Pages

Saturday, June 14, 2008

பாஷையூர் புனித அந்தோனியார் பெருவிழா - ஒலி அஞ்சல்

நேற்று ஈழத்தின் யாழ்மண்ணில் உறையும் பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தின் பெருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றிருந்தது. அதன் நேர்முக வர்ணனையை யாழ்மண்ணில் இருந்து தொலைபேசி வாயிலாக எடுத்து சிறப்பான ஒரு ஒலி அஞ்சலைக் கொடுத்திருந்தார்கள் எமது 24 மணி நேர சமூக வானொலி அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் திரு பிறின்ஸ் இமானுவேல் மற்றும் அவர் துணைவி திருமதி சோனா பிறின்ஸ் ஆகியோர்.

நேற்று காலையில் யாழ்.பாஷையூர் அந்தோனியார் ஆலயத்தின் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும் நிகழ்வினையும், நேற்றிரவு அவ்வாலயத்தின் திருச்சொரூப பவனி நிகழ்வையும் ஒலி அஞ்சல் செய்ததோடு, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் பெருவிழா நிகழ்வினையும் வானலைக்கு எடுத்து வந்திருந்தோம். அத்தோடு சிட்னியில் இருந்து அருட்தந்தை வின்சன்ட் சவரிமுத்து அவர்களின் நற்செய்தியும், நேயர்களின் கலந்துரையாடல் நிகழ்வுமாக சிறப்பானதொரு நாளாக அமைந்திருந்தது.

நேற்றுக் காலை நடைபெற்ற யாழ்.பாஷையூர் அந்தோனியார் ஆலயத்தின் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும் நிகழ்வின் பகிர்வு இதோ:

திருப்பலி நிகழ்வு ஒலித்தொகுப்பு




தரவிறக்கிக் கேட்க
(To Download (Right-click, Save Target As/Save Link As)

யாழ்.பாஷையூர் அந்தோனியார் ஆலயத்தின் திருச்சொரூப பவனி


0 comments: