
காற்றின் மொழி ஒலியா.....இசையா......?
பூவின் மொழி நிறமா....மணமா....?
கடலின் மொழி அலையா...நுரையா....?
காதல் மொழி விழியா....இதழா......?
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவையில்லை
காற்று வீசும் போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழிகள் கிடையாது
பேசும் வார்த்தை போல மெளனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது
உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை
வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் ஜாமத்தில் உச்சிமீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில் அசைவு கூட மொழியாகும்
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவையில்லை
வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு வித்யாசாகரின் இசை கலந்து, சுஜாதா மற்றும் பால்ராம் இரு தனித்தனிப்பாடல்களாகப் பாடியிருக்கின்றார்கள்.அழகிய தீயே, பொன்னியின் செல்வன் போன்ற ரசனை மிகு திரைப்படங்களைத் தந்த இயக்குனர் ராதாமோகனின் படமிது. தன் நண்பன் மற்றும் இப்படத்தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜுக்கு கொடுக்கப்போகும் ஓப்பற்ற பரிசு என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். வாய்பேசமுடியாப் பெண்ணாக ஜோதிகா நடித்த இறுதிப்படம் கூட.
மொழி படம் பற்றிய காட்சித்தளம்: http://www.mozhithefilm.com/
2 comments:
This comment has been removed because it linked to malicious content. Learn more.
மிக்க நன்றி திலகன்,
எனக்கெல்லாம் template செய்யிற அளவு அனுபவம் இன்னும் வரேல்லை, எங்காவது இப்பிடி உருவித் தான் போடுறது
Post a Comment