Pages

Thursday, December 8, 2016

நானொன்று கேட்டால் தருவாயா

நானொன்று கேட்டால் தருவாயா
முடிந்ததென்றால் அது முடியுமென்றால்
நிலவுக்குக் கூட்டிப் போவாயா
நடந்திடுமா அது நடந்திடுமா

அன்பே கதை அல்லவோ
அன்பின் கதை சொல்லவோ
சேர்ந்து ஒரு பாடல் ஓஓஓஓஓஓஓ

நானொன்று கேட்டால் தருவாயா

கண்கள் எழுதும் ஒரு கடிதத்திலே
கண்ணமுதக் கவிதைகள் விளங்கியதா
கற்பனைகளைச் சொல்லும் கவிதைகளில்
சொல்வதென்றும் உண்மையில்லை புரிகிறதா

என் பாடல் செல்லுமிடம் எங்கேயென 
நீயே சொல்வாய்
உன் பாடல் நான் சொல்லவோ
என் பாதை வேறெல்லவோ
இதயம் தரையில் இறங்காது
இலைக்குச் சிறகு முளைக்காது
சங்கீத மொழி தூது

நானொன்று சொல்வேன் கேட்பாயா
முடிந்ததென்றால் அது முடியுமென்றால்
நீயந்த நிலவை மறப்பாயா
நடந்திடுமா அது நடந்திடுமா

வெண்ணிலவிலே உன்னைக் குடியமர்த்த
தோளில் இரு சிறகுகள் எனக்கில்லையே
குடியிருக்கும் சின்னக் குடிசையிலும்
தேன் நிலவு தென்றலுடன் செல்வதில்லையோ
ஆதாரம் இல்லாமலே கூடாரம் நிற்காதம்மா
ஆதாமின் ஆதாரம் தான் ஏவாளெனும் பெண் தானய்யா
வானம் கையில் அடங்காது
மெளன அலைகள் உறங்காது
சங்கீத மொழிகள் தூது

நானொன்று கேட்டால் தருவாயா
முடிந்ததென்றால் அது முடியுமென்றால்
நிலவுக்குக் கூட்டிப் போவாயா
நடந்திடுமா அது நடந்திடுமா

அன்பே கதை அல்லவோ
அன்பின் கதை சொல்லவோ
சேர்ந்து ஒரு பாடல் ஓஓஓஓ
நானொன்று கேட்டால் தருவாயா


🎻🎻🎻🎻🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸

இசைஞானி இளையராஜா இசையில் இளைய ராகம் படத்துக்காக சித் ராவுடன் அருண்மொழி பாடிய பாட்டிது. வேலை முடிந்து வீட்டுக்கு வரும் ரயில் பயணித்துக் கொண்டிருக்கும் போது திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டு வந்து கொண்டிருக்கிறேன். இடையில் பாடல் வரிகளையும் கேட்டு எழுதி முடித்து விட்டேன்.  எழுதி முடித்த பாடல் வரிகளில் கண்கள் பதியம் வைக்க, பாடலைக் கேட்டுக் கொண்டு வருவது சொர்க்க லோகத்திலும் கிட்டாத இன்பம்.

பாடகர் அருண்மொழியின் குரல் அசாதரணமானது என்று மெய்ப்பிக்க எத்தனையெத்தனை பாடல்கள். அவற்றில் இதுவுமொன்று. அவரின் குரலே ஒரு வாத்தியம் எழுப்பும் நாதம் போலிருக்கும். 
அதிர்ந்து கொடுக்காத அந்த ஒலி அப்படியே ஊடுருவும். பாடல் கேட்டு முடித்த பின்பும் அந்த நாத இன்பத்தை மனது பொச்சடிக்கும்.

நானொன்று சொன்னால் கேட்பீர்களா?
இந்தப் பாடலை இது நாள் வரை கேட்காதவர்கள் இப்போதே ஓடிச் சென்று கேட்டு அனுபவியுங்கள்,
ஒன்றுக்குப் பல முறை 
நடந்திடும்
அது முடியும் 

0 comments: