
நன்றி: என் பழைய டயறியின் முதல் காதல் பக்கங்களைப் பிரித்துப் படிக்க உதவிய கெளதம் வாசுதேவ் மேனனுக்கு
தமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்

எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இணைந்த கங்கை அமரன் - இளையராஜா - ராமராஜன் என்ற வெற்றிக் கூட்டணி இணைந்து மாபெரும் வெற்றிப்படமாக கரகாட்டக்காரனை அளித்திருந்தார்கள். ஒருவருஷம் ஓடிச் சாதனை படைத்த இந்தப் படத்தின் வெற்றிக்கு
21 வருஷங்கள் கழித்து இந்தப் படத்தைப் பார்த்தாலும் அதே புதுப்பொலிவுடன் ரசிக்க வைக்கின்றது. அமெரிக்காவில் இருக்கும் Elite Vision என்ற நிறுவனம் இப்படத்தினை கலக்கலான டிவிடியாக அதி உச்ச தரத்துடன் அளித்திருந்தது. அதை வாங்கி அடிக்கடி போட்டுப் பார்த்துக் கரகாட்டக்காரனை ரசித்து வருகிறேன். இன்னும் அலுக்கவில்லை.
1989 ஆம் ஆண்டில் வெளிவந்த இப்படத்தில், அந்தக் காலகட்டத்தில் நம்ம ஊரு நல்ல ஊரு திரைப்படத்தின் நாயகனாக அறிமுகமாகி (அதற்கு முன்னர் இயக்குனராக இருந்தவர்) எங்க ஊரு பாட்டுக்காரன், எங்க ஊரு காவல்காரன் போன்ற பெரு வெற்றிப்படங்களின் மூலம் முன்னணி நாயகனாக விளங்கிய ராமராஜன் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக முன்னாள் நடிகை தேவிகாவின் மகள் கனகா அறிமுகமாகியிருந்தார். கவுண்டமணி, செந்தில், ஜீனியர் பாலையா, சண்முக சுந்தரம், சந்திரசேகர், காந்திமதி, கோவை சரளா போன்றோருடன் வில்லனாக நடித்தவர் இயக்குனர் சந்தானபாரதி. கிராமியத்தோற்றத்துக்கு எடுப்பாகப் பொருந்தும் ராமராஜனும், அறிமுகம் என்றே சொல்லமுடியாத அளவான, அழகான நடிப்பை வழங்கிய கனகாவுடன் ஏனைய கலைஞர்களின் பாத்திரத் தேர்வு எல்லாமே குறை சொல்லமுடியாத அளவுக்கு அமைந்த கிராமியப் பொங்கல் இது.
ஏறக்குறைய தில்லானா மோகனாம்பாள் படத்தின் மீள் வடிவமாக இந்தப் படத்தின் திரைக்கதையைக் கணிக்கலாம். ஆனால் கரகாட்டம் என்னும் பழம்பெரும் நாட்டுப்புறக்கலையை எளிமையான கதையினூடே காதல், கிராமிய மணம் கலந்த இசை, மூலக்கதையோடு இழையோடும் நகைச்சுவை என்று கலந்து எல்லாவிதமான ரசிகர்களையும் திருப்திப்படுத்திய விதத்தில் இப்படத்தின் எல்லாவிதமான தொழில்நுட்ப சமாசாரங்களையும் ஒருங்கிணைத்து இயக்கிய கங்கை அமரனைப் பாராட்டத்தான் வேண்டும்.
என்னதான் மற்றவர்களின் திரைப்படங்களுக்குக் கலக்கலான இசையை வழங்கி வந்தாலும், தன் தம்பி கங்கை அமரனோடு கூட்டுச்சேரும் படங்களுக்கு இன்னும் ஒரு படி மேல் கவனமெடுத்து ராஜாங்கம் நடத்துவார் என்பதை ராஜாவே மறுத்தாலும் அதுதான் உண்மை. அதற்கு ராஜா - கங்கை அமரன் இணைந்த பெரும்பாலான படங்களே எடுத்துக்காட்டு. அதுவும் சுத்தமான கிராமியக் கதைகளம் என்றால் கேட்கவேண்டுமா, ராஜா அதகளம் பண்ணிவிட்டார். ஐம்பதாவது றேடியோஸ்புதிராக அமைத்து, தொடர்ந்து கரகாட்டக்காரன் பின்னணி இசையை வழங்க வேண்டும் என்ற என் கனவை இப்பதிவு மூலம் நிறைவேற்றியிருக்கிறேன். தொடர்ந்து இசைஞானியின் ராஜபாட்டை முழங்க வரும் கிராமிய இசையனுபவத்தை அள்ளிப்பருகுங்கள். இந்தப் பதிவுக்கான மொத்த உழைப்பு 2 நாள் இரவுப் பொழுதுகள் ;)
நேற்று ஆரம்பித்த ஓட்டம் போல இருக்கிறது, மடமடவென்று 50 ஆவது புதிரை எட்டிப் பிடித்து விட்டது றேடியோஸ்புதிர் தொடர்.
காதலர் தினம் என்பது காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமல்ல ஒரு காலத்தில் காதல் பூ பூத்தவர்களுக்கும் ஸ்பெஷலான நாள். இந்தத் தினத்தைக் கேட்டாலேயே பதின்ம வயது நினைவுகள் அப்படியே மீண்டும் ஒரு சுற்று வரும். ஹலோ ஹலோ ஓடாதீங்க, இங்கே நான் ஒன்றும் மலரும் நினைவுகளைச் சுழற்றவில்லை ;)
எண்பதுகளின் தமிழ் சினிமாவை அதிகம் நெருங்கி நேசித்தவர்கள் வி.எம்.சி.ஹனீபா என்ற இயக்குனரை சிலாகித்துப் பேச மறக்க மாட்டார்கள். இவ்வளவுக்கும் இவர் மலையாளத்தில் இருந்து பாசில் வித்தியாசமான கதையம்சங்களை அறிமுகப்படுத்தியது போல தன் படங்களைக் கொடுத்தவரல்ல ஆனா குடும்பச்சிக்கல்களைத் தன் பாணி பொழுதுபோக்கு அம்சங்களைக் கலந்து ராஜாவின் இசைக் கூட்டணி சேர ஜனரஞ்சக ரீதியில் வெற்றிப் படங்கள் சிலதைக் கொடுத்தவர் என்ற வகையில் மறக்கமுடியாது.