"இப்ப தான் ஒரு முழுமையா உணர்கிறேன்"
என்று மனம் விட்டுச் சொன்னார் SPB.
"அண்ணாமலை" படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது பாடல்கள் ரகளையாக ஊரெல்லாம் கலக்க, அவருக்கோ ஒரு மனக்குறை "ஒரு பெண்புறா" பாடலையும் தானே பாடியிக்கலாமே என்று.
அந்த உள்ளக் கிடக்கையை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடமும், இசையமைப்பாளர் தேவாவிடமும் சொல்லிக் கலாய்ப்பாராம் எஸ்பிபி.
"ஏன் நாம மெலடி பாட மாட்டோமா" என்று.
ரஜினி படங்களில் ஜேசுதாஸ் பாடல் என்பது ஒரு உளவியல் ரீதியாக அந்தக் கதாபாத்திரத்தின் நொந்த தன்மையைப் பிரதிபலிக்கும்.
இதே பாங்கிலேயே " நல்லவனுக்கு நல்லவன்" படத்தில் "சிட்டுக்குச் செல்லச் சிட்டு" பாடலும் ஜேசுதாஸ் குரலில் அமைந்திருந்தது.
இந்த மாதிரி எஸ்பிபி ஆசைப்பட்டதன் காரணம் பிறரின் வாய்ப்பைத் தட்டிப்பறிப்பதற்கல்ல, இந்த மாதிரியான நல்ல வாய்ப்புகள் நல் வரம் என்ற அவரின் மனோவுணர்வு தான்.
இதே போலவே சுரேஷ் கிருஷ்ணாவின் குரு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் "ருத்ர வீணா" படத்தில்
ஜேசுதாஸ் பாடிய
"லலித ப்ரிய கமலம்"
https://www.youtube.com/watch?v=-s3cdlJFhes&list=RD-s3cdlJFhes&start_radio=1
பாடலும் கூடத் தானே பாடவேண்டும் என்று ஆசைப்பட அது "உன்னால் முடியும் தம்பி"யில் நிகழ்ந்ததாக எஸ்பிபி மகன் சரண் குறிப்பிட்டிருக்கிறார்.
அதுவே "இதழில் கதை எழுதும்" ஆனது
"அண்ணாமலை" படம் வெளியாகி 12 ஆண்டுகள் கழித்து சுரேஷ் கிருஷ்ணா கன்னடத்தில் பெரும் நடிகர் விஷ்ணுவர்த்தனை வைத்து "கடம்பா" படம் தயாராகிறது. அதற்கும் இசை தேவா தான்.
அப்போது விஷ்ணுவர்த்தன் ஆசைப்பட்ட "ஒரு பெண் பிறா" பாடலை இப்படத்தில் வைக்கத் தீர்மானிக்கும் போது கூடவே எஸ்பிபியை இருவரும் நினைக்கிறார்கள்.
எஸ்பிபியின் ஆசை காத்திருந்து நிறைவேறுகிறது.
அதுதான்
https://www.youtube.com/watch?v=vc0ma2yHXJA
ஆனது.
பெரும் திருப்தியும் மகிழ்ச்சியுமாக எஸ்பிபி சொன்னாராம்
"இப்ப தான் ஒரு முழுமையா உணர்கிறேன்"
அண்மையில் Touring Talkies தொடரிலும் சுரேஷ் கிருஷ்ணா இத்தகவலை மீள் நினைந்தார்.
இந்தத் தகவலை SPB பாடகன் சங்கதி நூலிலும் குறிப்பிட்டுள்ளேன்.
கானா பிரபா
02.07.2025
0 comments:
Post a Comment