Pages

Friday, September 8, 2017

அண்ணாமலையில் இளையராஜாவை அழைத்து வந்த தேவா


நேற்று சிவா (தெலுங்கு) பாடல்களில் மூழ்கியிருந்த போது அதில் வரும்
 "பாட்டனி பாடமுந்தி" 
https://youtu.be/4xdS0OK3zMk 
பாடலைக் கடக்கும் போது அமலா போய் அண்ணாமலை குஷ்பு நினைவுக்கு வந்தார். எவ்வளவு அழகாக இந்தக் கல்லூரிக் கலாட்டாத் துள்ளிசை மெட்டை அப்படியே லவட்டி "கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப் பூ" பாடலாக உருமாற்றியிருக்கிறார் நம்ம தேனிசைத் தென்றல் 😀
எது எப்படியோ அண்ணாமலை படத்துக்கு இளையராஜாவைத் தான் இசையமைக்க வைக்க வேண்டும் என்று (கே.பாலசந்தர் தவிர்த்து) ஆரம்பத்தில் முயற்சித்தார்களாம். அதைக் குறிப்பால் உணர்ந்து கை கூட வைத்திருக்கிறார் தேவா.

"வள்ளி" திரைப்படத்தின் உப நாயகர்களில் ஒருவரான ஹரிராஜ் நடித்த "வசந்த மலர்கள்" படத்தில் "இளந்தென்றலோ கொடி மின்னலோ" https://youtu.be/BuGQ-mpQIFo என்றதொரு அட்டகாஷ் பாட்டு தேவா இசையில் தொண்ணூறுகளில் கலக்கியது. எண்பதுகளில் ராஜா கொடுத்த "பூங்கதவே தாழ் திறவாய்" பாடலை மீளக் கொணர்ந்திருப்பார் நம்மாள்.
"பொன் மாலையில் தமிழ் கீதம் பாடுவேன்" https://youtu.be/RT-rv4rDcwE இன்னொரு அழகான பாட்டு கேட்டு முடித்ததும் "ராதையின் நெஞ்சமே கண்ணனுக்குச் சொந்தமே" என்ற பழைய பாடலை நினைவூட்டும். அந்தப் பழைய பாடலே ஹிந்தியில் இருந்து இறக்குமதியான சரக்கு.

இப்படியான பாடல்களை தேவா இசையில் மீளக் கேட்கும் போது "வெள்ள மனம் உள்ள மச்சான்" என்று மனசார வாழ்த்தத் தோன்றும் 😀

சிவகுமாரின் இருநூறாவது படம் "வாட்ச்மேன் வடிவேலு" தேவா இசையமைப்பில் இந்தப் படத்திலும் மணியான இரண்டு பாடல்கள். அதில் "சந்திரனும் சூரியனும்" https://youtu.be/M2DCCLhLQoU அழகான பாடலைத் தன் பேரப் பிள்ளைக்குப் பாடுமாற் போலக் காட்சியமைத்து மோசம் செய்திருப்பார்கள்.
"கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ" https://youtu.be/FFH_ra9q8vI என்றொரு பாட்டு ஏற்கனவே காதல் தேவதை படத்துக்காகத் தமிழில் மீளவும் ராஜா கொடுத்த "சம்மதம் தந்துட்டேன் நம்பு " https://youtu.be/kdxR57emV2k பாடலை அவ்வ்

No comments:

Post a Comment