlY-QVAH_0
23. பிறைசூடன் – நடந்தால் இரண்டடி ( செம்பருத்தி)
https://www.youtube.com/watch?v=J6gYOhzxf4o
24. பொன்னியின் செல்வன் – சிகப்பு லோலாக்கு குலுங்குது
https://www.youtube.com/watch?v=NVHlfoQTxQQ
25. எஸ்.ஏ.ராஜ்குமார் – பொன்மான் குயில் (மனசுக்குள் மத்தாப்பு)
https://www.youtube.com/watch?v=x2yQ7UZnZiE
26. டி.ராஜேந்தர் – ஒரு பொன்மானை நான் காண ( மைதிலி என்னைக் காதலி)
https://www.youtube.com/watch?v=EgyoS3TsBsY
27. பாக்யநாதன் – துள்ளித்திரிந்ததொரு காலம் ( என்றும் அன்புடன்)
https://www.youtube.com/watch?v=vuMzSgl7PKg
28. அவினாசி மணி – பூப்போட்ட தாவணி (காக்கிச்சட்டை)
https://www.youtube.com/watch?v=n0hsTOu5ZvU
29. அறிவுமதி – அழகூரில் பூத்தவளே (திருமலை)
https://www.youtube.com/watch?v=3wOtzuizb7U
30. வாசன் – இரு கண்கள் போதாது ( தர்மா)
https://www.youtube.com/watch?v=_5FIVxQx5PA
31. உமா கண்ணதாசன் – பூ மலர்ந்த வேளையிலே ( ஒரு புதிய கதை)
https://www.youtube.com/watch?v=0KfBcAKX90s
32. சின்னக் கோனார் - வா வா சாமி ( சின்ன வீடு)
https://www.youtube.com/watch?v=jD0szlzYvOA
33. ஆர்.வி.உதயகுமார் – பச்சமலைப் பூவு (கிழக்கு வாசல்)
https://www.youtube.com/watch?v=a1BZll6uw5M
34. நா.முத்துக்குமார் – பல்லேலக்க ( சிவாஜி)
https://www.youtube.com/watch?v=4h8WUuDtH4I
35. யார் கண்ணன் – மலரே மலரே (உன்னை ஒன்று கேட்பேன்)
https://www.youtube.com/watch?v=uWDx_dy6vI8
36. கஸ்தூரி ராஜா - கும்பாபிஷேகம் கோயிலுக்குத்தான் ( வீரத்தாலாட்டு)
https://www.youtube.com/watch?v=HDlAvZmnmNk
37. சிவகுமார் – கனவு பலித்தது ( வெற்றி படிகள்)
https://www.youtube.com/watch?v=rhFvZiFIWH4
38. கண்ணம்மா கனவில்லையா - சுமதிராம் ( விஸ்வ துளசி)
https://www.youtube.com/watch?v=qDak-7AsRUc
39. காளிதாசன் – ஓ ஓ மதுபாலா ( மதுமதி)
https://www.youtube.com/watch?v=CuIz_-EzzYs
40. அகத்தியன் – நலம் நலமறிய ஆவல் ( காதல் கோட்டை)
https://www.youtube.com/watch?v=lc2eM5AbmhI
41. பழநி பாரதி – முன்பனியா ( நந்தா)
https://www.youtube.com/watch?v=MWZoDydF40E
42. சினேகன் – ஐய்யய்யோ நெஞ்சு அலையுதடி ( ஆடுகளம்)
https://www.youtube.com/watch?v=uxb-TMoqb9k
43. கபிலன் – எங்கடி நீ போனே ( தேவ்)
https://www.youtube.com/watch?v=dlFjUCoWrA4
44. யுகபாரதி – பாட்டு ஒண்ணு (ஜில்லா)
https://www.youtube.com/watch?v=Y4x_j_vt6fk
45. மதன் கார்க்கி – எங்கே போனாய் (ஜீவா)
https://www.youtube.com/watch?v=IEM2759ItbU
46. பா.விஜய் – யம்மா யம்மா காதல் பொன்னம்மா ( ஏழாம் அறிவு)
https://www.youtube.com/watch?v=Xt-RpOfOxDU
47. விவேகா – அண்ணாத்தே (அண்ணத்தே)
https://www.youtube.com/watch?v=FK6dUrfYx84
48. A.பவுன்ராஜ் – அபூர்வசக்தி 369 (ராசலீலை)
https://www.youtube.com/watch?v=0X2YfEkQvVk
49. ஆர்.சுந்தரராஜன் - நில்லடி என்றது (காலமெல்லாம் காத்திருப்பேன்)
https://www.youtube.com/watch?v=4j364_P3LY4
50. தபூ சங்கர் – செம்மொழியே செம்மொழியே ( வல்லக்கோட்டை)
https://www.youtube.com/watch?v=PxxIelm2G6k
போனஸ்
51. தாமரை - நான் போகிறேன் மேலே மேலே (நாணயம்)
“நல்ல பாடகராக வர வேண்டுமென்றால் போய்
நன்றாக மொழியைக் கற்றுக் கொண்டு வா”
என்று எம்.எஸ்.வி சொன்ன பாலபாடத்தைத் தான் வாழ் நாளில் எந்த மொழிக்குப் போனாலும் அங்கே நியாயம் செய்து கற்பித்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள்.
“அழகிய சிங்கர்” என்ற அடையாளத்தில் “சிங்கர்” என்பது SPB என்ற அந்தச் சிங்கத்தின் உயர்வு நவிற்சியே.
SPB நம் வாழ்வில் பல்லாண்டு காலம் வாழ்வார்.
கானா பிரபா
03.06.2023
#spb #SPBalasubrahmanyam
1 comments:
Beautiful post
Post a Comment