பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் திரையிசைக்காலம் குறுகியது என்றாலும் அவரின் செழுமையான பங்களிப்பை இன்றைய சமுதாயமும் தெரிந்து கொள்ள ஓரளவேனும் உதவியது திண்டுக்கல் லியோனி போன்றோரின் ஜனரஞ்சகமான பாட்டு மன்றம் போன்றவையே என்றால் மிகையில்லை. ஒருமுறை வாலி எழுதிய பாடலை மனோரமா, கண்ணதாசன் எழுதியது என்று சிலாகிக்க வாலியே நொந்து போய் "அதை எழுதியது நாந்தானம்மா" என்றுமளவுக்கு நிலமை இருந்தது, பின்னாளில் வாலியின் ஆயிரம் பாடல்களில் கூட வாலி எழுதாததும் தவறுதலாக வந்தது காலம் செய்த கோலமடி. அந்தக்காலம் போல இந்தக்காலத்து இசைவட்டுக்களிலும் பெரும்பாலும் பாடலாசிரியர்கள் பெயர் போடாமை, தனித்துவமான பாடலாசிரியர்கள் இல்லாமல் எல்லாருமே கோரஸ் வரிக்காரர்களாக இயக்கும் சூழல் எனப் பல காரணங்களைச் சொல்லலாம்.
இவர்களைத் தாண்டி, கங்கை அமரன், நா.காமராசன், பொன்னடியான், பிறைசூடன், முத்துலிங்கம் என்று எண்பதுகளிலும் பல பாடலாசிரியர்கள் இயங்கியிருக்கிறார்கள். இவர்களின் பாடல்களை அவ்வப்போது நினைவில் நிறுத்த ஒரு வாய்ப்பாக இந்தத் தொடரை ஆரம்பித்திருக்கிறேன்.
றேடியோஸ்பதியில் முன்னர் இவ்வாறு
கவிஞர் பொன்னடியானும் இசைஞானி இளையராஜாவும் என்றெல்லாம் கொடுத்திருந்தாலும் இந்தத் தொடரை நீட்டித்து வாழ்நாள் பூரா எழுதி வைக்கலாமே எனத் தோன்றியது, அதாவது 3665 நாட்களாவது ;-)
இணையத்தளங்களிலும் எழுந்தமானமாக வாலி, வைரமுத்து என்று பாடல்களுக்கு உரிமையை மணல் கொள்ளை ரேஞ்சில் அள்ளிக் கொடுத்துவிடுவார்கள், இந்த அவலத்தைக் கொஞ்சமேனும் குறைக்கவெண்ணியபோது எழுந்த சிந்தனையே இது.
இதற்குக் கால்கோளாக அமைந்தது நண்பர் என்.சொக்கன் நேற்று ட்விட்டரில் ஆயர்கள் மத்துச் சத்தம்போலவே, ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே! #NowPlaying முத்தச் சத்தத்துக்கு மத்து கடைகிற சத்தம் உவமை, வாவ்!யார் எழுதியது?
என்று எழுதியதையே கண்ணன் சுழியாக எடுத்துக் கொண்டு காமராசனில் இருந்து தொடங்குகின்றேன்.

"கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்" இந்தப் பாடல் ரெட்டைவால் குருவி படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையில் கவிஞர் நா.காமராசனால் எழுதப்பட்டது. படத்தின் இயக்கம், பாலுமகேந்திரா. படத்தில் நாயகி ராதிகா ஒரு பாடல்காட்சி படமாக்கப்பட்டதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. படப்பிடிப்பின் போது நடன இயக்குனர் இல்லாத சூழலில் நடிகை ராதிகாவே சமாளித்து பாடலின் இசைக்கேற்ப ஆட, படம் பிடிக்கப்பட்டதாம். ஆர்ப்பாட்டமின்றி இசைக்கருவிகள் அடக்கமாக ஒலிக்க, அதற்கு இசைவாக ராதிகா கொடுக்கும் நளினங்களே போதுமே.
இதோ பாடலாசிரியர் நா.காமராசனின் வரிகளில் "கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்" எஸ்.ஜானகி குரலில் உயிர்பெறுகிறது.
பாடல் வரிகள் இசையமுதம் தளம் வழியாக,
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
...
கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே
பாதங்கள் வண்ணப் பண்கள் பாடுதே
மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே
தாகங்கள் இன்பக் கள்ளில் ஊறுதே
காதலென்னும்.. ஓ ஓ..
காதலென்னும் கூட்டுக்குள்ளே ஆசைக் குயில் கொஞ்சுதம்மா
இவள் வண்ணங் கோடி.. சின்னந் தேடி
மின்னும் தோளில் கன்னங் கூட
சந்தம் பாடி.. சொந்தம் தேடி.. சொர்க்கங்கள் மலர்ந்ததோ
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
...
வானத்தில் செல்லக் கண்ணன் பாடுவான்
கானத்தில் சின்னப் பெண்ணும் ஆடுவாள்
ஆயர்கள் மத்துச் சத்தம் போலவே
ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே
மாலை நிலா.. ஆ ஆ..
மாலை நிலா பூத்ததம்மா.. மௌன மொழி சொல்லுதம்மா
ஒரு அந்திப் பூவில் சிந்தும் தேனில்
வண்டு பேசும்.. தென்றல் வீசும்
கண்ணன் பாட.. கண்கள் மூட.. கன்னங்கள் சிவந்ததோ
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
...
2 comments:
கோடை பண்பலையும் (100.5) தினமும் பழைய பாடல்களின் தொகுப்பை வழங்குகின்றன... (இரவு 9 மணிக்கு)
கண்ணன் வந்து பாடுகின்றான்... காலமெல்லாம் கேட்கலாம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்
Post a Comment