Pages

Friday, April 11, 2025

என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழிப் பார்வையிலே….


என்ன என்ன வார்த்தைகளோ

சின்ன விழிப் பார்வையிலே….

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி கூட்டணியில் “வெண்ணிற ஆடை” படத்தில் உருவான அந்தப் பாடலை பியானோவில் வாசித்துக் காட்டுகிறார் ராஜா.

அடேயப்பா பியானோ வாசிப்புக்குண்டான அத்தனை இலக்கணங்களையும் இந்தப் பாடல் சொல்லிக் காட்டுகிறதே என்று ஆச்சரியப்பட்டுப் போனாராம் தன்ராஜ் மாஸ்டர்.

அதுவரை தன்ராஜ் மாஸ்டரின் இசைப் பட்டறையில் சினிமாப் பாடலை எடுத்துப் பயிற்சி எடுப்பது வழக்கம் இல்லை என்பதால் சக இசை மாணவர்களும் ஆச்சரியப்பட்டுப் போனார்களாம்.

மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் போலவே, நாடகச் சூழல் அனுபவத்தால் இசையை வளர்த்துக் கொண்டவர் ராஜா. தன் முன்னோர்கள் தன்னுடைய இசை வளர்ச்சிக்கு எவ்வளவு தூரம் கட்டை விரல் கேட்காத துரோணாச்சாரியார்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இதுவோர் உதாரணம்.

ஓய்வு இடைவேளைகளில் தன்னோடு சினிமாவில் வாசித்த சக கலைஞர்களிடம் Trinity College தேர்வுக்காக ஒவ்வொரு notes ஐயிம் வாசிக்கக் கேட்டுப் பயிற்சி எடுத்துக் கொண்ட தேடல் எல்லாம் தான் பின்னாளில் அசுர விளைச்சலாகி இருக்கிறது.

என் பால்ய வயதில் யாழோசை கண்ணன் என்ற இசை விற்பன்னர் கீபோர்ட் வாசிப்புப் பயிற்சிக்கு இசைஞானியின் நிலவு தூங்கும் நேரம் பாடலையே பால பாடமாக வைத்ததைச் சொல்லி இருந்தேன். இதெல்லாம் தொட்டுத் தொடரும் பந்தம்.

“நீங்க கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டது அறுபதுகளுக்குப் பின்னால் தானே?”

என்று புதிய தலைமுறை வழி சமஸ் கேட்ட கேள்விக்கு,

“இன்னும் கத்துக்கிட்டுத்தான் இருக்கேன்”

என்கிறார் இந்த 82 வயதுப் பையன் 😊😍❤️

கானா பிரபா

No comments:

Post a Comment