வாக்கெடுப்பு நிறைவடைந்தது
வணக்கம் மக்கள்ஸ்,கடந்த சிலவாரங்களாக றேடியோஸ்பதியின் "நானும் பாடுவேன்" என்னும் புதிய போட்டி குறித்த அறிவிப்புக்கள் வெளியாகியது நீங்கள் அறிந்ததே. நேற்று நள்ளிரவோடு முடிந்த இந்தப் போட்டியில் இதுவரை 11 போட்டியாளர்கள் பங்கெடுத்துச் சிறப்பித்துள்ளனர். இவர்களின் பாடல்களை கடந்த பதிவிலும் கொடுத்திருந்தோம். இதோ இந்த 11 போட்டியாளர்களில் உங்கள் மனம் கவர்ந்த பாடகரைத் தெரிவு செய்யும் நேரம் இது. இன்று முதல் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை கீழ்க்காணும் ஓட்டுப்பெட்டியில் உங்களுக்குப் பிடித்த பாடகரைத் தெரிவு செய்து ஓட்டுப் போடுங்கள் ஏப்ரல் 14 ஆம் திகதி அன்று உங்களால் தெரிவு செய்யப்பட்ட "நானும் பாடுவேன்" பாடகர் வரிசை வெளியிடப்பட்டு முதற் பரிசு பெறும் அதிஷ்டசாலியும் அறிவிக்கப்படுவார். உங்களுக்குப் பிடித்த ஆண் பாடகர், பெண் பாடகி தலா ஒருவருக்கு வாக்களிக்கவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடல்களைக் கேட்டவண்ணம் எங்கே ஆரம்பிக்கட்டும் உங்கள் வேலை :)மக்கள்ஸ் முன்னர் கொடுத்த ஓட்டுப்பெட்டியில் ஒருவருக்கு மட்டுமே ஓட்டு வசதி என்பதால் இப்போது தனித்தனியாகப் பிரித்துள்ளேன், போட்டி முடிவில் முன்னர் வந்த ஓட்டுக்களும் கவனத்தில் எடுக்கப்படும்
======================================================
பெண் போட்டியாளர்கள்
======================================================
செளம்யா சுந்தரராஜன் பாடும் "நினைத்து நினைத்துப் பார்த்தால்"
கவிதா கெஜானனன் பாடும் "ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்"
மாதினி பாடும் "இதுவரை இல்லாத"
நிலாக்காலம்' (எ) நிலா பாடும் "சின்னக் குயில் பாடும் பாட்டு"
பெண் போட்டியாளர்களுக்கு வாக்களிக்க
survey solutions
===================================================ஆண் போட்டியாளர்கள்=====================================================திருக்குமார் பாடும் "கண்ணே கலைமானே"ஜபார் அலி பாடும் "நிலவுப்பாட்டு நிலவுப்பாட்டு"
கார்த்திக் அருள் பாடும் "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை"
யோகேஷ் பாடும் "காதல் வைத்துக் காதல் வைத்துக் காத்திருந்தேன்"
பரத்வாஜ் பாடும் "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை"
கோபி பாடும் "துள்ளி எழுந்தது பாட்டு"
ராகவ் பாடும் "காலையில் தினமும் நான் கண்விழித்தாலே"
ஆண் போட்டியாளர்களுக்கு வாக்களிக்க
online polls
36 comments:
முதல் பாடல் பற்றிய விவரம் பதிவுடன் சேர்ந்து வந்திருக்கிறது. கொஞ்சம் மாற்றவும்.
திருத்தி விட்டேன் நன்றி
ஓட்டு போட்டாச்சுங்க.
நன்றி சிவமுருகன்
கலக்குறிங்க தல ;-)))
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள் ;-)
பங்குபெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
எல்லார்குரலும் அருமை ஆனால் சிலபாட்டு ரொம்பவே அருமை பாடினவங்களுக்கு தனியே பாராட்டை தெரிவிச்சிடறேன்
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.... அனைவரும் சிறப்பாக பாடி உள்ளார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....!!!
ஜாபர் அலி குரல் நல்லா இருக்கு. ஆனால் சுதி யோகேஷ் பாட்டில்தான் நல்லா இருக்கு. வோட்டு போட்டு விட்டேன்..
வாக்களிப்பவர்களுக்கும், வாழ்த்துபவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!! :)
Anaivarukkum vaazhthukkal... Irundhaalum, Neelamalaik kuyilin raagam kadal kadandhu payanikkiradhu... Vaazhvadharkkaagaththaan vaazhkkai... Aarambithu vittadhu un payanam... Vaazhthukkal Sowmya...
Nilakaalam, you sang very well.. I have voted for you... Akila
Nilakaalam ..You sang well... Great
nilaakkalam romba nalla paadineenga...
நிலாக்காலம் .. வாழ்த்துக்கள்....
nilakkaalam nalla paadineenga
Thank you Akila, Abi & Shree!! :)
Dear Friends,
Thank you for your votes & comments for my Nilavu Pattu song.
Kind Regards,
Jaffer Ali.
Hi Sowmya... Nice try... voice is very clear and showing the strength and and confidence (*even without music)... All the best.
Gaana Prabha
CAn you please take this as a Vote for Jabaar Ali for the song Nilavu Paattu. I am unable to open the link- Must be my firewall setting. I shall try to sort it. Thanks a lot
கான பிரபா
நான் இங்கிலாந்து நாட்டில் வாழ்கிறேன் பாடவும் முயற்சி செய்கிறேன்
பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆவலாக உள்ளேன்
அது முடியுமா என்று சொல்ல முடியுமா?
சாத்தியமானால் எப்படி கலந்து கொள்ள முடியும் என்பதையும் சொல்ல முடியுமா?
Is there any chance you could kindly send a response to my email- Hamsapriya99@gmail.com
This is bcoz i amy not be able to open the link. I hope i am not inconveniencing you too much. Thanks for your help
நன்றி & வணக்கம்
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
ஹம்சப்ரியா
வணக்கம் ஹம்சப்ரியா,
உங்கள் பின்னூட்டமும் மடலும் கிட்டியது நன்றி, இந்தப் போட்டிக்கான முடிவுத் திகதி மார்ச் 31 எனவே அடுத்த போட்டியில் கண்டிப்பாக
நீங்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. அது பற்றிய அறிவிப்பைப் பின்னர் தருகின்றேன்.
மீண்டும் ஒருமுறை வேறு கணினி மூலம் ஓட்டளிப்பில் முயற்சி செய்யுங்கள்.
அன்புடன்
கானா பிரபா
கான பிரபா
மிக்க நன்றி
இந்த போட்டி பற்றி எனக்கு முன்பே தெரியவில்லை
தெரிந்து இருந்தால் நானும் கலந்து கொண்டு இருப்பேன்
அடுத்த தடவை பங்கேற்க முயற்சி செய்கிறேன்
தங்கள் பதிலுக்கு மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
வணக்கம்
ஹம்சப்ரியா
soumiya paatu super!!
mannan
பங்கு பெற்ற அனைவரும் நன்கு பாடி இருக்கிறார்கள்.
எல்லோரும் திறமை வாய்ந்வர்களாய் இருக்கிறார்கள்.
எத்தனை எத்தனை திறமைகள்! அதை வெளிக்கொணர்ந்த கானாபிரபாவிற்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
பாடிய அனைவருக்கும், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
மேலும் மேலும் நிறைய பாடுங்கள். பாட பாட ராகம் என்பார்கள்.
பாடும் திறமை ஒருவருக்கு கிடைப்பது பெரிய வரப்பிரசாதம்.
மீண்டும் வாழ்த்துக்கள்.
nilakaalam arumai!!!
ஓட்டுப்போட்டாச்சு :-)))
வாழ்த்துக்கள்....
ஓட்டுப்போட்டதுக்கு எல்லாம் பாத்து போட்டுக்குடுங்க :-)))
nilaakkalam, congrats
Yogesh CONGRATZ :)
உங்கள் செவிகளுக்கு கருத்துக்களுக்கும் நன்றி...(Ameer and Srija..Thanks..!)
கானா பிரபா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..!!
Yokesh
யோகேஷ் வாழ்த்துகள்... :)
Thanks Iswarya & Guru..
Yokesh nice...
Anbu Nanbar thiru Gaana prabhu avargaley,
Ennudaya vottinai nilavu paattu paadalukku padhivu seidhu kollum badi panivanbudan kettukolgiren.
Enadhu indha vinnappam ettrukkollappadum endrum nambugindren.
Ippadikku Anbudan
Nekelen
நன்றாகப் பாடியுள்ளார்கள்.
பாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
சிறப்பாக உங்களுக்கும்.
Post a Comment