Pages

Saturday, December 11, 2021

கங்கை அமரன் இசையில் மகாகவி சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்


“உணவு செல்லவில்லை சகியே

உறக்கம் கொள்ளவில்லை

மணம் விரும்பவில்லை சகியே

மலர் பிடிக்க வில்லை.....”

“மகாகவி” சுப்ரமணிய பாரதியாரின் “கண்ணன் என் காதலன்” என்ற கண்ணன் பாட்டுத் தொகுதியில் இருந்து இந்தப் பாடல்

கங்கை அமரன் இசையில் அழகானதொரு திரையிசைப் பாடலாக விரிந்திருக்கின்றது. அதுவும் ஒரு பாடல் பதிவுக்கான காட்சியமைப்பாகவே இது பயன்படுத்தப்பட்டிருப்பது வெகு சிறப்பு.

“சம்சாரமே சரணம்” என்ற படத்துக்காக காட்சியில் நாயகி ரஞ்சனி பாடுமாற் போல அமைகின்றது இந்த 

“உணவு செல்லவில்லை சகியே”

https://www.youtube.com/watch?v=0ad5X_6XQvg

என்ற பாடல். கானா பிரபா

அந்தக் காலத்தில் “ஊமைக்குயில்” படத்தின் வழியாகப் பிரபலம் பூத்த நாயகன் யோகராஜ்ஜின் (டூப்ளிகேட் பாக்யராஜ்) படங்களில் ஒன்று இது.

இந்தப் பாடலின் சிறப்பு என்னவெனில், இதே பாடலை மனோ குரலில் ஒரு துள்ளிசைப் பாடலாகவும் இப்படி

https://www.youtube.com/watch?v=NWBCPTZskBM

இசையமைத்திருக்கிறார் கங்கை அமரன்.

"பிள்ளைப் பிராயத்திலே" என்ற பாரதி பாடல்,

தீபன் சக்ரவர்த்தி பாடும் 'கனவுகள் கற்பனைகள்" படப் பாடலுக்கும் கங்கை அமரன் இசை வடிவம் இட்டிருக்கிறார்.

“என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்”

https://www.youtube.com/watch?v=cdx77BDpvUE

கே.ஜே.ஜேசுதாஸ் குரலில் வரும் கங்கை அமர நாதம் இதற்கு முன் முன்னோரால் வேறு வடிவத்தில் கையாளப்பட்ட பாரதியார் பாடல்.

இந்தப் பாடல் கங்கை அமரனின் தனித்துவம் சொல்லும். ஒரு கொசுறுச் செய்தி, எமது ATBC வானொலியில் 17 ஆண்டுகளைக் கடந்து இடம்பெறும் “சிந்தனைச் சிதறல்” நிகழ்ச்சியின் முகப்புப் பாடலாகவும் இது அலங்கரிப்பது சிறப்பு. கானா பிரபா

எண்பதுகளில் “இனி ஒரு சுதந்திரம்” படத்தை ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகியின் கதைப்புலமாக மணிவண்ணன் இயக்கிய இந்தப் படத்தில் மேலும், 

சித்ரா & கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் “மோகத்தைக் கொன்று விடு”

https://www.youtube.com/watch?v=CdlSdbDHhK0

எஸ்.பி.சைலஜா & சித்ரா குரல்களில் “சொல்ல வல்லாயோ” 

ஆகிய சுப்ரமணிய பாரதியார் பாடல்களோடும் இசையமைத்திருப்பது கங்கை அமரனின் தனித்துவம்.

“சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ 

வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ

https://www.youtube.com/watch?v=zgj6cUps8v4

கங்கை அமரனின் ஆரம்ப காலப் படங்களில் ஒன்றான “மலர்களே மலருங்கள்” படத்தில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடலுக்கு பி.சுசீலா குரல் கொடுத்தது. இந்தப் பாடலையும் கேட்கும் போது கங்கை அமரன் இசைத்திறன் துலங்கும்.

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த தினம் (11.12.1882) இன்றாகும்.

கானா பிரபா


No comments:

Post a Comment