Pages

Wednesday, August 23, 2023

பாடகராகப் பரிணமித்த இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமார்



“வாராரு வாராரு அழகர் வாராரு”

 https://www.youtube.com/watch?v=tVRV2CImzBA

கேட்டவுடனேயே அப்படியே மதுரை சித்திரைத் திருவிழாவில் கொண்டு போய் இருத்தி மெய் சிலிர்க்க வைத்து விடும் பாட்டு அது. “கள்ளழகர்”பாடலை இசையமைத்த தேனிசைத் தென்றல் தேவாவும், இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமாருமாக இணைந்து பாடிய அந்தப் பாடல் சித்திரைத் திருவிழாவில் நிலைத்துப் போன அழியாச் சொத்தாகி விட்டது. 

பாடலைப் பிரசவிக்கும் இசையமைப்பாளரே அவர் குரலில் பாடுவதைக் கேட்பது என்பது எனக்கு உவப்பானதொரு விடயம்.

அந்த ஜீவனின் மூல நாடியை அப்படியே பகிர்ந்தளிக்கும் தன்மையை அவர்தம் பாடல்களில் உய்த்துணரலாம்.

 மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களது தொகையான பாடல்கள் அவற்றுக்குச் சான்று பகரும் முன்னோடிகளில் ஒன்று.

“ஏ புள்ள கருப்பாயி 

உள்ள வந்து படு தாயி”

அந்தக் காலத்தில் பட்டி தொட்டியெங்கும் வியாபித்த பாடல்.

ஒரு அறிமுக இசையமைப்பாளர், தானே பாடல் எழுதிப் பாடிய அந்தப் பாடல் எடுத்த எடுப்பிலேயே கடைக்கோடி ரசிகன் வரை எட்டியது. அவர் தான் “இசை வசந்தம்” என்ற எஸ்.ஏ.ராஜ்குமார்.

தமிழ்த் திரையுலகில் பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் நீண்டதொரு பாரம்பரியம் கொண்டு விளங்கும் எஸ்.ஏ.ராஜ்குமார் இந்த ஆண்டோடு 35 ஆண்டுகளை இசையமைப்பாளராகத் தொட்டு நிற்கின்றார்.

“பிரியவதனா என்னை மறந்து விடாதே” (ஒரு வழிப்பாதை)

https://www.youtube.com/watch?v=Mz0WIomCaDI

எஸ்.ஏ.ராஜ்குமார் குரல் இன்றும் ஈழத்தின் எங்கோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டிருக்கும் காதலர் கீதமாய்.

“பூந்தென்றலே ஓடோடி வா” (மனசுக்குள் மத்தாப்பு) பாடலை அப்படியே தன் அலைவரிசையில் பாடிய 

“வா கண்மணி” https://www.youtube.com/watch?v=OEbTisjMtLQ

என் மனசுக்கு நெருக்கமானது.

“கண்ணோரம் கங்கை தான்” (புரியாத புதிர்) எஸ்.ஏ.ராஜ்குமார் வடிவத்தையும் தேடிப் பிடித்துக் கேட்டுப் பாருங்கள். படத்தின் அடி நாதம் ஒலிக்கும்.

“இது முதல் முதலா வரும் பாட்டு 

நீங்க நினைக்கும் தாளம் போட்டு”

https://www.youtube.com/watch?v=TacbLzRyRqY

தன்னம்பிக்கையோடு வரும் புதியவர்களின் வாசல் திறந்து வைத்த மங்கலப் பாட்டு.

ஜனகராஜ் (ஜல் ஜல் பாட்டு வருது), மணிவண்ணன் (அழகா அழகா), வடிவேலு (சந்தன மல்லிகையில்) என்று குணச்சித்திரங்களுக்கும் அச்சொட்டாய்ப் பொருந்திப் போனது எஸ்.ஏ.ராஜ்குமார் குரல்.

இசைக் கலைஞர் செல்வராஜின் மகன் எஸ்.ஏ.ராஜ்குமார் எண்பதுகளில அடையாளப்பட்ட ஒரு இசையமைப்பாளர் என்பதோடு தானே அக்காலத்தில் பெரும்பாலும் பாடலாசிரியராகவே இரட்டைச் சவாரியும் செய்த வகையில் தனித்துவமானவர். தன்னுடைய இசை வளத்துக்குத் தன் பால்யப் பருவத்தில் டுமீல் குப்பம் மீனவ சமூகத்தோடு வாழப் பழகி அவர்களோடு கடல் படுக்கையில் படகுச் சவாரியில் பாட்டுக் கச்சேரி படித்ததுவும் பயிற்சிக் களனாக அமைந்ததை ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்தார் தன் “ஏ புள்ள கருப்பாயி” பாடலின் பின்னணிச் செய்தியாக.

ஒரு நட்சத்திர ஹோட்டலின் வாத்தியக் கலைஞராக இருந்த இளைஞர் எஸ்.ஏ.ராஜ்குமார், இயக்குனர்கள் ராபட் ராஜசேகரனின் கண்ணில் படவும் "சின்னப்பூவே மெல்லப்பேசு" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகின்றார். 

அந்த நேரத்தில் இசையில் பேராட்சி நடத்தி வந்த இசைஞானி இளையராஜாவின் காலத்தில் அறிமுகமாகி அதுவும் நடிகர் பிரபு தவிர ராம்கி உட்பட முற்றிலும் புதுமுகங்களோடு களம் இறங்கிய "சின்னப்பூவே மெல்லப்பேசு" திரைப்படத்தின் ஏழு பாடல்களுமே ஹிட் ஆகி படமும் வெள்ளி விழாக் கண்டு எஸ்.ஏ.ராஜ்குமாருக்குப் பெருமை சேர்த்தது. இதில் பெருமைக்குரிய ஒரு விஷயம் இப்படத்தின் எல்லாப் பாடல்களையும் தானே எழுதி இசையமைத்தது. தமிழ் சினிமாவின் வரலாற்றில் எல்லாப் பாடல்களுக்கும் எழுதி இசையமைத்த பெருமை டி.ராஜேந்திருக்குப் பின் இவரையே சேர்கின்றது. தொடர்ந்து பல படங்களுக்கு தானே பாடல் எழுதி இசையமைத்திருக்கின்றார்.

“முதல் பாடல்” படத்தின் தயாரிப்பாளராகவும், “ஒரு வழிப்பாதை” படத்தில் வில்லனாகவும் கூட எஸ்.ஏ.ராஜ்குமார் அவதாரம் எடுத்திருக்கிறார்.

எஸ்.ஏ.ராஜ்குமார் பாடியளித்த தேர்ந்தெடுத்த பாடல்களைத் திரட்டித் தருகின்றேன்.

1. ஏ புள்ள கருப்பாயி – சின்னப்பூவே மெல்லப் பேசு

2. வா கண்மணி – மனசுக்குள் மத்தாப்பூ

3. இதயம் இதயம் அது பனி போல் – கிருஷ்ணா

4. கண்ணோரம் கங்கை தான் – புரியாத புதிர்

5. ஆகாயத்தில் தொட்டில் கட்டி – பெரும் புள்ளி

6. பிரியவதனா – ஒரு வழிப் பாதை

7. ஜல் ஜல் பாட்டு வருது – மனசார வாழ்த்துங்களேன்

8. ஞானத் தங்கமே – முதல் பாடல்

9. ஆத்தா வராளாம் – வரம் தரும் வடிவேலன்

10. வாராரு வாராரு - கள்ளழகர் 

11. டேய் டேய் பயலே – மக்கள் ஆணையிட்டால்

12. எழுந்தால் மலை – கண்ணுபடப் போகுதய்யா

13. இது முதன்முதலா வரும் – புது வசந்தம்

14. கம்பனுக்குக் கை – மறுமலர்ச்சி

15. மண்ணுக்குள்ள தங்கம் – மறுமலர்ச்சி

16. ஓ பியாரி – பூவே உனக்காக

17. சந்தன மல்லிகையில் – ராஜகாளியம்மன்

18. சிறுவாணி ஊத்தல்லோ – பாட்டாளி

19. சுருளு மீசைக்காரண்டி – வீரன் வேலுத்தம்பி

20. வெட்டவெளி மைதானத்துல – வீரன் வேலுத்தம்பி

21. தமிழ் தமிழ் நான் – திருமதி தமிழ்

22. தாலாட்டும் பூவொன்று – பூவும் புயலும்

23. திருக்குறள் இடையழகி – திருமதி தமிழ்

24. திரு நாளு தேரழகா – சூர்ய வம்சம்

25. தியாகராஜரின் தெய்வ – பெண்ணின் மனதைத் தொட்டு

26. வீரன் சிலம்புக்காரன் – தங்கத்தின் தங்கம்

27. ஏலமலைக்காற்று – ரயிலுக்கு நேரமாச்சு

28. ஒரு பொண்ணு நெனைச்சா – ஒரு பொண்ணு நெனைச்சா

29. வாராயோ மீராவைத் தேடி – இதய ஊஞ்சல்

30. பார்த்ததில்ல – திவான்

31. திருநாள் வந்ததடா – புதுப் புது ராகங்கள்

32. ஒரு ஓரமாப் போங்கடி – பாலைவன ராகங்கள்

33. ஊத்திக்கிட்டது – வள்ளுவன் வாசுகி

34. கோட்டைக்கு நீ ராஜா – ஆளுக்கொரு ஆசை

35. மழையா மழையா இப்போ – காமராசு

36. காட்டுக்குயில் போல – வண்ணத்தமிழ் பாட்டு

37. எடுடா நம்ம – கந்தா கடம்பா கதிர்வேலா

38.  சோனா சோனா – மலபார் போலீஸ்

39.  தாயே திரிசூலி – சிம்மராசி

40. அழகா அழகா – பொன்மனம்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் எங்கள் இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமார். Rajkumar Sa

கானா பிரபா

23.08.2023


No comments:

Post a Comment