Pages

Sunday, April 18, 2010

சுந்தரக் குரல் சொந்தக்காரி சுனந்தா

திரையுலகை எடுத்துக் கொண்டா ல் திறமை இருந்தால் மட்டுமல்ல அதிஷ்டமும் கூடி வந்தால் தான் வாய்ப்புக்கள் கிட்டும் என்பதற்கு திரையிசைப்பாடகர்கள் கூட விதிவிலக்கல்ல. அப்படி ஒரு எடுத்துக்காட்டுத் தான் பாடகி சுனந்தா.

புதுமைப்பெண் திரைப்படத்தின் மூலம் இசைஞானி இளையராஜாவால் காதல் மயக்கம் பாடவைத்து தன் குரலால் மயக்கியவர். தொடர்ந்து அத்தி பூத்தாற்போலத்தான் சுனந்தாவுக்கு வாய்ப்புக்கள் கிட்டியிருக்கின்றது. திரையிசையை எடுத்துக் கொண்டால் என்னதான் சிறப்பான குரல்வளம் இருந்தாலும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன் குரலை மாற்றிப்பாடும் பாங்கும் கைவரப்பெற்றிருக்க வேண்டும். இது காதல் ரசம் கொட்டும் பாடலில் இருந்து, வீரஞ்செறிந்த மிடுக்கான பெண் குரலாக வளைந்தும் கொடுக்க வேண்டும். அந்த வகையில் எஸ்.ஜானகியின் விதவிதமான பரிமாணங்களுக்கு (சித்ரா கூட இந்த வகையில் முயற்சித்திருக்கிறார்)ஈடு கொடுக்கும் வகையில் எண்பதுகளில் பாடகிகள் இல்லையென்றே கூறிவிடலாம். சுனந்தா கூட இந்தப் பட்டியலில் சேர்த்தி. காதலின் ஆத்மார்த்த ராகமாக ஒலிக்கும் அவர் குரலை வேறு எந்த எல்லைக்கும் பயன்படுத்த முடிவதில்லை.
கேரளத்தில் இருந்து வந்த குயில்களில் சுனந்தாவும் சேர்த்தி. இவருக்கு ஈடுகொடுக்கும் அலைவரிசையில் அமைந்த பாடகர் ஜெயச்சந்திரன் அழகாகப் பொருந்தி சிறப்புச் சேர்த்த பாடல்கள் இன்றும் கேட்க இனிமையானவை.























எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் "செண்பகமே செண்பகமே" என்ற இனிய பாடலை என்னதான் பெரிய பாடகியாக இருந்தாலும் ஆஷா போன்ஸ்லே பாடும் போது தமிழை விட்டு விலகிய ஒரு அன்னியத்தன்மை தெரியும். அதே பாடலை சந்தோஷ மெட்டில் சுனந்தா பாடிய போது ஆஷாவையே ஓரம் கட்டிவிட்டது போன்ற பரிமாணத்தைக் காணலாம். இன்னொரு சிறப்பான உதாரணம், சொல்லத் துடிக்குது மனசு படத்தில் வரும் "பூவே செம்பூவெ" இந்தப் பாடலை ஆண்குரலில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் போது அதே அலைவரிசையில் பெண்குரலாக சுனந்தா பாடியதும் கேட்கத் திகட்டாத தேன்மழை. உன்னால் முடியும் தம்பி படத்தில் வரும் "என்ன சமையலோ" என்ன கலகலப்பான பாடலில் சுனந்தாவின் குரல் வித்தியாசமாக வெளிப்பட் டிருக்கிறது.

தொண்ணூறுகளில் செவ்வந்தி படத்தில் வரும் "செம்மீனே செம்மீனே", உழைப்பாளி படத்தில் வரும் "அம்மா அம்மா எந்தன் ஆருயிரே", வால்டர் வெற்றிவேல் படத்தில் வரும் "மன்னவா மன்னவா" பாடல்கள் சுனந்தாவுக்குக் கிடைத்த சொற்ப வாய்ப்புக்களிலும் சிக்சர் அடித்த பாட்டுக்கள். சுனந்தாவின் குரலை பலசமயம் நினைவு படுத்தும் குரலாக பின்னாளில் அறிமுகமாகி புயல்போல் புரட்டிப் போட்ட சொர்ணலதாவின் குரல் சுனந்தாவிற்கு கிடைத்த மிச்ச சொச்ச பாடும் வாய்ப்புக்களைக் கூடப் பங்கு போட்டு விட்டது போல.

இன்றைய யுகத்து நாயகிகளுக்கும் பொருந்திப் போகக் கூடிய சுந்தரக் குரல் கொண்ட சுனந்தாவின் பாடல்பெட்டகத்தில் இருந்து ஒரு சிலபாடல்களை உங்கள் ரசனைக்கு விருந்தாகப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.





















முதலில் வருவது சுனந்தாவை தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய "காதல் மயக்கம்" ஜோடி கட்டி இணைந்து பாடுவது ஜெயச்சந்திரன்



சொல்லத் துடிக்குது மனசு திரைப்படத்தில் இருந்து சுனந்தா பாடும் "பூவே செம்பூவே" என்ற இதமான ராகம் இதயத்தில் ஊடுருவ



காதல் பாடல்களில் என் விலக்க முடியாத விருப்பத் தேர்வாக இருக்கும் "பூ முடிச்சு பொட்டு வச்ச வட்ட நிலா" ஜெயச்சந்திரன், சுனந்தா குரல்களில் "எம் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்" படத்தில் இருந்து




இசைஞானி இளையராஜா ஹீரோவாக இருந்த படங்களில் ஒன்றான "எங்க ஊரு பாட்டுக்காரன்" படத்தில் இருந்து மனோவுடன் சுந்தரக் குரல் சுனந்தா பாடும் "செண்பகமே செண்பகமே"



எஸ்.பி.பி, சித்ராவோடு சுனந்தா பாடும் வித்தியாசமான பாடல் ரகமான "என்ன சமையலோ", உன்னால் முடியும் தம்பி திரைக்கா க



செவ்வந்தி திரையில் இருந்து கலக்கல் ஜோடி ஜெயச்சந்திரன், சுனந்தா மீண்டும் இணையும் "செம்மீனே செம்மீனே"



குழந்தையை மட்டுமா தாலாட்டியது, இல்லை இல்லை நம் எல்லோரையும் தாலாட்டும் சுனந்தாவின் "மன்னவா மன்னவா" , வால்டர் வெற்றிவேல் தருகிறது.



நிறைவாகவும் "நிறைவாகவும்" ஜெயச்சந்தி ரன், சுனந்தா ஜோடி கட்டும் "ஒரு கோலக்கிளி" பொன் விலங்கு திரைப்படத்துக்காக

24 comments:

Anonymous said...

சூப்பர் தல ... சுனந்தா இவ்ளோ பாட்டு பாடிருக்கன்களா??? சசி ரேகா மாதிரி இவங்களும் அவ்ளோ பிரபலம் ஆகாம போய்டாங்க !!

Anonymous said...

மன்னவா மன்னவா, பூவே செம்பூவே இரண்டும் எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுக்கள்

தாருகாசினி said...

எல்லா பாட்டுமே அருமை அண்ணா! கலக்கல் தொகுப்பு.

S Maharajan said...

இது தான் எங்க தல!
மறந்த இசைக்குயில் பற்றிய நினைவுகளை தந்தமைக்கு நன்றி தல!
"எம் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்" இந்த படத்தில் "பூ முடிச்சு பொட்டு வச்ச வட்ட நிலா"இந்த பாடலை பாடியவர் "சுஜாதா" என்று இது வரை நான் நினைத்து இருந்தேன் தல!

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி சின்ன அம்மிணி

Anonymous said...

சூப்பர் தல ... சுனந்தா இவ்ளோ பாட்டு பாடிருக்கன்களா??? சசி ரேகா மாதிரி இவங்களும் அவ்ளோ பிரபலம் ஆகாம போய்டாங்க !//

உண்மைதான் தல, ராசியில்லாப் பாடகிகளில் இவங்களையும் சேர்க்கலாம்

*இயற்கை ராஜி* said...

நல்ல கல்க்ஷன்ஸ் பாஸ்.. அருமையான நினைவூட்டல்கள்

Radha Sriram said...

அட இது நாள் வரைக்கும் "காதல் மயக்கம்" உமா ரமணன்னு நினைச்சிட்டு இருந்தேன்..:):)

அன்பரசு said...

மிக அருமையான் பதிவு. சுனந்தாவின் குரலை மெய்மறந்து ரசிப்பவன் நான் இந்த தலைப்பைப் பார்த்ததும் ஓடி வந்துட்டேன். அதிலும் அந்த செம்மீனே செம்மீனே பாடல் வெகு அற்புதம். ஜெயச்சந்திரனின் குரலும், சுனந்தாவின் குரலும் அவ்வளவு அருமையாக இணையும். இருவர் குரலும் இணைவது பாடலை எங்கோ எடுத்துச் சென்று விடுகிறது. இனிமையிலும் இனிமை. அப்படி ஒரு இனிமை. நாள்முழுதும் மெய்மறந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
மேலும் ஒரு பாடல்:
எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும் (இளையராஜா, சுனந்தா)
இன்னும் சில பாடல்கள் உள்ளதாக நினைவு, ஞாபகம் வரவில்லை. சுவர்னலதாவின் குரலில், சுனந்தாவின் சாயல் இருந்தாதாலேயே ரசிக்கும்படியாக இருந்தது என்பது என் எண்ணம்.
நன்றி!

Anonymous said...

நண்பரே!
பாடல்களை டவுன்லோடு செய்யும்படி அமைத்திருந்தால், நாங்களும் டவுன்லோடு செய்துப்போமுள்ள…
வாழ்த்துக்கள்!
ஜிஆர்ஜி
புதுவை

கோபிநாத் said...

தல...இப்படி ஒரு பாடகி இருக்காங்கன்னு இப்பதான் தெரியும்.

\\தொண்ணூறுகளில் செவ்வந்தி படத்தில் வரும் "செம்மீனே செம்மீனே", உழைப்பாளி படத்தில் வரும் "அம்மா அம்மா எந்தன் ஆருயிரே", வால்டர் வெற்றிவேல் படத்தில் வரும் "மன்னவா மன்னவா" பாடல்கள் சுனந்தாவுக்குக் கிடைத்த சொற்ப வாய்ப்புக்களிலும் சிக்சர் அடித்த பாட்டுக்கள்\\

இந்த பாட்டு எல்லாம் இவுங்க தான் பாடினாங்கன்னு இப்பதான் தெரியுது. அதுவும் உழைப்பாளியில வரும் அம்மா அம்மா பாட்டு சித்ராக்கோவ் என்று நினைத்திருந்தேன்.

சூப்பர் தொகுப்பு - நன்றி தல ;)

Rajah said...

பிறந்தாலும் பிறக்க வேண்டும் கேரளாவில்.எல்லாமே அருமை மன்னிக்கவும் எல்லா பாட்டுமே அருமை . அருமையான நினைவூட்டல்கள்.நன்றி

கானா பிரபா said...

மிக்க நன்றி தாருகாசினி

மகராசன்

வாங்க வாங்க ;) பூமுடிச்சு பாட்டு வந்த நேரம் சுஜாதா ஒரு ப்ரேக் எடுத்திருந்தாங்க

வருகைக்கு நன்றி இயற்கை பாஸ்

கானா பிரபா said...

Radha Sriram said...

அட இது நாள் வரைக்கும் "காதல் மயக்கம்" உமா ரமணன்னு நினைச்சிட்டு இருந்தேன்..:):)/

உமா, இவங்க எல்லாம் ஒரே அலைவரிசை ஆச்சே ;)


பனங்காட்டான்

உங்கள் கருத்தோடு முழுதும் ஒத்துப் போகின்றேன்


புதுவை ஜிஆர்ஜி

பாட்டு டவுன்லோட் கொடுப்பதில் சில சிக்கல்கள் உண்டு

thamizhparavai said...

சூப்பர் தொகுப்பு தலை... சுனந்தா பாடிய பாடல்கள்ல ‘மன்னவா, மன்னவா’ பாடல் மட்டுமே தெரியும்...
மற்ற பாடல்கள் அறிமுகம் செய்ததற்கு நன்றி...
பொன்விலங்கு பாடல் எனக்கு மிகப் பிடித்த ரேர் சாங்...
தலை இவங்க பாடின மத்த பாடல்களையும் சொல்லிடுங்களேன்; பாடல் போடவேண்டாம். பெயர் மட்டும் சொன்னால் தேடிக் கண்டுபிடிக்கவும், வைத்திருப்பதை இவரின் குரலில் ரசிக்கவும் ஏதுவாயிருக்கும்....

thamizhparavai said...

சுனந்தா குரலில் ‘செண்பகமே’ பாடல் இன்றுதான் கேட்கிறேன் .... அழகு கொஞ்சுகிறது...hats off to thalai

Unknown said...

அடடா! நானும் சில நண்பர்கள் குறிப்பிட்டது போல் பெரும்பாலான பாடல்கள் உமா ரமணன் என்று கருதியுள்ளேன். மன்னவா மன்னவா பேஸ் கிட்டார் திருவிழா! சமிபத்தில் பூவே செம்பூவே இசைத்தட்டில் (LP) கேட்டேன் அப்பாவும் உமா ரமணனு நெனச்சு அவரை போற்றிகொண்டிருந்தேன். மிக்க நன்றி பிரபா பாடல்கள் ஒலித்தரமும் அருமை

கானா பிரபா said...

தல கோபி

இன்னாது சுனந்தாவை தெரியாதா :(


Rajah

இதென்ன புதுப்பழமொழி ;)

கானா பிரபா said...

தமிழ்ப்பறவை

கண்டிப்பா ஒரு லிஸ்ட் போடுறேன்


மிக்க நன்றி மீனாட்சி சுந்தரம்

Robin said...

"சுந்தர குரலுக்கு சொந்தக்காரி சுனந்தா" - உண்மைதான்.
அருமையான பாடல்கள்.
நன்றி!

ஆயில்யன் said...

பாஸ் ! பாஸ் இவுங்கதானே காதலன் படத்தில இந்திரையோ இவள் சுந்தரியோ பாடினது? சொல்லவேயில்ல!

கலைக்கோவன் said...

உள்ளேன் ஐயா...
கலக்கலான தொகுப்பு
கொஞ்சம் கண் மூடி ரசிக்க..,

//குழந்தையை மட்டுமா தாலாட்டியது, இல்லை இல்லை நம் எல்லோரையும் தாலாட்டும் சுனந்தாவின் "மன்னவா மன்னவா" //
பாதி படிக்கும்போதே நெனைச்சேன்
சொல்லிட்டீங்

// கோபிநாத் said...
தல...இப்படி ஒரு பாடகி இருக்காங்கன்னு இப்பதான் தெரியும்.//

அப்படியா தல...!!!
சொல்லவே இல்ல.

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி ரொபின்

ஆயில்ஸ்

இந்திரயோ பாடியவரே தான் கூடப் பாடியது மின்மினி

வாங்க கலைக்கோவன்

நீண்ட நாளா ஆளையே காணோம் ;)

Unknown said...

அண்ணா சுனந்தாவின் தொடர்பு எண் அல்லது முகவரி கிடைக்குமா???

Unknown said...

Bhuvi

பாடகி சுனந்தா அவர்களது தொடர்பு எண் அல்லது தற்போதய புகைப்படம் மற்றும் முகவரி ஏதும் கிடைக்குமா?...