பண்பாடும் தாமரையே
வா வா
இசையில் விளையும்
தேமாங்கனி.....
இன்று பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் இன்றைய தேதியில் வாழும் தமிழ்த் திரையிசைத் தகவல் பொக்கிஷமாக விளங்கும் கங்கை அமரன்.
பாடலாசிரியராக, இசையமைப்பாளராக, இயக்குநராக, தயாரிப்பாளராக அவரின் பன்முகப் பரிமாணத்தில் தவிர்க்க முடியாத இன்னொரு அங்கம் பாடகர் கங்கை அமரன்.
இசைஞானி இளையராஜாவின் பிஞ்சுக் குரல் போல அப்படியே இன்றுவரை தொனிக்கும் அமரனது குரல்.
அடிப்படையில் அவரே ஒரு இசையமைப்பாளராக இருப்பதால் ரொம்பவே கஷ்டப்பட்டு வார்த்தைகளை வளைக்காமல், வலிக்காமல் பாடிக் கொடுப்பார்.
தனக்குப் பிடித்த பாடகக் குரலாக கார்த்திக் ராஜா அடையாளப்படுத்தியது கங்கை அமரனைத்தான்.
“ஓட்டுக் கேட்டு வருவாங்கண்ணே” போன்ற பாடல்களில் இளையராஜா சகோதரர்கள் கூடப் பாடியதோடு,
"அண்ணன்மாரே தம்பிமாரே" (ஆனந்தக் கும்மி), உட்டாலக்கடி (மை டியர் மார்த்தாண்டன்) பாடல்களில் எஸ்பிபி குழுவினரோடு அதகளப்படுத்தியதோடு,
வாடி என் கப்பக்கிழங்கே போன்ற ஏராளமான குழுப்பாடல் வகையறாவிலும்,
வாடி என் பொண்டாட்டி நீதானே (வெள்ளை ரோஜா), மச்சான வச்சுக்கடி (நான் பாடும் பாடல்) போன்ற துள்ளிசையிலும், குரலை மாற்றிப் பரிமளித்த “குத்தாலத்தில் தண்ணி இல்லைன்னா” ( புதுப்பாட்டு),
ஏன் அவரே இசையமைத்த பிள்ளைக்காக படப்பாடலான “மழலையின் மொழியினில் அழகிய தமிழ் படித்தேன்” பாடல்கள் தோறும் பரிமளித்தவர். பாடல் தொகுப்பு கானா பிரபா
கங்கை அமரனுக்குப் போய் சேரக் கூடாது என்று நினைத்த பாட்டு “தர்மம் வெல்லும்” படத்துக்காக எஸ்பிபி & சித்ரா ஆகியோர் பாடிய “தேவி தேவி நீ என் தேவி” ஐ படத்தில் ஏனோ மீளவும் கங்கை அமரனை வைத்துப் பாட வைத்தது ஏனோவென்று புரியவில்லை.
கங்கை அமரன் பாடிய காதல் பாடல்கள் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம்.
“சோலைப் புஷ்பங்களே” போன்ற புகழ்பூத்த பாடல்கள் கங்கை அமரன் பெயர் சொல்லும் என்றாலும்,
“பண்பாடும் தாமரையே”, மற்றும் “விழியே நலமா” போன்றவை அவரின் உன்னதங்கள் என்பேன்.
“மன்னன் கூறைச்சேலை” பாடலின் இடைக் குரலாக வந்து மயக்குற வைப்பார்.
அந்த வகையில் இங்கே நான் பகிர்ந்திருக்கும் இசைஞானி இளையராஜா இசையில் கங்கை அமரன் பாடிய ஜோடிப் பாடல்கள் சொல்லும்
அவரின் பாட்டுத்திறன் குறித்து
1. சோலைப் புஷ்பங்களே – இங்கேயும் ஒரு கங்கை
https://www.youtube.com/watch?v=01EzymmWxtU
2. இரு பாதம் பார்த்தேன் – மனித ஜாதி
https://www.youtube.com/watch?v=olgPSEWbJdw
3. புதுசு புதுசு – மனித ஜாதி
https://www.youtube.com/watch?v=p3EB8KlessI
4. தெற்குத்தெரு மச்சானே – இங்கேயும் ஒரு கங்கை
https://www.youtube.com/watch?v=9mARPaSy5Ak
5. பூஜைக்கேத்த பூவிது – நீதானா அந்தக் குயில்
https://www.youtube.com/watch?v=sA22pnpNQoI
6. பண்பாடும் தாமரையே வா – நீ தொடும் போது
https://www.youtube.com/watch?v=czhBDXYhsPk
7. மன்னன் கூறைச் சேலை – சிறைச்சாலை
https://www.youtube.com/watch?v=MOG7TxoEXyA
8. விழியே நலமா உனை நான் கேட்கிறேன் – தூரத்துப் பச்சை
https://www.youtube.com/watch?v=f6B1yva1RU0
9. சாமியை வேண்டிக்கிட்டு – கவிதை பாடும் அலைகள்
https://www.youtube.com/watch?v=c-9d3iUCou4
10. சொல்லிக் கொடு சொல்லிக்கொடு – கேள்வியும் நானே பதிலும்
நானே
https://www.youtube.com/watch?v=JLqfdTq3a48
அடி குயில்கள் வாழும் நாள் வந்தால்
அடி குலவைச்சத்தம் கேட்காதா
உன் தவிக்கும் துயரம் தீர்க்கத்தான்
அவன் காலடிச்சத்தம் கேட்காதா…
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
கங்கை அமரன் அவர்களுக்கு !
கானா பிரபா
08.12.2025

0 comments:
Post a Comment