Pages

Friday, June 2, 2017

இசைஞானி இளையராஜாவின் பாடலாசிரியர்கள்



ஒவ்வொரு ஆண்டும் எங்கள் இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் வரும் போதும் அவர் இசை படைத்த ஆயிரத்துச் சொச்சம் படங்களில் இருந்தே எடுத்துக் குளிப்பாட்டிக் கொண்டாடும் ஆத்மார்த்தமான ரசிகர்களுள் நானும் இணைந்து இந்த ஆண்டு என்ன கொடுக்கலாம் என்ற தேடலில் இறங்கி விடுவேன். 

அந்த வகையில் இந்த ஆண்டின் பிறந்த நாள் சிறப்புத் தின்பண்டமாக அவரின் இசையூற்றை வரிகளால் அணை போட்ட பாடலாசிரியர்ளைத் திரட்டும் நீண்ட காலத் திட்டத்தின் ஒரு அம்சமாக, தமிழில் வெளியான படங்களில் பயன்படுத்தப்பட்ட பாடலாசிரியர்களைத் தொகுத்துக் கொடுக்கிறேன்.

தமிழில் மட்டும் அறுபதைத் தொடும் இந்தப் பட்டியலில் இன்னும் விடுபட்டவர்கள் இருக்கலாம். காரணம் முறையான உறுதிப்படுத்தப்பட்ட ஆதார நகல்களைத் தேடியெடுக்கும் சவால் நிறைந்த பணியிது. தமிழைத் தாண்டியும் கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, இதை விடத் திரையிசை சாராப் பாடல்கள் என்று திரட்டினால் இசைராஜா இளையராஜாவால் பயன்படுத்தப்பட்ட பாடலாசிரியர்கள் நூறைத் தாண்டும்.
அது தான் என் அடுத்த பணி. அதையும் தாண்டிப் புனிதமான மிகப்பெரிய பணி ஒன்றுள்ளது. இந்தப் பாடலாசிரியர்கள் கொடுத்து இளையராஜாவின் இசை வடிவம் கண்ட அனைத்துப் பாடல்களையும் பாடலாசிரியர் வகை கொண்டு திரட்டுவது, அது என் பேராசை கூட. அதனால் தான் இந்தப் பகிர்வில் ஒவ்வொரு பாடலாசிரியரின் மாதிரிப் பாடல் ஒன்றைக் கொடுத்துள்ளேன். 

ஆயிரம் படங்களைத் தாண்டுவது மட்டுமல்ல சாதனை. இம்மாதிரி எண்ணற்ற பாடலாசிரியர்களையும் ஆவாகித்துத் தன் படைப்பில் அணியாக்கிய வகையிலும் எம் இளையராஜா நிகழ்த்திக் காட்டிய சாதனைக்காரர்.

இசைஞானி இளையராஜா இசைத்த 
ஒளைவையார் உள்ளிட்ட பெரும் புலவர்கள், தியாகையர் உள்ளிட்ட சங்கீத மகானுபவர்கள், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட இயக்குநர்கள், புலமைப்பித்தன் உள்ளிட்ட தற்காலத்துப் புலவர்கள், கமல்ஹாசன் என்ற பன்முகப் படைப்பாளி, பஞ்சு அருணாசலம் ஐயா போன்ற திரைத்துறைச் சாதனையாளர்கள், நா.முத்துக்குமார் போன்ற இளம் பாடலாசிரியர்கள் என்று எவ்வளவு வகை தொகையாக இந்தப் பாடலாசிரியர்களைப் பிரித்துப் பார்த்து அழகு செய்யலாம்.

இதோ எங்கள் இசைராஜாவின் பிறந்த நாளுக்கு குசேலனாகச் சுமந்து தரும் அவல் பொட்டலம் இது.


1. இளையராஜா
மணியே மணிக்குயிலே (நாடோடித் தென்றல்)

2. கண்ணதாசன்
இளமையெனும் பூங்காற்று (பகலில் ஒரு இரவு)

3.  பஞ்சு அருணாசலம்

4.  கலைஞர் கருணாநிதி



5. புலமைப் பித்தன்
நீயொரு காதல் சங்கீதம் (நாயகன்)

6. வாலி
கண்ணன் ஒரு கைக்குழந்தை (பத்ரகாளி)

7. காமராசன்
கண்ணன் வந்து பாடுகிறான் (ரெட்டை வால் குருவி)

8. பொன்னடியான்
மலையோரம் மயிலே (ஒருவர் வாழும் ஆலயம்)

9. பிறைசூடன்
மீனம்மா மீனம்மா (ராஜாதி ராஜா)

10 கங்கை அமரன்
இந்த மான் எந்தன் சொந்த மான் (கரகாட்டக்காரன்)

11. வைரமுத்து
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் (நினைவெல்லாம் நித்யா)

12. மதுக்கூர் கண்ணன் (யார் கண்ணன்)
அள்ளித் தந்த பூமி (நண்டு)

13. P.B.ஶ்ரீனிவாஸ் 
கேய்சே கஹூன் என்ற ஹிந்திப் பாட்டு (நண்டு)

14.  வாசன்
வெண்ணிலவுக்கு ஆசைப்பட்டேன் (பூந்தோட்டம்)

15. பழநி பாரதி 
என்னைத் தாலாட்ட வருவாளோ (காதலுக்கு மரியாதை)

16. அறிவுமதி
செம்பூவே பூவே (சிறைச்சாலை)

17. எம்.ஜி.வல்லபன்
ஆகாய கங்கை (தர்ம யுத்தம்)

18.  முத்துலிங்கம்
பூபாளம் இசைக்கும் (தூறல் நின்னு போச்சு)

19. சி.என்.முத்து
அலங்காரப் பொன்னூஞ்சலே (சொன்னது நீ தானா)

20. சிற்பி பாலசுப்ரமணியம்
மலர்களே நாதஸ்வரங்கள் (கிழக்கே போகும் ரயில்)

21. ஆலங்குடி சோமு
மஞ்சக் குளிச்சு ( பதினாறு வயதினிலே)

22. புலவர் சிதம்பர நாதன்
ஏரிக்கரைப் பூங்காத்தே (தூறல் நின்னு போச்சு)

23. புரட்சி தாசன்
சுகம் சுகமே (நான் போட்ட சவால்)

24. விஜி மேனுவேல் 
ஸ்விங் ஸ்விங் (மூடு பனி)

25. இளைய பாரதி
சோலை இளங்குயில் (காவலுக்குக் கெட்டிக்காரன்)


26. ஜெயகாந்தன்
எத்தனை கோணம் (எத்தனை கோணம் எத்தனை பார்வை) https://youtu.be/vJhvaQlbX5g


27. முத்துக்கூத்தன் 
தொன்று தொட்டு


28. அவிநாசி மணி 
பூப்போட்ட தாவணி 


29. கலைவாணன் கண்ணதாசன் 

30. குருவிக்கரம்பை சண்முகம் 
இங்கே இறைவன் (சார் ஐ லவ் யூ)


31. கஸ்தூரி ராஜா



32. கே.காளிமுத்து



33. காமகோடியான்



34. கமல்ஹாசன்



35. ஆர்.வி.உதயகுமார்



36. தாமரை


37. மோகன்ராஜ்


38. பார்த்தி பாஸ்கர்


39. நா.முத்துக்குமார்


40. சரோஜா அம்மாள்


41. சினேகன்

42. ஜீவன்


43. கபிலன்


44. உஷா


45. பரத் ஆச்சார்யா

46. திருமாவளன் 
அஜந்தா 

47. சு.செந்தில்குமார் அஜந்தா


48. விசாலி கண்ணதாசன்

49. தாமரை


50. நந்தலாலா
 - மனம் விரும்புதே உன்னை

51. அகத்தியன்

52. தேன் மொழியான் 
  தலைமுறை

53. பாரதி கண்ணன் 
- கண்ணாத்தாள்

54. பொன்னியின் செல்வன் - தேவதை


55. பா.விஜய்



56. ஒளைவையார்
கல்லானே ஆனாலும் (எத்தனை கோணம் எத்தனை பார்வை) 

57. ஆண்டாள்
வாரணம் ஆயிரம் 

58. பாரதியார்
நிற்பதுவே நடப்பதுவே (பாரதி)

59. பாரதிதாசன்
காலம் இளம் பருதியிலே (கண்ணன் ஒரு கைக்குழந்தை)



60. முத்துஸ்வாமி தீக்‌ஷதர்

61. தியாகராஜர்


62. ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் 
அலைபாயுதே (எத்தனை கோணம் எத்தனை பார்வை)




0 comments: