Pages

Wednesday, July 30, 2014

இசைஞானி இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் 150 வது நாள் சிறப்பு இசைப் பொதி

இசைஞானி இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் போட்டியைத் தினமும் http://radiospathy.wordpress.com/ என்ற இணையப்பக்கத்தினூடாக நடத்திவருவதைப் பற்றி முன்னர் உங்களிடம் சொல்லியிருந்தேன்.இதோ இந்தத் தொடர் போட்டி 150 நாட்களைக் கடந்து போய்க் கொண்டிருக்கின்றது.

இந்தப் போட்டியில் சேர்ந்திசைக் குரல்கள் (Chorus) இடம்பெற்ற 101 வது நாளில் இருந்து 150 வது நாள் வரையிலான இசைப்பொதியை இங்கே பகிர்வதில் மகிழ்வடைகின்றேன்.


ஒவ்வொரு நாளும் இந்தப் புதிர்ப்போட்டி வழியாகப் பகிரும் பாடல்கள் ஏற்கனவே அறிமுகமாகிப் பல நாள் கேட்டிராதவை அல்லது முன்பே கேட்காத பாடல்கள் என்று கலவையாக வந்தமர்கின்றன உங்கள் நெஞ்சங்களில். தொடர்ந்து இந்தப் போட்டிகளில் நீங்கள் கலந்து கொண்டு ஆதரவை வழங்க வேண்டும்.

முதல் நூறு நாட்கள் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற அன்பர்களின் விபரங்களையும் அறிவிப்பதில் பெருமகிழ்வு அடைகின்றேன். போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்குப் புத்தகப் பரிசு என்று முதலில் சொல்லியிருந்தேன், இப்போது மேலதிகமாக இருவருக்கும் சேர்த்து மொத்தம் ஆறு பேருக்குப் பரிசுகளை வழங்குவதில் மகிழ்வடைகின்றேன்.


முதலாவது இடத்தைப் பிடித்துக் கொண்ட விஜய் (@maestrosworld) 100 போட்டிகளில் 100 இலும் வெற்றி கண்டிருக்கிறார்.
இவருக்கு இசைஞானி இளையராஜா எழுதிய புத்தகம் ஒன்றும், மூன்று புத்தகங்கள் கொண்ட நாலு வரி நோட்டு என்ற நூல் தொகுதியும் என மொத்தம் நான்கு புத்தகங்கள் பரிசாக அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு நாளும் தவறாது போட்டியில் கலந்து கொள்வது மட்டுமல்ல, போட்டியில் கொடுத்த பெரும்பாலான பாடல்களுக்கு இவர் கொடுத்த விரிவான வர்ணனை வெகு சிறப்பாக அமைந்தது. அதற்காக ஒரு ஸ்பெஷல் பாராட்டும், நன்றிகளும் விஜய்.

இரண்டாவது இடத்தைப் பிடித்துக் கொண்ட ரிஷி (@i_vr) நூறு போட்டிகளில் 99 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்.
இவருக்கு மூன்று புத்தகங்கள் கொண்ட நாலு வரி நோட்டு என்ற நூல் தொகுதி பரிசாக அனுப்பி வைக்கப்படும்

மூன்றாவது இடத்தைப் பிடித்த என்.சொக்கன் @nchokkan 100 போட்டிகளில் 92 போட்டிகளிலும்

நான்காவது இடத்தைப் பிடித்துக் கொண்ட சரவணன் @vrsaran 100 போட்டிகளில் 90 போட்டிகளிலும்

ஐந்தாவது இடத்தைப் பிடித்துக் கொண்ட ராஜா @rajabalanm 100 போட்டிகளில் 81 போட்டிகளிலும்

ஆறாவது இடத்தைப் பிடித்துக் கொண்ட கார்த்திக் அருள் @kaarthikarul 100 போட்டிகளில் 80 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றார்கள்>

இவர்களுக்கு இசைஞானி இளையராஜா எழுதிய புத்தகம் ஒன்று பரிசாக வழங்கப்படும்.

இதற்கான ஏற்பாடுகளைப் பரிசில் வென்றோருக்குத் தனிமடலில் அறியத்தருகின்றேன். இந்தப் பரிசுகளின் விநியோகத்தில் முன்னேர் பதிப்பகம் வழியாக உதவிய நண்பர் என்.சொக்கனுக்கும் இவ்வேளை நன்றிகள் உரித்தாகுக.

இந்த ஆறு பேருக்கும் எனது வாழ்த்துகளோடு தொடர்ந்து பங்களித்து வரும் உங்களுக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள்.

4 comments:

  1. வெற்றிப்பெற்ற பெரியோர்களுக்கு வாழ்த்தூஸ்ஸ்ஸ்!

    எம்மைப்போன்ற வெளியிலிருந்து ஆதரவளிக்கும் யூத்'களுக்கு எனி பரிசுகள்ஸ்ஸ்ஸ்???

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  3. Just a small suggestion..The ancient term kuravai is the appropriate equivalent for the english word chorus! sernthisai sounds a bit odd! kuravaik kuralgal..

    ReplyDelete