Pages

Thursday, November 9, 2023

"விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று" பாடகர் அசோக்


விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று 

யார் கதை எதுதான் என்று நீ தான் அறிவாயோ 

என் கண்ணே.....

https://www.youtube.com/watch?v=my8E3eh4mH0

இந்தப் பாடல் தான் நினைவுக்கு வந்தது "அபஸ்வரம்" ராம்ஜி அவர்களது பதிவு ஒன்றைப் படித்த போது.

"என்னுடைய "அபஸ்வரம் " குழுவின்

அரங்கேற்றத்திலிருந்து (1976) எங்களுடன் இணைந்த

மிகத் திறமையான பாடகர் அசோக் . இரண்டு நாட்களுக்கு முன் இவர் Cardiac Arrest காரணமாக மரணித்தார் என்பது பெரும் துயரச் செய்தி . அகில இந்திய வானொலியில் இணைந்து பல வருட சேவைக்குப்பின் - மதுரை நிலைய இயக்குனராக ஒய்வு பெற்றவர்."

என்று அபஸ்வரம் ராம்ஜி சார் குறிப்பிட்டிருந்தார்.

“விடுகதை ஒரு தொடர்கதை” படத்தில் கங்கை அமரன் இசையில் முன் சொன்ன அந்தப் பாடலை எஸ்பிபி, எஸ்.ஜானகியோடு எம்.அசோக் என்ற பாடகர் பாடியிருப்பார். கங்கை அமரனால் தான் இப்படியொரு பாடகர் அப்போது அடையாளப்பட்டார்.

சொற்பமே பாடினாலும் மிகச் சிறப்பான பாடல்களை அவர் பாடியிருக்கிறார் என்பதற்கு இன்னொரு உதாரணம் “மஞ்சள் நிலா” படத்தில் இளையராஜா இசையில் 

“காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர்க் கவிதை கேட்டு”

https://www.youtube.com/watch?v=Bgl-VnjWfsU

என்று இன்னொரு சோகராகம் மீட்டினார்.

தொண்ணூறுகளில் பாலபாரதி அவர்களின் இசையிலும் இன்னொரு சோக ராகம் பாடினார்.

“அமராவதி”யில் வந்த “உடல் என்ன உயிரென்ன” https://www.youtube.com/watch?v=MRlccfL5KZs

என்று அமைந்த பாடலது. 

அதற்கு முன்பே பாலபாரதிக்கு தலைப்படமாக அமைந்த “தலைவாசல்” படத்தில் சி.எஸ்.ஜெயராமன் குரலில் அமைந்த 

“வான் நிலவே வெண் பனி நிலவே”

https://www.youtube.com/watch?v=RNx9cx5Px4U

என்று அச்சொட்டாகக் கொடுத்திருப்பார்.

திரையிசையிலும் வாழ்ந்தவர் சிலர் மின்னி மறைந்தவர் பலகோடி.

அப்படி ஒருவராக விடை பெற்று விட்டார்.

ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

கானா பிரபா

09.11.2023


No comments:

Post a Comment