Pages

Sunday, August 17, 2014

பாடகர் விஜய் ஜேசுதாஸ் வழங்கிய வானொலிப் பேட்டி

சிட்னியில் இசை நிகழ்ச்சி படைக்க வருகை தரும் பாடகர் விஜய் ஜேசுதாஸ் அவர்களை நமது ஆஸி தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தானம் (ATBC) வானொலி சார்பில் கண்ட ஒலிப்பேட்டியினை இங்கே பகிர்கின்றேன்.

இதோ அந்தப் பேட்டியின் ஒலி வடிவம்



Download பண்ணிக் கேட்க

பேட்டியில் இடம்பெற்ற சில கேள்விகள்

சினிமாவில் வாரிசுகள் ஜெயிப்பது சவாலான காரியம் ஆனால் உங்களுக்கு என்று தனி இடம் கிடைச்சிருக்கு இதை எப்படிப் பார்க்கிறீங்க?


உங்க அப்பா மிகப்பெரும் பாடகர் என்பதோடு பாடும்போது எந்த சமரசமும் செய்யக்கூடாதுன்னு பேட்டிகளிலேயே சொல்லுமளவுக்கு கண்டிப்பானவர் பாடகரா நீஙக் சினிமாவுக்கு வந்ததை எப்படி ஆரம்பத்தில் எடுத்துக் கொண்டார் இப்போ உங்க வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறார்?

சமீபத்தில் மெமரிஸ் படத்தில் திரையும் பாடலுக்கு பெரும் வரவேற்பு கிட்டியிருக்கிறது அந்தப் பாடல் பாடிய அனுபவம் பற்றிச் சொல்லுங்களேன்

நீங்க பாட ஆரம்பிச்சு குறுகிய காலத்தில் இசைஞானி இளையராஜாவிடம் பாடியிருக்கீங்க ராஜா சார் உடன் பணியாற்றிய அனுபவத்தை அறிய ஆவல்

சிவாஜி திரைப்படம் வழியாக ரஹ்மான் உங்களுக்கு ஒரு அறிமுகத்தைக் கொடுத்திருந்தார் அதன்பின்னான வாய்ப்புகள் பற்றி சொல்லுங்களேன்?

தாவணி போட்ட தீபாவளின்னு மெலடி பாடல்களையும் பாடுறீங்க, திடீர்னு மாமா மாமான்னு டப்பாங்குத்துப் பாட்டிலும் கலக்குறீங்க உங்களுக்கு எந்த மாதிரிப்பாடல்கள் பாடுவது மன நிறைவைக் கொடுக்குது?

மலையாளத்தில் உங்க அப்பா ஜேசுதாஸ் ஐ ஆண்டவனின் இசைத்தூதுவரா போற்றிப் பாராட்டும் சூழலில் உங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே நல்ல பல பாடல்கள் கிட்டியிருக்கு குறிப்பாக அங்கே பெரும் இசையமைப்பாளர் ஜெயச்சந்திரன் இசையில் உங்களோடு சிட்னி வரும் ஸ்வேதாவோடு பாடிய கோலக்குழல் கேட்டோ அந்தப் பாடலுக்கு அப்போது விருது எல்லாம் கிடைச்சிருக்கு ஜெயச்சந்திரன் எப்படி வேலை வாங்குவார்?


உங்க அப்பா கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் சாஸ்திரீய சங்கீத மேடைக்கும் சரி சமமா பங்கு வச்சிருக்கிறார் அந்தத் துறையிலும் மேடை ஏறணும்கிற ஆவல் இருக்கா?

2 comments:

  1. சூப்பர் பிரபா! விஜய் யேசுதாசுக்கு இன்னும் மலையாள accent இருக்கிறது :-)

    amas32

    ReplyDelete