
வணக்கம் மக்கள்ஸ்,
கடந்த இசைத்துணுக்குப் புதிருக்கு நீங்கள் கொடுத்த பெருவாரியான ஆதரவில் (?) மீண்டும் இன்னொரு இசைத்துணுக்குப் புதிரில் உங்களைச் சந்திக்கிறேன். இம்முறையும் வழக்கம் போல இசைஞானி இளையராஜாவின் முத்தான ஐந்து படங்களின் பாடல்களில் இருந்து இந்தப் புதிர்கள் வருகின்றன. இவற்றின் பொது அம்சம், எல்லாப் பாடல்களிலும் புல்லாங்குழல் வாத்தியத்தின் பயன்பாடு காணப்படுகின்றது. இதோ தொடர்ந்து இசையைக் கேட்டுப் பதிலோடு வாருங்கள் ;)
ஒகே மக்கள்ஸ், போட்டி நிறைந்தது, பங்குபற்றிய அனைவருக்கும் மிக்க நன்றியும் போட்டியில் வெற்றி கண்டோருக்கு வாழ்த்துக்களும்
பாட்டு 1
சரியான பதில்: பாண்டிநாட்டுத் தங்கம் படத்தில் இருந்து "உன் மனசுல பாட்டுத் தான் இருக்குது" பாடியவர்கள் மனோ, சித்ரா. இதோ முழுமையான பாடல்
பாட்டு 2
சரியான பதில்: "முத்தமிழ் கவியே வருக" தர்மத்தின் தலைவன் படத்தில் இருந்து கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா
பாட்டு 3
சரியான பதில்: நினைவுச்சின்னம் படத்துக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் "வைகாசி மாதத்துல பந்தல் ஒண்ணு போட்டு"
பாட்டு 4
சரியான பதில்: "நினைத்தது யாரோ நீ தானே" பாடல் பாட்டுக்கொரு தலைவன் படத்தில் இருந்து ஜிக்கி, மனோ பாடுகிறார்கள்
பாட்டு 5
சரியான பதில்: பாசப்பறவைகள் படத்தில் இருந்து கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா பாடுகின்றார்கள் "தென்பாட்டித் தமிழே"
