Pages

Thursday, October 23, 2025

விடைபெற்ற இசையமைப்பாளர் சபேஷ்


தம்பி(கள்) உடையான் படைக்கஞ்சான்

என்பது தேனிசைத் தென்றல் தேவா வழி நாம் கண்ட நிதர்சனம்.

இசை தேவா என்றால் இணை இசை சபேஷ் - முரளி என்றும் பாடமாகி இருக்கும் தொண்ணூறுகளின் நினைவலைகள்.

இசையமைப்பாளர் சந்திரபோஸ், இளையராஜா போன்றோரிடம் வாத்தியக்காரராக இருந்தவர் தேவாவின் பின்னணி இசையாக மாறி அணி செய்தார்.

“பைனாப்பிள் வண்ணத்தோடு” (சமுத்திரம்),

“நான் ஒரு கனாக் கண்டேன்” (பாறை) பாடல்களில் இருந்து தவமாய்த் தவமிருந்து உணர்வோட்டத்திலும் சபேஷ் - முரளி கூட்டு தனியே ரசிக்க வைத்தது.

நான் ஒரு கனாக்கண்டேன் ஐ அப்போது பண்பலைகள் வெறி கொண்டு ஒலிபரப்பின.

“அழகான சின்ன தேவதை” பிறந்த நாள் வாழ்த்துப் பாடல்களில் ஒன்றானது.

“கொத்தவால் சாவடி லேடி”, “உதயம் தியேட்டரிலே” என்று கானாப் பாடல்களிலும் சபேசன் முத்திரை பதித்தார்.

கந்தன் இருக்கும் இடம் கந்தகோட்டம் சென்று விட்டாரோ….

ஆழ்ந்த இரங்கல்கள் சபேஷ்

கானா பிரபா

0 comments: