Pages

Thursday, July 27, 2023

❤️ சின்னக்குயில் சித்ரா 💚 44 வருஷப் பாட்டுக் குயிலுக்கு வயசு 60🌷


ஆயிரம் பூவும் உண்டு

அது மல்லிகையைப் போலாகுமா?

ஆயிரம் மொழிகள் உண்டு

அது செந்தமிழைப் போலாகுமா?

எத்தனை செல்வம் உண்டு

அவை அத்தனையும் நீயாகுமா?

https://youtu.be/FdoOZtuaEns

சின்னக்குயில் சித்ராவை  அணுக்கமாக நேசிக்க வைக்கும் ஒரு பாட்டு ஒன்று என் இலக்கியாவுக்கே நான் பாடுவது போலத் தொனிக்கும். 

இன்று பின்னணிப் பாடகி, சின்னக்குயில் சித்ராவின் 60 வது பிறந்த தினம். சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய், எண்ணற்ற பாடல்களால் நெருக்கமாய் இருப்பது. 

தமிழ்த் திரையிசையில் மிக நீட்சியான வரலாற்றைக் கொண்ட பாடகிகளில் சித்ராவுக்குப் பின் யாரும் அடையாளப்படவில்லை. இனியும் அது சாத்தியப்படாது.

பாட்டுப் போட்டிகளைப் பாருங்கள். புதிய பாடகர்களைத் தட்டிக் கொடுப்பது மட்டுமன்றி, நுணுக்கமான சங்கதிகளைக் காட்டி அவற்றில் கவனமெடுக்க வேண்டும் என்ற ஒரு குருவின் ஆத்மார்த்த அக்கறை சித்ராவின் தனித்துவம். எஸ்பிபி அருகே அமர்ந்து இவ்விதம் அவர் கொடுக்கும் கண்டிப்பைப் பார்த்து எஸ்பிபியே கலாட்டா பண்ணியதை அறிவீர்கள். 

காதலிக்கும் பருவத்தின் ஆரம்ப நாட்களைப் போலத் தொடர்ந்து வரும் காலங்கள் இருக்காது போல ஒரு சில பாடகர்களின் ஆரம்பகாலத்துப் பாடல்களைக் கேட்கும் சுகமே தனிதான்.

எஸ்.ஜானகியின் ஆரம்ப காலத்துப் பாடல்களில் "உள்ளம் தேடாதே என்று சொல்லுதே" (எதையும் தாங்கும் இதயம்), "மலரோடு விளையாடும் தென்றலே வாராய்" (தெய்வபலம்),எஸ்.பி.சைலஜாவின் அறிமுகக் குரலில் "சோலைக்குயிலே" (பொண்ணு ஊருக்கு புதுசு), "மலர்களில் ஆடும் இளமை புதுமையே" (கல்யாண ராமன்), சுஜாதா அறிமுகமான வேளை "காலைப்பனியில் ஆடும் மலர்கள்" (காயத்ரி) இப்படியாக இந்த முன்னணிப் பாடகர்களின் அன்றைய பின்னணிப் பாடல்களைக் கேட்பதே தனி சுகம்.

1984 ஆம் ஆண்டில் தமிழில் அறிமுகமாகிய சித்ராவின் ஆரம்ப காலப்படங்களில் குருவை மிஞ்சாத சிஷ்யை போல ஒரு அடக்கமான தொனியிலேயே அவரின் பாடல்கள் இருப்பது போலத் தென்படும். அந்த ஆரம்பப் பாடல்களைக் கேட்டாலே போதும் தானாக ஆண்டுக் கணக்கு வெளிவந்து விடும். வருஷங்கள் நான்கைக் கடந்த பின்னர் தான் ஒரு முதிர்ச்சியான தொனிக்கு அவரின் குரல் மாறிக் கொண்டது, அதாவது இன்றிருப்பதைப் போல.சித்ராவின் வருகை பூவே பூச்சூடவாவில் ஆரம்பிக்கிறது. அந்தக் காலத்து முன்னணி நாயகிகள் நதியா, ராதா, அம்பிகா, சுஹாசினி என்ற பட்டியலுக்குக் குரல் இசைத்தாலும் நடிகை ரேவதியின் குரலுக்கும் குணாம்சத்துக்கும் பொருந்தி வரக்கூடியாதான பாங்கில் அமைந்திருக்கின்றது. 

எங்களூரில் 80 களின் மையப்பகுதியில் வீடியோப் படப்பிடிப்புக்காரர்கள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருந்த வேளை அது. பெண் பூப்படைந்ததைக் கொண்டாடும் நாள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கல்யாணக் காட்சி என்று வீடியோக்காரருக்கும் புதுத் தொழில்கள் கிட்டிக் கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் பிறந்த நாள் விழாக்களை எடுக்கும் வீடியோக்காரருக்கு அந்தக் காட்சிகளுக்குப் பொருத்தமான பாடல்களையும் பின்னணியில் பொருத்த வேண்டிய சூழ்நிலை வரும்போது தவறாமல் பயன்படுத்தப்படும் பாடல்களில் ஒன்று டிசெம்பர் பூக்கள் படத்தில் வரும் "இந்த வெண்ணிலா என்று வந்தது எந்தன் பாடலை நின்று கேட்டது". சித்ராவின் ஆரம்பகாலக் குரலில் ஒன்று இது, இசைஞானி இளையராஜா இசையமைத்த பாட்டு. அளவான மேற்கத்தேய இசையும் சித்ராவின் அடக்கமான குரலும் சேர்ந்து இப்போது கேட்டாலும் அந்தப் பிறந்த நாள் வீடியோக்காலத்தைச் சுழற்றும். 

மனிதனின் மறுபக்கம் என்றொரு படம். இசைஞானி இளையராஜாவை எண்பதுகளில் அதிகளவில் பயன்படுத்திய இயக்குநர்களில் முதலிடத்தில் இருப்பவர் என்று சொல்லக்கூடிய கே.ரங்கராஜ் இயக்கத்தில் வந்த படம். இந்தப் படத்தில் வரும் பாடல்கள் ஒவ்வொன்றையும் எழுதத் தனித்தனிப் பதிவுகள் தேவை. அவ்வளவுக்கு வித்தியாசமான கலவையாக இருக்கும். அப்படியானதொரு பாடல் தான் சித்ராவின் குரலில் ஒலிக்கும் "சந்தோஷம் இன்று சந்தோஷம் இந்தப் பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்". ராஜாவுக்கே உரிய ஒழுங்குபடுத்தப்பட்ட வாத்தியக் கலவைகளின் நேர்த்தியான அணிவகுப்பில் இருக்கும் இசை, பாடலின் சரணத்திற்குப் பாயும் போது "மாலை சூடிடும் முன்னே இவள் காதல் நாயகி" என்று இன்னொரு தடத்துக்கு சித்ரா மாறுவார் அப்போது பின்னால் வரும் ட்ரம்ஸ் வாத்தியத்தின் தாளக்கட்டும் இலாவகமாக மாறி வளைந்து கொடுக்கும். பாட்டின் பின் பாதியிலும் "உன்னைக் கேட்கவே வந்தேன் ஒரு ஆசை வாசகம்" என்னும் இடத்திலும் முந்திய பாங்கில் இருக்கும். ஆர்ப்பாட்டமில்லாத அழகில் அளவான மேக்கப்பில் இருக்கும் காதலியைப் பார்த்துக் கொண்டிருக்கும் சுகம் இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம்.

இசைஞானி இளையராஜா இசையில் சின்னக்குயில் சித்ரா பாடிய 54 தனிப்பாடல்களின் திரட்டாக இங்கே பகிர்கிறேன்.

இவை தனித்தும் கூட்டுக் குரல்களோடும் சித்ராவால் பாடிச் சிறப்பிக்கப்பட்டவை. இயற்கை, அன்பு, காதல் என்று பல்வேறு பரிமாணங்கள் கொண்ட பாடல் தொகுப்பு இது.

இந்தப் பாடல்களில் சிறப்பாக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இசைஞானி இளையராஜா இணைந்த மெல்லத் திறந்தது கதவு படப் பாடலும், அறுவடை நாள் படத்தில் ராஜாவே கூட்டுக் குரலாக இணைந்து பாடிய பாடலையும், சித்ரா பாடிய மலையாளப் பாடல்களில் என்னைக் கவர்ந்த, உள்ளத்துக்கு மிக நெருக்கமான மூன்று பாடல்களும் அணி செய்கின்றன.

1. சின்னக்குயில் பாடும் பாட்டு (பூவே பூச்சூடவா)

2. இந்த வெண்ணிலா எங்கு வந்தது (டிசெம்பர் பூக்கள்)

3. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் (புன்னகை மன்னன்)

4. நானொரு சிந்து (சிந்து பைரவி)

5. தேவனின் கோயில் (அறுவடை நாள்)

6. ஆத்தாடி அம்மாடி பூ மெட்டு (இதயத்தைத் திருடாதே)

7. சொந்தம் வந்தது வந்தது (புதுப்பாட்டு)

8. ஹே சித்திரச் சிட்டுகள் (என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு)

9. சந்தோஷம் இன்று சந்தோஷம் (மனிதனின் மறுபக்கம்)

10. கொட்டிக் கிடக்குது செல்வங்கள் (தீர்த்தக் கரையினிலே)

11. நின்னுக்கோரி வர்ணம் (அக்னி நட்சத்திரம்)

12. ஒரு ராஜா வந்தானாம் (மெளனம் சம்மதம்)

13. மாமனுக்கும் மச்சானுக்கும் (அரங்கேற்ற வேளை)

14. உச்சிமலை மேகங்கள் (வெள்ளையத் தேவன்)

15. வண்ணப் பூங்காவனம் (ஈரமான ரோஜாவே)

16. வானம்பாடி பாடும் நேரம் ( சார் ஐ லவ் யூ)

17. மாலை சூடும் நேரம் (புதிய ராகம்)

18. தூளியிலே ஆட வந்த (சின்ன தம்பி)

19. கற்பூர முல்லை ஒன்று (கற்பூர முல்லை)

20. வந்ததே ஓ குங்குமம் (கிழக்கு வாசல்)

21. மன்னன் கூரைச் சேலை (சிறைச்சாலை)

22. புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம் (ராமன் அப்துல்லா)

23. நல் அன்பே தான் தாயானது (கை வீசம்மா கை வீசு)

24. தென்மதுர சீமையிலே (தங்கமான ராசா)

25. காலை நேர ராகமே (ராசாவே உன்னை நம்பி)

26.யாரைக் கேட்டு (என் உயிர்க் கண்ணம்மா)

27. ஒரு கிளியின் தனிமையிலே (பூவிழி வாசலிலே)

28. ஒத்தையிலே நின்னதென்ன ( வனஜா கிரிஜா)

29. கொட்டிக் கிடக்கு குண்டு மல்லி (தாயம் ஒண்ணு)

30. குத்தம்மா நெல்லு குத்து (பாடு நிலாவே)

31. பொடி நடையாப் போறவரே (கடலோரக் கவிதைகள்)

32. இளமை ரதத்தில் (நினைக்கத் தெரிந்த மனமே)

33. பழைய கனவை (தாயம்மா)

34. மங்கலத்துக் குங்குமப் பொட்டு (சாமி போட்ட முடிச்சு)

35. உன்னை நானே அழைத்தேனே (சின்ன குயில் பாடுது)

36. காலம் இளவேனிற்காலம் (விடிஞ்சா கல்யாணம்)

36. காற்றோடு குழலின் நாதமே (கோடை மழை)

37. கண்ணே என் (கிராமத்து மின்னல்)

38. மழலை என்றும் (சேதுபதி IPS)

39. குன்றத்துக் கொன்றை (பழசி ராஜா)

40. உல்லாசப் பூங்காற்றே (கோலங்கள்)

41. துளியோ துளி (காத்திருக்க நேரமில்லை)

42. ஶ்ரீராமனே உன்னை (கண்களின் வார்த்தைகள்)

43. வண்ண நிலவே (பாடாத தேனீக்கள்)

44. நான் வண்ண நிலா (கட்டளை)

45. வா வாத்தியாரே (பரதன்)

46. திருடா திருடா (எனக்கு நானே நீதிபதி)

47. ஆயிரம் பூவும் உண்டு (பாச மழை)

48. மஞ்சள் நீராட்டு (இல்லம்)

49. சிட்டுப் போலே (இனிய உறவு பூத்தது)

50. எந்து பறஞ்ஞாலும் (அச்சுவிண்ட அம்மா - மலையாளம்)

51. புழயோரத்தில் (அதர்வம் - மலையாளம்)

52. குழலூதும் கண்ணனுக்கு ( எம்.எஸ்வி & இளையராஜா - மெல்லத் திறந்தது கதவு)

53. மத்தாப்பூ ஒரு பெண்ணா (மைக்கேல் மதன காமராஜன்)

54. செங்கதிர் கையும் வீசி (ஸ்னேக வீடு - மலையாளம்)

 “கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியே” என்று அவரே பாடும் பாடல் போல மணி மணியாய்ப் பல பாடல்கள் வந்து விழுகின்றன.

 தொடர்ந்து அவர் ஜோடி கட்டிய பாடல்கள்

1. கல்யாணத் தேனிலா - மெளனம் சம்மதம்

2. பூஜைக்கேற்ற பூவிது - நீதானா அந்தக் குயில்

3. மலரே பேசு மெளன மொழி - கீதாஞ்சலி

4. வா வா அன்பே அன்பே - அக்னி நட்சத்திரம்

5. ஓ ப்ரியா ப்ரியா - இதயத்தைத் திருடாதே

6. மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - பெரிய வீட்டுப் பண்ணக்காரன்

7. ஆத்தாடி ஏதோ ஆசைகள் - அன்புச் சின்னம்

8. காதல் ராகமும் கன்னித்தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ - இந்திரன் சந்திரன்

9. நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன்

10. வா வா வா கண்ணா வா - வேலைக்காரன்

11. இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது - பணக்காரன்

12. மீனம்மா மீனம்மா - ராஜாதி ராஜா

13. அடிச்சேன் காதல் பரிசு - பொன்மனச் செல்வன்

14. நேத்து ஒருத்தரை ஒருத்தரு பார்த்தோம் - புதுப்பாட்டு

15. பாராமல் பார்த்த நெஞ்சம் - பூந்தோட்டக் காவல்காரன்

16. மாலைகள் இடம் மாறுது - டிசெம்பர் பூக்கள்

17. செம்பூவே பூவே - சிறைச்சாலை

18. தேகம் சிறகடிக்கும் ஹோய் - நானே ராஜா நானே மந்திரி

19. இந்த மான் உந்தன் சொந்த மான் - கரகாட்டக்காரன்

20. ஒரு நாள் நினைவிது பல நாள் கனவிது - திருப்புமுனை

21. சித்திரை மாதத்து நிலவு வருது - பாடு நிலாவே

22. சங்கத்தமிழ்க் கவியே - மனதில் உறுதி வேண்டும்

23. அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ - சிறையில் பூத்த சின்ன மலர் 

24. பொன்னெடுத்து வாறேன் வாறேன் - சாமி போட்ட முடிச்சு

25. கண்மணி கண்மணி - சத்யவான்

26. மலையோரம் மயிலே - ஒருவர் வாழும் ஆலயம்

27. நீ போகும் பாதையில் - கிராமத்து மின்னல்

28. கம்மாக்கரை ஓரம் - ராசாவே உன்ன நம்பி

29. ஓர் பூமாலை - இனிய உறவு பூத்தது

30. திருப்பாதம் பார்த்தேன் - மனித ஜாதி

31. இரு விழியின் வழியே - சிவா

32. சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி - என்னப் பெத்த ராசா

33. பூவும் தென்றல் காற்றும் - சின்னப்பதாஸ்

34. மாலை நிலவே - பொண்ணுக்கேத்த புருஷன்

35. குருவாயூரப்பா - புதுப் புது அர்த்தங்கள்

35. சொர்க்கத்தின் வாசற்படி - உன்னைச் சொல்லிக் குற்றமில்லை

36. ஊருக்குள்ள உன்னையும் பத்தி - நினைவுச் சின்னம்

37. அழகிய நதியென - பாட்டுக்கொரு தலைவன்

38. வெள்ளிக் கொலுசு மணி - பொங்கி வரும் காவேரி

39. ராஜனோடு ராணி வந்து - சதி லீலாவதி

40. ஹேய் ஒரு பூஞ்சோலை ஆளானதே - வாத்தியார் வீட்டுப் பிள்ளை

41. சோலை இளங்குயிலே - அண்ணனுக்கு ஜே

42. பூங்காற்றே இது போதும் - படிச்ச புள்ள

43. நானென்பது நீயல்லவோ - சூரசம்ஹாரம்

44. வா வா வஞ்சி இளமானே - குரு சிஷ்யன்

45. கரையோரக் காத்து - பகலில் பெளர்ணமி

46. இதழில் கதை எழுதும் - உன்னால் முடியும் தம்பி

47. விழியில் புதுக் கவிதை - தீர்த்தக் கரையினிலே

48. காதலா காதலா - தாய்க்கு ஒரு தாலாட்டு

49. குயிலே குயிலே - ஆண் பாவம்

50. சோலை இளங்குயில் - காவலுக்குக் கெட்டிக்காரன்

51. தென்றல் தான் திங்கள் தான் - கேளடி கண்மணி

52. சிந்துமணி புன்னகையில் - நீ சிரித்தால் தீபாவளி

53. ஆராரோ பாட்டுப் பாட - பொண்டாட்டி தேவை

54. மழை வருது மழை வருது - ராஜா கைய வெச்சா

55. தென்றல் வரும் தெரு - சிறையில் சில ராகங்கள்

56. ஒரு ஜீவன் அழைத்தது - கீதாஞ்சலி

57. நிக்கட்டுமா போகட்டுமா - பெரிய வீட்டுப் பண்ணக்காரன்

58. நூறு நூறு முத்தம் - இந்திரன் சந்திரன்

59. என்னுயிரே வா - பூந்தோட்டக் காவல்காரன்

60. ஆலோலங்கிளித் தோப்பிலே - சிறைச்சாலை

61. கண்ணா வருவாயா - மனதில் உறுதி வேண்டும்

62. வைகாசி மாசத்துல - நினைவுச் சின்னம்

63. நீலக்குயிலே - சூரசம்ஹாரம்

64. ஜிங்கிடி ஜிங்கிடி - குரு சிஷ்யன்

65. கை பிடித்து கை அணைத்து - சிறையில் சில ராகங்கள்

66. அன்பே நீ என்ன - பாண்டியன்

67. ஊரோரமா ஆத்துப் பக்கம் - இதயக் கோவில்

68. ஓடைக்குயில் ஒரு பாட்டு - தாலாட்டு பாடவா

69. ஒரு ஆலம்பூவு இலந்தம் பூவைப் பார்த்ததுண்டா - புண்ணியவதி

70. நான் ஒன்று கேட்டால் தருவாயா - இளைய ராகம்

71. மதுர மரிக்கொழுந்து - எங்க ஊரு பாட்டுக்காரன்

72. வானத்துல வெள்ளிரதம் - எங்க ஊரு மாப்பிள்ளை

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சின்னக்குயில் சித்ராவுக்கு K S Chithra

கானா பிரபா

27.07.2023


No comments:

Post a Comment