Pages

Wednesday, July 30, 2025

ஏவிஎம் இல் இசையமைப்பாளர் & இயக்குநராக கங்கை அமரன்

“இசை : இளையராஜா

பாடல்கள் : கங்கை அமரன்

இந்த அமைப்பில் தான் முந்தானை முடிச்சு படம் வெளிவர வேண்டியது”

இப்படியாக Zee தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் கங்கை அமரன் சொல்லி இருந்தார். ஆனல் அந்தப் படத்தில் புலவர் புலமைப்பித்தன் “நான் பிடிக்கும் மாப்பிள்ளை தான்”, கவிஞர் முத்துலிங்கம் “சின்னஞ்சிறு கிளியே”, நா.காமராசன் “விளக்கு வச்ச நேரத்திலே” பாடல்களை ஏலவே எழுதினார்களே என்று நினைத்திக்

கொண்டிருக்கும் போது தான்,

மறுவாரமே Chat with Chithra வில் விட்டதை முடித்தார் கங்கை அமரன், 

“ புலவருக்கு ஒரு பாட்டு கொடுக்கணும் என்று பாக்யராஜ் ஆரம்பிச்சு 

 அப்படியே மற்றவர்களும் எழுதினார்கள்”

என்றார்.  இப்படி இரண்டு வெவ்வேறு நிகழ்ச்சிகளை இணைத்தால் தான் பல கேள்விகளுக்குப் பதில் வரும் 😊

ஏவிஎம்மின் “முந்தானை முடிச்சு” படத்தில் பாக்யராஜ் ஒப்பந்தமாகும் போது கங்கை அமரன் தான் இசையமைப்பாளர் ஆனால் வர்த்த ரீதியான கவனிப்புக்காக இளையராஜாவுக்கு மாறும் தீர்மானத்தை ஏவிஎம் சரவணன் எடுத்த போது பாடல்கள் முழுக்க கங்கை அமரன் என்று தீர்மானித்தார்களாம்.

ஏவிஎம்மில் கங்கை அமரன் இசையமைப்பாளராக முடியாத குறையை பின்னாளில் ஏவிஎம் குமரன் தயாரித்த “நாம் இருவர்” படம் தீர்த்துக் கொண்டது. இந்தப் படத்தில் இடம்பெற்ற திருவிழா திருவிழா 

https://youtu.be/eYcdmN2JN-Q?si=n0SrlD7jYR9TQhdI

என் அபிமான 80s இல் ஒன்று.

அந்தக் காலத்தில் Recording centre இல் ஒலிநாடாவில் பாடல் பதிவு முடிந்த மீதமுள்ள இடத்தில் இந்தப் பாடலின் வாத்திய இசையைப் பதிவார்கள்.

ஏவிஎம் குமரனுக்குப் பிடித்த இயக்குநர் கங்கை அமரன். அவரை வைத்து விஜயகாந்த் நடிப்பில்  “வெள்ளை புறா ஒன்று” படத்தையும் தன் தயாரிப்பில் இயக்க வைத்தார். ஆனால் இரண்டு படமுமே எடுபடவில்லை.

கே.பாக்யராஜ் படங்களில் மிக அரிதாகவே முழுப்பாடல்களையும் ஒருவரே எழுதுவார். அப்படியான வாய்ப்பு கவிஞர் வாலிக்கு அதிகம் வாய்த்திருக்கிறது. ஒருமுறை வாலியே வேடிக்கையாக பொது மேடை ஒன்றில்

“இந்த பாக்யராஜிடம் எவ்வளவோ தடவை சொல்லிட்டேன் அனுபவமில்லாத பாடலாசியர்களுக்குப் பாடல் கொடுக்காதீங்கன்னு ஏன்னா அதைச் செம்மைப்படுத்த என்னிடம் வருவார்” என்று சொல்லி இருப்பார்.

பலரிடம் பாடல் வாங்குவது மட்டுமல்ல ஒருவரிடமே கறாராக சரியான பல்லவி வரும் வரை விட மாட்டார் பாக்யராஜ். அதை முன்பு இளையராஜாவும், சமீபத்தில் கங்கை அமரனும் சொல்லியிருப்பார்கள். தன் ஆரம்ப கால கிழக்கே போகும் ரயில் காலத்திலேயே பாடல் வரிகளில் உள்ளீடு செய்யுமளவுக்கு ஞானஸ்தர் அவர்.

பாக்யராஜின் இந்தப் பண்பைப் பற்றி எழுதும் போதுதான் ஒரு பாட்டு நினைவுக்கு வருகிறது.

“வீட்ல விசேஷங்க” படத்தில் மீதி அனைத்தும் வாலி ஒரு பாடல் தவிர, அந்த ஒரு பாடலை எழுதியவர் புலவர் புலமைப்பித்தன் அதுதான்,

பூங்குயில் ரெண்டு ஒண்ணுல 

ஒண்ணாக் கூடுச்சாம்

காதலைச் சொல்லி 

மெட்டுக்கள் கட்டிப் பாடிச்சாம் 

அடடா காத்துல எங்கும்

அதுதான் கேக்குது இன்னும்

கண்ணே எந்தன் கண்ணே கேளு

❤️

https://youtu.be/xarzK5v03is?si=OEArIBopOvNWL8zD

கானா பிரபா

30.07.2025


0 comments: