Pages

Sunday, December 12, 2021

ரஜினிக்காகப் பாடியவர்கள்

எண்பதுகளில் வெளியான படங்களின் பாடல் காட்சிகளைப் பார்க்கும் போதெல்லாம் மோகன், கமல்,பிரபு போன்ற நாயகர்களின் நுணுக்கமான முகபாவங்களையும், பாடலுக்கான நளினமான அளவான நடனத்தையும் கொடுத்திருப்பார்கள். ஆனால் இவர்களையெல்லாம் தாண்டி, துள்ளிசைப் பாடல் மட்டுமன்றி காதல் பாடல்களிலும் மிக இயல்பாகவும் அநாயாசமாகவும் நடித்தவர் என்றால் என் முதல் தேர்வு ரஜினியாகத்தான் இருக்கும். காரணம் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற மசாலா நாயகனை அமைதியான அடக்கமான குணாம்சத்தோடு பொருத்திப் பார்ப்பது சவாலான காரியம். அதைக் கட்டுடைத்துக் காட்டியிருக்கிறார் ரஜினி. அதற்கு மூன்று பாடல்களை உதாரணமாகக் காட்டலாம்.

ஒன்று: தம்பிக்கு எந்த ஊரு படத்தில் வரும் "காதலின் தீபமொன்று" இந்தப் பாடல் பிறந்து முப்பது வருடங்கள் கழித்தும் அதே இளமையோடு இருப்பது போலவே பாடல் காட்சியில் தனி ஆளாகத் தன் காதல் உணர்வை அழகாக, அமைதியாக வெளிப்படுத்துகின்றார். 

https://www.youtube.com/watch?v=2C78pEVf9oY

ரஜினியின் ஜோடிப்பாடல்களில் எனக்கு ரொம்பவே பிடித்தது "பெண்மானே சங்கீதம் பாடிவா" நான் சிவப்பு மனிதன் படத்தில் வரும் இந்தப் பாடலையும் காட்சியோடு ஒன்றிப் பார்க்கும் போது அம்பிகாவையும் தாண்டி அழகுணர்ச்சி மிளிர்வது ரஜினியின் நுணுக்கமான முகபாவம் தான்

https://www.youtube.com/watch?v=csvq9Af1JVQ

இன்று காலை “பூமாலை ஒரு பாவை” ஆனது பாடலை ஓடவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தப் படத்தில் மட்டும் ரஜினி பூர்ணிமா கலாய்ப்பு பாடல்கள் மூன்று. அந்த மூன்றில் இந்தப் பாடல் தலையாயது. ஒரு தேர்ந்த பாடகி க்ளப்பில் பாடும்போது அவளைக் கலாய்ப்பதற்கென்றே வரும் இளைஞனாக ரஜினி நுழையும் காட்சியில் இருந்து அவரின் நாசூக்கான சேஷ்டையையும், குறும்பான நடனத்தையும் பாருங்கள் மனுஷர் பின்னியிருப்பதை நீங்களும் ரசிப்பீர்கள்  https://www.youtube.com/watch?v=lVWkLsJ2R9Y

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கான அடையாளக் குரல்களாக மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் தங்கி விட்டாலும் இன்னும் ஏராளம் பேர் அவருக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்கள் என்பதை அடையாளப்படுத்தும் முயற்சி தான் இந்தப் பதிவு.

இன்னும் சிறப்பாக, கே..ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன் ஆகியோர் ஒரே படத்தில் ரஜினிக்காகக் குரல் கொடுத்த

நெற்றிக்கண், படிக்காதவன், தர்மத்தின் தலைவன் போன்ற படங்களும்,

எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், மனோ ஆகியோர் இவருக்காகக் குரல் கொடுத்த “குரு சிஷ்யன்”,

எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், மனோ ஆகியோர் ரஜினிக்காகக் குரல் கொடுத்த “பணக்காரன்”

 எஸ்பிபி மனோ, இளையராஜா

எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ், மனோ போன்றோர் அமைந்த

“தர்மதுரை” போன்றவையும் கூட அந்தந்தப் படங்களில் பல்வேறு பாடகர்கள் உச்ச நட்சத்திரமாம் ரஜினிக்குக் குரல் கொடுத்தாலும் உறுத்தாது ரசிக்க வைக்கும். (பின்னாளில் கபாலி, காலா எல்லாம் சேர்த்தியில்லை அவை குழுப் பாடல்கள்) கானா பிரபா

ரஜினிகாந்துக்கான பாடகர் வரிசையில்

1. சம்போ சிவசம்போ (நினைத்தாலே இனிக்கும்) – எம்.எஸ்.விஸ்வநாதன் 

2. நண்டூருது நரியூருது (பைரவி) – T.M.செளந்தரராஜன்

3. வீரமுள்ள பாண்டியராம் (ராணுவ வீரன்) சீர்காழி கோவிந்தராஜன்

4. மை நேம் இஸ் பில்லா (பில்லா) – S.P.பாலசுப்ரமணியம்

5. ஆசை நூறு வகை (அடுத்த வாரிசு) - மலேசியா வாசுதேவன்

6. ஆகாயம் மேலே ( நான் வாழ வைப்பேன்) – K.J.ஜேசுதாஸ்

7. உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி  (பணக்காரன்) – இளையராஜா

8.  நெஞ்சே உன் ஆசை என்ன (நான் போட்ட சவால்) - T.L.மகராஜன்

9. வாழ்க்கையே வேஷம் ( ஆறிலிருந்து அறுபது வரை) – ஜெயச்சந்திரன்

10. மங்கை என்றால் ( ஜாலி ஆப்ரகாம்) – இறைவன் கொடுத்த வரம்

11. காதலெனும் கோவில் (கழுகு) – சூலமங்கலம் முரளி

12. வருவாய் அன்பே (கர்ஜனை) - T. K. S.கலைவாணன்

13. மலையாளக் கரையோரம் (ராஜாதி ராஜா) – மனோ

14. அடிக்குது குளிரு (மன்னன்) – ரஜினி

15. குளுவாலிலே (முத்து) – உதித் நாராயணன்

16. நகுமோ (அருணாசலம்) – ஹரிஹரன்

17. மின்சாரப் பூவே (படையப்பா) - ஶ்ரீனிவாஸ்

18. வாஜி வாஜி (சிவாஜி) – ஹரிஹரன்

19. வாழ்க்கையில் ஆயிரம் (படையப்பா) – பாலகாடு ஶ்ரீராம் (அசரீரிப் பாடல்)

20. டிப்பு டிப்பு (பாபா) - சங்கர் மகாதேவன்

21. சக்தி கொடு (பாபா) – கார்த்திக்

22. கொஞ்ச நேரம் ( சந்திரமுகி) – மது பாலகிருஷ்ணன்

23. அதிரடி (சிவாஜி) – ஏ.ஆர்.ரஹ்மான்

24. சகாரா பூக்கள் (சிவாஜி) – விஜய் ஜேசுதாஸ் 

25. ஓம் ஸாரிரே (குசேலன்) - தலேர் மெஹந்தி

26. காதல் அணுக்கள் (எந்திரன்) – விஜய் பிரகாஷ்

27. கிளிமஞ்சாரோ (எந்திரன்) -  ஜாவேத் அலி

28. மாற்றம் ஒன்று தான் (கோச்சடையான்) – ஹரிச்சரண் (அசரீரிப் பாட்டு)

29. மாய நதி (கபாலி) – அனந்து, பிரதீப் (அசரீரிப் பாட்டு)

30. கண்ணம்மா (காலா) – பிரதீப் (அசரீரிப் பாட்டு)

31. இளமை திரும்புதே (பேட்ட) – அனுருத் ( அசரீரிப் பாட்டு)

32. எத்தனை சந்தோஷம் (பேட்ட) - நாகாஷ் அஸிஸ் 

33. சாரக் காத்தே ( அண்ணாத்த) – சிட் ஶ்ரீராம்

விடுபட்டவை 

34. கோபுரத்திலே (சங்கர் சலீம் சைமன்) - கோவை செளந்தரராஜன்

35. ஆத்துல அன்னக்கிளி (வீரா) - அருண்மொழி

36. அண்ணனோட பாட்டு (சந்திரமுகி) - கே கே (பிரபுக்கும் ரஜினிக்கும்)

36. மருதாணி (அண்ணாத்தே) - நகாஷ் ஆஷிஷ்

37. டிஸ்கோ (தர்மயுத்தம்) – ஹரிராம் 


கானா பிரபா

12.12.2021



No comments:

Post a Comment