Pages

Thursday, October 1, 2015

பாடல் தந்த சுகம் : அரும்பும் தளிரே

அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித்தூய்மையே
மலரும் மனமே மனம் ஏந்திடும்
கனியே கனிப்பாவையே
வானாடும் மீனே நீதானே வேண்டும்
ஊனாடும் உயிரே நீதானே வேண்டும்

பாடகர் அருண்மொழி அவர்களது குரல் வளம் பருகக் கிட்டிய இசை வெள்ளங்களில் இதுவுமொன்று. அவரது மென்மையான குரலுக்கு ஏதுவாக அமைந்த பெண் ஜோடிக் குரல் கீதாவினுடையதும் நெருடலில்லாது இரு குரலையும் ஒரு சேர ரசிக்கும் வகையில் இனிமையாக் இருக்கும்.

இந்தப் பாடலின் சிறப்பமே பாடலின் பல்லவி தான். அந்தப் பல்லவியே ஒரு அழகான காதல் கவிதை போலத் தனித்து நிற்கும் சிறப்பம்சம் கொண்டு விளங்குகின்றது. மெட்டுக்கு இட்டுக் கட்டியதென்றாலும் அந்தப் பல்லவியை எவ்வளவு அழகாக அமைத்திருக்கிறார் கவிஞர் வாலி பாருங்கள். பாடல்களின் முதல் சில அடிகளை மட்டுமே மனதில் நினைப்பெழுந்து வாய் முணுமுணுக்கும் ஆனால் இந்தப் பாடலின் முழுப் பல்லவியையும் பாடி முடிக்கத் தோன்றும்.
அந்த வரிகளே பனித்துளிகள் இலைமேல் நோகாமல் ஒட்டிக் கொண்டிருக்கும் தன்மை பொருந்தியவை.

சந்திரலேகா என்ற பெயரில் ஆதிகாலத்தில் தமிழில் வெளிவந்த படத்திற்குப் பின் மீண்டும் ஒரு சந்திரலேகா வந்தது என்பதை நினைப்பூட்ட ஒரே வெற்றிச் சுவடு அது இசைஞானியின் இசை தான்.
இசைஞானி இளையராஜாவின் தொண்ணூறுகளில் "சந்திரலேகா" படத்தின் பாடல்கள் தவிர்க்க முடியாதவை. 
"அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்" இதே படத்தில் இன்னொரு முத்தாக உன்னிகிருஷ்ணன், ப்ரீத்தி உத்தம்சிங் பாடிய பாடல் பரவலாக வெகுஜன அந்தஸ்த்தை ஏந்திய பாட்டு.

"அரும்பும் தளிரே" பாடல் 
அருண்மொழி, உன்னிகிருஷ்ணன் குழுவினரோடு மெல்லிய இசையோடு ஒரு சிறு பாடலாகவும், 
http://download.tamiltunes.com/songs/__A_E_By_Movies/Chandraleka/Arumbum_Thalire_Bit.mp3
அப்படியே சோக ராகமாய் "தரை வராமல் ஆகாய மேகம் தொலை தூரம் நீந்திப் போகுமே" உன்னிகிருஷ்ணன் குழுவினர் குரல் பொருந்தவும் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொடக்கமே ஒரு இசை யாகத்தில் ஓதும் மந்திர உச்சாடனம்.
http://download.tamiltunes.com/songs/__A_E_By_Movies/Chandraleka/Tharai_Varaamal.mp3

"அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே"
 ராஜராஜன் கூடும் போது ராஜ யோகம் வாய்த்தது ரசிகர் நம் எல்லோருக்கும்.
 http://www.youtube.com/watch?v=CBPQBR5eY08&sns=tw

SoundCloud இல் குளிக்க

1 comments:

incissor said...

இந்தப் பாடலை எழுதியவர் அருண்மொழி அவர்களே, என்று கேள்விப்பட்டேன். உண்மையா?